குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Saturday, September 29, 2012

176.குறுந்தொகை'கள்-29.09.2012-சில்லரை- விற்பனை|அரசு|தலைமை|தேசியம் !!!

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).


எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!!

பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).


Monday, August 15, 2011

135.இந்தியத் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!




இன்று 65 ஆவது விடுதலை நாள்.



ஆங்கிலேயரின் அடிமைப் படுத்தலும் அதனைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டமும் ஒரு வகையில் சிதறிக் கிடந்த இந்திய சமஸ்தான அரசுகளை ஒன்று சேர்ந்து ஒரே நாடாக்கிய விளைவுடன் முடிந்தது.

இந்த 65 வருடங்களில் இந்தியா நம் தேசம் என்று  பெருமிதப் படத்தக்க கணங்கள் அரிதாகவே இருக்கின்றன.எங்கும் பெருகி வரும் ஊழலின் விகிதாசார வளர்ச்சி ஆண்டுக்காண்டு பெருகுவதும்,அரசு என்பது ஊழல் வாதிகள் திருடர்கள்,பொறுக்கிகள்,வன்முறை சக்திகள் ஆகியவர்களின் கூட்டமைப்பு  ஆதிக்கத்தில் இருப்பது என்று இந்திய அரசாண்மை நாள்தோறும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் தாய்நாடு என்று பெருமிதப் பட வைக்கும் காரணங்கள் நாளுக்கு நாள் சிறிதாகிக் கொண்டே வருகின்றன.

ஒரு இந்தியர் 37 மாடிகளுடன் தனக்கு வீடு கட்டிக் கொள்ளும் நிலை இருக்கும் போது,தெருவின் போக்குவரத்து நிறுத்த முனையங்களில் இன்னும் இது போன்ற குழந்தைகள் சல்யூட் அடித்துப் பிச்சைக் காசு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்;இந்தக் குழந்தைக்குள் ஒரு கல்பனா சாவ்லாவோ,ஒரு டாக்டர் முத்து லெட்சுமியோ ஒரு சரோஜினி நாயுடுவோ இருந்திருக்கலாம்.நம்மை ஆளும் அரசும் அமைப்புகளும் அவர்கள் ஒரு போதும் வெளிப்பட்டு விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போன்றுதான் நிலை இருக்கிறது.


தனது பொறுப்புகளில் எதையும் சரிவர நிறைவேற்றத் துப்பில்லாத இந்த தேசத்தின் அரசாட்சி மீண்டும் மீண்டும் உலகின் பல பகுதிகளிலும்,இந்தியாவுக்கு உள்ளும் கூட தமது குடிமக்கள் கேள்வி முறையற்று வன்முறையின் மூலம் கொன்றழிக்கப் படும்போதோ-கணக்கற்ற முறை பாம்பேயில்  நடந்த குண்டுவெடிப்புகளும் அவற்றிற்கு அரசின் எதிர்வினையும் போல வேடிக்கை மட்டும் பார்க்கவோ அல்லது துப்புக் கெட்ட தனத்துடன் அறிக்கைகள் விடவோ அல்லது ஈழத்தில் நடந்தது போல இணைந்து அழிக்கவோ மட்டுமே முயன்றிருக்கிறது.


ஒரு குடிமகனாக இந்த வகையான எல்லா ஏமாற்றங்களுக்கு மத்தியிலும் இந்த விடுதலை நாள் கொண்டாட்ட உணர்வு எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.

இந்திய விடுதலைக்காக சொல்லொனாத துயர்களையும் வலிகளையும் பெரும் எண்ணிக்கையிலான போராட்டக் காரர்கள் அனுபவித்திருக்கிறார்கள்,தியாகங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் வாழ்வின் அற்புதக் தருணங்கள் மற்றும் பருவங்களில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உயிரையும் விருப்புடன் விடுதலைப் போராட்டத்திற்காகத் தந்திருக்கிறார்கள் என்பதும்  பெரும்பான்மை நினைவுகளில் மறைந்து போய்,இந்திய சுதந்திரத்தை காந்தியும் நேருவும் கவட்டுக்குள் இருந்து எடுத்துக் கொடுத்து விட்டார்கள் என்பது போன்ற ஒரு பொதுக்கருத்து பொதுவாக நிலவுகிறது.

அதை மறுதளித்து இந்திய நாட்டுக்கு விடுதலை ரத்தம்,வலி,உயிர்த்தியாகங்களால் தான் கிடைத்தது என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தருணமாகத் திகழ்வதால் இந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு முக்கிய நாளாகப்படுகிறது.



மேலும் உலகளாவிய பல நாடுகளில் பெரிய நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் சிறிது சிறிதாக சிதைவுற்று சிறு சிறு நாடுகளாக மாறி வருகின்றன அல்லது மாற்றப் படுகின்றன.இந்த சூழலில் இந்தியா ஒரே நாடாக இருப்பினால் மாறி வரும் உலக சூழலில் பல பயன்கள் இருக்கின்றன.அந்த கட்டமைப்பை சிதைந்து விடாமல் காக்கும் ஒரு காரணியாக விடுதலை நாள் உணர்வு திகழ்வதால் இந்த நாள் ஒரு முக்கிய நாள்.


நல்ல தலைவர்கள் நிரம்பிய, ஊழலும் வன்முறையும் அற்ற, பொதுமக்களின் நலன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட ஒரு அரசு வரும் போது இந்தியா என்ற நாட்டின் மனித வளமும் கனிம வளமும் இந்தியப் பொருளாதாரத்தை மென்மெலும் உயர்த்தும்;அத்தகைய உயர்வு பொதுமக்கள் அனைவருக்குமான வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஒரு தினத்தைக் காண வேண்டும் என்ற ஆசை இருக்கும் அனைவருக்கும் இந்த நாட்டின் ஒருங்கிணைப்பைக் காக்க வேண்டிய அவசியமும்,அதற்காக இந்த விடுதலை நாளின் பெருமித உணர்வை கணப்பைப் போல் தேக்கி வைத்திருக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்தியாவும் ஒரு தேசமாக பெருமிதப் படத் தக்க வகையில் மாறும் என்ற நம்பிக்கையுடனும்,அந்த நம்பிக்கை வளரும் வகையில் பணியாற்றவும்,பங்களிக்கவும் இந்திய மக்களாகிய நம் அனைவருக்கும் தேவையும் கடமையும் இருக்கிறது என்ற கருத்துடனும்

உலகெங்கிலும் வாழும் இந்தியத் தோழர்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.




