அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321 அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.
பாரதி களஞ்சியம் என்ற ஒரு தொகுப்பு தமிழகத்தின் ஐநூறு அறிஞர்கள் பாரதியை அறிந்து படைத்தளித்திருக்கும் ஐநூறு கட்டுரைகளின் தொகுப்பாக, பத்து தொகுதிகள் உள்ள, சுமார் 5000 பக்கங்கள் உள்ள நூற்தொகுதியாக வெளிவர இருக்கிறது. வர்த்தமானன் பதிப்பகம் இந்த பெருஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த ஐநூற்றுவரில் ஒருவனாக எனது கட்டுரையும் இணைந்திருக்கிறது என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். பாரதி என்னும் பன்முகப் பாவலன் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெறுகிறது.
கட்டுரையின் முன்னோட்டம் இவ்வாறு தொடங்குகிறது...
()
பாரதி என்னும்
பன்முகப் பாவலன்
முன்னுரை:
பாரதி
என்ற சொல்லே ஒரு மந்திரம்.
உலகின்
மாபெரும் கவிஞர்கள் என்று
அறியப்பட்டவர்களுக்கெல்லாம்
ஒரு ஒற்றுமை உண்டு.
அவர்கள்
வாக்கினில் பிறந்த சொற்கள்
தனித்தன்மையுடையனவாக இருக்கும்.
அவை
எளிய சொற்களாகவே இருக்கலாம்,
ஆனால்
அவை சுட்டும் பொருளுடன்
இணைந்து வரும் போது அவற்றிற்குத்
தனியொளி உண்டாவதை இயல்பாகப்
பார்க்கலாம்.
உன்னதக்
கவிகளுக்கான இலக்கணம் அவர்களின்
சொற்கள் வழி விளையும் இம்மாயமே.
MadrasPaper இதழில் கடந்த 52 வாரங்களாக நான் எழுதி வந்த உயிருக்கு நேர் தொடர் வரும் புதன்கிழமை வெளியாகப் போகும் இதழுடன் நிறைவடைகிறது. அதற்காக எழுதிய ஒரு நிறைவுரை இது.
கடைசிக் கட்டுரையை அலங்கரிப்பது யார், என்ன என்ற விவரங்களை இதழ் வெளிவருகின்ற புதன்கிழமையன்று வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
o O o
உயிருக்கு நேர் : ஒரு நிறைவுரை:
உயிருக்கு நேர் தொடரைத் திட்டமிட்டது சரியாக ஓராண்டுக்கு முன்னர். Madras Paper இதழின் ஆசிரியரும், எனது இனிய நண்பருமான திருமிகு.பா.இராகவன், எனது வரலாறு முக்கியம் தொடருக்குப் பின்னர் இன்னொரு தொடர் முயற்சி செய்யலாம் என்று சொல்லி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்த 52 தமிழறிஞர்களின் வாழ்வையும், ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் தொடரைப் பற்றிய எண்ணத்தைச் சொன்னபோது, எனக்கு முதலில் சிறிது மலைப்பு ஏற்பட்டது. காரணம் இருநூறு ஆண்டுகளின் வரலாறு ஒழுங்காகக் கிடைக்குமா என்ற கவலை.
விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய போது, அந்தக் கவலை கூடியது. பின்னர் பல தமிழ்த் தளங்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட இந்திய
கீழுள்ள இந்தப் பதிவை இரண்டாண்டு முன்னர் பகிர்ந்திருக்கிறேன். அப்போது நண்பி Gayathri Ramakrishnan எப்படி ஐயா இப்படித் தமிழில் உழல்கிறீர் என்று கேட்டிருக்கிறார்; கேட்டிருந்ததை இன்றுதான் பார்த்தேன். அவருக்குப் பதில் சொன்னேன்.
அது ஒரு பதிவாகவும் படிக்கத் தக்க வடிவில் இருந்தது. எனவே ...
()
|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.||
சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. 🙂.
சரி சொல்லிவிடுவோம்,
()
மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது.
ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர்.
16 வயதில் அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த போது எனக்கு அந்தக் கல்லூரியைப் பற்றிய பெரிய அறிமுகம் கிடையாது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் சேருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த என்னை, எனது பெற்றோரும், பெரியப்பாவும் சேர்ந்து இந்தக் கல்லூரிக்குத் தள்ளி விட்டார்கள். தள்ள முயற்சி செய்து அவர்கள் வென்றதன் காரணம் எளிது; பெரியப்பாவின் மகனும் எனது ஒன்றுவிட்ட தம்பியுமான சொக்கன் அந்தக் கல்லூரியோடு இணைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான்.
எனது பள்ளித் தோழர்கள் எல்லாம் , நான் அந்தக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்றதும் என்னைப் பார்த்து அத்தனை அனுதாபப் பட்டார்கள்.
