குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)
Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Monday, April 15, 2013

183.நிகழ்ந்து மறைந்த அற்புதம் - பிபி ஸ்ரீனிவாஸ்



நேற்று பாடகர் பிபி ஸ்ரீநிவாஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

பாடகர் பிரதிவாதி பயங்கர சீனிவாஸ்


திரையிசையின் ஒரு அற்புத காலகட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தவர்; எம்எஸ்வி, கண்ணதாசன் கூட்டணி நிகழ்த்திய அற்புதங்களின் ஒரு வெளிப்பாடாக இருந்தவர்.


Sunday, February 10, 2013

180. இசையும் தமிழும் !



தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இசைக்கான இடம் மிக முக்கியமானது.இன்னும் தமிழிலக்கியத்தின் ஏறத்தாழ அத்தனை பாடல்களுக்கும், அந்தப் பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்ற இசைக் குறிப்புகளுடனேயே இயற்றப் பட்டிருக்கின்றன என்பது உண்மை.

ஆனால் முரண்தொகையாக இந்த உண்மை இன்றைய சராசரித் தமிழரில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இன்றைய தமிழர்களின் பெரும்பாலானாவர்களுக்கு இசை என்றாலே திரைஇசையின் கூறுகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரால் சொந்தம் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் கர்னாடக சங்கீதம் மட்டுமே உயர்ந்த இசையின் வடிவம் என்றும் இந்த வடிவத்தை அமைத்தவர்கள்தான் தமிழர்களுக்கும் அல்லது தென்னிந்தியா முழுமைக்கும் இசையின் கூறுகளை கர்னாடக சங்கீதம் மூலமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கருத்தை அவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

Sunday, September 9, 2012

174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்?




சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்...

இந்த தலைப்பில் ஏற்கனவே சில அசட்டுப் பதிவுகள் வந்து விட்டன; இருப்பினும் இந்த நிகழ்ச்சியை நேற்று இரவு பார்த்த போது எழுந்த சிந்தனைகளைப் பகிரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இப்போது முதல் 5 போட்டியாளர்களுக்கான தேர்வுக்கான சுற்று நடைபெறுகிறது.(இந்தியாவில் இந்த சுற்று முடிந்திருக்கலாம்;சிங்கையில் இப்போதுதான் போய்க் கொண்டிருகிறது!)

இறுதிப் போட்டியின் வடிவம் எப்படி என்று தெரியவில்லை.ஆனால் அன்ப்ளக்ட் சுற்று முடிந்ததில் ஜயந்த் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் சிறப்பான சலுகையாக அதிரடி சுற்று வாய்ப்பாக-வைல்ட் கார்ட் ரவுண்ட்- இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருகிறார்.

Monday, January 11, 2010

113.தமிழில் பாடுவது கேவலமா?

தமிழின் தொன்மையில் இசைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு;இன்னும் சொல்லப் போனால் தமிழ் மொழியை இயல்,இசை,நாடகம் என்று அகன்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டு அந்தந்தப் பிரிவுகளில் மொழி வளம் வளர பல ஆக்கங்களை இயற்றி செழித்த மொழி தமிழ்.

உலகின் முதல் இசைக் கருவிகளில் ஒன்றாக முடியும் என்று எளிதாக வரலாற்றுச் சான்றுகளின் மூலம் நிலைநிறுத்தக் கூடிய சில இசைக் கருவிகள் தமிழ் நாட்டில் தமிழ் மொழியாளர்களால் உருவாக்கப்பட்டவை.(குழல்,யாழ்..)அது மட்டுமல்ல அவை தமிழுக்கே உரிய சிறப்பான இசைக்கருவிகள் என்று எத்தலைமுறைக்கும் புரியும் வண்ணம் அக்கருவிகளுக்கு மொழிக்கேயுரிய சிறப்பான ஓசையை நினைவுறுத்தும் பெயரை விளித்து மகிழ்ந்தவர்கள் தமிழின் இசை வாணர்கள்.

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு என்ன என்பதறியாமலோ அல்லது இன்று கர்நாடக இசை என்ற என்ற பெயரில் வழக்கப்படும் இசைக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற கருத்தாக்கதினாலோ பல இளைய தலைமுறையினர் இன்றைய சாஸ்திரீய சங்கீதமான 'கர்நாடக' சங்கீதம் தமிழர்களுக்குத் தொடர்பற்றது என்றும்,இன்று பெருமளவு அதைப் பாடுபவர்களின் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க இசையே எள்ளுவதுமாக தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகள் வியர்த்தமாகிப் போயின;இன்றைய இளைய தலைமுறையிலும் பண்பட்ட இசையை வளர்ப்பவர்கள் அல்லது அதைக் கற்றுத் தெளிந்து பாவனையில் வைத்திருப்பவர்கள் எப்போதும் அதைப் பாடிக்கொண்டு வந்திருப்பவர்களே!