Monday, January 25, 2010

114.பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்

இன்றைய உலகில் நாம் எந்த நாடுகளில் வாழ விரும்புகிறோம்?

பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.

மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.

என்ன காரணம்?

மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.

இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.

இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.


அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.

இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.

ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.

முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !

ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.

இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.

அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.

ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.

என்ன காரணம்?

நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?

பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.

ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?

இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.

எனக்குத் தோன்றிய சில குறைகள்:

1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.

2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!

பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125

Tuesday, July 15, 2008

68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்

பெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான்.

ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநியின் கட்டுரை உளம் பதைக்க வைத்தது உண்மை-அவர் சொல்லும் செய்திகள் உண்மையாயிருக்கும் பட்சத்தில் !

இப்போது ஞாநி-

கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம். அப்படி என்ன கொள்கை அது ?

புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.மன்மோகனின் புஷ் அப்செஷன் பற்றி உளவியல் நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும்.

சென்ற வருடம் மன்மோகன் உதிர்த்த முத்துக்கள் இவை: ``அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.''

இதற்கு முன் கொள்கைக்காக தன் ஆட்சியை தியாகம் செய்த பிரதமர் என்று யாரையாவது சொல்வதானால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியதால் ஆட்சியைத் தியாகம் செய்த வி.பி.சிங்கைத்தான் நியாயப்படி குறிப்பிடலாம். அவரோடு ஒப்பிடும்போது மன்மோகன் சிங் எனக்கு ஒரு அற்பப் புழுவாகத் தெரிகிறார்.

ஏனென்றால் இப்போதைய மன்மோகனின் கொள்கைப் பிடிப்பு அவரை பிரதமராக வைத்திருக்கும் நாட்டு நலன் சார்ந்தது அல்ல. வி.பி.சிங்கின் கொள்கையோ சமூக நீதிக்கானது.

அணு ஒப்பந்தத்தில் காட்டும் பிடிவாதத்தில் கால் சதவிகிதத்தைக் கூட அவர் பணவீக்கத்தினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுப் பிரச்னையில் காட்டி, கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அது புஷ்ஷுடைய பிரச்னை அல்ல.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவுக்கு லாபம் என்ற வாதங்கள் முற்றிலும் பொய்யானவை.

அணுகுண்டு தயாரிப்பது, சோதனையாக அதை வெடித்துப் பார்ப்பது என்ற முட்டாள்தனத்தை இரு முறை இந்தியா செய்ததன் விளைவாக இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலையில் அமெரிக்கா தலைமையிலான அணுகுண்டு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.அதன் இன்னொரு அத்தியாயம்தான் இந்த அமெரிக்க அணு ஒப்பந்தம்.

இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முதலியவை வசம்தான் இருக்கும் என்று டெக்னிக்கலாக சொல்லப்பட்டாலும், இன்று இந்த அமைப்புகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகவே இயங்கி வருபவை என்பது நடைமுறை உண்மை.

இல்லாத ஆயுதங்களை அழிப்பதற்காக இராக்கில் புஷ் நடத்திய யுத்தம் முழுக்க முழுக்க ஐ.நா. சம்மதத்துடன் நடத்தப்பட்டது சமீப வரலாறு.இந்தியாவை தன் ஜால்ரா/அடியாள் கோஷ்டி வளையத்துக்குள் எப்படியாவது சாம தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி கொண்டு வருவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகள் அமெரிக்காவுக்கு அவசியமானவை. இந்த வட்டாரத்தில் சீனாவை சமாளிக்க இந்தியாவை அது பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால் இதில் நமக்கென்ன லாபம்?

சீனாவுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு நண்பராகக் கைகோர்த்துக் கொள்வதுதான் தொலைநோக்கில் நமக்கு லாபம். மக்கள் சக்தியிலும், நிலப்பரப்பிலும், உழைப்பிலும், ஆற்றலிலும் பெரிய நாடுகள் நாம். மரபான தத்துவப் பார்வையினாலும் ஓரணியில் இருக்கவேண்டிய இரு பெரும் நாடுகள் நாம். நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேற்கத்திய நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இப்போதும் அதேதான்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைப் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன் தரப்பில் இதற்குக் கூறும் நியாயங்கள்தான் என்ன? மண்டையைப் பிளக்கும் ஷரத்துகள், வாதங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக் கழித்துக் கடைசியில் பார்த்தால் ஒரே ஒரு வாதம்தான் எஞ்சுகிறது.

நமக்கு நிறைய மின்சாரம் தேவை.

அதற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதையும் யுரேனியத்தையும் நமக்கு அள்ளி அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால்,இந்த ஒப்பந்தத்தைச் செய்தே ஆக வேண்டும். இவ்வளவுதான் விஷயம்.

இது எல்லாம் பொய் என்று போன வருடமே `ஓ' பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். இப்போது மன்மோகனின் பிடிவாதத்தால் அவர் தன் பதவியை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை எல்லாம் தியாகம் செய்து அத்வானியை பிரதமர் ஆக்கும் ஆபத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதால், மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே! அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள். இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்!

யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள். இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம்.

அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

இப்போதுள்ள அணுசக்தி திட்டப்படி, இன்னும் 25 வருடங்களில் 90 ஆயிரம் கோடி செலவிட்டாலும், நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின்சாரத் தேவையில் 9 சதவிகிதத்தை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால், அணு உலை நிர்மாணிக்கும் செலவுதான் அதிகரிக்கும். இப்போது 7 கோடி ரூபாயில் நிர்மாணிக்கும் உலையை நிறுவ 9 கோடி செலவாகும். அணு உலையில் தயாரிக்கும் மின்சாரத்தின் அடக்க விலை வேறு எந்த வழியில் தயரிக்கும் மின்சாரத்தை விட இப்போதும் அதிகம்தான். எப்போதும் அதிகம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழலைக் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும்.

உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக சின்னச் சின்ன காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், வேலிக் காத்தான், உடை மரங்களை எரி வாயுவாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிற்றாலைகள் முதலியவற்றை கிராமங்கள் தோறும் நிறுவி அந்தந்த கிராமத்தின் மின் தேவையை சந்திக்கும் திட்டங்கள்தான் நமக்குத் தேவை.

அதிகாரத்தைப் போல மின்சார தயாரிப்பும் டீசென்ட்ரலைசேஷனுக்கு உட்படுத்தப்படவேண்டும்.நம்முடைய இந்தப் பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத் திருப்புவதும் சரி, அதன் பேரால் அமெரிக்காவின் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதும் சரி, நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல.ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக முலாயம் சிங், அமர்சிங் காலில் சோனியா காந்தியை மன்மோகன் சிங் தள்ளியிருக்கிறார். ஒப்பந்தம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல மன்மோகனின் செக்யூரிட்டி ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களை சந்தித்து விளக்கினாராம். கனவுத் தாத்தா கலாமை வேறு முலாயமும் அமரும் சந்தித்து கருத்து கேட்டார்களாம். `பேஷ், பேஷ். ஒப்பந்தம் நன்னா இருக்கு` என்று அவரும் சொன்னாராம்.

இவையெல்லாம் திரை மறைவு அரசியல் பேரங்களை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகங்கள்தான்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மன்மோகன் வகையறாக்கள், ஏன் எதிர்ப்பவர்கள் கூட, கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கு நியாயமான பதில்களைச் சொல்ல வேண்டும்.

1. ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் தன் நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்பந்த வடிவத்தைத் தருகிறது. ஏன் இந்தியப் பிரதமர் மட்டும் இதே போல இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்றபின்னர்தான் அமெரிக்க அரசிடம் செல்வது என்ற நடைமுறையை மறுக்கிறார்?

2. இந்தியா கையெழுத்திட்டபிறகும் ஹைட் சட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் பொருந்தி வருகிறதா என்பதை மறுபடியும் அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதே போன்ற சம உரிமையை இந்திய நாடாளுமன்றத்துக்கும் தரவேண்டும் என்ற விதியை ஏன் மன்மோகன் அமெரிக்காவிடம் வற்புறுத்தவில்லை?

3.இந்தியா அமெரிக்க உதவியில்லாமல் தயாரிக்கும் அணு மின்சாரத்தை விட, அமெரிக்க உதவியுடன் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என்பது சரியா? தவறா?

4. எப்படித் தயாரித்தாலும், இன்னும் 30 வருடங்கள் ஆனாலும் அணு மின்சாரம் நம் மொத்தத் தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யாது என்பது உண்மையா, இல்லையா?

5. அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது இதர நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும் இன்னமும் பிரச்னைதான் என்பது உண்மையா, இல்லையா?

இப்போது மீண்டும் நான்:

சிறிது நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாட்டின் புகழ்பெற்ற காற்றாலை நிறுவனங்களுள் ஒன்றான வெஸ்டாஸ் என்னும் நிறுவன ஆசிய பசிபிக் ஒன்றிய நிதி மேலாளரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது;அவருடன் பேசும்போது காற்றாலை மூலம் சக்தி உறபத்தி,ஒரு மாற்று வாய்ப்பாக வேகமாக வளர்ந்து வருவதாகவும்,பெருகி வரும் எண்ணெய் தட்டுப்பாட்டில் மாற்று வழி சக்திக்கான தேவைகள் துரித வளர் துறைகளாக இருக்கும் எனவும்,அவரின் நிறுவனமே வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்று எனவும் கூறினார் !

இந்த நியாயமான சந்தேகங்களை,கேள்விகளை எழுப்பும் தார்மீக உள்ள நேர்மை கொண்ட அரசியல்வாதி ஒருவர் கூடவா நாட்டில் இல்லை?

எனில் நாம் அதளபாதாள சரிவை நோக்கி தலைதெறிக்கும் வேகத்தில் ஒடிக் கொண்டிருக்கிறோம் !!!

பி.கு: இந்த செய்திகளை விளித்து உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு மின் மனு,பொதுநல விதயமாகக் கருத வேண்டி,அனுப்ப உத்தேசம்;விருப்பமிருப்பவர்கள் கை கோர்க்கலாம் !!!

Friday, April 4, 2008

51.திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்;நம்மைப் பற்றிய மதிப்பீடு எப்படி உருவாகிறது?
கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.

நேர்த்தியாக’ என்பதற்கான பொருள் மிக விரிவானது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எதைப் பொறுத்து அமைகிறது? இதற்குப் பலவிதமான,ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை;ஆயினும் முதலில் முக்கியமாக கவனத்துக்கு வரும் ஒரு விதயம் நேர்த்தியான,நேர்மையான தலைவர்கள் நாட்டிற்கு அமைவது முக்கியம்.

தலைவர்கள் நேர்மையாக மட்டுமே இருந்தால் போதுமா,திறன் வேண்டாமா என்ற அடுத்த கேள்வி வரும்.இதற்கும் பலர் மாற்பட்ட கருத்துக்களை முன்வைப்பார்கள்;சிலர் திறன் மட்டுமே முக்கியம்,அவர் ‘அப்படி இப்படி’ இருந்தாலும் நாட்டிற்கோ அதன் வளர்ச்சிக்கோ பெரும் கேடு வந்துவிடாது என்பார்கள்;மற்று சிலர் தலைவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது முதலில் முக்கியம்,அவர்கள் திறனாளர்களை தேடிக் கொள்ளலாம் என்பார்கள்.

ஒரு தேர்ந்த அமைப்பில்,நேர்மையான திறனாளர்கள் மட்டுமே தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பது கண்கூடு.சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு.
திறனுடைய நேர்மையாளர்கள் தலைவர்களாக அமைந்துவிட்டால் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்துவிடும் என்ற முடிவு கிடைக்கிறது.