தமிழார்வம் எப்படி வந்தது என்று கவிஞர் மகுடேசுவரன் எழுதிய ஒரு பதிவைப் நான் பகிர்ந்திருந்த பதிவில் நண்பி காயத்ரி இராமகிருட்டிணன் கேட்டிருந்தார். அவருக்குப் பதில்
()
|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.|| சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. :).
சரி சொல்லிவிடுவோம்,
மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது. ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர். அப்போது அவர் ஒரு சிறிய பெட்டிக்கடை போன்ற பலசரக்குக் கடையும், சித்தமருந்துகளைக் கிராம மக்களுக்கு, நோய் அறிந்து கொடுப்பதுவுமான வாழ்வை பிழைப்புக்காக வைத்திருந்தவர். ஆர்வத்தினால் தமிழ் வித்வான் தேர்வு. அந்தத் தேர்வுக்கு முயற்சி செய்யலாம் என்று எண்ணிய காலத்திலேயே அவருக்குத் திருமணம் நடந்து, தேர்வெழுதிய காலத்தில் முதல் குழந்தை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது.
அந்தக் குழந்தை என் அம்மா, தமிழ்ச்செல்வி அம்மை. பெயர் வைத்தவர் ஐயன். தமிழ்க்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கலாம். அவருக்கும் இயல்பிலேயே தமிழார்வம். அவரும் வளர்ந்து பத்தாம் வகுப்பு வந்த பின் (அக்காலத்தில் பாரம் என்று வகுப்பு இருந்தது போல) அதே தமிழ்ச்சங்கப் புலவர் படிப்பில் இணைந்து படித்தவர்.
அவர்களெல்லாம் புலவர்கள், போகட்டும். ஆனால் நான் சாமானியப் பையனாகவே வளர்ந்தேன்.
சாதாரண வகுப்பறை மாணவன். ஆறாம் வகுப்பில் 65 லிருந்து 75 சதம் வரை மதிப்பெண் எடுப்பேன். சராசரி, அவ்வளவுதான்.
எனது ஆறாம் வகுப்பு விடுமுறையைத் தாளித்து விடுவது என்று எங்களது தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முடிவு கட்டியிருந்தது எனக்குத் தெரியாது. மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் செந்தமிழ்க்கல்லூரி என்ற கல்லூரி புகழ்பெற்றது. வசுப மாணிக்கம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டி போன்ற பல அறிஞர்கள் தொடர்பு கொண்டது. அவர்கள் வருடாந்திரமாகத் தமிழில் ஏதாவது ஒரு போட்டி மாணவர்களுக்கு நடத்தி, போட்டியில் நன்கு தேறும் மாணவர்களுக்குப் பரிசளிப்பார்கள்.
அந்த வருடம் திருக்குறளைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். 10 அதிகாரம், 100 பாக்கள். எப்படிக் கேட்டாலும் சொல்ல வேண்டும். முதற்சொல், கடைசிச் சொல், இடைச்சொல் எப்படி வேண்டுமானாலும் கேட்பார்கள். வரிசையாகவும் கேட்பார்கள்.
இருபது நாள் தினமும் காலையில், மாலையில் விடுமுறையில் இருந்த பள்ளிக்கு, போட்டிக்குச் சென்ற 4 மாணவர்களை வரச்சொல்லி மாணிக்கவாசகம் பயிற்சியளித்தார். ஒவ்வொரு நாளும் இரண்டு, இரண்டரை மணி நேரம். தவறாமல்.
விடுமுறையைக் குடும்பத்துடன் செலவு செய்து நிம்மதியாக இருப்போம் என்ற நல்ல நோக்கங்கள் இல்லாத மனிதர். அந்தப் போட்டிப் பயல்களில் என்னுடன் அவரது மகன் சேகரும் இருந்தான். சேகர் ஐந்தாவது வகுப்பு. நான் ஆறாவது முடித்திருந்தோம்.
போட்டிக்குச் சென்றோம். சொன்னோம். தேர்வாளர்களுக்கு நான் சொன்னவிதம் மிகவும் பிடித்துப் போனது. எப்படிக் கேட்டாலும் பிய்த்து உதறினேன். மாணிக்கவாசகத்தின் பயிற்சி அப்படி. சேகரும் நன்றாகச் சொன்னான் எனினும், ஒரு வயது இளையவனாக இருந்ததாலோ, சிறிது பயிற்சி பற்றாததாலோ, அத்தனை சிலாக்கியம் இல்லை. என்னை கிட்டத்தட்ட முதற்பரிசுக்குத் தேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது.
