குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, March 16, 2008

48.மாநிலங்களவைத் தேர்தல்,சிவக்குமார் மற்றும் திருமந்திரம் - சில செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தலின் தமிழக சூழல் ஒரு ஒன் – டே மாட்ச் போன்றதாக ஊடகங்களால் ஆக்கப்பட்டது.அது மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது.
இந்த விதயத்தில் முதல்வரின் சாணக்கியத் தனமான செயல்பாடு பாமக’வை அதன் இடத்தில் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
ஐந்தாவது இடம் போட்டியிடப்படும்,அதற்கான வேட்பாளர் இ.க.கட்சியிலிருந்து நிறுத்தப் படுவார் என்று அறிவித்ததன் மூலம்,மருத்துவர் ராமதாசுவை அங்குமிங்கும் நகரவொட்டாது நிறுத்திவிட்டார் முதல்வர் முக.பாமக’வுக்கும் அதிமுக’வுக்கும் திரைமறைவு உடன்பாடு இருக்கின்றன என்பது போன்ற செய்திகளை விதைத்தும் ஒன்றும் பயன் இல்லை;இது போன்ற உறுதியை 90'களில் பாமக’வுக்கு முதன் முதலில் 25 இடங்கள் இதுக்கிய சமயத்தில் திமுக தலைவர் கைக்கொண்டிருந்தால் தமிழக அரசியலில் இவ்வளவு சாதிரீதியான அரசியல் கேடுகள் தலைதூக்கியிருந்திருக்காது,ஏதோ இப்போதாவது திமுக’வுக்கு அது புரிந்தால் எதிர்கால தமிழகத்துக்கு அது நல்லது.
ஜெ.யிடமிருந்து ஏதேனும் குறித்தல்கள் வரும் என்று எதிர்பார்த்த ராமதாசுவை ஜெ.கோமாளி போல உணர வைத்திருக்கிறார்;திமுக கூட்டணியிலேயே அடுத்த தேர்தலில் கழற்றி விடக் கூடக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் பாமகா’வை எதற்கு இப்போதே கொம்பு சீவி பெரிய ஆளாக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்;திமுக கூட்டணியிலிருந்து கழற்றி விடப் படும் சூழ்நிலையில் இன்னொரு மதிமுக போலத்தான் பாமக ஜெ’யால் பார்க்கப்படும்.வைகோவாவது சோதனை நேரத்தில் உடன் இருந்தார் என்று ஜெ’யின் good books’ல் இருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன;ஆனால் பச்சோந்தி அரசியலில் சரித்திரம் படைக்கும் மருத்துவர் ஐயாவுக்கு ஜெ’யிடம் என்ன மரியாதை கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தன்னிலை தெளிவாகத் தெரிந்ததால் பாமக இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது. ஆனால் மருத்துவரால் நெடுங்காலம் கத்தி எடுக்காமல் இருக்கமுடியாது,ஏதாவது ராக்கெட்டை சீக்கிரம் விடுவார் என எதிர்பார்க்கலாம் !

************************************

திருமுறை மற்றும் திருமந்திர மாநாடுகள் ஆண்டுதோறும் சில நன்மக்களால் நடத்தப்படுகின்றன.திருமுறைகளில் ஆழ்ந்த தமிழறிஞர்கள்,சான்றோர்கள் சுமார் 250 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டு தங்கள் கட்டுரைகளை வாசித்தளிக்கும்,மூன்று நாள் அமர்வில் நடக்கும் விழா இது.நம்மைப் போன்ற அரைவேக்காடுகள் முற்றிலும் அமர்ந்து கேட்கவே ஒரு தனியான மனப் பக்குவம் வேண்டும்.

இந்த மாநாடு கடந்த இரு வருடங்களாக வாரணாசியிலும்,இவ்வாண்டு சென்னையிலும் நடந்தது.அதைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என் அன்னையின் மூலம் எனக்குக் கிடைத்தது,அவரின் அமர்வும் மாநாடுகளில் இருந்ததால்!
இம்முறை நடந்த மாநாட்டில் சிவகுமார்-அவர் நடிகராகவும் பெரிதும் அறியப்பட்டவர்,இப்போதைய நடிகர் சூர்யாவின் தந்தை-ஒரு பார்வையாளராக வந்து உரையாற்றினார் என்றும்,ஒரு திரை நடிகராக தொழிலில் இருக்கும் அவரின் திருமந்திரம் பற்றிய ஈடுபாடு,அறிவு தன்னை வியக்க வைத்தது என்றும் என் அம்மா கூறினார்.
பொதுவாக உருவு கண்டு எள்ளும் நோக்கோ,முன் தீர்மானத்துடன் எதையும் அணுகும் வழக்கமோ இல்லாத எனக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையாதலால்,அது ஒரு செய்தி அளவில் என்னில் பதிந்தது.

அறியப்பட்ட ஒரு நடிகராக இருக்கும் அவரின் வாழ்வில் பணம் ஓரளவுக்கு அவரின் நிம்மதியான வாழ்க்கைக்கு எளிதாகக் கிடைத்திருக்கும்,அவருக்கான ஓய்வு நேரங்களிலும் ஏதும் குறை இருந்திருக்காது.ஒரு நடிகர் ஒரு மாதச் சம்பளக் காரனைப் போல் நாளின் குறிப்பிட்ட நேரத்தை ஒரு செயலுக்கு ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லாத்தால்,அவருக்கான நேர மேலாணமை ஒரு பிரச்சனையான விதயம் அல்ல;தேவை படிப்பதற்கான,தேடலுக்கான ஈடுபாடு மட்டுமே,அது அவரிடம் இருந்திருக்கிறது,என்ற நோக்கில் பாராட்டப் படவேண்டியவர்.

இந்த நோக்கில் அண்மையில் மறைந்த சுஜாதா,முதல்வர் முக,ஆகியோர் என்னை வியக்க வைப்பவர்கள்.

ஒரு மாதச் சம்பளக்காரனாக தன் கடமைகளைக் குறைவறச் செய்து,ஒரு பரபரப்பான எழுத்தாளராக அத்தளத்திலும் விரைவாக இயங்கிக் கொண்டும் சுஜாதாவுக்குப் தேடிப் படிக்க அவ்வளவு நேரம் கிடைத்தது என்பது வியப்பான ஒரு விதயம்,இந்த ஒரு பார்வையில் சுஜாதாவின் விதய ஞானம்,அவரது பரந்த வாசிப்பினாலேயே ஏற்பட்டது என்பதை நாம் நமக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் ஒன்று !

திமுக அரசில் இல்லாத்போது முக’வுக்காவது நேரம் அதிகம் கிடைக்கலாம்,ஒரு அரசின் முதல்வராகவும் இருந்து கொண்டு அவர் அனைத்து ஏடுகளையும் மேய்ச்சல் பார்வை பார்க்கவும்,தனக்கான திருப்திக்கு எழுதவும் படிக்கவும் நேரம் ஒதுக்க முடிகிறதென்றால்,அவர்களை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

3 comments:

  1. என்ன கலைஞருக்கு வால் பிடிக்கிறீங்க திடீர்னு????

    ReplyDelete
  2. வாங்க அனானி,
    நான் யாருக்கும் வால் பிடிக்கிறதில்லைங்க..
    ஒரு முதல்வரா அவரின் செயல்கள் என் அறிவுக்குப் சரியாப் படாத போது விமர்சிக்கிறேன்;ஒரு மனிதரா அவரின் சாத்னைகளை வியக்கிறேன்,,அவ்வளவுதான்..

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...