குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, March 23, 2015

188. ஆசியாவின் சிகரம் லீ க்வான் யூ மறைவு


ஆசியாவின் குறிப்பிடத் தக்க அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.லீ க்வான் யூ அவர்கள் இன்று அதிகாலை 3.18 ல் மறைவு.












ஆசியாவின் நிகரற்ற தலைவர்களில் ஒருவரான அவர் மறைவு சிங்கப்பூருக்கும் ஆசியாவிற்கும் பெரிய இழப்பு என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.

ஆசியாவின் மேலாண்மை தொழில் நுட்பத் திறனாளர்கள் இந்த இழப்பின் வீரியம் என்ன என்பதை அறிவார்கள்.

மிகுந்த துயருடன் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். 

2 comments:

  1. மதம் மனிதரை ஆட்டி வைக்காமல் இருக்கும் நாடு. அதற்கு இவரே காரணம். மனிதரை அவனவன் விருப்பபடி விட்டால் எது வேண்டுமானாலும் பேசி மக்கள் நிம்மதியை ஒழிப்பார்கள் என்பதை உணர்ந்து சட்டத்தின் துணை கொண்டு கட்டு படுத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்தினார். கடவுளை விட மக்களுக்கு நல்ல உணவு உடை . உறைவிடம் முக்கியம் என்று உணர்ந்த மாமனிதர்.

    சிங்கையில் நம் இந்திய மக்கள் கோவில்களில் வீணாக்கும் பல பொருள்களை பார்த்தால் மனம் வருந்தும். விழா நாட்களில் வீணாகும் பாலின் அளவு அவ்வளவு அதிகம். கடவுளே பார்த்தால் கதறி அழுவார். முன்னேறிய இங்கும் கல்லின் மேல் பால் மற்றும் உணவு பொருளை கொட்டி வீண் செய்கிறார்கள். தாய் பால் என்றால் இப்படி செய்வார்களா..?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
      கடவுளை விட லீ தத்துவங்களை நம்பியவர் என்று தோன்றுகிறது. கன்பூஷியசின் தத்துவங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்தது தெரிய வருகிறது.
      அனைத்திற்கும் மேல் ஒரு குறைந்த பட்ச சமூகத் தேவைகளை ஒரு சமூகம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி அரசான்மைத் தத்துவத்தை அணுகியவர். ஒரு அளவில் அதை அடைந்த பிறகு இன்னும் இன்னும் இன்னும் சிறப்பாக என்ற நோக்கில் செயல்பட்டவர்.
      இத்தனைக்கும் தனிப்பட்ட அளவில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். அவரது வீட்டில் மொண்டு குளிக்கும் தொட்டி போன்ற குளியலறை அமைப்புதான் 2004 வரை இருந்தது என்ற செய்தியைக் கேட்ட போது கண் கலங்கியது; இத்தனைக்கும் இக் கால கட்டத்தில் பல வீடமைப்பு வசதி வீடுகளில் கூட பாத் டப் அமைப்புகள் இருந்தன !
      அவர் மறைவின் போது அவர் மகன் சரியாகச் சொன்னபடி இன்னொரு லீ இன்னும் பல பத்தாண்டுகளில் தோன்ற வாய்ப்பில்லை.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...