தேர்வாளர்களில் ஒருவர், 'அம்பி, முடிவுகளை எழுதிச் சொல்ல அரை மணி நேரம் ஆகும்; வேறு ஏதாவது பாடல்கள் தெரிந்தால் சொல்லு கேட்போம்' என்றார் என்னிடம். எனக்கோ, ஒரு வேறு எந்தப் பாடலும் அந்த நேரத்தில் தெரியாது. காரணம் மாணிக்க வாசகம் எனக்கு வேறு தமிழ்ப்பாடல்களை எதையும் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்திருக்கவில்லை. ஆனால் ஒரு மகனாக சேகருக்கு வீட்டில் தொழும் பாடல்களை இசைக்கும் பயிற்சி இருந்தது.
அம்பி, நீ சொல், உனக்கு ஏதாவது பாட்டு தெரியுமா?' என்று சேகரிடம் கேட்டார் தேர்வாளர். அவன் ஏதோ ஒன்றிரண்டு பாடல்களைப் பாடினான்.
முதல் பரிசு அவனுக்குப் போனது; இரண்டாம் பரிசு எனக்கு வந்தது.
வீட்டிற்கு வந்தேன், எனது அம்மா என்னைத் தாளித்து விட்டார். அடேய், எத்தனை நாள சொல்லியிருக்கிறேன், ஏதாவது பாடல்களைக் கற்றுக் கொள் என்று; ஒரு நாளாவது காதில் வாங்கினாயா, இத்யாதி,இத்யாதி...
வாங்கிய இரண்டாம் பரிசும், தவறிப் போன முதல்பரிசும் என்னைத் தூண்டின. பாரதியாரை முதலில் தொட்டேன்.
பின்னர் தமிழ் என்னைப் பிடித்துக் கொண்டது.
காலஞ்சென்று போனாலும், மாணிக்கவாசகம் இன்றும் எனது சிந்தனையில் வாழ்கிறார்.
மாணிக்க வாசகம் மட்டுமல்ல, எனது முதலாம் வகுப்பு ஆசிரியராக இருந்த, கண்ணாடி வாத்தியார் என்ற பாலசுப்ரமணியம் முதல், எனது சிஏ படிப்புக்கு எனது வழிகாட்டு முன்னவராக இருந்த இராம்மோகன் வரை எனக்குள் ஏதாவது ஒரு பண்பில், வடிவில், சிந்தனையில், செயலில் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
எழுத்தில் நான் புலியல்ல. ஆனால் தெளிவான மொழியறிவும், தமிழில், அதன் மொழி வளத்தில், தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும், அவற்றில் ஓரளவு குறிப்பிடத்தக்க பயிற்சியும் உண்டு.
எழுத விரும்புபவர்களுக்கு, எழுதத் தொடங்குபவர்களுக்கு தெளிவான மொழி வேண்டும் என்பது அடிப்படை.
எனக்கு பதின்மத்திலிருந்தே மொழி கைவரப் பெற்றதுதான். பள்ளி,கல்லூரி என்று வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் எழுத்து வாய்ப்புகளைத் தவற விட்டதில்லை. அந்த வாய்ப்புகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.
எழுத்தாளர் ஜெயமோகன் திரும்பவும் பட்டையைக் கிளப்பும் வேகத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது பக்கத்தில் நாளைக்கு ஒன்று என்று அணி வகுத்திருக்கின்றன சிறுகதைகள்.
எனக்கு அவர் அடிப்படையில் ஒரு இந்துத்தவ வாதியோ என்ற ஐயம் பல நாட்களாக உண்டு. வலதுசாரித்துவமான சிந்தனைகளை மேலோட்டமாகப் பல நேரங்களில் கண்டித்து எழுதியிருந்தாலும், இப்போதைய பாசக அரசையும் சில நேரங்களில் கடுமையாக விமரிசித்திருந்தாலும், அடிப்படையில் அவர் இவை இரண்டுக்கும் ஆதரவான மனிதர் என்பது எனது ஒரு ஐயம். தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றில் ஒரு நையாண்டி அல்லது நக்கலை அவ்வப்போதும் அல்லது எப்போதும் வலதுசாரியர்கள் வெளிப்படுத்துவது வழமை; அவரும் அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது காரணமாக இருக்கலாம்.
நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் போராட்டம்.
இவ்வளவு தன்னெழுச்சியாக மக்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டது இரண்டு போராட்டங்களிலும் நடந்த ஒற்றுமை. மக்கள் உணர்வு ரீதியாக போராட்டத்தின் காரணத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். உண்மையில் மக்கள் உணர்வு ரீதியாக ஈடுபட்டு நடக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. வரலாறு இதை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பதிவு செய்திருக்கிறது. இது ஒற்றுமை.
தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராக பதிமூன்று வருடங்களும், தமிழகத் திரையுலகின் முடிசூடா மன்னனாக சுமார் பதினைந்து ஆண்டு காலத்திற்கும் மேலாகவும் திகழ்ந்தவர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரனான எம்ஜிஆர்.
