16 வயதில் அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த போது எனக்கு அந்தக் கல்லூரியைப் பற்றிய பெரிய அறிமுகம் கிடையாது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் சேருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த என்னை, எனது பெற்றோரும், பெரியப்பாவும் சேர்ந்து இந்தக் கல்லூரிக்குத் தள்ளி விட்டார்கள். தள்ள முயற்சி செய்து அவர்கள் வென்றதன் காரணம் எளிது; பெரியப்பாவின் மகனும் எனது ஒன்றுவிட்ட தம்பியுமான சொக்கன் அந்தக் கல்லூரியோடு இணைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான்.
எனது பள்ளித் தோழர்கள் எல்லாம் , நான் அந்தக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்றதும் என்னைப் பார்த்து அத்தனை அனுதாபப் பட்டார்கள்.