திறனின் அடுத்தகூறு,அவ்வகையான திறன் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில்.

நமது நாட்டைப் பொறுத்தவரை நேர்மையான திறமையாளர்கள் த்லைவர்களாக அமைவது குதிரைக்கொம்பு;நாடு விடுதலை பெற்றதிலிருந்து வரிசைப்படுத்தினால் மிகச்சிலரே இந்த வகைக்குள் வருவார்கள்.அதுவும் தற்போதைய சூழலில் இத்தகு தலைவர்களை பெரிதாக்கிகளின்-லென்ஸ்- வழி தேடவேண்டியதிருக்கிறது.ஓரளவுக்கு பட்டியலிடலாம் என்றால் பிரதமர் மன்மோகன்,நிதி அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் இந்த பட்டியலில் வரக்கூடும்.

சிதம்பரம் நல்ல திறனாளர் என கிட்டத்தட்ட அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்;நல்ல கல்வியும் தெளிந்த சிந்தனையும்,குழப்பமில்லாமல் எண்ணிய கருத்துக்களைப் பேசுவதிலும் வல்லவரென அறியப்படுவர்.பொருளாதார நிபுணர் என அனைவராலும் அறியப்படுபவர்.இந்தியாவில் மட்டுமல்ல,வெளிநாடுகளுக்குச் செல்கையிலும் மதிப்பையும் மரியாதையையும் தானாகப் பெறும்-Commanding respect, not demanding it- மிகச் சில த்லைவர்களில் ஒருவர்.எந்த ஒரு அரசின் தலைவரையும் அவரவரின் செயல்திறனை வைத்தே மதிக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட நல்மதிப்பைப் பெறுபவர்.

1997 குஜ்ரால்’ன் (என நினைக்கிறேன்..) அமைச்சரவையின் அங்கமாக இருந்து அவர் அளித்த நிதிநிலை அறிக்கையை ஒரு கனவின் அறிக்கை-Dream Budget – என்றே அனைவரும் அழைத்தார்கள்.அரசாக எப்படியிருப்பினும்,அவர் சிறப்பாக செயல்பட்டதாக அனைவருமே கருதினார்கள்.

இப்போது UPA அரசின் நிதி அமைச்சராக தனது ஐந்தாவது நிதிநிலை அறிக்கையை சென்ற ஃபெப்ரவரி 2008 ல் சமர்ப்பித்தார்;பலரும் பாராட்டினார்கள்;குறை சொல்ல இயலா நிதிநிலை அறிக்கை என அனைவரும் விமர்சித்தார்கள்;சென்ற 5 ஆண்டுகளாக சுமார் 9 சதவீதத்தில் இந்தியாவின் மொத்த உற்பத்தியின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாமே நன்றாக இருக்கின்றன;
அல்லது இருப்பனவாகத் தோன்றுகின்றனவா ?
திறனாளராக அறியப்பட்ட நமது நிதிமைச்சர் முழு அளவில் செயல்படுபவரா??

சில செய்திகளைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டின் நிதிநிலை அறிக்கையுடன்,சென்ற ஆண்டின் செயல்பாட்டு அறிக்கையும் ( நிதிநிலை அறிக்கைக்கும்,செயல்பாட்டு அறிக்கைக்கும் வேறுபாடு அறியாதவர்கள் மேற்கொண்டு படிக்காதீர்கள்,தலைவலிக்கப் போகிறது !) ஒரு பகுதி அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்;இதையெல்லாம் நமது மேன்மை தங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அலசுகிறார்களா அல்லது குறைந்தபட்சம் முழுதும் படிப்பார்களா என்பது கேள்விக்குறி.உண்மையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணி இதுவே,ஆனால் இவை எல்லாம் இந்தியாவில் நன்முறையில் நடக்கவேண்டும் என எண்ணுவதெல்லாம் சிறிது அதிகப்படியான ஆசைதான்...)

சென்ற மூன்று ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் முக்கியமான மூன்று விதயங்களாக அறிவிக்கப்பட்டவையும் அதற்கான மதிப்பீடுகளும் பின்வருமாறு:-
1.மும்பையின் மிதாய்(Mithi River) ஆறு சீர்செய்யப்படும் திட்டம்-ரூ.1260 கோடி
2.மும்பையை சீனாவின் ஷாங்காய் நகரைப் போல் மாற்றும் திட்டம்-ரூ 1000 கோடி
3.ஒரு சர்வதேச நிதி முனையமாக உருவாக்கும் திட்டம்-ரூ 1000 கோடி

இந்த மூன்று திட்டங்களுக்கும் மூன்று ஆண்டுகளில் உண்மையாக செயல்படுத்தும் நோக்கில் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 16 கோடியே 16 லட்சம் மட்டுமே...அதுவும் எதற்காக உபயோகிக்கப்பட்டது தெரியுமா?

-ஒரு அறிக்கை தயாரிக்கபட்டது
-அமைச்சகத்தின் வலைப்பக்கத்தில் இச்செய்தி போடப்பட்டது
-பிரதமருக்கு ஒரு காட்சி விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது
-திட்டப் பரிந்துரைகள் வேண்டி செய்தி பல ஏஜென்ஸிகளுக்கு அனுப்பப்பட்டது

அவ்வளவுதான்..

திட்டத்தின் கூறுகள் பற்றிக் கூட எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை; திட்டப் பகுதிகள் வரையறை செய்யப்படவில்லை; திட்டத்திற்கான செயல் திட்ட அறிக்கை கூட முழுதாக தயாரிக்கப்படவில்லை.

ஆனால் இம்மூன்று திட்டங்களும் ‘திட்ட செயல்பாட்டு அறிக்கையில்’ செயல்படுத்தி முடித்துவிட்ட திட்டங்களோடு சேர்க்கப்பட்டு விட்டன.அதாவது Action Completed Report ன் பகுதியாகி விட்டன....