ஆசியா வீக் எழுதிய அஞ்சலி
அவருடைய கட்டற்ற புகழுக்கு அவருடைய ஆட்சித் திறமோ அல்லது நடிப்புத் திறனோ நிச்சயம் காரணமில்லை; அவர் சாமான்ய மக்களுக்கு
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-நீவெஒகோ, நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டு தொடரப் போவதாகவும், இந்த முறை நடிகர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சி நடத்துனராக-காம்பியரர்-வரப் போவதாகவும் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன.
நடிகர் சூர்யா இந்த நிகழ்ச்சியிலிருந்து சட்டென்று விலகிய போது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதிலிருந்து சிலவற்றை இங்கே மறு பதிப்பு செய்ய ஆசையாய் இருக்கிறது.
தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இசைக்கான இடம் மிக முக்கியமானது.இன்னும் தமிழிலக்கியத்தின் ஏறத்தாழ அத்தனை பாடல்களுக்கும், அந்தப் பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்ற இசைக் குறிப்புகளுடனேயே இயற்றப் பட்டிருக்கின்றன என்பது உண்மை.
ஆனால் முரண்தொகையாக இந்த உண்மை இன்றைய சராசரித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
இன்றைய தமிழர்களின் பெரும்பாலானாவர்களுக்கு இசை என்றாலே திரைஇசையின் கூறுகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரால் சொந்தம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் கர்னாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த இசையின் வடிவம் என்றும் இந்த வடிவத்தை அமைத்தவர்கள்தான் தமிழர்களுக்கும் அல்லது தென்னிந்தியா முழுமைக்கும் இசையின் கூறுகளை கர்னாடக சங்கீதம் மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கருத்தை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : இராமச் சந்திரக் கவிராயர்
காலம் : 19|20'ம் நூற்றாண்டு
முன்னோட்டம்:
நூலாசிரியர் இராமச் சந்திரக் கவிராயர் இராசு மண்டலம் என்னும் ஊரில் ( இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்) பிறந்து சென்னப் பட்டனத்தில்(இன்றைய சென்னை) வாழ்ந்தவர்.
நாடகக் கவிதை நூல்கள் பல எழுதியிருக்கிறார். சித்திரக் கவி எழுதுவதிலும் வல்லவர்.சித்திரக் கவி என்பது கவிதையைச் சித்திர வடிவில் எழுதுவது.
சித்திரத்தின் எப்பக்கத்திலிருந்து படித்தாலும் கவிதை பொருள் தருமாறு எழுதப்பட்டிருக்கும்.
சித்திரக் கவிக்கு ஒரு எடுத்துக் காட்டு கீழே வருமாறு..இந்தப் பாடலுக்கான விளக்கத்தை இன்னொரு நாளொரு பாடல் பகுதியில் பார்க்கலாம்.
சித்திரக் கவி - நான்கு ஆரச் சக்கர பந்தம்
இவ்விதமான சித்திரக் கவிகள் எழுதுவதில் திறமைசாலியான கவிராயராக இருப்பினும், இன்றைக்குப் பார்க்கப் போகும் பாடல் எளிய, சுவையான பாடல்.
கருத்து:
ஆசாமியின் வீட்டின் பசு கன்று ஈன்றிருக்கிறது;
வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கிறது;
பெய்த கடுமழையில் கூரையோ, ஓடோ போட்டிருக்கும் எளிய வீடு விழுந்து விட்டிருக்கிறது;
வீட்டில் மனைவிக்கோ சுகவீனம்;
வேலைக்காரன் இறந்துவிட்டான்;
பெய்த மழை ஈரத்தில் விதை நெல்லையாவது நிலத்தில் நட்டு விடலாம் என்று வயலுக்கு விதை நெல்லை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் ஆசாமி;
ஆனால் வழியிலே கடன் கொடுத்தவர் மறித்துக் கொண்டு,நெல்லைப் பிடிங்கிக் கொள்ள, சாவுச் செய்தியைக் கொண்டு எதிரே ஆசாமியைத் தேடிக் கொண்டு ஒருவர் வருகிறார்;
அந்த சமயத்தில் தவிர்க்க இயலாத விருந்தினர் ஒருவர் ஆசாமியின் வீட்டுக்கு வருவதற்காக வழியில் எதிரே வருகிறார்;
அவரைப் பார்த்த சமயத்தில் ஆசாமியைப் பாதையில் போகும் பாம்பு தீண்டி விடுகிறது;
நாட்டின் அரசர் பருவத்திற்கான உழுதுண்டு வாழ்வதற்கான வரியைக் கேட்டு அரசவையிலிருந்து ஆள் வருகிறது;
அதே நேரத்தில் குருக்கள் செய்து வைத்த காரியத்திற்கு ஆசாமியிடம் வந்து தட்சிணை-காணிக்கை கேட்கிறார்..
ஆசாமியின் நிலை எப்படி இருக்கும்..
அய்யோ...சாமி என்று உட்கார மாட்டாரா அய்யாசாமி !?
