குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, February 21, 2010

115.முத்த யுத்தம்-ஒரு சர்ச்சை

மோகன் குமாரின் இந்தப் பதிவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகியும் அவர் கணவரும் முத்தமிட்டுக் கொண்ட நிகழ்வைக் கண்டித்து எழுதியிருந்தார்;அதில் நண்பர் வானம்பாடி சொன்ன ஒரு கருத்துக்கு அளித்த பதிலின் மூலம் புரிதல் இருந்தால் பிரச்னை இல்லை என்ற விதமான கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வந்தன,வானம்பாடி மற்றும் சின்ன அம்மிணி போன்றோரிடத்தில் இருந்து.

சிறிது விரிவாக ஆராயவே இந்தப் பதிவு.

சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெரியவர்கள் ஜோடி ஒன்று முத்தமிட்டுக் கொண்டது பொறுப்பற்ற செயல்;அதைத்தான் பதிவிலும் மோகன் சொல்லியிருந்தார்.

இதற்கு பின்னூட்டத்தில் பதில் அளித்த வானம்பாடி

'என்ன சார் இது. முத்தம்னா காதல்தானா? கத்துக் கொடுக்கணும்சார். முத்தம்னா என்னன்னு. அது எத்தனை வகை. எது அன்பு முத்தம். எது மரியாதை முத்தம். எது காதல் முத்தம்னு கத்துக் கொடுக்கணும்சார். இல்லாம டி.வி.ல யாரோ நடிகனும் நடிகையும் முத்தம் கொடுத்து கோண்டிண்டு ஓடுறத பார்க்கிரப்போ இது என்னமோன்னு புரிதல் இல்லாம பண்ணத் தோன்றும். :). ஹக் பண்றது ஹெல்தின்னு ஏன் தெரியல நமக்கு?'

என்று பதில் அளித்திருந்தார்.

அவருக்கு நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.

அவருடைய அல்லது அவரது மனைவி அல்லது வயது வந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் இவ்வகையான நட்பு ரீதியான 'ஹக் பண்றதை' அவர் எளிதாக எடுத்துக் கொள்வாரா? என்பது எனது நேரடியான கேள்வி.அவர் அதை எளிதாக எடுத்துக் கொள்வார் என்று நேர்மையாகப் பதில் அளித்தார் என்றால் என்றால அவருக்கு குழந்தைகளுக்கு முத்தம் பற்றி பாடம் எடுப்பதிலும் சங்கடங்கள் இருக்காது.

அதற்கு அவரிடமிருந்து நேரடியான பதில் இல்லாததோடு,எனக்குப் 'ஹக் பண்றது' பற்றிய புரிதல் இல்லை என்ற ரேஞ்சில் பதில் அளித்திருந்தார்.இதையே சின்ன அம்மணியும் சொல்லி இருந்தார்.

எனது பதிலாக நான் சொன்னது,எனக்கும் எல்லா 'ஹக்' பற்றியுமான பரிச்சயம் இருக்கிறது;எனது வாழ்வின் கடந்த 10 வருடங்களை பெரும்பாலும் மேற்கத்திய நாடு\நாகரிக முறைகளிடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்;இதில் புரிதல சொரிதல் என்று பாலகுமாரன் ரேஞசில் கருத்து அளிக்க வேண்டாம்.எனது நேரடிக் கேள்வி அவ்வித தழுவல்கள்உங்கள் குடும்பத்தில் உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு நடந்தால் நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்வீர்களா என்பதே.

இதை அப்பதிவை எழுதிய மோகன் குமார் மறுத்து அழித்துவிட்டார்.இதில் ஏதும் தனிமனித தாக்குதல் அல்லது ஆபாசமான சொற்கள் ஏதும் இல்லை;இது முழுக்க கருத்தால் அளித்த பதில் மட்டுமே..ஆனால் கொஞ்சம் காரமான பதில்.

