குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label பதிவுக்களம். Show all posts
Showing posts with label பதிவுக்களம். Show all posts

Friday, August 17, 2012

* * * * * 166.மதத்தினால் விளையும் மனச்சிக்கல்கள் !



நண்பர் கோவி.கண்ணன் தனது காலம் பதிவில் பதஞ்சலி பாம்பின் அற்புதம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வுப் பதிவு எழுதியிருந்தார்.

இது போன்ற புகைப்படங்களிலிருந்து 'அற்புதங்களை' உருவாக்குபவர்களுக்கு ஒரு விதமான மனத் தடையும், சுய இரக்கமும் இருக்குமோ என்பது என் சந்தேகம்.சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வை, அல்லது உண்மையிலேயே நடக்காத ஒன்றைத் திரித்து, நடந்ததாச் சொல்லி,

Sunday, August 12, 2012

* * * * * 160. நட்சத்திர வாரம்- மீண்டும் வந்தேன் !

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.
இந்த வார நட்சத்திரமாக தமிழ்மணம் அன்புடன் அழைத்திருக்கிறது; இது இரண்டாவது முறையாக நட்சத்திரமாக இருந்த எழுதக் கிடைத்த வாய்ப்பு.

ஒரு வித்தியாசமான ஒற்றுமையை நான் இந்த அழைப்பில் பார்த்தேன். சென்ற அழைப்பு நான் சுமார் 80 பதிவுகள் எழுதியிருக்கும் பொழுது வந்தது; இப்போது கிட்டத்திட்ட 160 பதிவுகள் எழுதியிருக்கிறேன், இரண்டாவது வாய்ப்பு !

2008 வாக்கில் வந்த முதல் வாய்ப்பின் காலக் கட்டத்தில் நட்சத்திரமாக எழுதக் கிடைக்கும் வாய்ப்பைச் சிறிது பெருமையுடனே ஏற்று நாங்கள் எழுதினோம்; இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் என்னுடைய இயக்கம் பதிவுலகில் விறுவிறுப்பானது கிடையாது,இன்னும் சொல்லப்போனால் 2007-2008 கால கட்டத்தை விட, இப்போது நான் எழுதும் பதிவுகள் ஆண்டுக் கணக்கில் பார்த்தால்,மிகக் குறைவானவையே. எனினும் தமிழ்மண நிர்வாகம் இரண்டாவது வாய்ப்பை நல்கியிருக்கிறது.

பதிவுலகில், பதிவு எழுதுகிறவர்களில் மிகச் சிறுபான்மையினர் வர்க்கம் ஒன்று உண்டு; அவர்கள் எழுதும் பதிவுகள் மிகக் குறைந்த அளவில்,ஆனால் பெரும்பாலும் கனமான விதயங்களைத் தொட்டு இருக்கும். நான் அந்த வகை வலைப்பதிவாளன். இவர்கள் எழுதுவது அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கவும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்; ஆனால் அவை அனைவருக்கும் தேவையானதாக இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இருப்பினும், தமிழ்மண நிர்வாகம் அன்பினில் வைத்த அழைப்பை, முன்னர் போலவே, எழுத்தின் அடக்கத்திற்குக் கிடைத்த வாய்ப்பாகவே நான் கருதிக் கொள்கிறேன்.

தமிழ் மண நிர்வாகத்திற்கு நன்றிகள் !

படித்து, ஊக்கமளித்து, உரையாடப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் !

()

எனக்கு முன்னர் கிடைத்த நட்சத்திர வாய்ப்பின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடையில்,என்னுடைய  வலைப்பதிவு சார்ந்த இயக்கத்தில், எழுத்தில் பெரும் வேறுபாடுகள் ஏதும் இல்லை, பின்வரும் வார்த்தைகள் தவிர.