கலாம் என்றொரு விவரமில்லாதவர் சிறிதுகாலம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார்;அப்போது அவர் புரா,புரா என அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார்.
புரா-PURA – என்றால் என்ன? Provision of Urban amenities in Rural Area என்பதின் சுருக்கம் தான் புரா.அதாவது கிராமப் புறங்கள் எவ்விதம் மேம்பாடு அடையலாம் என்பதற்கான் ஒரு ஆதாரத் திட்டம்.

இந்தியாவில் ஏன் நகரங்களில் இவ்வளவு நெருக்கடியும்,மக்கள் கிராமங்களை விட்டு நகர் நோக்கி ஓடுவதும் ஏன் நடக்கிறது,இதைத் தவிர்க்க அரசும்,அமைப்புகளும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கலாம் சிறிது சிந்தித்ததன் விளைவே இந்தத் திட்டம்.

(என்னுடைய வேறு இரு பதிவுகளில் இந்த ஆதார விதயத்தை நான் தொட்டிருக்கிறேன்,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசு எவ்விதம் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சிப் பகுதியாக மாற்றுகிறது என்பதை நேரில் பார்ப்பவர்கள் அறிவார்கள்.சிங்கையிலும் ஒரு காலத்தில்(1980 களில் கூட) காடு போல இருந்த ஜுராங் தீவு பத்து வருடங்களுக்கு முன் தொழில் நகராக மாறி,இப்போது சுமார் 7.50 மில்லியன் டாலர் முதலீட்டில் ஏரி சார்ந்த-Lake View Project- தொழில் மற்றும் குடியிருப்புத் தடமாக மாறப்போகிறது)

இந்த புரா’ விற்கான திட்டம் ஒன்று 2005-2006 நிதிநிலை அறிக்கையில் நமது நிதி அமைச்சரால் அறிவிக்கப் பட்டது(கலாமின் தொந்தரவு தாங்கவில்லை போல !!!!) இதற்கான மாதிரி திட்டங்கள்-Pilot Projects – நாட்டின் ஒரு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2005-06 ல் செயல்படுத்தப் படும் என அறிவிக்கப் பட்டது.

அவ்வளவுதான் நடவடிக்கை; கலாம் போனார், புரா’வும் பறந்து விட்டது !

அடுத்தது 2004-2005ன் நிதிநிலை அறிக்கை-நமது பெரும்பாலான் ஏழை மக்களுக்கு பொருள்கள் சரியான விலையில் கிடைக்க நியாய விலைக்கடைகள் செயல்பாடு திறனுடன் அமைய வேண்டும்;அவற்றின் செயல்பாட்டை சீரமைப்பது ஏழை மக்களின் வாழ்வை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் என அமைச்சர் கூறினார்.
இதற்கு உணவுச் சிட்டைகள்-Food Stamps – விளிம்புநிலை மக்களுக்கு வழங்கப்படும்,இந்த மாதிரித் திட்டத்திற்கு-Pilot Project – நாட்டின் இரு மாநிலங்கள் முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

பிறகு ????

2007-2008 நிதிநிலை அறிக்கை வரை ஒன்றும் நடைபெறவில்லை;ஆனால் இப்பொதும் நிதி அமைச்சர் நியாயவிலைக் கடைகள் சீராக செயல்பட வேண்டியதன் அவசியமும், அதன் மூலம் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் பயனடைவதும் வலியுறுத்தப்பட்டது;இம்முறை யோசனை-நியாயவிலைக் கடைகளைக் கணினி மயமாக்கலும்,அவ்ற்றை இந்திய உணவுக் கழகத்துடன் இணைப்பதும்,செயல் காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் சரி...

இந்த வருடம் நிதிநிலை அறிக்கையில் டெக்னாலஜி முன்னேற்றம் கண்ட விட்டது; இப்போது ஏழை பயனாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் திட்டம் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது !
இன்னும் நமது நியாய விலைக் கடைகள் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இருக்கின்றன.

1997 ல் 'கனவு' நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த போது,அடுத்த ஆண்டில் சுப்ரமணியன் சுவாமி இதே போன்று,அறிவிக்கப் பட்ட திட்டங்கள் செயல்படாது ஒதுக்கப்பட்ட 50000 கோடி ரூபாய்கள் அப்படியே கருவூலத்துக்குத் திரும்பிய செய்தியை சுட்டி எழுதி இருந்தார்;பெரும்பாலானவர்களின் கவனத்துக்கு அது வந்திருக்காது !!!

சிங்கப்பூர்,அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் என் டி யூ சி ,வால்மார்ட், கார்ஃபோர் போன்ற நிறுவனங்கள்-பின்னவை இரண்டும் தனியார் நிறுவனமாக இருப்பினும்- மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் எவ்விதம் முனைப்புடன் பங்காற்றுகின்றன என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள்.

ஆக வெறும் திட்டங்கள் காகிதத்தில்-இப்போது மடிக்கணினிகளில்-மட்டும் தயாரிக்கப்பட்டு,பாராளுமன்றத்தில் படிக்கப்பட்டு ஆளும்கட்சிக் காரர்கள் கைதட்டிவிட்டும்,எதிர்க்கட்சிக் காரர்கள் மைக்கால் தட்டி விட்டும் கலைய,தேசமும்,ஏழை இந்தியனின் நிலையும் அப்படியே தொடர்கின்றன..

இது எந்தவிதமான செயல்பாடு?????

திறனுக்கும், செயல்பாட்டுக்கும் தொடர்பில்லாத இந்நிலை நீடிப்பது யாருடைய குற்றம் ??????????


Aknowledgements to Arun Shourie,Express Press Holdings

Thursday, March 6, 2008

47.நீதித்துறை,அரசியல் மற்றும் சான்றான்மை

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். "ஆள்கொணர் மனு'க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

""கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது'' என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். ""ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்'' என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது னம் கடைப்பிடிப்போம்.

குறிப்பு: இது ஒரு மீள்பதிவுதான்,ஆயினும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்தியாகத் தோன்றியது.

Acknowledgements: TJS.George,Columnist,Express Group.