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு பற்றிய இரண்டு பத்திகளை முன்னரே நான் எழுதியிருக்கிறேன்;அதன் பின்னூட்டங்களில் கூட என் நண்பர்கள் நான் துவேஷம் கொண்டு சில கருத்துகளை எழுதி இருப்பதாக கருத்து அறிவித்தார்கள்.அது அப்படி அல்ல என்று நான் விளக்கம் அளித்தேன்;நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்றும் விளக்கினேன்.அவற்றிற்கான காரணங்கள் இன்றும் இப்போதும் இருக்கின்றன என்பதை நிறுவுகிறது தினமணியின் தலையங்கம் ஒன்று.

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​


73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந ​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​

பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
-தினமணிக்கு நன்றியுடன்-

பொதுவான மக்கள் இன்னும் விழிப்படையவில்லை;சமூகத் துவேஷத்தை ஊக்குவிக்கும் அரசியலாளர்களோ இன்றும் வேறு ஏதும் காரணிகள் இல்லாத நேரத்தல் 'அரசியில் பிழைக்க' கையில் எடுக்கும் ஆயுதம் பழம் பஞ்சாங்கம்தான்!ஆனால் அவர்களின் குழந்தைகள் மணம் புரிவது அவர்கள் காலமுழுதும் நிந்திக்கும் வகுப்பினரையே என்பது சாதாரண மக்களுக்கு நினைவில் இருக்காது எனபதுதான் ஒரு முரண்.

இத்தகைய சூழலில் மேற்கண்ட தலையங்கத்தில் குறிக்கப்பட்ட தீர்வையே நான் என் முந்தைய பதிவுகளிலும் முன்வைத்தேன்;அதாவது பொது அரங்கங்களில் பாடும்போது தமிழிழ்தான் பாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் எந்தமொழிக் கீர்த்தனைகளை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்தாலொழிய பாடகர்களின் மனோபாவம் மாறுவது கடினம்.

இதற்கு நண்பர்கள் லக்ஷமி நரசிம்மன், கமகம் லலிதா ராம் ஆகியோர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Wednesday, January 28, 2009

91.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா???? - II


சென்ற பதிவு இதன் முதல் பகுதியாகும்.இப்போது இரண்டாம் பகுதி....

0 0 0

இராகங்களின் மேற்சொன்ன பகுப்புகளுக்கு மேலாக ஆண் இராகங்கள் எனவும் பெண் இராகங்கள் எனவும் பகுக்கப்பட்டிருந்தன.

இனி இசை நிகழ்ச்சி நடத்த தேவையான சூழல் பற்றிப் பார்க்கும் போது பக்கவாத்தியங்கள் எனப்படும் இசைக்கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன.

பழந்தமிழ் நாட்டில் ஐந்து வகையான இசைக்கருவிகள் புழக்கத்தில் இருந்தன.அவை தோல் கருவி,துளைக்கருவி,நரம்புக்கருவி,கஞ்சக்கருவி மற்றும் மிடற்றுக் கருவி என்பன.

தோல்கருவிகள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டு தோலால் கட்டப்பட்டவை.அவை பேரிகை,படகம்,இடக்கை,உடுக்கை,மத்தளம்,சல்லிகை,கரடிகை,திமிலை,குடமுழா,தக்கை,கணப்பறை,தமருகம்,தண்ணுமை,தடாரி,அந்தரி,முழவு,சந்திரவலையம்,மொந்தை,முரசு,கண்விடு தூம்பு,நிசாளம்,துடுமை,சிறுபாறை,அடக்கமு,தகுணிச்சம்,விரலேறு,பாகம்,உபாங்கம்,நாழிகைப்பறை,துடி,பெரும்பாறை ஆகியவை.

துளைக்கருவிகள்:புல்லாங்குழல்,நாகசுரம்,முகவீணை,மகுடி,தாரை,கொம்பு,எக்காளை ஆகியவை.இவை மரத்தாலும் உலோத்தாலும் செய்யப்பட்டவை.சங்கு மற்றொன்று,இது இயற்கையாகவே விளைவது.குழல் மூங்கிலில் செய்யப்படுவது.

நரம்புக்கருவிகள்:மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை;இவை யாழ்,வீணை,தம்பூரா,கோட்டு வாத்தியம்,பிடில் முதலியன.

யாழ் பற்றிச் சொல்ல சில சிறப்புச் செய்திகள் இருக்கின்றன.இந்தியாவின்,பழந்தமிழ் நாட்டின் மிகப் பழைய இசைக்கருவிகளில் ஒன்றான யாழ் தமிழகத்திலிருந்த உலகம் முழுக்கப் பரவிய இசைக்கருவிகளில் ஒன்று.

