குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, March 2, 2008

45.இந்தியாவின் 2008-09 ன் நிதிநிலை அறிக்கை

சமீப இந்தியா அரசியல் சரித்திரத்தின் நிதிநிலை அறிக்கைகளில் சமீப காலங்களாக 1984,1991,1997 வருடங்களுக்கானவை குறிப்பிடப்பட வேண்டியவை.இவற்றை அளித்தவர்கள் வி.பி.சிங்,மன்மோஹன் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர்.
பின்னோக்கிப் பார்க்கையில் சுதந்திர இந்தியாவின் நிதி அமைச்சர்களில் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்,டி.டி.கே.,போன்றோர் மிகவும் சிலாகிக்கப்பட்டவர்கள்.பின்னர் வந்தவர்களில் ஆர்.வி. சிறிது நன்றாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடுவார்கள்.
சமீப காலங்களின் அறியப்பட்ட பொருளாதார நிபுணர்கள் மன்மோஹன்,ப.சிதம்பரம் மற்றும் சுப்ரமண்யன் சுவாமி.
சுப்ரமணியன் சுவாமி இருந்தது ஒரு வருடம் மட்டும்தான் என நினைக்கிறேன்.சில அவசர ஆனால் நீண்டகாலப் பயன்களுக்கான முடிவுகளை அவரும்,சந்திர சேகரும் செய்தார்கள்,பெரிதும் விமர்சிக்கப் பட்டபோதும்.
மன்மோகன் வந்தபிறகு 5 வருடங்கள் நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சென்றபோதும் இருப்பொர்,இல்லாதொருக்கான இடைவெளி அதிகமானது என்பதும் உண்மை.
நவீன பொருளாதார சிந்தனை Inclusive Growth என்ற வார்த்தைப் பிரயோகத்தை அடிக்கடி உபயோகப் படுத்துகிறது;இதன் பொருள் சமூகத்தின் அனைத்து வகுப்பினரும் ஒன்றாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்று சொல்லப்படுவது.ஆனால் வேடிக்கையாக,இன்குளூசிவ் குரோத் என்பதை அடைய வேண்டுமெனில் ஒரு பத்தாண்டுக்காவது நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது நியதி.இது Sustained Growth எனச் சொல்லப்படுவது.
இன்றைய உலக அளவில் 8 சதவீதத்துக்கும் அதற்கும் மேலான குறியீடில் வளர்ச்சி இருப்பது மிகச் சில நாடுகளில்தான்,அதில் இந்தியாவும் சீனாவும் முக்கிய நாடுகள்.
எனவேதான் இந்திய ,சீனச் சந்தைகளை நோக்கி மேற்கத்திய நாடுகள் பாசக்கரம் நீட்டுகின்றன.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக 8 சதவீத அளவில் வளர்ச்சி நிலையாக இருக்கிறது;இது 2014 வரை இந்த நிலையிலேயே இருக்குமெனில்,பெருகும் பொருளாதார வளம் எல்லா வகுப்பையும் அடைந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
முக்கியமாக இந்த வளர் நிலையில் அவ்வப்போது சமூகத்தின்,நாட்டின் பொருளாதாரக் கூறுகளில் நிலவும் கடும் வேறுபாடுகளை அவ்வப்போது நீக்கினால்தான்,எதிர்பார்க்கப் படும் ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அதனையும்,சொல்லவேண்டாது வரப்போகும் தேர்தலையும் மனதில் வைத்து வரையப்பட்டது எனலாம்.
இந்த அறிக்கையில் முக்கியமான இரண்டு விதயங்கள் முக்கியமானாவை:
-சிறு,குறு விவசாயிகளுக்கான கடன்கள் தள்ளுபடி,சுமார் 60000 கோடி ரூபாய்க்கு.
-தனிநபர் வருமான வரி விகிதங்களில் செய்யப்பட்டிருக்கும் bold ஆன முடிவுகள்.

சென்ற ஆண்டில் ப.சி. வரி விகிதங்களைக் குறைத்தபோது நேரடி வரிவசூல் குறியீடை அடையமுடியாது என்றே பார்வையாளர்கள் கருதினார்கள்;ஆனால் நேரடி வரிவசூல் இலக்கை மீறி வசூலானது.ப.சிதம்பரம் இதைப் பற்றிக் கருத்துரைக்கும் போது நியாயமான வரி விகிதங்கள் நிலவினால்,வரி ஏய்ப்பு மெருமளவு குறையும்;tax compliance மேம்படும் என்று கூறினார்.
அவர் கருத்து இந்த வருட வரிவசூலில் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவே சிதம்பரம் அவர்களின் தைரியமான வரி விகிதக் குறைப்பு முடிவுகள்.

அவர் கருத்து வென்றால்,இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும் என நம்பலாம் !

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...