...எந்த மாற்றமுமில்லை, பதிவுகளில் எழுதுவது குறைந்து,படிப்பது மேலும் அதிகரித்திருக்கிறது என்பதைத் தவிர. 
எப்போதும்,எதையாவது,எவருக்காவது அறிவித்துக் கொண்டிருக்க வேண்டியிருப்பது, இருத்தலியல் சார்ந்த ஒரு நோய் என்று  சமீப காலங்களில் மனதிற்குப் படுகிறது. 
ஆயினும் சொல்லித்தானாக வேண்டிய செய்தியோ,தேவையோ எழும் போது, அதை எப்போதும் மானுடக் கடமையாகவை நினைக்கிறேன்.   
நல்ல வாசிப்பை அளிப்பதற்கு எப்போதும் போல இப்போதும் முயற்சிப்பேன். 
வாய்ப்புக்கு தமிழ்மணத்திற்கும்,வாசிப்பதற்காக உங்களுக்கும் நன்றி !
வாசிப்பைத் தொடர்ந்த தளங்களில் உரையாடல் நிகழ்ந்தால்,உரையாடல் வழங்கிய சிந்தனைகள் கிளர்ந்தால் அதுவே எழுதுவதன்,படிப்பதன் பயனும் வெற்றியும் !
நன்றி மீண்டும்.

()


ஒரு quick recap ஆக, சென்ற வாய்ப்பில் எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகளைப் பற்றிய சிறிய ஒரு அறிமுகம். பதிவுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு எளிதாக மீண்டும் ஒரு பார்வை,பார்க்க ஏதுவாக !



1.***** 71.எது அறிவு ?????? 
எது அறிவு என்ற கேள்வியை எழுப்பினால், அறுதியிட்டு என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள் !

2.***** 72 - ஃபிபோனாக்கி எண் தொடரும்,மனித வாழ்வும்
பங்குச் சந்தை, நிதி வணிகம்-currency trading, ஊகவணிகம்-Futures & Options, போன்ற துறைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான செய்தியை அடக்கியிருக்கிறது, இந்தப் பதிவு. நிதித் துறைகளில்-finance domain- பணியிலோ அல்லது சுய தொழிலிலோ இருப்பவர்களுக்கும் இந்தப் பதிவு பிடித்திருக்கலாம்.

விதய ஞானத்தைத் தேடும் அனைவருக்கும் கூடப் பிடிக்கலாம்.

3.***** 73.ஒரு இரங்கல்,ஒரு தலையங்கம்
என்னைப் பொறுத்த வரை மற்றும் ஒரு சாதாரணப் பதிவு..ஆனால் இதிலும் சிந்தனைக்கு வேலை இருக்கிறது.


4.***** 74.பகுத்தறிவும்,சில நுண்கலைகளும்
நிறைய விவாதத்தைக் கிளப்பிய ஒரு பதிவு.
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் பதிவுகளில் எழுப்பப் பட்ட பின்னூட்டங்களுக்கும், இப்போது எழுப்பப் படும் பின்னூட்டங்களுக்கும், பளிச்சென வெளித்தெரியும் ஒரு வேறுபாடு உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் போது தோன்ற வேண்டும் !
இல்லையெனில் நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். :))

5.***** 75-In Lighter Vein-Some Cartoons
சில கேலிச் சிந்திரங்கள். எளிய ரசனைக்கும், அனுபவிப்பதற்கும்.

6.***** 76.ஒரு நடிகரின் பேட்டி
இந்தப் பேட்டி 60 களின் மத்தியில் வெளிவந்தது.
பேட்டியளித்த நடிகர் ஏன் அவ்வளவு ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார் என்பது அவரது இந்தப் பேட்டியைப் படிக்கும் போது புரியும் !

7.***** 77.கூத்தாட்டு அவைக்குழாம்
இன்னொரு ரசமான பதிவு. இலக்கியமும்,குறளும் இணைந்த இன்னொரு பதிவு.

8.***** 78.மறுபாலின நட்பும்,கார்த்திக் பட கிளைமாக்ஸும்
என்னைப் பொறுத்த வரை, ஒரு சாதாரணப் பதிவு. இதை எழுதிய போது, இதுவும் விவாதங்களைக் கிளப்பலாம் என்று எதிர்பார்த்தேன்..ஆனால் அமைதியாகக் கரையைக் கடந்தது இது.. :))

9.***** 79.நட்சத்திர வாரத்துக்கான ஒரு பருந்துப்பார்வை
இது நட்சத்திர வாரத்திற்கு முன்னால் வரை, நான் எழுதிய பதிவுகளில் எனக்கே  திருப்தியும், மகிழ்ச்சியோ,நெகிழ்ச்சியோ கொடுத்த பதிவுகள். அவற்றை படிக்காதவர்களுக்காக ஒரு தொகுப்பு.