:))
டிட்பிட்ஸ்:
பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் சிக்கலான வெண்பா வடிவங்கள் குறைந்து பெரும்பாலும் பாடல்கள் விருத்தங்களாகவே எழுதப் பெற்றன.
விருத்தம் எழுதிய புலவர்கள் பெரும்பாலும் கவிராயர்களென அழைக்கப்ப்பட்டார்கள்.அதாவது அவர்கள் எந்த இனத்தில் பிறந்தவராக இருப்பினும் பொதுவாகக் கவிராயர் என்றே அழைக்கப் படுவார்.
Chronic Pressure என்று சொல்லப் படுகிற நொய் நொய் அழுத்தம் வரும் சூழலை அழகாக எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது.
சுஜாதா எழுதிய நொய் நொய் அழுத்தத்திற்கான ஒரு எடுத்துக் காட்டு கற்றதும் பெற்றதுமில் எழுதியிருப்பார். அதைப் படிக்கும் போது எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும் ! :)
நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : பலர், இப்பாடலுக்கு காளமேகப் புலவர்
முக்கியக் குறிப்பு : சிலேடைப் பாடல் வகையைச் சேர்ந்தது.
பதம் பிரித்த பாடல்:
வெம் காயம் சுக்கு ஆனால், வெந்த அயத்தால் ஆவதென்ன
இங்கு யார் சுமந்து இருப்பார் இச் சரக்கை
மங்காத சீர் அகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெரும் காயம் ஏரகத்துச் செட்டியாரே
முக்கிய சொற்கள்:
வெம் காயம்- வெங்காயம் மற்றும் உடல்; வெந்த அயம்- வெந்தயம் மற்றும் இரும்பைச் சேர்த்துச் செய்த சக்தி வாய்ந்த மருந்துகள் ; சரக்கு- கடைச் சரக்கு மற்றும் உடல் ; சீர் அகம்- சீரகம் மற்றும் ஆன்மாவின் உய்வு ; ஏரகத்துச் செட்டியார் - கடைச் செட்டியார் மற்றும் முருகப் பெருமான்
கருத்து: கடைச் சரக்கு நோக்கில் -
கடைச் சரக்கை விற்கும் ஏரகத்துச் செட்டியாரே,
வெங்காயம், வெந்தயம் போன்ற பொருள்கள் வாங்கி வைத்திருக்கையில், வெங்காயம் வாடி வதங்கிப் போய் விட்டால், அந்த இரண்டு சரக்கினாலும் பயன் இல்லை, எனவே யாரும் அவற்றைச் சுமந்திருக்க மாட்டார்கள். எப்போதும் கெட்டுப் போகாத சீரகத்தைத் தந்தால், பெருங்காயம் கூடத் தேவை இல்லை...
உள்ளார்ந்த நோக்கில் -
ஏரகம் என்னும் சுவாமிமலை நாதனான முருகப் பெருமானே,
வெம்மை பொருந்திய தன்மையுடைய உடலானது, தளர்ந்து சுக்கைப் போல வற்றிய காலத்தில், அந்த உடலுக்கு (அயக்காந்த செந்தூரம் போன்ற) நல்ல மருந்துகளால், உடலானது மேலும் பழுது பட்டுச் சிதையாமல், காக்க முடிந்தாலும், அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை; உடலில் உலவும் உயிரானது நன்மை நிலையை அடைந்து, வீடு பேறு கிடைக்கும் எனில், இவ்வாறு சுக்காக வற்றிய உடலைத் மேலும் நிலைநிறுத்தும் வண்ணம் தேடாது, உன் கருணையால் உய்வேன்..
டிட் பிட்ஸ்:
முருகன் வள்ளியைத் தேடி வந்த காலத்தில் வளையல் விற்கும் செட்டியார் உருவில் வந்ததாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. எனவே முருகனைச் செட்டியாரே என்று அழைக்கிறார் புலவர்.
மங்காத சீரகம் என்ற சொலவடை உயிர் மீண்டும் உலகியலில் பிறந்து இழைந்து மங்காத நிலையான வீடுபேற்றை அடைவதைக் குறிக்கிறது.
வீடுபேறு கிடைக்கும் நிலையில், நிலையற்ற உடலைப் பேணும் தேவை இருக்காது, எனவே பெருங்காயத்தைத் தேட மாட்டேன் என்கிறார்.
உடல் வற்றித் தளர்ந்து செல்லும் காலத்து, உடலை நிலைநிறுத்த பல காயகல்ப மருந்துகள் தேவைப் படுகின்றன. ஆன்ம உயர்நிலையை அடைய உடல் வடிவம் தேவைப் படுகிறது. எனவே உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே, ஆன்ம நிலையிலும் தேர்ச்சி அடைய முயல வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து.
பட்டியலிடப் பட்ட கடைச் சரக்குகளில் சீரகம் கெடாமல் இருக்கும் என்பதும், அகம்(உயிர்) சீர் பெற்றால், பிறவிக்குப் பயன் கிடைக்கும் என்பதும் சுட்டிய பொருள்.