ஆனால் இவை மறுக்கப்பட்டதால் எனது கமெண்டுகள் அனைத்தையும் அவரது பதிவில் இருந்து நானே எடுத்து விட்டேன்;ஒரு கருத்தை தெரிவிக்கும் அவர், அதை ஒட்டி வெட்டி வெளிப்படும் கருத்துக்களை அவை ஆபாசமோ,தனி மனித தாக்குதல்களோ இல்லாத பட்சத்தில் அனுமதிக்கும் தார்மீக தைரியத்தை நான் எதிர்பார்ப்பதில் தவறில்லை என்பது எனது நிலைப்பாடு.

இப்போது பதிவின் பொருளுக்கு வருவோம்.

உண்மை என்னவெனில் முற்போக்கு moron அவதாரம் அளிக்கும் பலரும் தனிப்பட்டு தன் குடும்பத்தில் அவற்றை ரசிக்க மாட்டார்கள்;காரணம் அவர்கள் உதடு சொல்வதை உள்ளம் ஏற்கும் நிலை இருக்காது !

குழந்தைகளுக்கு முத்தம் பாலியல் ரீதியான தகவல்கள் தேவையா என்பது விவாதத்துக்குரிய பொருள்.

இவற்றில் எனது நிலை பற்றி இந்த இரு பதிவுகளில் நான் முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.(இதில் ஒன்றிலேயே மருத்துவர் ஷாலினி கேஸ் பை கேஸ் தான் பதிலளிக்க முடியும்,கொள்கையளவில் முடிவாக சொல்ல முடியாது என்று சுற்றி வளைத்ததை டோண்டு ராகவன் சுட்டியிருக்கிறார்)

சுருக்கமாகச் சொன்னால் (சுமார் 20 வருடங்களுக்கு முன் 16 வயது) இப்போதைய காலத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடலியல் பற்றிய அறிவுதான் தேவையே தவிர பாலியல் பற்றிய அறிவு தேவை அல்ல என்பதுதான்.சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது ஒரு சொல்லாடல்.பாலியல் பற்றிய அறிவு ஒரளவு உரிய வயதில் தெரிவதுதான் நல்லதேயொழிய அவை சீக்கிரம் குழந்தைகளுக்கு தெரியவரும் போது குழந்தைகளுக்கு ஒரு பரிசோதனை மனோபாவம் வருகிறது என்பதும் ஒரு கருத்து.

அதுவரை நட்பை தெரிவிக்க முத்தம் எனபதெல்லாம் குழந்தைகளுக்குக் குழப்பத்தையும் பரிசோதனை மனோபாவம் அல்லது விவரமில்லாமல் எவரிடமாவது சிக்கும் நிலை இவைதான் நடக்கும்.

முத்தத்தையே எடுத்துக்கொள்வோம்,என்ன சொல்லி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவீர்கள்? நெற்றியில் முத்தமிடால் அன்பு,கன்னத்தில் முத்தமிட்டால் தோழமை,உதட்டில் முத்தமிட்டால் காதல் என்றா? அப்படிச் சொன்னால் காதல்னா என்னப்பா என்ற அடுத்த கேள்வி குழந்தையிடமிருந்து வரும்.

சரி வம்பு வேண்டாம் என்று நினைத்து,வெறுமனே முத்தம் தோழமைதான்;ஆண்டி,அங்கிளை தோழமையுடன்தான் முத்தமிடுகிறார் என்று சொன்னாலும் இன்றைய நகரநாகரிக அழுக்குச் சூழலில் குழந்தை எத்தனை பேர்களிடம் பாடுபடும் என்பதை எண்ணிப்பார்க்க முடியுமா?