இப்போது படிக்கும் உங்களுக்காகவும்..

10.***** 80.பாரதியின் - கண்ணம்மாவும்,செல்லம்மாவும்
பாரதியின் மனிதக் காதலிக்கும்,கனவுக் காதலிக்குமான ஒரு ஒப்பீடு.
இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இல்லாவிட்டால் ஏன் என்று கூறுங்கள் !



இந்தப் பதிவுகளை ஏன் இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் என்று சிலருக்குக் கேள்வி வரலாம்; மேலும் பலருக்கு இது விளம்பர உத்தியோ என்று எண்ணம் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.

நட்சத்திர வாரத்தில் பதிவெழுதும் நபருக்கு, தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் காட்டி, ஒரு மரியாதை செய்கிறது; அந்த வாரத்தின் நட்சத்திரம் எந்த வகைப் பதிவுகளை எழுதுவார், எந்த விதப் பதிவுகளை அந்தப் பதிவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பது போன்ற ஒரு Curtain Raiser இந்தப் பதிவு.

இந்த முறையும் இதே போன்ற பதிவுகளே வரும் என்று அர்த்தமல்ல. இதே போன்ற பதிவுகளாகவும் இருக்கலாம், அல்லது முற்றிலும் வேறானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்களே பாருங்களேன், பொறுத்திருந்து !

படித்து, வாக்களித்து, விவாதிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி.

தமிழ்மண சேவையை காசியிடம் இருந்து பொருள் கொடுத்து வாங்கி, தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஒரு நல்ல திரட்டியாகத் திகழும் வண்ணம் முயற்சியெடுத்து நிலைநிறுத்தியிருக்கின்ற நண்பர்கள் குழுமமான, தமிழ்மண நிர்வாகத்திற்கும், தமிழ்மண சேவைக்காக தனியான நன்றிகள்.


Friday, July 27, 2012

149.பதிவுகள் முளைத்து,தொலைந்த காலம் !


பதிவுகள் அழியும் காலம் என்று ஒரு கதைத் தொகுதி புத்தகமாக வந்திருக்கிறது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!

வலைப் பதிவுகளைப் பொறுத்த வரை கூகிள் நிறுவனம் இலவச பகிர்வான்-சர்வர்-சேவையை நிறுத்தினாலே,பல தமிழ் வலைப் பதிவுகள் தன்னால் அழிந்து விடும்.

காரணம் தமிழ் வலைப் பதிவுகளில் பல பதிவுகள் மிக மேம்போக்கான,சுய சொறிதலுக்கான நோக்கம் கொண்டே எழுதப் படுவன;எழுத்தில் சிறிதளவு ஆர்வமும் ஒரளவு பரிச்சயமும் இருந்த பலரும்,தன் எழுத்தை வலையில் எளிதாகப் பார்க்க முடிந்த நிலையும்தான் பலர் வலைப் பதிவு தொடங்கக் காரணம்.

பின்னர் பஸ் டிரைவரிலிருந்து,பஜ்ஜி விற்பவர் வரை எதையாவது பற்றி,என்னவாவது எழுதினால் பரந்துபட்ட வலையுலகில்,படிக்க சிலராவது மாட்டுவார்கள்;அப்படியே ஒப்பேற்றிக் கொண்டு இருக்கலாம் !

இன்றும் கூட பல ஒற்றுப் பிழைகள்,சொல்,பொருள் பிழைகளுடன்,கொச்சை நடையில் எழுதப் படும் பல பதிவுகள் எனது மேற்கண்ட கூற்றுக்கு சான்றாக,நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

இந்தப் பொது சிந்தனைக்கு,நான் உட்பட,எவரும்,தொடக்ககாலப் பதிவர் நிலையில்,விதிவிலக்காக இருக்க முடியாது.

தொடக்ககாலம் என்று நான் சொல்வது-பதிவு தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் வரை! பெருவிரல் விதியாகச்-ரூல் ஆஃப் தம்ப்-சொல்லி விடக் கூடிய ஒரு உண்மை,ஒருவர் எழுதும் பதிவுகளில்,அவருக்கே திருப்தி தரக் கூடிய,படிப்பவர்களுக்கு பயனளிக்கக் கூடிய பதிவுகள் எழுதத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்பது.

