குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, April 14, 2011

131.தேர்தல் 2011- 4 - வாக்குப் பதிவின் பின்...


 

கதாநாயகர் பிரவீண் குமார்

ஒரு வழியாகத் தேர்தல் முடிந்திருக்கிறது.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் ஓட்டுப் போட வசதி செய்திருந்தோம்,ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று பிரவீண் குமார் சொன்னதாக ஒரு செய்திக் குறிப்பு சொன்னது.அப்படி எதுவும் செய்திருந்தார்களா என்ன???

எனக்குத் தெரிந்து டிப்ளமேட்டிக் பெர்சானிலிட்டீஸ் எனப்படும் தூதரக அலுவலில் இருக்கும் தமிழர்கள்,இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் எனில் அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் விதிகள் சொல்கின்றன.இந்த முறை சனநாயகக் கடமையிலிருந்து வழுவியாகி விட்டது.:(

வாக்குப் பதிவு சதவிகிதம் சுமார் 76 சதம் என்கிறது புள்ளி விவரங்கள்.1967 ல் கழகங்கள் கிளப்பிய இந்தி எதிர்ப்பு,மொழிப் போராட்டம் என்பன போன்ற கொதி நிலைக் கால ஒட்டுப் பதிவு(76%) இப்பொழுதும் நடந்திருக்கிறது. அந்த கால கட்டத்தில் நிலவுவது போன்ற மாற்றத்தை வேண்டி நின்ற தகிப்பு வாக்குகளாக மாறியிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதா அல்லது தேர்தல் ஆணையம் கிளப்பிய கறாரான தேர்தல் ஆயத்தங்கள் மக்களை உத்வேகப் படுத்தி இந்த அளவுக்கு வாக்களிக்க வைத்ததா அல்லது ஆணையத்தின் எல்லா கிடிக்கிப் பிடிக்கும் ஈடுகொடுத்து கழகம் இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணிக்குள் பணப் பிரயோகத்தை நடத்திக் காட்டியதற்கு நன்றி செலுத்தும் விதமாக வாக்கு விகிதம் இவ்வளவு அதிகமானதா என்பது தெரியவில்லை.
ஆனால் பொதுவாக ஒன்று உண்மையானது;இம்முறை நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகளுக்கு வந்திருக்கிறார்கள் என்பதும் கிராமப் பகுதிகளில் கூட வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது அல்லது கள்ள ஓட்டுக் கூட்டம் போன்றவை பெருமளவில் நடைபெறவில்லை என்பதும் உண்மை.

கிராமப் புறங்களில் எப்போதும் வாக்களிக்கும் விகிதாசாரம் அதிகமாகவே இருக்கும்.நானும் இந்த தேர்தல் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாது சென்று வாக்களித்திருக்கிறேன்.படித்த,நகர்ப்புறங்களில் வாழும் மத்திய தர வர்க்கத்தினர் பெரும் பகுதிதான் வாக்களிக்கச் செல்வதில்லை,அது இம்முறை மாறியிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம்.

காரணம் கழகத்தின் ‘குடும்ப சாதனை’யாக இருந்தாலும்,பண விநியோகமாக இருந்தாலும்,அல்லது ஆணையத்தின் சுறுசுறுப்பான நடவடிக்கையாக இருந்தாலும் வாக்களித்தது நல்லது !

கறை நல்லது !!!




படித்த நகர்புற நடுத்தர மக்கள் பெருமளவு வாக்களிக்க வந்திருக்கிறார்கள் என்றால் ஆட்சி மாற்றம் தவிர்க்க இயலாலது என்பது வெள்ளிடை மலை.ஆனால் உடனே அதற்காக ஜெ.வுக்கு தனிப் பெரும் பான்மை கிடைத்து விடும் என்று சொல்லி விட முடியாது.

ஜெ.யின் அகந்தையும், ஊழலும் எவரையும் மதிக்காது எடுந்தெறிந்த வகையில் இருக்கும் தனிமனித மனோபாவமும் மாறி விட வில்லை;சொல்லப் போனால் சொத்துக் குவிப்பு வழக்குகள் இன்னும் விசாரணையில் இருக்கின்றன.ஆனால் இவை எல்லாவற்றையும் மீறிய கழகக் குடும்ப’ நடவடிக்கைகள் மட்டுப் படவேண்டும் என்பது நிதர்சனம்.

தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு, பிறிதொரு கூட்டணி மாறுதல்கள் தமிழகத்தின் அரசியல் அணிகளுக்குள் வரும்.மக்களும் இந்த கழிசடை மாற்றங்களுக்குப் பழகி விட்டார்கள்.ஒரு வகையில் இது போன்ற தேர்தலுக்குப் பின்னான அணி மாறுதல்களையும் சமீப காலங்களில் தொடங்கி வைத்த பெருமை,பல தேர்தல் குட்டிக் கரண வேலைகளைச் செய்த மருத்துவர் தமிழ்க் குடி தாங்கியையே சாரும்.