Monday, August 27, 2007

60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 2

பார்வை 1

ஆசியாவின் பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில்தான் சுதந்திரம் பெற்றன.பற்பல மன்னர்கள்,பல சமஸ்தானங்களை ஆண்ட போதிலும் உண்மையில் இந்தியா ஒரு(அல்லது பல) ஸ்வதேசமாகவே பலகாலம் இருந்திருக்கிறது.ஒன்றுபட்ட இந்தியாவை ஓரளவு முழுமையாக ஆண்டவர்கள் முகலாயர்கள்.அதற்குப் பின்பு படிப்படியாக டச்சு,பிரிட்டிஷ் நாடுகளின் ஆதிக்கத்திற்குள் நாம் சுமார் 200 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தோம்.இன்றைய இந்தியாவின் ‘ஏழைநாடு’ நிலை பிரிட்டிஷ்,டச்சுக்காரர்கள் நமக்கு அளித்த பரிசும்,நாமாக தருவித்துக் கொண்ட வெடிக்கும் நிலை,மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாலும்தான் !
பழங்கால இந்தியாவை பற்றிய சில தகவல்கள் ஆச்சரியப்படுத்துபவை.
17 ம் நூற்றாண்டு வரை இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் பகுதிகளே உலகின் பெரும் செல்வந்த நாடுகள்.அலெக்சாண்டர் மற்றும் இதர கிரேக்கர்கள் ஹிந்துகுஷ் வழியாக அடைந்த தேசத்தின் செல்வச் செழிப்பை(தங்கம் பெருமளவில் பாத்திரங்கள் வடிவில் உபயோகிக்கப் படுகிறது;அரிய ரத்தின நகைகள் வெகு சாதாரணமாக உபயோகப் படுத்தப் படுகின்றன போன்ற குறிப்புகளால்...) ஐரோப்பா உணர்ந்ததும் மேலும் பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்.
அந்த நாட்களில்(17’ம் நூற்றாண்டு வரை) இந்தியாவின் முகலாயர்களும்,சீனாவின் மிங் இனமும் மட்டுமே தெற்கு ஆசியாவின் பெரும் அரசியல் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள்.அப்பொதைய உலகின் ஐரோப்பிய தேசங்களுக்கு இந்திய,சீன தேசங்கள் பலமும்,செல்வாக்கும் பெற்ற இரு தேசங்கள் !
மில்டனின் paradise lost ல் ஆக்ராவும்,லாகூரும் கடவுளின் எதிர்கால உன்னத ஆக்கங்களாக ஆடம்’க்கு வருணிக்கப் படுகின்றன.(நம்பத்தான் முடியவில்லை,இல்லையா?)
அந்நாளைய லாகூர்,அந்நாளைய கான்ஸ்டாண்டிநோபிளை விட செல்வத்திலும்,வலிமையிலும் வெகுவாகச் சிறந்திருந்தது.
1498 ல் வாஸ்கோடகாமாவின் கீழை தேசங்களுக்கான கடல் வழி கண்டுபிடிக்கப் பட்ட பின்புதான் ஆரம்பித்தது சனி !
1600 ல் கிழக்கிந்தியக் கம்பெனி துவங்கப் பட்ட போது பிரிட்டனின் ஆண்டு மொத்த பொருளியல்(GDP) உலகின் மொத்த பொருளியலில் 1.8 % மட்டுமே. அப்போதைய இந்தியாவின் பொருளியல்-மூச்சப் பிடித்துக் கொள்ளுங்கள்- 22.5%.
1870 ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் உச்சத்தில் பிரிட்டனின் பொருளியல் 9.1 % ஐ எட்டியபோது,இந்தியா தேர்ட் வேல்ர்ட் நாடாக மாற ஆரம்பித்தது. இன்னும் சொல்லப் போனால் 18’ம் நூற்றாண்டுகளில்தான் பிரிட்டன் ‘ஒப்பு நோக்கிய கொடுக்கல்(Balance of Payment) விகிதத்தில் ஆசியாவை மிஞ்ச முடிந்தது !
(ஆக வைசிராய்களும்,கவர்னர்களும் சுமார் 200 ஆண்டு காலம் இந்தியாவை விடைபெற்றுச் செல்லும் போதெல்லாம் எத்தனை கப்பல்களில் எவ்வளவு ‘எடுத்துக்’ கொண்டு சென்றிருப்பார்கள் என்பதை கற்பனைக்கே விட வேண்டும்.அவ்வளவுக்கும் தாக்குப் பிடித்தே இந்த நிலையில் இன்று இருக்கிறோம்.ஹூம்...ஏன் பிரிட்டிஷ் பவுண்ட் 100 ரூபாயை எட்டாது!)
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சரியான் தொலைநோக்குப் பார்வை உடைய கொள்கைகளும்,தலைவர்களும்,சீரிய பண்புகளையும்,முதன்மைத் தகுதிகளையும் கொண்டவர்கள் மட்டுமே நாட்டை வழி நடத்துபவர்களாக இல்லாது போனதும்,மருந்துக்கும் ஊழல் இருக்கக் கூடாது என்ற கொள்கை இல்லாததுமே இந்தியா மூன்றாம் தர வரிசைக்குப் போன கதையின் அடிநாதம்.
இன்று பிரிட்டனின் முதல் செலவந்தர் லக்ஷ்மி மிட்டல்.பிரிட்டனின் மிகப் பெரிய எஃகு ஆலையான கோரஸ்,இந்திய டாடாவுக்கு சொந்தம் !
வரலாறு திரும்புவது போலத் தோன்றினாலும் மேற்சொன்ன மூன்று காரணங்களும்,கிராமப் பொருளாதாரமும்,நகர் சார்ந்த பொருளாதாரமும் இருவேறு திசைகளில் பயணிப்பதும்,வீங்கி வெடிக்கப் போகும் வெடிகுண்டைப் போன்ற மக்கள்தொகையும் இன்னும் நம்மைக் கீழே இழுக்கும் காரணிகள் !