உருவ அமைப்பில் உண்மையான யாழ் வில் போன்ற வடிவு கொண்டது.இதன் மறுபெயர் வீணை என்பது ஆகும்.சிலம்பில் கூறப்படும் ‘நாரதவீணை நயந்தெரி பாடல்’ எனக் கூறப்படும் வரிகளால் சுட்டப்படுவதும் யாழ் என்னும் இசைக்கருவிதான்.ஆனால் இதில் சுட்டப்படுவது வில் வடிவில் இருக்கும் யாழ்தான்.இப்போதைய குடவீணை பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.

யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே பழந்தமிழகத்தில் இருந்தார்கள்;அவர்கள் யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர்.பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம்.தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது.

மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊருக்க யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது என்ற ஒரு செய்தியும் படிக்கக் கிடைத்தது.

வள்ளுவப் பெருந்தகை இசையின் இனிமையைக் குறிக்க முற்பட்ட போது கையாண்ட சொல்லாடல் “குழலினிது,யாழினிது என்பர்” என்பதுதான்.புல்லாங்குழலும் வீணையும் குழலுக்கும் யாழுக்கும் எடுத்துக்காட்டுகாளாக விளங்கும் இசைக்கருவிகள்.


இவ்வளவு அகன்ற கருத்துக்கள் இசைக்கருவிகள் பற்றியே தமிழில் இருக்கையில் தமிழ் எந்த அளவு இசையில் செறிவு கொண்டிருக்க வேண்டும்?
மேலும் ஒரு செய்தி ஆராயத் தக்கது.சிறந்த இசைக்கருவிகள் என அறியப் படும் காலத்தால் முற்பட்ட கருவிகள் மூன்று.அவற்றின் பெயர்கள்

குழல்
யாழ்
முழவு அல்லது முழவம்

இந்த மூன்று இசைக்கருவிகளின் பெயர்களிலும் தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பான ‘ழ’ என்னும் எழுத்து இருக்கிறது.எனவே இன்றைய இராகங்கள் சுரங்கள் முதலியவற்றின் தோற்றுவாய் தமிழ் மொழியிலையே இருந்திருக்க வேண்டும்.தமிழின் இசைச் செறிவுக்கு இது மேலும் ஒரு வலிய சான்றாக இருக்கிறது.

இவ்வளவு நீண்ட விளக்கங்கள் இசைக்கருவிகள் பற்றி தமிழில் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைப் பட்டியலிட்ட நோக்கம் இசைக்கும் தமிழுக்குமான ஆழ்ந்த செறிந்த தொடர்பு 2000 வருடத்திற்கும் முற்பட்டது என்பதை சுட்டவே.2 ம் நூற்றாண்டின் திருக்குறள் காலத்திலேயே குழல்,யாழ் போன்ற கருவிகள் செறிவாகப் பயன்பட்டிருக்கம் போது அதற்குப்பல காலம் முன்பே இசை,இராக விதிகள் பற்றிய தெளிவு தமிழில் இருந்திருக்க வேண்டும்.


தமிழில் பாரம்பரிய இசை தேய்ந்த காரணம்:
இந்த நிலையில் தெலுங்கும் வடமொழியும் பாரம்பரிய இசைக்கு உரிமை கொண்டாடியதும் தமிழில் இசை நம் காலத்தில் தேய்ந்த நிலைக்குச் சென்றதற்குமான காரணம் என்ன?

கால வரிசையின் படிப்பார்க்கையில் தொல்காப்பிய காலத்திலிருந்து அல்லது அதற்கு முன்பான காலத்திலிருந்தோ இசைக்கான தனி நூல்கள் இருந்தது(பரிபாடல் போன்ற) பற்றிய செய்திகள் இருக்கின்றன.அதாவது சுமார் கிமு 2 லிருந்து கிபி 5 வரை.

பின்னர் வந்த பக்தி இலக்கிய காலத்தில்-கிபி 7 ல் இருந்து கிபி 12 வரை திருமுறைகள் மற்ற தமிழ்ப்பாடல்களில் இசையும் பண்ணும் சார்ந்த குறிப்புகள் இருக்கின்றன.

இக்கால கட்டத்தில் சங்கீத ரத்நாகரம் என்ற ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டது.எழுதியவர் நிசங்க சார்ங்க தேவர் என்பவர்.இந்த நூல் இன்று கர்நாடக சங்கீதத்துக்கமான ஒரு முக்கிய தொடர்பாக குறிக்கப்படுகிறது.ஆனால் இந்த நூலில் தேவாரப்பதிகங்களில் அமைந்திருக்கும் பல பண்களும் அவற்றின் பெயர்களும் கையாளப்பட்டிருக்கின்றன.எனவே இந்த நிசங்கர் தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்று தமிழில் நிலவிய இசை பற்றிய அறிவை வடமொழியில் எழுதினார் என்பது கண்கூடு.