முக்கிய சொற்கள்:
பண் - இசை ; இன்மொழியாள்-இனிய மொழியை உடையவள் ; உன்மத்தம்- பித்துக்குளித்தனம் ; உரம்-மார்பு ; கண்-கண்கள் ; கருமஞ்ஞை-நீல மயில் ; பொழில் - நீர்ப் பொய்கை,வீழ்ச்சி ; வரி வண்டு - நீர்ச் சோலைகளில் திகழும் ஒரு வகை வண்டு ; முரல் - இசை பாடுவது
கருத்து:
இசையுடன் கூடிய பண்கள் போன்ற பேச்சை உடைய இனிய மொழியினளாகிய தேவி, அச்சப் படத்தக்க வகையில், கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த, பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்து அடக்கிய பின், அவனுக்கே அருள் செய்தவனாகிய சிவபெருமான் இருந்து அருள் பாலிக்கும் கோவிலைக் கொண்டும்; பல கண்கள் நிரம்பிய தோகைகளை உடைய நீல மயில்கள் நடனமாடும் இடமாகவும்;(கடற்கரைக்கு அருகில் இருக்கும் காரணத்தால்) கடல் முழங்கவும், வானளவிற்கு பொங்கிப் பெருகும் பொழிலில், வரி வண்டுகள் இசைபாடவும் திருவெண்காடு விளங்குகின்றது.
டிட்பிட்ஸ்:
இந்தப் பாடல் அமைந்த பதிகம் திருவெண்காட்டுப் பதிகம்
இப்பதிகத்தை பக்தியோடு ஓதி அம்மையப்பனை வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் தவறாது கிடைக்கும் என்பது நம்பிக்கை
பேயடையா பிரிவு எய்தும் என்று ஒரு பாடல் இந்தப் பதிகத்தில் இருக்கிறது.அதில் மகப்பேறும், மற்ற எல்லா செல்வங்களும் தவறாது வாய்க்கும்,சிறிதும் ஐயம் வேண்டாம்' என்று டிக்ளேர் செய்கிறார் சம்பந்தர்.
முக்கிய சொற்கள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் - நட்பு
கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்; ஒற்றாடலில் சிறந்தவன்,பிறரின் காரியங்களை,கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிது கூட மறதிக் குணம் இல்லாதவனாக இருப்பான்; ஆகிய இம்மூன்று இயல்புடையவர்களும் தனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்று வாழும் ஒருவன் இனிமையான வாழ்வைப் பெற்றிருப்பான்.
டிட் பிட்ஸ்:
திரிகடுகம் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
திரிகடுகம் என்பது தமிழ்நாட்டில் மக்கள் எளியமுறையில் தயாரித்து,பயன்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது திரிகடுகம்.உடலுக்கு வல்லமையும்,முத்தோஷத்தையும் நீக்கும் வல்லமையும் உடைய மருந்து
அதுபோலவே மூன்று ஒத்த அல்லது ஒரே நியதியில் அமைந்த கருத்துக்களைக் கூறி, அதனுடம் தொடர்புடைய அறிவுரை அல்லது வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்துவதால்,இந்தூல் திரிகடுகம் என்று பெயர்பெற்றது.
ஆசிரியர் ஆதனார், தொல்காப்பியரின் பரிச்சயம் உடையவர் என்பது தொல்காப்பியத்தின் சில எழுத்ததிகாரச் செய்யுள்களில் ஆதனாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
வேளாளன் என்ற சொல்லுக்கு உதவி செய்பவன் என்ற பொருளும் அகராதியில் கிடைக்கிறது; உலகம் அனைத்திற்கும் தேவையான உணவுப்பொருளை விளைவித்து, அனைவருக்கும் உதவி செய்யும் தொழிலைக் கொண்டிருப்பதால், வேளாளருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது !
நல்ல முயற்சி என்பது கடன்படாது வாழ்வதும்,சிறந்த உதவி என்பது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் உபசரித்துப் பராமரிப்பதும்,ஒருவர் தனக்குச் சொன்ன செய்திகளை மறவாது சிந்தையில் வைத்திருப்பதே நல்ல சிந்தை என்பதும் கூற வந்த கருத்து.
முன்னோட்டம்:
ஞானசம்பந்தப்பெருமானும்,திருநாவுக்கரசு சுவாமிகளும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்.நாவுக்கரசர் முதிய பிராயத்தில் 60 வயது அளவில் இருந்தபோது,பிள்ளையாருக்கு பால வயது.