பலர் என்னுடன் சண்டைக்கு வரக் கூடும்;ஆனால் வலையுலகில் நேர்த்தியாக எழுதுகிறார்கள் என்று உளமாரத் தோன்றக் கூடிய எந்த ஒரு பதிவரின் பதிவுகளையும் சிறிது ஆய்வுக்கு உட்படுத்தினால்,எந்த உண்மை எளிதில் விளங்கும்.

இன்னும் சிலர்,தங்கள் இயங்கு தளங்களில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக புத்திசாலித்தனமாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்துபவர்கள்.

தன்னுடைய இருப்பை அறிவித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அரசியல் கழைக் கூத்தாடிகள் அல்லது அவர்களுக்கு சொம்படிப்பவர்கள், பத்திரிகையாளர்கள்,புத்தக வெளியீட்டாளர்கள், கம்பெல்லிங் விளம்பர மோகிகள் போன்ற பலரும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள்.சொல்லத் தேவையன்றி இவர்களின் இருப்புக்கும் தொழிலுக்கும் வலைப்பதிவுகள் ஏதோ ஒரு வடிவில் உதவி செய்கின்றன.

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தில் பள்ளிக் காலம் முதலே பரிச்சயம் இருப்பினும் இணையம் என்னும் எளிய ஊடக வசதியும்,அதைப் பரப்புவதற்கு தமிழ்மணம் போன்ற திரட்டி வசதிகளும்,இலவசமாக பகிர்வானை கூகிள் கொடுப்பதும்,விட்டு விட்ட எழுத்தைத் தொடர முக்கியக் காரணம்.

சந்தேகமின்றி நான் முதல் வகைப் பதிவாளனாக தொடங்கிய,அதே நிலையில் ஓரளவு பரந்த வாசிப்பும் கொண்ட ஒருவன். ஆனால்
தொடக்க நிலைப் பதிவாளர்களில்  பெரும்பாலானவர்களைப் போல,பாத் ரூம் போவது தவிர்த்த, எந்த ஒரு தினப்படி நிகழ்ச்சியையும் பதிவாக்க முயன்றவன் அல்ல,நிச்சயமாக.

எனது பதிவைப் படித்த ஒருவனுக்கு துளி அளவாவது,சிந்தனையில்,செயலில் முன்னேற்ற மாற்றத்தை நிகழ வேண்டும்,படித்த எழுத்து கடுகளவாவது மனதில்,சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதே எப்போதும் எனது எழுத்தின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை நான் அறுதியிட்டுக் கூறமுடியும்.

மேலும் செல்ஃப் ஹெல்ப் குழுக்கள் போல்,நான் உனக்கு பின்னூட்டுகிறேன்,நீ எனக்குப் பின்னூட்டு என்ற சுயசொறிதல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. இதனால் ஐந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பினும் நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை மிக சொற்பமே.

ஆனால் நிச்சயமாக, எந்த ஒரு பதிவையும் நான் திரும்பவும் படிக்க நேர்கையில்,என்ன இவ்வளவு குப்பையை,குப்பையாக எழுதி இருக்கிறோம் என்று நான் ஒருமுறை கூட உணர்ந்ததில்லை ! அந்தக் குறைந்த பட்ச நேர்மையும் திருப்தியும் என்னுடைய பதிவுகளின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

இத்தகைய சூழலில் என்னுடைய பதிவுகளைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் சிலர் பாராட்ட எழுதி இருப்பதை,சில நாட்களுக்கு முன்னரே எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.அவர்களில் சிலர் எழுதியது 2008,2009 வாக்கில்! அவற்றை இப்போதுதான பார்க்க நேர்ந்தது.

அவர்களின் பாராட்டை உரிய நேரத்திலேயே பார்க்க இயலாதிருந்த என்னுடைய நிலைக்காக அவர்களிடம் மன்னிப்பு வேண்டவும்,அவர்களின் பாராட்டுக்கு நன்றியை ஒரு பதிவின் வாயிலாகவாவது தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியதாலும் இந்தப் பதிவு.