பின்னர் வந்த கால கட்டங்களில் பல இனத்தவர்கள் சார்ந்த ஆட்சிக் குழப்பங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன;மராத்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,முகம்மதியர்,சுல்தான்கள்,நிஜாம்கள் என்ற குழப்பக் கூட்டங்கள் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வந்தனர்.எனவே இக்கால கட்டங்களில் தமிழின் சிறப்பியல்புகள் குறித்து பெருமிதப்படவோ,தகுதிகளைக் கொண்டாடவோ எவரும் இல்லாது போயினர்.

இந்தக் காலகட்டத்தில்தான் அருந்தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் ஞானசம்பந்தர் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு நினைவு கூறத்தக்கது;கிபி 2-4 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிபி 6 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரையிலும் கூட தமிழ் மொழி இவ்வாறு அழிந்து பாழ்பட்ட நிலையில்தான் இருந்தது.இக்காலகட்டத்தில்தான் பக்தியின் பாற்பட்டு முகிழ்ந்த ஞானசம்பந்தர்,நாவுக்கரசர் போன்றவர்கள் தமிழுக்கு இருந்த வாடிய நிலை கண்டு பல அமரத்துவம் வாய்ந்த திருமுறைப் பாடல்களை இயற்றி தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

சம்பந்தர் தேவாரத்தின் 3000 பாடல்களில் சுமார் 10,20 பாடல்களுக்கு ஒருமுறை தன் பெயரை விளிக்கும் நிலை வந்த போதெல்லாம் தமிழையும் சேர்த்து தமிழ் ஞானசம்பந்தன் என்றே விளித்துச் செல்கிறார் சம்பந்தர்.
இது மட்டுமின்றி தாழ்ந்த குலம் எனக் கருதப்பட்டிருந்த பாணர் குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாருக்கு,தனக்குக் கிடைத்த மரியாதைக்குச் சரியான மரியாதையை எல்லா இடங்களிலும் வழங்கவைத்த பெரியார் அவர்.அவரைக் குறிக்குப் பல இடங்களிலும் பாணரை ஐயர் என்றே குறிப்பிட்டு பெருமைப்படுத்திய சமூகப் போராளி அவர்.

15ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவர் போன்ற அருந்தமிழ்த் தொண்டர்கள் இல்லாது போயின காலம்தான் தமிழ் தாழ்ந்துபட்டது.

இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்குக் கீழ் அதிகாரத்தில் இருந்த பலருக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லாதிருந்தது.
இந்த கால கட்டத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் கட்டமைப்பு ஏற்பட்டது.அவர்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனைகளைப் பொழிந்து தள்ளினார்கள்,அவை பெருமைப்படுத்தப் பட்டு எங்கும் பாடப் பட்டன;காரணம் அன்றைய அரசர்கள் அல்லது சமஸ்தானாதிபதிகள் அனைவரும் தெலுங்கர்கள்.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தெலுங்கு கீர்த்தனைகளாலேயே முடிந்தது.

இசை என்பதன் ஆன்மா ஒன்றுதான்;அது வெளிப்படும் வடிவங்கள் தான் பாடல்கள் அல்லது கீர்த்தனைகள்.இவை எந்த மொழியில் அமைந்தாலும் இசையை ரசிக்கலாம்.ஆனால் இசையின் ஆன்மா எப்போது தங்குதடையின்றி உணரப் படும் என்றால்,அது உயிரைத் தொடும் போது ! அதற்கு கேட்பவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் பாட்டு;இல்லையெனில் நாம் துணிந்து சொல்ல வேண்டும் நிப்பாட்டு என !

சரி,இக்காலத்திலும் ஏன் அந்த வேற்று மொழிப்பாடல்களே நிலை பெற்றுப் போயின? பாடுபவர்களின் அறியாமை மற்றும் கேட்கும் நம் மூடத்தனம்.

‘ப்ரோவ பாரமா,ரகுராமா’ என்று அழைக்கும் காகுந்தனை ‘அலைபாயுதே,கண்ணா’ என்றும் விளித்துக் கொஞ்சலாம்.பின்னதின் நெருக்கமும் அன்பும் முன்னதில் இல்லை என்பதை பாடுபவர்கள் புரிந்து கொள்ளாத அறியாமை;’ப்ரோவ பாரமா’ நமக்கானது அல்ல என அந்த வேற்றுமொழிக் கீர்த்தனைக்காக நமது சங்கீதத்தையே தூக்கியெறிந்து விட்டு ‘நாக்குமுக்குவில்’ நம்மைத் தொலைத்து விட்டு நிற்கும் கேட்பவர்களான நம் மூடத்தனம்.

