குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, August 13, 2007

60 ஆவது சுதந்திர தினம்- ஒரு மீள்பார்வை 1

நாம் இந்தியாவின் 60 ஆவது சுதந்திர தினத்தை வரும் 15’ஆகஸ்ட் 2007 ல் கொண்டாடப்போகிறோம்.(உண்மையில் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகிறோமா என்பது ஒரு விவாதத்திற்கு உரிய கேள்வி.ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வஸந்த் & கோ,வஸந்த் ‘சுதந்திரம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று’ என்கிறார்.அவரைப் பொறுத்த வரை அது ஒரு உருவாக்கப்பட்ட பொருள்,commodity);அரசியல்வாதிகளுக்கு கோட்டையில் கொடி ஏற்றும் ஒரு வைபவம்;அறியாப் பாலகர்களுக்கு பள்ளியில் மிட்டாய் கொடுக்கும் மற்றுமொரு தினம்..எந்த இந்தியக் குடிமகனுக்காவது சுதந்திரம் பற்றி ஒரு பெருமிதமோ,மகிழ்வோ,கொண்டாட்டமோ இருக்குமா???
பெரும் கல்வி கற்ற நாமாவது அப்படி உணருகிறோமா???
உண்மையான நெஞ்சார்ந்த பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு,மேலும் கிடைக்கும் ஒரு விடுமுறை நாள்தான் சுதந்திர தினத்தை நினைவு படுத்தும் கருவி !!!
60 ஆண்டுகளின் சுதந்திரம் இந்தியாவை,இந்தியர்களை என்னவாக ஆக்கியிருக்கிறது?
ஒரு ஒப்பிடாக ஜப்பான் 1945’ல் ஒரு பேரழிவை சந்தித்தது !
3 நாட்கள் இடைவெளியில் இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள்!!
பெருமளவு மக்களும்,பொருள் சேதமும் ஜப்பானை சீர் குலைத்தன.
இந்தியாவும் ஒரு பேரழிவில் இருந்து 1948 ல் மீண்டது.நாமும் மிகப் பெருமளவு (வரலாற்றில் இல்லாத அல்லது மறைக்கப்பட்ட,மறக்கப்பட்ட) மனித உயிர் இழப்பை சந்தித்தோம்;ஆயினும் நமக்கு பொருள் கட்டமைப்பு சேதம் ( destruction of infrastructure) ஜப்பானின் அளவுக்கு இல்லை.
ஆனால் இன்று இரு தேசங்களையும் ஒப்பு நோக்க முடியாத அளவுக்கு ஜப்பான் முன்னேறியிருக்கிறது..நாம் பின் தங்கி இருக்கிறோம்... நாம் சுதந்திர இந்தியாவில் என்ன சாதித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால்,வருவது பல வகைகளில் வருத்தமே !
இன்னொரு கவனிக்கத்த ஒப்பீடு சிங்கப்பூர்.சிங்கப்பூர் தனது 42 ஆவது சுத்ந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 9,2007 ல் கொண்டாடியது.
ஆனால் அது உண்மையான கொண்டாட்டம் !
சிங்கப்பூரின் பிரதமர் மகிழ்ச்சியுடன் மக்களுடன் கலந்த நேரம் அது !

மக்களின் பங்கு குறைவானதல்ல! அவர்களின் உற்சாகத்தைப் பாருங்கள் !


சின்னஞ் சிறுவனின் முகத்தில் கூட கொண்டாட்டமும் பெருமிதமும் !
சுதந்திர தின விழா நடந்த அரங்கு நீரில் மிதக்கும் ஒரு பெரும் மேடை;கொண்டாடங்களும் வான வேடிக்கைகளும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன !
இத்தனைக்கும் சிங்கப்பூர் பொருளாதார வளத்தை மட்டும் சாதித்த ஒரு நாடு ! இந்தியாவை போல மிகப் பெரும் பாரம்பரியமோ,இந்தியா உலகிற்கு வழங்கியது போல பெரும் கருத்தாக்கங்களோ,இந்தியாவைப் போன்ற இயற்கை வளங்களோ எதுவும் சிங்கப்பூரில் இல்லை....
ஆனால் ஒரு முன்னேறிய சிங்கப்பூரை உருவாக்குவேன் என்று உள்ளார்ந்து நம்பிய,செயல் வேகம் மிக்க தலைவர்களும், அவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்கும்,நாட்டின் சுதந்திரத்திலும்,முன்னேற்றத்திலும் பெருமைப்படும் மக்களும் கை கோர்த்தார்கள் !
இந்தியாவிலும் மாறுதல்கள் சாத்தியம் என்று மனமார்ந்த நம்பிக்கை கொண்ட எண்ணற்ற இளைஞர்களில் நானும் ஒருவன்!

ஆனால் அதற்கான ஆயத்தங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை,நம்மைப் போன்ற,கல்வி கற்ற,உலகளாவிய பார்வை கொண்ட இந்தியர்கள்,சிந்திக்க வேண்டிய நேரம்,இந்த 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரம் !!!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நன்றி !

1 comment:

  1. We have to concentrate on three 'TION's: POPUALTION, CORRUPTION & EDUCATION. If we spend considerable amount of time and efforts to control the first two and mature the last one (but not least), we can see the DEVELOPED INDIA very soon. NithyaAlangaran S.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...