அவர்கள் எழுதிய நேரத்திலான எனது மௌனம், அவர்களுக்கே ஏன்தான் இவனைப் பற்றி எழுதினோமோ என்று கூடத் தோன்ற வைத்திருக்கலாம் !


 :))


சின்னப்பையன் - அவரது முதல் பதிவில் ஊக்கப்படுத்தி எழுதியதற்காக மட்டுமே என்னைக் குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை :)).2008 ல் எனது பதிவைக் குறிப்பிட்டிப் பாராட்டி எழுதி இருக்கிறார்..நன்றி.

மாதங்கி - சிங்கை வட்டாரத்தில் அறியப்பட்ட எழுத்தாளர் இவர்.சில புத்தகங்களும் கொண்டு வந்திருக்கிறார்.2009 ஏப்ரல்'ல் எனது வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை பதிவைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி,வலைப்பதிவைப் பாராட்டியிருக்கிறார்.நன்றி.

ஆர்விஎஸ்-2011 சூலையில் என்னுடைய பெண் எழுத்துப் பதிவைக் குறிப்பாகச் சுட்டிப் பாராட்டி எழுதியிருக்கிறார்.நன்றி.

மோகன்ஜி - 2012 ஏப்ரலில் இவரது காமச்சேறு என்ற பதிவில் மிக நீண்ட விவாதங்களில் நான் பதில் சொல்லும்படியானது; அவரும் அவருடைய பத்தியில் எனது பங்கீடு பற்றிய குறிப்புடன் எனது பதிவுப் பக்கம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.நன்றி.

துரை டேனியல் - 2012 ஆகஸ்டில் என்னுடைய பழைய்யய்யய்யய்ய பதிவான தமிழ்ப் புத்தாண்டு பற்றிய பதிவுச் செய்தியைக் குறிப்பிட்டு பாராட்டுகளை அளித்திருக்கிறார்.நன்றி.

இவை தவிர எனது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும்,மற்றும் லாம்ப்ரட்டா,எனது ஐயா'வைப் பற்றிய பதிவு,தமிழும் சிவமும்(இன்னும் இது முற்றுப் பெறவில்லை!),தமிழ் இலக்கிய சுட்டியில் நான் எழுதி அனைத்தும் போன்ற பதிவுகள் எனக்கே திருப்தி தந்தவை.

வேறு எதையோ வலையில் தேடப் போகவே என்னுடைய பதிவைப் பற்றிய, நண்பர்களின் இந்தப் பரிந்துரைகள் எனக்குத் தெரியவந்தன.

இவர்களில் எவரையும் கூட நான் தொடர்ந்து படிப்பவனல்லன்;பேசியோ,மின்மடலிலோ அறிந்தவனல்லன். ஏதோ ஒரு கணத்தில் இவர்களது எண்ணத்தில்,சிந்தனையில் என் பதிவும்,எழுந்தும் மீளெழுந்திருக்கிறது,குறிப்பிட வைத்திருக்கிறது என்பது எனக்கு எப்போதுமே நிறைவான ஒன்று.

எழுதுவதன் நிறைவு அது மட்டும்தான்.

மிக்க நன்றி நண்பர்களே !!!

()

எழுத வேண்டும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிக நேரத்தை படிப்பதில் செலவு செய்பவன் நான்.

படித்தவற்றைப் பற்றி நான் சிந்திந்த வற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எழுச்சி பல நேரங்களில் ஏற்பட்ட போதிலும், கொடுப்பாரில்லை அங்கு கொள்வாரிலாமையால் என்ற 'உயர்ந்த சூழலால்' பெரும்பாலும் நேரத்தைக் கொன்று எழுதுவதற்கான உந்துதல் ஏற்பட்டதில்லை.

ஆனாலும் திரு.சொக்கன்(நாகா) எழுதிய தினம் ஒரு பா- பதிவை நேற்றுக் (த்தான்) கண்ணுற நேர்ந்த போது,அவர் ஏற்கனவே அதை 365 நாட்களுக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தது தெரிந்தது.

அவரது உறுதிப்பாடு ஆச்சரியமானது. ஏன் அதை இன்னும் ஒரு 365 நாட்களுக்காவது நாம் தொடரக் கூடாது என்று தோன்றியது.