மிகப்பிற்காலத்திலே தோன்றிய இக்கீர்த்தனைகளின் வரவு பற்றிய பெரியவர் திருவிக அவர்களின் கூற்று பின்வருமாறு:

“தமிழ்நாடு விருந்தோம்புவதில் பேர் பெற்றது;எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது.தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது;அதனால் நாட்டுக்கு விழைந்த நலன் சிறிது,தீங்கோ பெரிது.

கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது.தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன.அந்நாளில் பெரும் பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன.முத்துத்தாண்டவர்,கோபாலகிருஷ்ண பாரதியார்,அருணாசலக் கவிராயர் முதலியோர் சிங்க ஏறுகள் அல்லவா?அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறிவதாயின.இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர்.அவைகள் ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன.அவ்வணியைத் தாங்க அவைகளால் இயலவில்லை.கலையற்ற கீர்த்தணைகளின் ஒலி காதின் தோலில் சிறிது நேரம் நின்று அரங்கம் கலைந்ததும் சிதறிவிடுகிறது,இதுவோ இசைப்பாட்டின் முடிவு?

இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது?புலன்களின் வழிப்புகுந்து,கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்திக்,குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து,அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது,இது இசைப்பாட்டின் உள்ளக் கிடக்கை;இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது!”

நான் மேலே சொன்னவற்றை செறிந்த தமிழில் கூறியிருக்கிறார் திருவிக அவர்கள்.

அதெல்லாம் சரி,இப்போது என்ன செய்யச் சொல்கிறாய் எனக் கேட்கிறீர்களா?

முதலில்:எங்கெல்லாம் இசைக் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நாக்குமுக்கா நாறத்தனங்களைத் தவிர்த்து விட்டு நல்ல இசைக் கச்சேரிகளை நடத்துங்கள்,பாடுவோருக்கு முக்கியமான குறிப்பு அல்லது வேண்டுகோள் அல்லது அறுவுறுத்தலுடன்;அது தமிழ்ப் பாடல்கள் மட்டும் பாடுங்கள் என்பது.அவர்கள் மறுக்க மாட்டார்கள்,ஏனெனில் பணம் கிடைக்கிறது.அதாவது பிறமொழிப் பாடல்கள் பாடினால் பணம் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும்.பிறமொழிப்பாடல்களே மட்டுமே ரசிப்போம் என்பவர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த மொழிகளில் பாடிக் கொள்ளட்டும்.

பிறகு:உங்கள் குழந்தைளுக்கு பாரம்பரிய இசை என்னும் கர்நாடக சங்கீதப் பயிற்சி அளியுங்கள்.சரியான நேரத்தில் அவர்களைத் தமிழ்ப்பாடல்கள் பக்கம் திருப்பி விடுங்கள்.தமிழில் பாடல்கள் இல்லை என்ற நிலையிலா இருக்கிறது? போதும் போதும் என்ற அளவில் கொட்டிக் கிடக்கிறது.திருமுறைகளில் தொடங்கி இந்த,சென்ற நூற்றாண்டுக் கால அருணாசலக் கவிராயர்,அநந்த பாரதிகள்,கவி குஞ்சர பாரதி,கனம் கிருஷ்ணய்யர்,இராமலிங்க அடிகள்,கோபாலகிருஷ்ண பாரதி,கோடீசுவர ஐயர்,பட்டனம் சுப்பிரமணிய அய்யர்,மாரிமுத்துப் பிள்ளை,மாயவரம் வேதநாயகம் பிள்ளை,முத்துத்தாண்டவர்,மாம்பழக் கவிராயர்,அண்ணாமலை ரெட்டியார் போன்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ரெட்டியாரின் காவடிச்சிந்து பாடல்கள் எல்லாம் அவ்வளவு இனிமை வாய்ந்தவை.


சென்னிக் குளநகர் வாசன்,தமிழ் தேறும் அண்ணாமலை
தாசன்


என்னும் பாடலை அதன் இசை மற்றும் தாளக் கோர்வையில் கேட்டுப் பாருங்கள்;சொக்க வைக்கும் பாட்டு அது !

அந்தத் துறையிலேயே நுழையாது இசை மற்றும் சங்கீதத்தை ஒரு சாதியாருக்கு சொத்தாக இருக்க அனுமதித்துவிட்டு பார்ப்பனர்களின் அட்டூழியம் என்று ஜல்லியடிப்பதில் அர்த்தமில்லை !

இசைத்தமிழை மீட்டெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது,மற்றெவர் கையிலும் இல்லை !!!