Acknowledgement: The Last Mughal : The fall of Dynasty,Delhi 1857 written by Willium Dalrymple

Monday, August 13, 2007

60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 1

நாம் இந்தியாவின் 60 ஆவது சுதந்திர தினத்தை வரும் 15’ஆகஸ்ட் 2007 ல் கொண்டாடப்போகிறோம்.(உண்மையில் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகிறோமா என்பது ஒரு விவாதத்திற்கு உரிய கேள்வி.ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வஸந்த் & கோ,வஸந்த் ‘சுதந்திரம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று’ என்கிறார்.அவரைப் பொறுத்த வரை அது ஒரு உருவாக்கப்பட்ட பொருள்,commodity);அரசியல்வாதிகளுக்கு கோட்டையில் கொடி ஏற்றும் ஒரு வைபவம்;அறியாப் பாலகர்களுக்கு பள்ளியில் மிட்டாய் கொடுக்கும் மற்றுமொரு தினம்..எந்த இந்தியக் குடிமகனுக்காவது சுதந்திரம் பற்றி ஒரு பெருமிதமோ,மகிழ்வோ,கொண்டாட்டமோ இருக்குமா???
பெரும் கல்வி கற்ற நாமாவது அப்படி உணருகிறோமா???
உண்மையான நெஞ்சார்ந்த பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு,மேலும் கிடைக்கும் ஒரு விடுமுறை நாள்தான் சுதந்திர தினத்தை நினைவு படுத்தும் கருவி !!!
60 ஆண்டுகளின் சுதந்திரம் இந்தியாவை,இந்தியர்களை என்னவாக ஆக்கியிருக்கிறது?
ஒரு ஒப்பிடாக ஜப்பான் 1945’ல் ஒரு பேரழிவை சந்தித்தது !
3 நாட்கள் இடைவெளியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள்!!
பெருமளவு மக்களும்,பொருள் சேதமும் ஜப்பானை சீர் குலைத்தன.
இந்தியாவும் ஒரு பேரழிவில் இருந்து 1948 ல் மீண்டது.நாமும் மிகப் பெருமளவு (வரலாற்றில் இல்லாத அல்லது மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட) மனித உயிர் இழப்பை சந்தித்தோம்;ஆயினும் நமக்கு பொருள் கட்டமைப்பு சேதம் ( destruction of infrastructure) ஜப்பானின் அளவுக்கு இல்லை.
ஆனால் இன்று இரு தேசங்களையும் ஒப்பு நோக்க முடியாத அளவுக்கு ஜப்பான் முன்னேறியிருக்கிறது..நாம் பின் தங்கி இருக்கிறோம்... நாம் சுதந்திர இந்தியாவில் என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால்,வருவது பல வகைகளில் வருத்தமே !
இன்னொரு கவனிக்கத்த ஒப்பீடு சிங்கப்பூர்.சிங்கப்பூர் தனது 42 ஆவது சுத்ந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 9,2007 ல் கொண்டாடியது.
ஆனால் அது உண்மையான கொண்டாட்டம் !
சிங்கப்பூரின் பிரதமர் மகிழ்ச்சியுடன் மக்களுடன் கலந்த நேரம் அது !

மக்களின் பங்கு குறைவானதல்ல! அவர்களின் உற்சாகத்தைப் பாருங்கள் !


சின்னஞ் சிறுவனின் முகத்தில் கூட கொண்டாட்டமும் பெருமிதமும் !
சுதந்திர தின விழா நடந்த அரங்கு நீரில் மிதக்கும் ஒரு பெரும் மேடை;கொண்டாடங்களும் வான வேடிக்கைகளும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன !
இத்தனைக்கும் சிங்கப்பூர் பொருளாதார வளத்தை மட்டும் சாதித்த ஒரு நாடு ! இந்தியாவை போல மிகப் பெரும் பாரம்பரியமோ,இந்தியா உலகிற்கு வழங்கியது போல பெரும் கருத்தாக்கங்களோ,இந்தியாவைப் போன்ற இயற்கை வளங்களோ எதுவும் சிங்கப்பூரில் இல்லை....
ஆனால் ஒரு முன்னேறிய சிங்கப்பூரை உருவாக்குவேன் என்று உள்ளார்ந்து நம்பிய,செயல் வேகம் மிக்க தலைவர்களும், அவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்கும்,நாட்டின் சுதந்திரத்திலும்,முன்னேற்றத்திலும் பெருமைப்படும் மக்களும் கை கோர்த்தார்கள் !
இந்தியாவிலும் மாறுதல்கள் சாத்தியம் என்று மனமார்ந்த நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களில் நானும் ஒருவன்!

ஆனால் அதற்கான ஆயத்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,நம்மைப் போன்ற,கல்வி கற்ற,உலகளாவிய பார்வை கொண்ட இந்தியர்கள்,சிந்திக்க வேண்டிய நேரம்,இந்த 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரம் !!!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நன்றி !

1-நாம் என்ன செய்ய முடியும் ?

நண்பர்களே,
எனக்கு மின் கடிதம் (email) மூலம் வந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....


FACTS TO MAKE EVERY Indian PROUD

Q. Who is the GM of Hewlett Packard (hp)?

A. Rajiv Gupta

Q. Who is the creator of Pentium chip (needs no introduction as 90% of the today's computers run on it)?

A. Vinod Dahm

Q. Who is the third richest man on the world?

A. According to the latest report on Fortune Magazine, it is Azim Premji, who is the CEO of Wipro Industries. The Sultan of Brunei is at 6 th position now.

Q. Who is the founder and creator of Hotmail (Hotmail is world's No.1 web based email program)?

A. Sabeer Bhatia

Q. Who is the president of AT & T-Bell Labs (AT & T-Bell Labs is the creator of program languages such as C, C++, Unix to name a few)?

A. Arun Netravalli

Q. Who is the new MTD (Microsoft Testing Director) of Windows 2000, responsible to iron out all initial problems?

A. Sanjay Tejwrika

Q. Who are the Chief Executives of CitiBank, Mckensey & Stanchart?

A. Victor Menezes, Rajat Gupta, and Rana Talwar.



We Indians are the wealthiest among all ethnic groups in America, even faring better than the whites and the natives. There are 3.22 millions of Indians in USA (1.5% of population). YET, 38% of doctors in USA are Indians. 12% scientists in USA are Indians. 36% of NASA scientists are Indians. 34% of Microsoft employees are Indians. 28% of IBM employees are Indians. 17% of INTEL scientists are Indians.
13% of XEROX employees are! Indians. Some of the following facts may be known to you. These facts were recently published in a German magazine, which deals with WORLD HISTORY




FACTS ABOUT INDIA.


