60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 1
நாம் இந்தியாவின் 60 ஆவது சுதந்திர தினத்தை வரும் 15’ஆகஸ்ட் 2007 ல் கொண்டாடப்போகிறோம்.(உண்மையில் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகிறோமா என்பது ஒரு விவாதத்திற்கு உரிய கேள்வி.ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வஸந்த் & கோ,வஸந்த் ‘சுதந்திரம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று’ என்கிறார்.அவரைப் பொறுத்த வரை அது ஒரு உருவாக்கப்பட்ட பொருள்,commodity);அரசியல்வாதிகளுக்கு கோட்டையில் கொடி ஏற்றும் ஒரு வைபவம்;அறியாப் பாலகர்களுக்கு பள்ளியில் மிட்டாய் கொடுக்கும் மற்றுமொரு தினம்..எந்த இந்தியக் குடிமகனுக்காவது சுதந்திரம் பற்றி ஒரு பெருமிதமோ,மகிழ்வோ,கொண்டாட்டமோ இருக்குமா???
பெரும் கல்வி கற்ற நாமாவது அப்படி உணருகிறோமா???
உண்மையான நெஞ்சார்ந்த பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு,மேலும் கிடைக்கும் ஒரு விடுமுறை நாள்தான் சுதந்திர தினத்தை நினைவு படுத்தும் கருவி !!!
60 ஆண்டுகளின் சுதந்திரம் இந்தியாவை,இந்தியர்களை என்னவாக ஆக்கியிருக்கிறது?
ஒரு ஒப்பிடாக ஜப்பான் 1945’ல் ஒரு பேரழிவை சந்தித்தது !
3 நாட்கள் இடைவெளியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள்!!
பெருமளவு மக்களும்,பொருள் சேதமும் ஜப்பானை சீர் குலைத்தன.
இந்தியாவும் ஒரு பேரழிவில் இருந்து 1948 ல் மீண்டது.நாமும் மிகப் பெருமளவு (வரலாற்றில் இல்லாத அல்லது மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட) மனித உயிர் இழப்பை சந்தித்தோம்;ஆயினும் நமக்கு பொருள் கட்டமைப்பு சேதம் ( destruction of infrastructure) ஜப்பானின் அளவுக்கு இல்லை.
ஆனால் இன்று இரு தேசங்களையும் ஒப்பு நோக்க முடியாத அளவுக்கு ஜப்பான் முன்னேறியிருக்கிறது..நாம் பின் தங்கி இருக்கிறோம்... நாம் சுதந்திர இந்தியாவில் என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால்,வருவது பல வகைகளில் வருத்தமே !
இன்னொரு கவனிக்கத்த ஒப்பீடு சிங்கப்பூர்.சிங்கப்பூர் தனது 42 ஆவது சுத்ந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 9,2007 ல் கொண்டாடியது.
ஆனால் அது உண்மையான கொண்டாட்டம் !
சிங்கப்பூரின் பிரதமர் மகிழ்ச்சியுடன் மக்களுடன் கலந்த நேரம் அது !
மக்களின் பங்கு குறைவானதல்ல! அவர்களின் உற்சாகத்தைப் பாருங்கள் !
சின்னஞ் சிறுவனின் முகத்தில் கூட கொண்டாட்டமும் பெருமிதமும் !

சுதந்திர தின விழா நடந்த அரங்கு நீரில் மிதக்கும் ஒரு பெரும் மேடை;கொண்டாடங்களும் வான வேடிக்கைகளும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன !
இத்தனைக்கும் சிங்கப்பூர் பொருளாதார வளத்தை மட்டும் சாதித்த ஒரு நாடு ! இந்தியாவை போல மிகப் பெரும் பாரம்பரியமோ,இந்தியா உலகிற்கு வழங்கியது போல பெரும் கருத்தாக்கங்களோ,இந்தியாவைப் போன்ற இயற்கை வளங்களோ எதுவும் சிங்கப்பூரில் இல்லை....
ஆனால் ஒரு முன்னேறிய சிங்கப்பூரை உருவாக்குவேன் என்று உள்ளார்ந்து நம்பிய,செயல் வேகம் மிக்க தலைவர்களும், அவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்கும்,நாட்டின் சுதந்திரத்திலும்,முன்னேற்றத்திலும் பெருமைப்படும் மக்களும் கை கோர்த்தார்கள் !
இந்தியாவிலும் மாறுதல்கள் சாத்தியம் என்று மனமார்ந்த நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களில் நானும் ஒருவன்!
ஆனால் அதற்கான ஆயத்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,நம்மைப் போன்ற,கல்வி கற்ற,உலகளாவிய பார்வை கொண்ட இந்தியர்கள்,சிந்திக்க வேண்டிய நேரம்,இந்த 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரம் !!!உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நன்றி !
பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites
-
வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனிய...
-
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று இல்லற மல்லது நல்லற மன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் உண்டி சுரு...
-
பெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான். ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநிய...
-
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்...
-
நீவெஒகோ நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தமிழகத்திலும் மற்ற நாடுகளில் பார்க்க முடிந்தவர்களும் பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம...
-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே இது சம்பந்தர் த...
-
வர்ச்சுவல் காமம் என்ற பெயரில் நிசப்தம் என்ற பதிவில் ஒரு பதிவு எழுதப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற...
-
சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்... ...
-
ஒரே மூச்சில் எழுதி பதிவிட வேண்டும் என்று நினைத்தே விநாயகர் அகவலைப் பொருளுடன் எழுத முனைந்து முதல் பகுதி எழுதினேன். அது மிக நீண்டதால் ப...
-
இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது. அத்தி பூத்தாற்போல் எப...
பார்வைப் புலம்...
-
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
4 years ago
-
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
-
தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்
நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும்
போகாமல், கும்பக...
7 years ago
-
மீட் அண்ட் க்ரீட்
-
ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில்
இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து
சேரும். செக்யூர...
7 years ago
-
அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்
-
டாக்டர் அப்துல் கலாம் (1931-2015)
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து
கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செ...
9 years ago
We have to concentrate on three 'TION's: POPUALTION, CORRUPTION & EDUCATION. If we spend considerable amount of time and efforts to control the first two and mature the last one (but not least), we can see the DEVELOPED INDIA very soon. NithyaAlangaran S.
ReplyDelete