சமீபத்தில் தன் மகனின் பள்ளிக்குச் சென்ற ஒரு பெண்பதிவர் பள்ளிக்கு வெளியில் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்புவதற்காக மற்ற குழந்தைகளுக்கு முன் சீக்கிரமாக வந்த ஒரு பெண் குழந்தையிடம் ஆட்டோ ஓட்டுனர் செய்த சில்மிஷங்களையும் அவற்றைப் பற்றிய பிரஞ்ஞை பெரிதும் இல்லாமல் அந்தக் குழந்தை தடுமாறியதையும்,சுற்றிலும் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்ததையும் விவரித்திருந்தார்..இத்தகைய நச்சு சூழலில்தான் நாம் வாழ்கிறோம்;இப்போது பதில் சொல்லுங்கள்..முத்தம் பற்றியும் தழுவல்கள் பற்றியும் குழந்தைகளுக்கு அறிவு தேவையா? அல்லது வெளியிடங்களில் வெளியாட்களால் உடல் ரீதீயான தீண்டல்கள் அனுமதிக்கப் படக் கூடாது என்பது நல்ல கற்றுக் கொடுக்கும் முறையா?

விஷயம் என்னவெனில் நாம் வேகமாக மேற்கத்திய சூழலுக்கு மாறிக் கொண்டிருக்கிறோம்;மேற்கத்திய நாகரித்தில் தழுவல்களும் முத்தமும் மிக எளிதாக இருப்பது போல பலதார மணம் அல்லது விரும்பியவருடன் வாழ்தல் போன்ற சித்தாந்தங்களும் எளிமையானவை.நட்பு ரீதீயான தழுவல்களும் முத்தங்களும் வேறானவை என்றாலும் அவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் அறிவு குழந்தைகளுக்கு இருக்குமா?அந்த வேறுபாடுகளை விவரித்து குழந்தைகள் அவற்றைப் புரிந்திருக்கின்றனவா இல்லையா என்று குழம்புவது எளிதா? அல்லது உடல் ரீதியாக வெளியார்கள் சீண்டலை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்துவது நல்லதா?

தழுவல் அல்லது முத்தம் என்பது பெற்றோரிடம் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும் எனபதுதான் சரியான புரிதலாக இருக்கும்.கண்ட வெளியாட்கள் முத்தமிடுகிறேன் பேர்வழி என்று குழந்தைகளை எச்சில் படுத்துவதில் இருந்தாவது குழந்தைகள் தப்பிப்பார்கள்.

இன்னொரு பார்வை இருக்கிறது,தழுவல் மற்றும் முத்தங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் அவற்றின் நீட்சியான மேற்கத்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் எளிதாக மாறும் சூழல் வரும்;அப்போது குழந்தைகளை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?விரைந்து மேற்கத்திய உடை,மேற்கத்திய உணவு,மேற்கத்திய நாகரிக,தோழமை எடிக்வட்ஸ்க்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் நமது தலைமுறை சீக்கிரம் மேற்கத்திய வாழ்வு முறைக்குள்ளும் சிக்கப் போகிறது.அதை வரவேற்கப் போகிறோமா அல்லது எதிர்க்கப் போகிறோமா?

எனது வாதம் பழமைவாதமாகத் தோன்றலாம்;ஆனால் பழமை வாதமல்ல.

நமது பண்டைய தமிழர்கள் வாழ்வு உலகில் எந்த சமூகத்தினரையும் விட அமைந்த நீண்ட நெடிய வாழ்வு முறை.அவர்கள் எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள்.கிமு 2 ம் நூற்றாண்டிலேயே நமது அகப்பாடல்கள் களவுமணத்தைப் பற்றிப் பேசுகின்றன;பிடித்தவர்கள் பழகிப்பார்த்து மனம் இயைந்தால் அதை சட்டபூர்வப்படுத்தும் முகமாக கற்புமணம் கொண்டு வாழ்ந்த வாழ்வு முறை பேசப்படுகிறது.இவ்வாறு ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்த்து சமூக வாழ்வுக்கு எது நல்லது எது அதிக குழப்பமில்லாத வாழ்வைத் தரும் என்று தீர்மாணித்துக் கொண்டு பலகாலப் பரிமாணங்களில் முகிழ்ந்ததுதான் இந்தியக் குடும்ப வாழ்வு முறை.