ஒரு அவசியப் பிற்சேர்க்கை:
இந்தப் பதிவுத் தொடரில் நான் சாஸ்திரிய சங்கீதம் என்று சொல்லப்படுவது இன்றைய வடிவில் கர்நாடக சங்கீதம் மட்டும்தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கு விடை காண முயன்றிருக்கிறேன்.தமிழில் உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் நாட்டுப் புறப்பாடல்களும் நல்ல மெட்டில் அமைந்த பாடல்களே.
அவை பெரும்பாலும் சங்கீதக்கட்டுகளுக்குள் அகப்படாமல் உணர்வுகளை மேலெடுத்துச் செல்லும் பாடல்கள்;அவற்றின் முதல் நோக்கம் உணர்வுகள் நல்ல சந்த மெட்டுக்களில் கேட்பவர் உள்ளத்தைத் தைக்க வேண்டும் என்ற நோக்கம் பற்றி எழுந்தவை.
சாஸ்திரிய சங்கீதம் என்பது சங்கீத நுணுக்கங்களை அறிந்து பிரயோகித்துப் பாடுபவர் பாடும்
பாடல்கள்.
இனிப்பு பொதுவாக சுவையுடையது எனினும் வெல்லப்பாகு நேரடியான பாசாங்குகள்,அலங்காரங்கள் இல்லாத இனிப்பு;ஆனால் பாதாம் அல்வா செய்ய ஏகப்பட்ட
பக்குவங்கள் வேண்டும்;இந்த வித்தியாசம்தான் இரண்டு இசைக்கும்.

இன்னொரு பிற்சேர்க்கை:


நண்பர் ஜீவா அவர்கள் தமிழிசை என்ற தலைப்பில் ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார்.

பாடகி சௌம்யா அவர்கள் அகநாநூற்றுக் காலத்தில் இருந்து பாபநாசம் சிவன் வரை தமிழ்ப்பாடல்களூடாகச் சென்ற இசைப்பயணம் பற்றிய ஐந்து பதிவுகள் அவை.அவற்றைக் கேட்கும் போது இசைப்பயிற்சி இருந்தால் தமிழின் காப்பியங்கள் அனைத்திலும் பாரம்பரிய இசைக்கான் வடிவத்துடன் கூடிய ஆயிரமாயிரம் பாடல்களைத் தேர்ந்து எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

அந்த பாடல்களை வழங்கிய சௌம்யா அவர்களுக்கும் தேடிப் பதிவிட்ட நண்பர் ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல!

Sunday, January 11, 2009

90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா????

இசை !


இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்பாடாக உள்ளம் நாடும் விதயங்களில் இசைக்கு முக்கியமான இடம் உண்டு.நமது பொழுதுபோக்கு ஊடகங்களில் கூட இசைக்கு முக்கியமான இடம் உண்டு;இசை இல்லாமல் அவை இருந்தால் ஒருவரும் அவற்றை ரசிக்க மாட்டார்.

இந்தியாவில் இசையின் வடிவங்கள் பல உண்டு.இன்றைய திரைஇசை மெல்லிசையாக இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கலவையாக உருப் பெற்றிருக்கிறது.இந்தியாவில் நிலவும் இசை வடிவங்களில் பாரம்பரியமான இசை என்ற நோக்கில் பார்க்கும் போது வடஇந்தியாவில் இந்துஸ்தானி இசை மற்றும் கஸல் போன்றவை மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதம் ஆகியவை தேறுகின்றன.

இந்த கர்நாடக இசைதான் பாரம்பரிய சங்கீதம் என்ற பொருளில் சாஸ்திரிய சங்கீதம் என்ற அடைமொழியுடன் உலவுகிறது.
அத்தகைய பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகள் எனப் பார்த்தால் சுரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்கள்,ராகங்கள் மற்றும் ராக ஆலாபனைகளின் வடிவமாக கீர்த்தனைகள் ஆகியவை கர்நாடக இசையின் பல கட்டுகளாக உள்ளன.இந்த கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் அமைந்தவை.இந்த கர்நாடக இசையில் பெரும்பாலும் தேர்ச்சி அடைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பாடகர்களும் பெரும்பாலும் பாடும் பாடல்களும் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களே.

20’ம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை வரை இந்த நிலைதான் இருந்தது.தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையில் தமிழ்பாடல்களை பாடப்படாத நிலை கண்டு நொந்த சில பெரியவர்கள் தமிழிசை இயக்கம் என்ற இயக்கத்தையே தொடங்கி தமிழிசையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது.அவர்களின் பெருமுயற்சியால்தான் இன்று சில பாடல்களாவது பாரம்பரிய இசை என சொல்லப்படும் கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்களாக இருக்கின்றன.


தமிழர்கள் உலகின் முதலில் தோன்றிய நாகரிக இனங்கள் என்ற ஒரு பார்வை உண்டு;இன்னும் முழுக்க நாகரிக நிலையடைந்த முதல் மனித இனம் தமிழினமாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தாக்கமும் வலுவுடன் இருப்பதற்கான சான்றுகளை நான் என்னுடை முந்தைய சில பதிவுகளில் வைத்தேன்.