படித்தவற்றைப் பகிர வேண்டும் என்ற உள விருப்பத்தை விட, 365 நாட்கள் விடாது ஒரு தமிழ்ப் பாடலைப் பற்றிய எழுத வேண்டிய கட்டாயத்தைத் தனக்கு விதைத்துக் கொள்ளும் அந்த மனநிலை எனக்குப் பிடிந்திருந்தது;எழுத்திற்கும் கருத்திற்கும் நேர்மை செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருப்பதால், எனது இன்னொரு பதிவான மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற பக்கத்தில் இதைத் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இதையே அழைப்பாகவும்,எச்சரிக்கையாகவும்(!?) சொல்லி வைக்கிறேன். நன்றி.

:)


Friday, April 2, 2010

119.குறுந்தொகை'கள்-02042010

பதிவர்களுக்கான சென்னை குழுமம் அல்லது சங்கம் அமைப்பதைப் பற்றிய பலரது பதிவுகள்-நண்பர் பைத்தியக்காரனின் கோபமான,வருத்தமான பதிவு,அதற்கு உ.த வின் எதிர்ப்பதிவு உள்பட-படித்த போது சில எண்ணங்கள் தோன்றியது.

உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்தானே புலவர் தொழில்!
ஆனால் உம்பேச்சு கா..வரைக்கும் போயிருக்கும் போல இருக்கிறது....

முதலில் அப்ஜெக்டிவ் என்ன என்பது முக்கியம்;என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

அதைப்பற்றிய தெளிவு இல்லையென்றால் குழப்பம்தான் மிகும்;இரண்டாவதாக இது அதியமான் சுட்டியிருப்பது போல ஒரு சமூகக் குழுமம் மட்டுமே.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத போதே இந்த வித சந்திப்புகள் மகிழ்வைத் தரும்.

இந்தப் பின்னணி வெண்பூவின் பதிவு மிகவும் யோசிக்க வைத்தது.கேபிள் சங்கர் குழுமப் பதிவு தன்னுடைய ஐடியில் இருந்து உருவாக்கப் பட்டதால் அக்டோபர் 09 காட்டுகிறது என்று சொன்னாரே தவிர ஏன் இத்தனை காலம் ஒன்றும் முன்னெடுப்பு இல்லை;இப்போது என்ன அவசரம் என்பதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆக்டிவ் ஆன பதிவர்கள் சிலர் அமைப்பு வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்கள்;அவர்களுக்கான இருக்கும் இயல்பான exuberance காரணமாக இருந்தாலும்,தன் முனைப்பு|முன்னிறுத்தல் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமே.ஆனால் என்ன அப்ஜெக்டிவை மனதில் வைத்து நாம் முயற்சிகளைச் செய்கிறோம் என்பது நர்சிம் சொன்னதைப் போல முக்கியம்.

குறிக்கோள் இலாது கெட்டேன் என்பது வாசகர் வாக்கு!

இதற்கெல்லாம் மேல் ஒரு அமைப்புக்குள் பணப்புழக்கம் வரும் போது அது சார்ந்த பல பிரச்னைகளும் புழுக்கங்களும் கூடவே வரும்;இந்த புழுக்கங்கள் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று முனைந்த தன்னுடைய நேரம் முயற்சிகளைத் தரும் சிலருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தரும்;இதை பல அமைப்புகளில் பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்.மேலும் அமைப்புகளின் சொத்துக்களை|பணத்தைக் கையாள்வதற்கு சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அளவுக்கு தன் நேர்மை கொண்டவர்கள் அவசியம்;அவர்கள் கண்டறியப் பட்டு விட்டார்களா என்று சராசரி வலைப் பதிவனுக்கு இருக்கும் கேள்விக்கு பதில் வேண்டும்.
எவராவது அரசியல் சார்புரியவர்கள் இப்பொறுப்புக்க வந்தால்,அமைப்பு ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் கூட்டங்கள் சட்டசபை போன்ற அடிபிடிக் கூட்டங்களாக மாறும் சாத்தியங்கள் மிக அதிகம்.

