குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, December 8, 2007

29.ரூபாயின் மதிப்பு-ஒரு விஷுவல் ட்ரீட்-சி.ஐ.ஏ வின் பொய்கள்

பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 40 க்குக் கீழ் வந்திருப்பது இப்போதுதான்.
இது மேலெழுந்தவாரியாக மகிழ்வளிக்கும் செய்தி என்றாலும்,இந்திய ஏற்றுமதியாளர்கள் புலம்புகிறார்கள்;
அவர்கள் டாலர் செலாவணியில் விற்பனைக்கான தொகையை வாங்கும் போது ரூபாய் மதிப்பு அதிகமாகிவிடுவதால் நிகரத்மதிப்புத்தொகை குறைந்து அவர்களில் லாபம் அதிக பட்சம் 13 சதம் வரை குறைகிறதாம்.
உண்மையில் இது வருத்தும் செய்தி எனினும்,இவை எல்லாவற்றிற்கும் இடையிலும் ஏற்றுமதி வணிகம் மொத்தத்தொகை இந்த வருடம் 35 சதம் டாலர் மதிப்பில்(Quantum) அதிகரித்திருக்கிறது !
அனைத்திலும் புன்னகைக்க வைக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.தாஜ்மஹால் போன்ற இடங்களில் அரசு இதுவரை இந்தியர்களிடம்,இந்திய ரூபாயிலும்,சுற்றுலா வரும் வெளிநாட்டவரிடம் டாலரிலும் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்திருந்ததாம்;இப்போது வெளிநாட்டவர் உள்பட எல்லோரிடமும் ரூபாயிலேயே கட்டணம் வசூலிக்கப் படுகிறது....
கமான் இந்தியா,கமான் !

*************************************************************************************

தமிழ் சினிமாக்களில் பல அபத்தக் களஞ்சியமாக இருப்பது வாடிக்கை,நம்பி இருக்கலாம்,பார்க்க வேண்டாம் என்று!
ஆயினும் அவ்வப்போது சில பார்க்கலாம்-வகைப் படங்களும் வரும்.
காதலுக்கு மரியாதை அதில் ஒன்று.
பலமுறை பார்த்த படம்தான் எனிலும்,மற்ற சாதாரண படங்களைப் போலவே ஆட்டமும் பாடல்களும் உள்ள படம்தானெனினும்,இன்று தொலைக்காட்சியில் இப்படம் பார்த்தபோது இதன் இறுதிக்காட்சிகள் ரசிக்கவைத்தன.
நாயகனும்,நாயகியும் மற்றவரை மறுத்து குடும்பம்,பெற்றோரை புண்படுத்தக் கூடாதென்று வந்துவிட்ட பிறகு,நாயகனின் அப்பா(சிவகுமார்),மனைவியிடம் சொல்லுவார்,’அவன் எங்களுக்காகவெல்லாம் திரும்ப வரவில்லை,உன்மீது உள்ள அன்பினால்தான் வந்திருக்கிறான்,அந்த அன்புக்கு நம்பிக்கை செய்ய அப்பெண்ணை விட பல மடங்கு சிறந்த பெண்ணாக உன் மகனுக்குப் பார்க்க வேண்டியது உன் கடமை’ என..
சரி,அந்தப் பெண்ணை விட சிறந்த பெண்ணைத் தேடுவோம்,அதற்கு அப்பெண்ணை முதலில் பார்ப்போம் என அம்மா நாயகி வீட்டுக்குச் சென்று,பின்,நாயகியே மிகப் பொருத்தமான பெண் என முடிவு செய்ததும்,மகனை கிட்ட அழைத்து வாத்சல்யம் காட்டும் இடம், ‘உன்னை அருமையான முறையில் வளர்த்தேன்,அருமையாக நானே அனைத்தும் உனக்குச் செய்வேன் என நினைப்பதும்,பின் மகனின் தேர்வு தான் செய்வது போலவே நல்ல தேர்வு என உணர்வதும்,அப்படித் தெரிந்தும் என் மீது அன்பும்,நம்பிக்கையும் வைத்து,என்னிடமே பொறுப்பை ஒப்படைத்தாயே?’ எனக் கேட்பது போல ஸ்ரீவித்யாவிடம் மிக நல்ல பாவனைகளும்,காட்சி அமைப்பும்....
பிள்ளைகளை மதிக்கும் பெற்றோர்களும்,பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளும் எப்படி குணாதிசயிப்பார்கள் என்ற விஷுவல் ட்ரீட் ரசிக்கும்படியானது.

************************************************************************************

சி.ஐ.ஏ ( Central Intelligence Agency ) சில பயங்கரவாத விசாரணைக் கைதிகளை விசாரித்த காட்சிப் பதிவு ஆதாரத்தை அழித்து விட்டோம் என்று அறிவிக்க அமெரிக்க ஊடகங்களில் புயல் கிளம்பியுள்ளது.
அந்த ஆவனங்களுக்கு ஏதும் ‘புலனாய்வு மதிப்பு’(Intelligence Value) இல்லாததாலும்,அவை ரகசியமாக வெளிப்பட்டு விட்டால்,விசாரிப்பாளர்களின் சுதந்திர வாழ்வுக்கு தீவிரவாத சக்திகளால் அச்சம் உண்டாகும் என்ற காரணத்தாலேயே அவை அழிக்கப் பட்டன என்கிறார் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஹேடன்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து அப்படிப்பட்ட கட்டளை/வேண்டுகோள் செல்லவில்லை என்கிறது வெள்ளைமாளிகை.
தங்களை ஏவும் அரசியல் தலைமை,தங்களை அடைகாக்கும் கடமையிலிருந்து பின்வாங்குவதாக சி.ஐ.ஏ கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் புலனாய்வு அமைப்புகளை முடுக்கிவிட்டு தான் விரும்புவதை சாதிப்பதும்,பின்னர் கேள்விமுறை என வரும்போது வாளாவிருப்பதும்,எல்லா நாடுகளிலும் பொதுவான காட்சியாகிவருகிறது.

-Aknowledgements : Time Magzine

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...