இப்படிப்பட்ட பாரம்பரியத் தமிழினத்தில் இசைக்கான இடம் என்ன?தென்னிந்திய பாரம்பரிய இசையான கர்நாடக இசையில் ஏன் தமிழ்ப்பாடல்களுக்கான இடத்தைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருந்தது.இப்போதும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை விழாக்களில் ஏன் தமிழ்பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன?

இப்போதைய இந்த கர்நாடக இசையின் ஊற்றுக்கண் என்ன?இப்போது கர்நாடக இசையின் வடிவங்கள் எனக் கருதப்படும் தெலுங்குக் கீர்த்தனைகளின் தோற்றம் எப்போது?அது தோன்றிய காலத்துக்கு முன் தமிழில் இசையின் வடிவங்கள் பாடல்கள் எவ்வாறு இருந்தன?

இந்த கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என தியாகராச சுவாமிகள்,முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாத்திரிகள் என அறியப்படும் மூவர்.இவர்கள் கர்நாடக சங்கீதத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் எனப் போற்றப்படும் பெரியவர்கள்.இவர்களே அதிகமான கீர்த்தனைகள் என அறியப்படும் தெலுங்குப் பாடல்களை இயற்றியவர்கள்.

இவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் எனக் கொண்டாடப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது இவர்களின் காலத்திற்கு முன் சங்கீத உலகம் எப்படி இருந்தது என்ற தவிர்க்க இயலாத கேள்வி எழுகிறது.இந்தக் கேள்வி எழும்போதே இந்த மும்மூர்த்திகள் வாழந்த காலம் சுமார் 17ம் நூற்றாண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

அப்படியெனில் 17ம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவின் பாரம்பரிய சங்கீதம் எப்படிப்பட்ட வடிவில் இருந்தது?

இன்று பாரம்பரிய சங்கீதம் என்று கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பெருமளவு தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடும் நிலையில்,இத்தகைய தெலுங்கு கீர்த்தனைகள் இயற்றப்பட்ட காலத்துக்கு முன் இசையின் வெளிப்பாட்டு வடிவமாக எந்தப் பாடல்கள் இருந்தன?

ஆழ்ந்த அகன்ற நெடிய இலக்கிய கால வரிசை கொண்ட தமிழில் இசைக்கான இடம் என்ன? அல்லது இசை என்னும் ஒரு அபூர்வக் கலையில் தமிழுக்கான இடம் என்ன?

கேள்விகள் ! கேள்விகள் ! இவற்றிற்கான் பதில்களை எப்போதாவது பெரும்பான்மைத் தமிழர்களான நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

சிறிது அலசுவோம்...

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு:

தமிழ் என்னும் காலத்தினால் மூத்ததும் பயன்பாடு மற்றும் கருத்துச்செறிவில் என்றும் புத்திளமை கொண்டு இலங்கும் மொழியின் அகன்ற பகுப்பே இயல்,இசை,நாடகம் என்னும் மூன்றாக உள்ளது;எனவே தமிழ் என்னும் மொழியில் இசைக்கு ஆழ்ந்த ஒரு இடம் இருந்தது என்பது விளக்க வேண்டிய அவசியம் இன்றியே அனைவருக்கும் விளங்கும்.

தமிழின் இலக்கியப் புதையலில் ஆராயும்போது மிகத் தொடக்க காலத்து சான்றாக தமிழின் பரிபாடல் பற்றிய குறிப்பு கிடைக்கிறது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரச்செய்யுளின் 242ம் பாடலுக்கான உரையில் ‘அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கந்தன என்பது’ என்ற குறிப்பால் பரிபாடல் என்பது இசைப்பாடல் வடிவத்தில் அமைந்த இலக்கியம் என்பது தெளிவாகிறது.மேலும் இதற்கான சான்றுக் குறிப்புகள் யாப்பருங்கலக்காரிகையிலும் காணக்கிடைக்கின்றன.

பரிபாடலில் நமக்குக் கிடைத்திருக்கும் 21 பாடல்களில் பாடல்களை இயற்றிய புலவர்கள் பெயரும் அப்பாட்டுக்குப் பண் வகுத்த புலவர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பதும் பரிபாடல் இசைப்பாடல்களால் அமைந்த நூல் என்பதற்கான் மேற்சான்றாகும்.இப்புலவர்களில் சிலரது பெயர்களாவன:பெட்டனாகனார்,கண்ணனாகனார்,நாகனார்,நன்னாகனார்,நல்லச்சுதனார் போன்றவை.

கடல் கொண்டு மறைந்த பழந்தமிழ் நாட்டின் பகுதிக்கு நாவலந்தேயம் மற்றும் நாகநாடு என்ற பெயர்கள் நிலவின என்பதும்,தமிழரில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களில் நாகர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தனர் என்பதும் அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் இங்கு மீள்நினைந்து கொள்ளத்தக்கவை.