இப்போதைய நிலையில் ரைட்டர்ஸ் கில்ட் போன்ற தரமாக வைக்கப்படும் வலைப்பதிவுக் கருத்துக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தரும் அல்லது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அளவுக்கான ஒரு அமைப்பு என்ற அளவில் அக்கருத்து வரவேற்கப்படவேண்டியது;அந்த அமைப்புக்குள் வரும் பதிவர்கள் நாகரிக எழுத்துக்கான உறுதிமொழியைத் தரவேண்டுவதும் அவசியம்.

புத்தகமெல்லாம் வெளியிட்ட ஒரு பிரபள(பிழை அல்ல) பதிவன் மாற்றுக் கருத்தை ஏற்க மனமின்றி,முக்காடு போட்டுக் கொண்டு முட்டுச் சந்தில் மூத்திரம் அடிப்பது போல என்னுடைய பதிவில் முகமற்றுக் கழிந்து விட்டுப் போயிருந்தான்.அவன் போன்ற நபர்கள் அமைப்புக்குள் அல்லது பொறுப்புக்குள் இருந்தால் கதை கந்தலாகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சூழலை கற்பனை செய்யுங்கள்-நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ கூகுள் குழுமம் பதிவு வைத்திருக்க விரும்புவோர் வருடத்திற்கு 100 அமெரிக்க வெள்ளி செலுத்த வேண்டும் என்று அறிவித்தால் 90 சதவிகிதப் பதிவர்கள்|பதிவுகள் காணாமல் போகும் நிலை வரலாம்!அப்போது இருக்கும் 10 பதிவர்கள் சங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதையும் கடைசி அஜண்டாவாக இப்போதே யோசித்து வைக்கலாம்!!

இப்போதைக்கு தோன்றுவது...போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கப்பா!

()


ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போதுதான் பார்த்தேன்.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல என்று ஒரு பதப் பிரயோகம் எங்கள் பக்கங்களில் சொல்வார்கள்,அதுதான் நினைவுக்கு வந்தது.காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!

இதைப்பற்றிய கார்க்கியின் பதிவை 200 சதம் ஆதரிக்கிறேன்;வழி மொழிகிறேன்.

ரீமாவின் தொடையை மட்டும் நம்பி 32 கோடி வேஸ்ட்!
இதைப் பற்றி(மேல் வரியைப் பற்றி அல்ல,ஆ.ஒ.பற்றி !) விரிவான பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

()

ஐபிஎல் போட்டிகளைப் பற்றி எழுதாவிட்டால் சாமி கண்ணைக் குத்துமாமே..சச்சின் மற்றும் ஹர்பஜனின் சரவெடிகள் வாண வேடிக்கைகள்!தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளையும் பார்க்கவோ அல்லது செய்திகளைக் கவனிக்கவோ கூட முடியாத அளவுக்கு நேர மேலாண்மைக் குடைச்சல்கள் இருக்கின்றன!

()

சென்னை மயிலையில் ஒரு 1BHK முதல் தள வீடு நல்ல சூழலில் வாடகைக்கு இருக்கிறது-சித்திரக்குளம் அருகில்;கார் நிறுத்த வசதிகள் இல்லை;முற்றிலும் சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள்(மட்டும்) வரவேற்கப் படுகிறார்கள்.மின்மடலில் தொடர்பு கொண்டால் விவரங்கள் பெற்றுத் தருகிறேன்.


()

இப்போதைய புதிய வரிசை இண்டெல் ப்ராசசர்கள் ஐ வரிசையில் வருகின்றன.இத்தகைய மடிக்கணினிகள் 64 பைட் என்று வருவதாகச் சொல்கிறார்கள்(முந்தையவை 32 பைட் வகை).இந்த வகை கணினிகளில் மைக்ரோசாஃப்டின் 2003 நெட்வொர்க் இயக்கு மென்பொருள்(ஆபரேட்டிங் சிஸ்டம்) சரிவர வேலை செய்யாது என்று ஒரு கணிப்பு சொல்கிறார்கள்.நிபுணர்கள் எவராவது இருந்தால் சிறிது தெளிவித்தால் மகிழ்வேன்.

The requirement is to have MS 2003 network OS to be installed in machines with i-3/5/7 series Intel processors.

Any solution?


******

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...