நமது வாழ்வு முறையில் அனைத்து காரணிகளும் முழுமையாக இருக்கின்றன.அவற்றை முதலில் நாம் தெளிவுற அறிகிறோமா நமது பண்பாட்டுக் கூறுகளை அவற்றின் சரியான நோக்கில் நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோமா என்பதில்தான் அவர்களின் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத வாழ்வு முறையின் கூறுகள் தானே காலத்தால் மாறுபடுகின்றன;அதில் மாற்றங்களை நாம் மேற்கத்திய முறையைப் பார்த்துக் கொண்டு வலிந்து கொண்டு வர முயற்சிக்கும் போது இரு வாழ்க்கை முறைக்குமான முரண்பாட்டுச் சிக்கல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன;எந்தப் பண்பாட்டு,வாழ்வியல் முறையை நம் குழந்தைகளுக்கு நாம் வழங்க விரும்புகிறோம் என்பது இதற்கான தீர்வின் திசையைத் தீர்மானிக்கும் என்பது எனது கருத்து.

அதுவரை குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி !

8 comments:

  1. இந்த பதிவிலுள்ள ஒவ்வொரு கருத்தையும் ஆமோதிக்கிறேன். முற்போக்காளர்கள் என்ற பெயரில் அறிந்தோ அறியாமலோ சமுதாயத்தை சீரழிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். எந்த கலாசாரத்திலும் நல்லவற்றை எடுத்து கொண்டு கெட்டதை தள்ளுவதுதான் பகுத்தறிவுள்ளவர்கள் செய்யும் செயல். கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவது அழிவிற்குதான் இட்டுசெல்லும்.

    ReplyDelete
  2. உங்களின் இந்த பதிவிற்கு நன்றிகள்.

    மோகன் குமார் பின்னூட்டத்தை எடிட் செய்ததை நான் கண்டித்தாலும், இந்த பிரச்சனயை நம் விவாதத்திற்கு, கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு , நான் அவரை பாராட்டுகிறேன், அவருக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

    அந்த நிகழ்ச்சியை நானும் என் மனைவி (என்னை விட மூன்று வயது சிறியவர்) இனைந்து பார்த்து கொண்டு இருந்தோம், அப்போது என் மனைவி சொன்ன வார்த்தைகள் இவை:

    குழந்தைகள் முன்பு பெரியவர்கள் முத்தமிட்டு கொள்ளலாமா, அதுவும் நடு ஹாலில், மேடையில்.

    கண்டிப்பாக இதை நாம் அனுமதிக்க கூடாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக சென்சார் தேவை.
    நீங்கள் பின்னூட்டத்தில் இப்படி கேட்டு இருக்க வேண்டும். மோகன்குமார் அல்லது என் குழந்தைகள் முன்பாக ஒரு இளம் ஜோடியோ , ஒரு கணவன் மனைவியோ முத்தமோ, சில்மிஷங்கலோ செய்ய நம் வீட்டில் அனுமதிப்போமா.

    கண்டிப்பாக என் குழந்தைகள் முன்பு நானோ மற்ற ஜோடியோ முத்தம், சில்மிஷம் செய்ய அனுமதிக்க மாட்டேன். அவ்வளவு ஏன், எனக்கு வயது முப்பது, என் மனைவிக்கு வயது இருபாது எழு. என் பெற்றோருக்கு வயது அறுபது+. இன்றும் என் பெற்றோர் எங்கள் முன்பாக ஒருவரை ஒருவர் தொட்டு கொள்வதோ, கால் வலி கை வலி பொழுது தடவி கொள்வதோ செய்வது கிடையாது.