பிள்ளையாரின் அருமை பெருமைகளை உணர்ந்த வாகீசர்,அவரைத் தேடி வந்து அளவளாவி, இருவரும் சில காலம் பல தலங்களுக்குச் சேர்ந்து சென்று வழிபட்டனர்.அக்கால கட்டத்தில் திருவிழிமிழலைப் பகுதியில் இருவரும் தங்கியிருந்த போது ஊரில் பஞ்சம் நிலவியதால்,அடியார்களுக்கு உணவிடும் பொருட்டு,சிவபெருமான் பிள்ளையாருக்கும் வாகீசருக்கும் தினமும் ஒவ்வொரு பொன் படிக்காசு,கோவிலின் கிழக்கு, மேற்கில் அமைந்த விருட்சப் படியில் வழங்குவதாக கனவில் அருளி,தினமும் காசு வழங்கலானார்.
இதில் பிள்ளையாருக்கு வழங்கிய காசு சிறிது மாற்று குறைவாக இருந்ததால்,அவருக்குப் பொற்காசின் மூலம் கிடைத்த பொருள் சிறிது குறைவாகக் கிடைத்தது.
பிள்ளையார் இறைவரிடம் வருந்தி வேண்டி,இந்தப் பதிகம் பாட இருவருக்கும் நல்ல மாற்றில் பொற்காசு கிடைக்கப் பெறலானது.
வாசி- உயர்வு தாழ்வு, மாசு- குற்றம், ஏசல்-ஏசுவது,நிந்திப்பது
குற்றமில்லாத மிழலையில் எழுந்தருளியிருக்கும் ஈசரே, நான் கூறுவது பழிப்போ,குற்றமோ,நிந்தனையோ அல்ல;ஆனால் எனக்கு வழங்கும் காசில் உயர்வு,தாழ்வு நீங்குமாறு,குற்றமற்ற காசை கொடுப்பீராக..
2
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.
கறை கொள்- குற்றமுள்ள, முறைமை- ஒழுங்கு செய்தல்
நீரே இறைவராக இருக்கின்றீர்,வேதநெறிகளோடு இருக்கும் மிழலையில் நீரே இறைவராக இருக்கிறீர்..குற்றமுடன் அளிக்கப் படும் காசை,சரி செய்து முறைப்படுத்தி,தூய பொற்காசாக வழங்குவீர்..
3
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.
செய்ய-சிவந்த ; மெய்கொள்- உண்மை நிரம்பிய ; பை - படம் ; அரவு - பாம்பு ; உய்ய- உயர,மேல்நிலையடைய,
படம் எடுத்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு,சிவந்த மேனியைக் கொண்டு,உண்மை நிரம்பிய மக்கள் வாழும் மிழலையின் இறைவரே, நான் உய்யுமாறு குறைவற்ற காசை வழங்குவீர் !
4
நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.
நீறு- திருநீறு ; ஏறு- எருது(ஆநேறு); கூறு- கூறப்படும்,புகழப்படும்; பேறு- பெரும் செல்வம், வீடுபேறு என்னும் முக்தி
திருநீறு அணிந்து எருதின் மேலேறித் திகழ்கின்ற, பெரும் புகழ் படைத்த, மிழலையின் இறைவரே, (குறைவற்ற காசை நல்குவதோடு) எனக்கு வீடுபேறையும் அருளிச் செய்வீர்.
5
காமன் வேவ ஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.
காமன்- மன்மதன்; தூமம்- புகை; தூமக்கண்- புகையுடைய தீக்கண்ணான நெற்றிக்கண் ; நாமம்-பெயர்,புகழ் ; சேமம்-பாதுகாவல், ஷேமம் என்பதன் திரிபு என்றும் ஒரு பாடபேதம் இருக்கிறது
மன்மதனை எரித்த, தீஞ்சுடரை உடைய நெற்றிக்கண்ணை உடைய, புகழ் பொருந்திய மிழலையின் இறைவரே, (குற்றமற்ற காசை வழங்குவதோடு) எமக்குப் பாதுகாவலும்,அரணும் வழங்கி எம்மைப் பாதுகாத்தருள்க..
நெரிதர- அகப்பட்டு நெரிய ; பரக்கும்- எங்கும் புகழ் பரவிய ; கரக்கை- வஞ்சம்
இராவணன் மலைக்கு அடியில் அகப்பட்ட நெரிபடும் போது அவனுக்கு இரக்கம் காண்பித்தீர், எங்கும் புகழ் பரவிய மிழலையின் இறைவரே, எமக்கு வஞ்சம் செய்வதைத் தவிர்த்து (குறைவற்ற காசை நல்குவீர்).
9
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.
அயன்-நான்முகன் ; மால்-திருமால் ; முயலும்-முயற்சித்த ; முடி - அடியும்,முடியும்(குறிப்பால் அமைந்த சொல்) ; இயலும்- அனைவருக்கும் இயலும் நிலையில் ; பயன் - பிறவியின் பயனான வீடுபேறு
திருமாலும் நான்முகனும் தேடி அடைய முயன்றாலும் முடியாத அடியையும் முடியையும் கொண்டிருந்தாலும், (உனது அடியவர்களுக்கு) எளிதில் அடையத்தக்க நிலையில், மிழலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரே, எமக்கு பிறவியின் பயனான வீடுபேறை அருளுவீர் !