1. India never invaded any country in her last 1000 years of history.
2. India invented the Number system. Zero was invented by Aryabhatta.
3. The world's first University was established in Takshila in 700BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4 th century BC was one of the greatest achievements of ancient India in the field of education.
4. According to the Forbes magazine, Sanskrit is the most suitable language for computer software. 5. Ayurveda is the earliest school of medicine known to humans.
6. Although western media portray modern images of India as poverty striken and underdeveloped through political corruption, India was once the richest empire on earth. 7. The art of navigation was born in the river Sindh 5000 years ago. The very word "Navigation" is derived from the Sanskrit word NAVGATIH.
8. The value of pi was first calculated by Budhayana, and he explained the concept of what is now k! nown as the Pythagorean Theorem. British scholars have last year (1999) officially published that Budhayan's works dates to the 6 th Century which is long before the European mathematicians. 9. Algebra, trigonometry and calculus came from India . Quadratic equations were by Sridharacharya in the 11 th Century; the largest numbers the Greeks and the Romans used were 106 whereas Indians used numbers as big as 10 53.
10. According to the Gemmological Institute of America, up until 1896, India was the only source of diamonds to the world. 11. USA based IEEE has proved what has been a century-old suspicion amongst academics that the pioneer of wireless communication was Professor Jagdeesh Bose and not Marconi.
12. The earliest reservoir and dam for irrigation was built in Saurashtra. 13. Chess was invented in India.
14. Sushruta is the father of surgery. 2600 years ago he and health scientists of his time conducted surgeries like cesareans, cataract, fractures and urinary stones. Usage of anaesthesia was well known in ancient India .
15. When many cultures in the world were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley ( Indus Valley Civilisation).
16. The place value system, the decimal system was developed in India in 100 BC.
Quotes about India .
We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made. Albert Einstein.
India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend and the great grand mother of tradition. Mark Twain.
If there is one place on the face of earth where all dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India . French scholar Romain Rolland.
India conquered and dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border. Hu Shih (former Chinese ambassador to USA )
ALL OF THE ABOVE IS JUST THE TIP OF THE ICEBERG, THE LIST COULD BE ENDLESS. BUT, if we don't see even a glimpse of that great India in the India that we see today, it clearly means that we are not working up to our potential; and that if we do, we could once again be an evershining and inspiring country setting a bright path for rest of the world to follow.
I hope you enjoyed it and work towards the welfare of INDIA . Say proudly, I AM AN INDIAN. Please forward this email to all friends….

இதன் சாராம்சம்,நாம் இப்பொழுது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் பங்கு வகிக்கிறோம் அல்லது நிர்வகிக்கிறோம் என்பதே.
எனக்கு தோன்றுகிற தவிர்க்க முடியாத ஒரு கேள்வி,ஏன் இவ்வளவு புத்திசாலிகள் இருக்கின்ற ஒரு தேசம் தன் குடிமக்களை இன்னும் முழுமையாக வறுமைக் கோட்டில் இருந்து மீட்க முடியாமல் இருக்கின்றது ?
வெளி நாடு வாழ் இந்தியர்களான பலர் (இந்த வகை மின் கடிதங்கள் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களாலேயே அனுப்பப் படுகின்றன.அல்லது அவர் வெளிநாடுகளை ஒரு முறையாவது போய் பார்த்திருப்பார்,ஏனெனில் அவர்களுக்குத்தான் இந்தியாவுக்கும்,பல வளரும்,வளர்ந்த நாடுகளுக்கும் இருக்கும் மாபெரும் வித்தியாசம் மனதில் உறைக்கும்;அதற்கு ஒரு எதிர் வினையாகவாவது ஒரு மின்மடல் அனுப்பி விட்டு ஆறுதல் கொள்வார்கள்! இந்தியாவிலேயே இருக்கும் அனைவரும் (மெத்தப் படித்தவர்கள் உட்பட) இந்தியாவில் இருக்கின்ற எருமைமாட்டுத் தனத்துக்கு பழகி விட்டார்கள்;அல்லது விரும்பி ஏற்றுக் கொள்ளவே தயாராகி விட்டார்கள்...) இந்த வகையான மின்கடிதங்களை அனுப்புவதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றோமா? (மின்மடலின் முடிவில் தவறாது ஒரு குறிப்பு இருக்கும்,please forward this to your friends.......என்று) .
இது தவிர நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?
இவ்வளவு கடின உழைப்பும்,தகுதியும்,திறமைகளும் நிரம்பப்பெற்ற ஒரு சமுதாயம் ஏன் வேறு வகையான மாற்றங்களை இந்தியாவில் கொண்டு வர முடியாது?
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இதற்கு பதில் தேட வேண்டும் என்று நினைப்பவர்களில், நீங்களும் ஒருவராக இருந்தால், சிறிது உலக வரலாற்றை திருப்பிப் பார்ப்போம்.
எங்கெல்லாம் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டனவோ,ஏற்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் இதுபோன்ற கேள்விகளை பலர் எழுப்பி இருப்பார்கள்,அவற்றிற்கு விடை தேட முயற்சித்திருப்பார்கள்...
நான் தேடிய விடைகள் 1900 களில் வெளிநாடுகளில் தங்கி (கல்விக்காகவோ,வேலைக்காகவோ..) அவரவர் தேசங்களுக்கு திரும்பி,வியக்கத் தகுந்த மாற்றங்களைக் கொண்டு வந்த சிலரின் (நேரு(Discovery of India) மற்றும் லீ க்வான் யூ(The Singapore Story & From Third World to First))செயல்களிலும்,எண்ணங்களிலும் கிடைப்பதாகத் தோன்றுகின்றன....

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்,நன்றி !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...