    இதில் ஒன்றும் பிற்போக்கு தனமோ, பழமை வாதமோ இல்லை. பாக்யராஜின் ஒரு சினிமாவில் வசனம் உண்டு. பாக்யராஜின் தந்தை சொல்வார், என்றாவது ஒரு நாள் எங்கள் படுக்கை அறையில் விளக்கு எரிந்து இரவை கழித்து நீ பார்த்து இருக்கிறாயா என்று.

    நான் அந்த நிகழ்ச்சி குறித்து இன்னும் சற்று மேலேயே செல்கிறேன். சிறு குழந்தைகள் முன்பு காமம் சார்ந்த விளையாட்டுக்கள், முத்தங்கள் மட்டும் அல்ல, தம்பதிகள் விலை உயர்ந்த பொருட்களை பரிசு கொடுப்பதும் கூட தடை செய்ய வேண்டும்.

    சில குழந்தைகள் வறுமை குடும்பத்தில் இருந்து வந்து இருக்கலாம். ஒரு கணவன் தன் மனிவிக்கு வைர மோதிரம் பரிசு அளிக்கும் பொழுது, அந்த குழந்தை, பெற்றோரின் மனம் என்ன பாடு படும்.

    அதுவும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், மதிப்பெண், முடிவு அறிவிக்கும் பொழுது அந்த குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றனர். பல குழந்தைகள் இந்த மாதிரி போட்டிகளால் மன அழுத்தம் அடைந்து அது அவர்களின் கல்வியை கூட பாதிக்கும் அபாயம் உள்ளது.

    அதிக அளவில் போட்டி மனப்பான்மை, சுய நலத்தை ஊக்குவிக்கும் இந்த ரியாலிட்டி ஷோவ்க்கள் கூடிய சீக்கிரமே சலிப்பு அடைந்து விடும், ஏற்கனவே கேரளத்தில் சலிப்பு அடைந்து விட்டது.

    ReplyDelete
  3. ராபின்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    நமது வாழ்வியல் சூழலும் நாம் எந்த வாழ்வியல் சூழலை நமது குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறோம் என்பதிலும்தான் நம் எதிர்வினை அடங்கி இருக்கிறது...

    தழுவலை,முத்தமிடலை அனுமதிக்க முற்படும் நாம்,மேற்கத்திய முறையில் ப்ரீ மாரிட்டல் செக்ஸ் போன்ற விதயங்களுக்கு நமது தலைமுறையினரின் பழக்க வழக்கங்கள் நீட்சி அடையும் போது நம்மால் அதைத் தாங்க முடிவதில்லையல்லாவா?

    ReplyDelete
  4. யாஹூ ராம்ஜி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    உங்களுக்கும் பழமைவாதி முத்திரை' காத்திருக்கிறது :)))

    ReplyDelete
  5. நண்பர் அறிவன் அவர்களே,

    முதலில் ஒன்றை தெளிவு படுத்துகிறேன். இந்த முத்த விஷயத்தில் விஜய் டிவி அப்படி நடந்திருக்க கூடாது என்பதில் நீங்களும் நானும் ஒத்து போகிறோம். நண்பர் வானம்பாடியாரும் சின்ன அம்மணியும் வேறு படுகிறார்கள்.

    Every one is entitiled to have their own opinion. அதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.. அது உங்களை நேரடியாக பாதிக்காத வரையில்.

    நீங்களும் வானம்பாடியாரும் மீண்டும் மீண்டும் கமெண்ட் எழுதிய போதே, நாம் இதை நிறுத்துங்கள் போதும் என எழுதினேன். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த விஷயம் நீண்டு கொண்டு போனது. உங்கள் ஒரே ஒரு கமெண்டை நான் நீக்க காரணம் நீங்கள் சின்ன அம்மணிக்கு எழுதிய பதில் கம்மேண்டில் " புரிதல சொரிதல் என்று பாலகுமாரன் ரேஞசில் கருத்து அளிக்க வேண்டாம்' என்று கூறியிருந்தீர்கள். ஒரு பெண்ணிடம் பேசும் போதே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எழுதும் போது சொரிதல் போன்ற வார்த்தை ( நீங்கள் பாலகுமாரனை மேற்கோள் காடியிருந்தாலும் கூட) ஒரு பெண்ணிடம் பேச பட வேண்டியது இல்லை; அதுவும் எனது ப்ளாகில். இந்த வார்த்தை பிரயோகதிர்க்காக அந்த கம்மேன்ட்டை நீக்க எனக்கு உரிமை உண்டு. தங்களின் இ மெயில் அல்லது தொலை பேசி எண் தெரிந்தால் தொடர்பு கொண்டு தெரிவித்திருப்பேன். தெரியாததால் முடிய வில்லை.

