குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, April 30, 2012

140-காமம்-நித்தியம்-அவலம் !!

இந்தியாவில் சட்டபூர்வ ஆண்-பெண் உறவுக்கான வயதை மத்திய அரசு 16 லிருந்து 18 ஆக உயர்த்தியதாக சட்டத் திருத்தம் வருகிறது.

அத்தி பூத்தாற்போல் எப்போதாவது அரசு நல்ல ஒரு முடிவை எடுக்கும் தருணங்கள் வரும்;இது அது போன்ற ஒன்று.ஆனால் இதற்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது.அதாவது இது குழந்தைகள் உரிமையைக் கெடுப்பதாகக் கூறி ஒரு கூட்டம் இதை எதிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறார்களுக்கு காமம் பற்றிய கல்வி இருக்க வேண்டும் என்று பரவலாகப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காமம் பற்றிய கல்விக்குப் பதிலாக உடற்கூறு பற்றிய கல்விதான் அவசியம் என்பது எனது புரிதல்.இது பற்றி விளக்கமாக ஏற்கனவே நான் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது சொல்லாடல் மட்டுமல்ல;அனுபவமும் உண்மையும் கூட.டீன் ஏஜ் எனப்படும பதின்ம வயதுகளில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களைப் பற்றிய சரியான அறிவுதான் சிறார்களுக்குத் தேவையே தவிர காமம் பற்றிய அறிவியல்|கலை அறிவு தேவையல்ல;அதெல்லாம் இல்லாமலேயே உடலியல் மாற்றங்களால் காமம் தொடர்பான எந்த விதயத்தையும் தீப்பற்றியது போலப் பற்றிக் கொள்ளும் பருவம்,பதின்ம வயதுகளின் பருவம்.

இந்த நேரங்களில் கிடைத்த எந்த வாய்ப்பிலும் காமம் பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட உடலும் மனமும் துடிக்கின்ற பருவம் இது;இந்த நேரங்களில் சரியான உடலியல் கல்வியோடு,காமத்திலிருந்து விலகி இருப்பதே நல்ல மன,உடல் வளத்திற்கும்,நலத்திற்கும் சரியானது.

திருமணத்திற்கான முன்பான காமம் ஒத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று என்ற ஜல்லியடிகள் பெருத்துப் போனதும்,அதற்கான விளைவுகளைப் பெண்கள் மட்டும் சுமக்கும் அவலங்களும்தான் நடக்கிறது.


முற்போக்கானவை என்றும் காமம் பற்றிய கல்வி அவசியம் என்றும் கூவிய எல்லா நாடுகளிலும் இன்று குழந்தைத் தாய்கள் அதிகமானதும் மன முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் காமமும்,குழந்தைகளும் பெற்று அதோடு விவாகரத்துகளும் பெற்று வாழ்க்கை வெம்பிய சூழலில் வாழும் வாழ்க்கைதான் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிகிறது.

எனவேதான் பல வாழ்வு நலன் சிறக்க வழிசொல்லும் பல புத்தகங்களும் ஆக்கங்களும் நமக்கு ஓயாது சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் மேற்கண்ட சட்டத் திருத்தம் மிகத் தேவையானதும் பாராட்ட வேண்டியதுமான ஒன்று.இதை எதிர்ப்பவர்கள் குழந்தை நலன் தொடர்பான குழு என்று டைம்ஸ் செய்திப் பத்திரிக்கையில் தெரிகிறது;முட்டாள்கள் !!

சிங்கப்பூரின் அரசாண்மை பற்றிய எனக்கு மிகுந்த ஆர்வமும்  நுண்பார்வையும் உண்டு;காரணம் சிங்கப்பூரை மறு நிர்மாணம் செய்ய சீனியர் லீ 1950 களின் இறுதியில் முடிவெடுத்த போது,எந்த ஒரு துறையிலும் உலகின் எந்த நாட்டில் அத்துறை மிகச் சிறப்பாக விளங்குகிறதோ அதை மாதிரியாக எடுத்துக் கொண்டு சிங்கப்பூரின் சூழலுக்குத் தகுந்தவாறு அந்த மாதிரியை மாற்றிச் செயல் படுத்தியதாக அவர் எழுதியிருக்கிறார்.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட,முன்னேறிய நாடாக அறியப்படும் சிங்கப்பூரிலும் சில கொள்கைகள் இறுக்கமான சட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.அவற்றில் முக்கியமானவை சட்டரீதியான காமத்திற்கு அனுமதிக்கப் பட்ட வயது 18,மற்றும் குற்றவியலில் சில பெருந்தீங்கான செயல்களுக்கு மரண தண்டனை போன்றவை முக்கியமானவை.சிங்கப்பூருக்கு வரும் பலரும்,'ஆகா,இந்த நாடு அற்புதமாகத் திகழ்கிறது' என்று வியப்பதற்கான கட்டுமானம் இது போன்ற சரியான அரசாண்மையிலும்,தயவு தாட்சன்யமின்றி கடைப்படிக்கப் படும் சட்ட விதிமுறைகளாலும்தான் சாத்தியம் என்பதும் பலர் கண்களுக்குத் தெரிவதில்லை.

இங்கு 18 வயதுக்குட்பட்ட பெண் ஒத்துக் கொண்டு எவருடனாவது உடலுறவு கொண்டால் கூட,சம்பத்தப் பட்ட ஆண்தான் குற்றச் செயல் புரிந்தவராகக் கருதப் பட்டு தண்டிக்கப் படுவார்.இதுவே சரியான பார்வை.