பறிகொள் - முடியைப் பறித்துக் கொண்ட நிலையில் ; அறிவது- அறிய வேண்டிய ; அறிகிலார் - அறிய மாட்டார் ; வெறி - மணம் ; பிறிவது-பிறவாக இருப்பது, பிரிவது ; அரியது- கடினமானது
தலைமுடியைப் பறித்து கொண்ட நிலையில் தலைகளையுடைய சமணர்கள், அறிய வேண்டிய உண்மைகளை அறிய மாட்டார்; மணம் பொருந்திய மிழலையின் இறைவரே, உம்மைப் பிரிந்து இருப்பது இனி மிகக் கடினமானது.
சீர்காழியில் தோன்றி வாழ்ந்த சம்பந்தனான அடியேன், திரு விழீமிழலையில் வீற்றிருக்கும் இறைவரைத் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகள் இவை.
டிட் பிட்ஸ்:
திருவீழிமிழலையில் திருமால் சக்கரம் வேண்டி ஈசனைப் பூசிக்கும் போது,ஒரு மலர் குறைந்தால்,தன் கண்ணை மலராக ஈசனுக்கு சமர்ப்பித்ததால், திருவிழிமிழலை என்ற பெயர் பெற்றது.
பிள்ளையார் அம்மையின் அருளைப் பெற்றுத் திகழ்ந்ததால், ஈசனுக்கு மகவு போன்ற உரிமையும், திண்மையும்,வலிமையும் உடையப் பெற்றவராக விளங்கினார். அவரது பாடல்களிலும் அந்த உரிமையும், சக்தியும் திகழ்ந்ததாக அறிஞர் போற்றுவர்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிறந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்பது தொல்காப்பிய வாக்கு.இறைவனின் அருள் பெற்ற குற்றமற்ற சொற்களையுடைய மனிதர்களின் வாக்கு, மந்திரத்திற்கு ஒப்பானதாகும் என்பது விளக்கம்.
இன்றைய நாளில் வழக்கு மன்றங்கள் அல்லது அரசிடம் ஒரு தனிமனிதர்,தமது உண்மை நிலையை அறிவிக்க நேரும் போது,பிரமாணப் பத்திரம்-affidavit - தாக்கல் செய்வது சட்டப்படி தேவையான ஒன்று.அதில் நான் கூறுவனவற்றை நாமே, உண்மை என்று சான்று அளிக்க வேண்டும்; அவ்வாறு சான்று அளித்தபின், சான்று அளித்தவர் அவரது கூற்றிலிருந்து பின்வாங்க அரசோ, சட்டமோ அனுமதிப்பதில்லை. அது போலவே பிள்ளையாரின் பதிகங்களில் கடைசிப் பாடலான பதினொராவது பாடல், பதிகத்தின் பலனை உறுதியாக அறிவிக்கும் படியான டிக்ளரேஷன் பதிகங்களாகவை அமையப் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப் பெருமானின் அனைத்துப் பதிகங்களிலும் பார்க்கலாம்.
இறைவனின் பூரண அன்பும், சொல்லும் வாக்கெல்லாம் மந்திரமாகவும் திகழ முடிந்ததனாலேயே அவரால் அவ்வாறு உறுதி கொடுக்க முடிந்தது என்பதும் முடிந்த முடிவு-டிரைவ்ட் ட்ரூத்.
அதனாலேயே பிள்ளையாரின் பதிகங்கள் மந்திரமொழிகள் என்றே அறியப் படும்
இந்தப் பதிகத்தை பக்தியும் அன்பும் கொண்டு ஓதி வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு ஏற்படுவதோடு, உலக வாழ்வில் சேர்த்த பொருள் அழியாது வளரும் வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அருளும் செல்வமும் வளர்க எந்நாளும் !
இந்தப் பதிகம் பாடல் வடிவில். பாடல் அடியேன்..அவ்வப்போது இவ்வித பயங்கரவாத செயல்கள் பதிவில் நடக்கலாம் என்ற எச்சரிக்கையையும் இப்போதே வைக்கிறேன். :)
பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
-
யார் இந்த ரஸ்ஸல்? கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய வரலாற்றை எழுத
வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். சாதனை
படைத்த...
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
-
தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்
நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும்
போகாமல், கும்பக...
மீட் அண்ட் க்ரீட்
-
ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு மீட் அண்ட் க்ரீட் வி.ஐ.பி டிக்கெட் கையில்
இருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பம் வாய்க்கும் போது சில சங்கடங்கள் வந்து
சேரும். செக்யூர...
அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்
-
டாக்டர் அப்துல் கலாம் (1931-2015)
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து
கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செ...