    நிற்க. தாங்கள் போட்ட மற்ற அனைத்து கம்மேண்டுகளையும் அழித்து விட்ட நீங்கள் இந்த பதிவு பற்றி ஒரு பின்னூட்டம் போட்டு வைத்திருப்பது ஏனோ? நான் பார்க்கவா? அதான் பார்த்து விட்டேனே? : இனியும் அந்த கமெண்ட் அங்கு தேவையா ?

    ஒவ்வொருவரும் creative ஆக செய்ய எவ்வளவோ விஷயம் உள்ளது. ஒருவரை ஒருவர் எழுத்தில் தாக்கி கொள்ளாது இருத்தல் நலம்.

    உங்கள் இந்த பதிவிலும் முத்தம் பற்றிய உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். ஆனால் வானம்பாடியார், சின்ன அம்மணி மற்றும் ஏன் மீதான உங்கள் துவேஷம் தேவையற்றது.

    நீங்கள் ஒருவர் மீது கொள்ளும் கோபமும் வெறுப்பும் அவருக்கல்ல கோப படும் நபருக்கே அதிக தீங்கு செய்கிறது என நான் அனுபவத்தில் அறிந்துள்ளேன்.

    ReplyDelete
  6. {உங்கள் இந்த பதிவிலும் முத்தம் பற்றிய உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். ஆனால் வானம்பாடியார், சின்ன அம்மணி மற்றும் ஏன் மீதான உங்கள் துவேஷம் தேவையற்றது.}

    நண்பர் மோகன் குமார்,துவேஷம் என்ற சொல்லை உபயோகப்படுத்தும் அளவுக்கு நான் என்ன சொன்னேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    உங்கள் மீதா ? உங்கள் கருத்தை ஒட்டிப் பாராட்டி வாதிடும் ஒருவருக்கு உங்கள் மீதும் துவேஷம் எப்படி இருக்கும்?

    மேலும் துவேஷம் வெளிப்பட நான் எவரையாவது வசை பாடி இருக்கிறேனா என்ன??

    நான் சொன்ன ஒவ்வொன்றும் கருத்தின் பாற் பட்டதன்றி,தனி மனிதர் பால் பட்டதன்று..அவ்வாறான புரிந்து கொள்ளல் இருந்தால் அது பிழையானது..

    நீங்கள் விரும்பினால் எனது கடைசி கமெண்டையும் அழித்து விடலாம்..நான் சொல்ல விரும்பியதை இங்கே சொல்லிவிட்டேன்..

    உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் வருத்தம் ஏற்பட்டிருப்பினும் வருந்துகிறேன்..நன்றி உங்கள் நீண்ட பத்திக்கு.

    ReplyDelete
  7. மற்றும் மோகன் குமார்,
    நண்பர் வானம்பாடி,சின்ன அம்மணி அவர்கள் மீதும் எனக்கு துவேஷம் ( இந்த வார்த்தையே எனக்கு அதீதமாகப் படுகிறது :)) ஒன்றும் இல்லை.

    அவர்களின் கருத்து சரியானது அல்ல என்பதை விளக்க முயற்சித்தேன்.அவ்வளவே..

    அவர்களின் மீது எந்த வருத்தமுமில்லை..அனைவரும் பதிவுலகின் நண்பர்களே..

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...