இப்போது ஒரு மாதத்திற்கு முன்னால் கூட சிங்கப்பூரின் புகழ்பெற்ற கட்டுமானத் துறை தொழில் விற்பன்னரின் குடும்பத்தின் வாரிசான ஒரு தொழிலதிபர் இவ்வாறு சிறார்களுடனான காமக் குற்றச் செயலில் பிடிபட்டு வழக்கிற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்.

இந்தியாவில் இவ்வளவு சமூக ஒழுங்கெல்லாம் எதிர்பார்ப்பது துர்பலம்;ஆனால் பதின்ம வயதுக் காமம் தொடர்பில் சமூக ஒழுங்கு பற்றிய ஆக்கப் பூர்வ சிந்தனையில் முதல் படி இந்த வயது வரம்பு உயர்த்திய செயல்.

அதையும் சீரழிக்க ஒரு கூட்டம் கிளம்புகிறது..எப்படி உருப்படுவோம்?!

()

மதுரை ஆதீனத்திற்கு ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் குருவாக நியமிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தச் செய்தி உண்மையெனில்,இது ஆத்திகர்களுக்கும் சைவ சமய அமைப்புகளில் பற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு அவலமான செய்தி.

ஏற்கனவே இருந்த மதுரை ஆதீனத்தின் குருவே ஒரு காமெடிப் பேர்வழி,அந்தக் காமெடிப் பேர்வழி எதற்கு மயங்கி இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறிது காலத்திற்குள் வெளிவரும்.

ஆனால் அதற்குள் சமய,இறைநெறியில் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கும் பலருக்கும் இந்த நியமனம் செருப்படி போல் விழுந்திருக்கிறது..

ஒரு மிகத் தவறான முன்னுதாரமான இதனால் ஏற்படப் போகும் பல விபரீதங்கள் இப்போது எனக்குத் தெரிகின்றன.

நாசமடையும் காலத்தில் புத்தி விபரீதமாக வேலை செய்யும் என்ற சொல்லாடலுக்கு தற்போதைய மதுரை ஆதீனம் பிரமாண்டமான உதாரணம்.

()

அபிஷேக் மனு சிங்வி பற்றிய ஒளிக் காட்சித் துண்டும் அதைப் பற்றிய செய்திகளும் அனைவரும் அறிந்தவைதான்.

ஒரு பெண் வழக்கறிஞர் நீதிபதி பதவி பெறுவதற்காக தன்னை ஒப்புதவித்த காட்சிகள்தான் அவை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி பதவிக்கு நியமிக்கப் படுபவர்களின் பின்னணியும் அவர்கள் தகுதிக்காக மட்டும்தான் அவர்கள் பதவி உயர்த்தப் படுகிறார்களா என்பன போன்ற விதயங்களில் முக்கியத்துவம் பெற வேண்டிய இந்த விவகாரம் முறைதவறிய காமத்திற்காக மட்டுமே முக்கியத்துவம் பெறுவது வருந்தத் தக்கது.

சந்துரு போன்ற மிகத் திறமையும் நேர்மையும் மிக்க வழக்கறிஞர்கள் கூட பெரிய மனிதர்களின் பரிந்துரை இருந்தால்தான் நீதிபதியாக முடிகிறது என்ற செய்தி நண்பர் பிரபு ராஜதுரை வாக்கில் பத்ரியின் பதிவில் தெரிகிறது.

நாடு அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான நிச்சய நிகழ்வுகள் இந்த சிடி விவகாரமும் அதன் பின்னணி நிகழ்வுகளும் !!

()


சுப்ரமணியம் சுவாமிக்கு எவ்வி தொடர்புகள் மூலம் செய்திகள் கிடைக்கிறது என்பது இந்திய அரசியல் சூழலில் வியப்பூட்டும் ஒரு விதயம்.

2ஜி பூதத்தை முதலில் கட்டவிழ்த்தது அவர்தான். இப்போது சிதம்பரத்தின் மகன் நடத்தும் நிறுவனத்திற்கும் 2ஜி யில் நடந்த பண,பங்குப் பரிவர்த்தனைகளுக்கும் உள் தொடர்பு இருக்கிறது என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார்..

2ஜி வழக்கு வந்த சமயத்திலேயே திருவாளர் ப திருநள்ளாறுக் கோவிலுக்கெல்லாம் படையெடுத்தது நினைவிருக்கலாம்.. !!

:)





தினமணி மதிக்கு நன்றியுடன்..


2 comments:

  1. மதுரை ஆதீன குரு மேற்கொண்ட கிறுக்குத்தனமான நடவடிக்கை தடுக்கப்பட்டு ஆத்திக சைவ மடங்களின் மானம் போகாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அனைத்து ஆதீனகர்த்தர்களும் ஒருங்கினைந்து நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

    அந்த வகையில் நடக்கவிருந்த தவறு சரி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது..

    ஆயினும் ராஜசேகரன் போன்ற ஆட்கள் எவரும் தடுக்கவில்லையெனில் ஆதீனகர்த்தர் வரைக்கும் வர முடியும் என்ற சூழல் நிலவுவது ஆன்மிகச் சூழலுக்கு நல்லதல்ல.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...