மேலும் இறையனார் அகப்பொருளுரை முதுநாரை,முதுகுருகு என்னும் இரு இசை நூல்களைப்பற்றியும் பேசுகிறது.

திருமுறைகளைச் சேர்ந்த தேவார திருவாசகப் பாடல்களுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பாணர்கள் என்னும் இசை வகுப்பினர் பண் மற்றும் இசை வகுத்த செய்திகளும் எல்லா திருமுறைப்பாடல்களுக்கும் அவை கொடுக்கப்பட்டிருப்பதும் அனைவரும் எண்ணிப்பார்த்து அறிய வேண்டுவது.

மேலும் பழந்தமிழ் இலக்கியம் மூலம் அறியப்படும் இசைக்கான சூத்திரங்கள் மற்றும் செய்திகளைச் சொல்லும் நூல்களில் சில:

சிற்றிசை
பேரிசை
பஞ்சபாரதீயம்
இசை நுணுக்கம்
பஞ்ச மரபு
பதினாறு படலம்
வாய்ப்பியம்
இந்திரகாளியம்
குலோத்துங்க சோழன் எழுதிய இசைநூல்
இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை


போன்ற நூல்கள்..

இந்த நூல்கள் சொல்லும் செய்திகளில் காணக்கிடைக்கும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளாவன:

-இசை ஏழு வகைப்படும்.அவை குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பன.இவற்றின் வடமொழிப் பெயர்கள் மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம்,ஷட்ஜம்,ரிஷபம்,காந்தாரம் என்பன.

-இசை பிறக்கும் இடங்கள்:மிடற்றினால் குரலும்,நாவினால் துத்தமும்,அண்ணத்தால் கைக்கிளையும்,சிரத்தால் உழையும்,நெற்றியால் இளியும்,நெஞ்சினால் விளரியும்,மூக்கால் தாரமும் பிறக்கும்.

இராகங்கள்:பைரவி,தேவக்கிரியை,மேகவிரஞ்சி,குறிஞ்சி,பூபாளம்,வேளாவளி,மலகரி,பௌளி,சீராகம்,இந்தோளம்,பல்லதி,சாவேரி,படமஞ்சரி,தேசி,இலலிதை,தோடி,வசந்தம்,இராமக்கிரியை,வராளி,கைசிகம்,மாளவி,நாராயணி,குண்டக்கிரியை,கூர்ச்சரி,பங்காளம்,தன்னியாசி,காம்போதி,கௌனி,நாட்டை,தேசாட்சரி,சாரங்கம் முதலியன

-இசை அல்லது இராகத்தின் பகுப்பு நான்கு கூறுகளின் மூலம் வகுக்கப்படும்.அவையாவன இடம்,செய்யுள்,குணம்,காலம் என்பன.
அதாவது இந்த நான்கு காரணிகளின் படி இராகங்கள் பகுக்கப்படலாம்.

-இடம்பற்றிய இராகங்கள் ஐந்தினை இராகங்கள்.அவை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை நிலங்களுக்குரிய குறிஞ்சி,சாதாரி,செவ்வழி,மருதம் மற்றும் பாலை என்பன

-செய்யுள் பற்றிய இராகவகைகள்:
வெண்பாவின் இராகம் சங்கராபரணம்
அகவற்பா அல்லது ஆசிரியப்பா:தோடி
கலிப்பா:பந்துவராளி
கலித்துறை:பைரவி
தாழிசை:தோடி
விருத்தம்:கலியாணி,காம்போதி,மத்தியமாவதி
பிள்ளைத்தமிழ்:கேதாரவுளம்
பரணி:கண்டாரவம்

-குணம் பற்றிய இராகவகைகள்:இரக்கம் உள்ளவை:ஆகரி,கண்டாரவம்,நீலாம்பரி,பியாகடம்,புன்னாகவராளி
துக்கம் உள்ளவை:மேற்கூறியவற்றோடு கூட வராளியும்
மகிழ்ச்சி:காம்போதி,சாவேரி,தன்யாசி
யுத்தம்:நாட்டை


-காலம் பற்றிய இராகவகைகள்:வசந்த காலம்:காம்போதி,அசாவேரி,தன்னியாசி
மாலை வேளை:கலியாணி,காபி,கன்னடம்,காம்போதி
யாமவேளை:ஆகரி
விடியற்காலை:இந்தோளம்,இராமகலி,தேசாட்சரி,நாட்டை,பூபாளம்
உச்சிவேளை:சாரங்கம்,தேசாட்சரி

ஆகரி,இந்தோளம்,இராமகலி,சாரங்கம்,பூபாளம் நீங்கிய இராகங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை.

-இன்னும் வரும்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...