குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, December 11, 2007

30.ஸ்டெம்செல்கள் சிகிச்சையில் ஒரு புரட்சி

உங்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஸ்டெம் செல்கள் மனிதக் கருவின் உருவாகும் முதல் செல்கள் ஸ்டெம் செல்கள் என்றழைக்கப் படும்;இவையே மனித உயிரில்-கருவில் அனைத்து மனித உடலின் பாகங்களும் ஸ்டெம் செல்களில் இருந்தே வளருகின்றன.
சமீபத்தில் கூட ஆவி யில் ஒரு இரத்தப் புற்றுநோய் கண்ட ஒரு 29 வயது இளைஞனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் உடலின் மொத்த ரத்த செல்களும் வெளியேற்றப்பட்டு புதிய ரத்த செல்களின் கூறுகள்,ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் செலுத்தப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டது செய்தியாக வந்தது.
எனவே ஸ்டெம் செல்களைப் பற்றி ஆராய வேண்டுமெனில் மனித கருமுட்டைகளிலிருந்துதான் ஆராய்ச்சி செய்ய முடியும்.
இதுபோன்ற சிக்கல்களின் காரணமாக ஸ்டெம் செல் பற்றிய ஆராய்ச்சிகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஊக்குவிக்கப்படாமலோ,அரசின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவோ இருந்தன.
ஆனால் இப்போது ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டிருக்கிறது;மனித தோல் செல்களில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது மனிதகுலத்தின் பல தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கும் கட்டத்தின் முதல்படி.
இந்த சாதனை ஒரு ஜப்பானிய விஞ்ஞானியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மின்னனுவியல் உபகரனங்கள் மட்டுமே செய்ய முடிந்த ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு நாட்டின் விஞ்ஞானி இந்த சாதனையை செய்தது ஒரு திருப்புமுனையே.
ஜப்பானின் யமானகா (Dr.Yamanaka) என்ற மருத்துவ விஞ்ஞானியே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.45 வயதாகும் இவர் எலிகளில் இந்த சோதனையை வெற்றிகரமாக முதலிலேயே நிகழ்த்தி இருக்கிறார்.
சாதாரண செல்களில் இருக்கும் சில க்ரோமோசோம்களில் மாஸ்டர் ரெகுலேட்டர் என்றழைக்கப்படும் சில ஜீன்களை இணைப்பதன் மூலம் சாதரண தோல் செல்கள்,ஸ்டெம் செல்களப் போலவே செயல்படுகின்றனவாம்.
ஆயினும் இன்னும் ஒரு கட்டம் பாக்கியிருக்கிறது,இப்போதைய முறையில் ரெட்ரோவைரஸ்(Retroviruses) என்றழைக்கப்படும் வைரஸ் கிருமிகளே ரெகுலேட்டர் ஜீன்களை,க்ரோமோசோம்களில் செலுத்தப் பயன்படுகின்றன;இந்த ரெட்ரோவைரஸ் தான் செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் கேன்சர் செல்களையும் தூண்டுகின்றன;எனவே இந்த ரெட்ரோவைரஸ்களின் துணையில்லாமல் ரெகுலேட்டர் ஜீன்களை க்ரோமோசோம்களில் செலுத்தும் கட்டம் வெற்றி பெரும் போது இந்த சோதனை முழுவெற்றியாகும்.

4 comments:

  1. ஹோ! இங்கு தான் இருக்கிறீர்களா? அதான் சந்தோஷா படம் போட்டிருக்கிறீகளா?
    அந்த ஸ்டெம்செல் திறன் வளர்ந்து இன்னும் 50 வருடம் வாழலாம் என்று சொன்னால்??
    எனக்கு வேண்டாம் என்று தான் தோனும். :-)

    ReplyDelete
  2. Hello Kumar,
    Thanks for coming & comment.I had been out of town for quite some time but returned offlate.
    We do not want life expectancy,but if somebody is going to die at the age of 16 with blood cancer or something,now possibilities of survival is bright.Certainly it is a breakthrough...

    ReplyDelete
  3. நாங்க சொன்னதெல்லாம் வரவில்லையே
    அதான் நம் நாட்டுல இருக்கரவங்க ஏன் இதை முயற்ச்சிக்க மாட்டேங்கராங்க

    ReplyDelete
  4. பு.த,வருகைக்கு நன்றி,ஆமா என்ன சொன்னீங்க,என்ன வரலை?
    நம் நாட்டிலே எதை முயற்சிக்க மாட்டெங்கறாங்க?

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...