இம்முறையும் தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு அணிகள் மாறும் கேவலம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

காட்சி 1 ல் திமுக 90 க்குக் குறைவான இடங்களும் அதிமுக 120 க்கு ஒட்டிய அல்லது அதை விட அதிகமான இடங்களிலும் வந்தால் ஜெ.ஆட்சியமைப்பது கிட்டத் திட்ட உறுதியானது. அப்போது குடி தாங்கி அன்புச் சகோதரியை நோக்கி மாளா அன்புடன் வருவார் ! வைகோ வுக்கு தேர்தலுக்கு முன்னால் கிடைத்த கிக் விஐயகாந்துக்கு தேர்தலுக்குப் பின்னால் கிடைக்கும்.இந்த சூழல் வந்தால் காங்கிரசின் நிலைப்பாட்டிலும் மாறுதல் ஏற்பட்டு ஜெயை ஆதரிக்கும் நிலை வரலாம்.

காட்சி 2 ல் திமுக வுக்கு 110 அல்லது அதை ஒட்டிய இடங்களும் அதிமுக வுக்கு 100 ஐ ஒட்டிய இடங்களும் ஏற்பட்டால், சிபிஐயின் நாடகக் காட்சிகள் மேலும் நடக்கும்; திமுக|காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை நோக்கி நிலவரத்தைச் செலுத்தும், அந்நிலையிர் முக மீண்டும் முதல்வரானால் அந்த அனுபவம் அவரது வாழ்நாளில் அவரால் மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாக அவரது முதல்வர் நாட்கள் அமையலாம்.தமிழத்திற்கு காரிருள் சூழ்ந்தது என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் !


காட்சி 3 ல் திமுக மற்றும் அதிமுக இரண்டும் 100 எண்ணிக்கைக்குள் இடங்களை வென்றிருந்தால் சொல்லத் தேவையன்றி காங்கிரஸ் மற்றும் தேமுதிக அதிக இடங்களை வென்றிருக்கும்.சீமானின் பிரச்சாரம் மற்றும் பொதுவாக தமிழக இளைஞர்கள் சிலரிடையே காங்கிரசின் நயவஞ்சகம் குறித்த ஆழமான கோபம் தேர்தல்களில் எதிரொலித்திருந்தால்,இந்த சூழல் வர வாழ்ப்பில்லை.ஆனால் ஒரு வேளை இப்படி ஒரு சூழல் வந்தால் விஜயகாந்தைப் பிடிக்க முடியாது.அவரின் பின்னால் காங்கிரசும் கூட அணி திரளும் வாய்ப்பிருக்கிறது.அப்போது மூன்றாவதாக ஒரு சினிமாக் காரரின் தலைமை தமிழகத்திற்கு ஏற்படும்.இது சொல்லிக் கொள்ளும் படி இருக்குமா, அல்லது வியப்பளிக்கும் வகையில் பரவாயில்லை ரகமாக இருக்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

ஆனால் இப்போதைய அணிகள் முடிவுகள் வெளிவந்த பின்னரும் இருப்படியே நீடித்து இருப்பார்கள் என்று நிச்சயமாய் நான் எண்ணவில்லை.இன்னொரு கழைக் கூத்தாடிக் கூத்து காத்திருக்கிறது.

நாங்கள் இந்த அணியில் இருந்து,இன்னாரன்ன கொள்கைகளினால் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றோம் என்று மக்களிடம் வாக்கு கேட்டு விட்டு,தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் சப்சாடாக எதிரணியுடன் போய் சேர்ந்து ஆட்சியமைப்பது ஒரு வகையில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் செயல்.இவ்வகை குரங்குத் தாவல்களைத் தடுக்கும் விதிகளை ஆணையம் தேர்தல் விதிமுறைகளுக்குள் கொண்டு வருவது நல்லது.

நடந்த ஒரு நல்ல விதயம்,தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான அணுகு முறையும்,பிரவீண் குமார் இயன்ற அளவு நேர்மையுடம் தேர்தலை நடத்திக் காட்டியதும்.அவரும் அவரது குழுவும் மிகுந்த பாராட்டுக்குத் தகுதியானவர்கள்.தாத்தாவின் புலம்பல்கள்,மிரட்டல்கள் எதையும் அவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை;இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கலாம் என்ற ஊகம் இருந்தாலும் கூட.(ஏனெனில் குரேஷி ஆணையத்திற்குள் மூன்றாவது ஆணையராக காங்கிரசால் திணிக்கப் பட்ட போது அதை சேஷன் எதிர்த்தார் என்று நினைவு!)

நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.

இந்த தேர்தலில் இந்தக்காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட "கேன்வாஸ்' என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.


தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள்.இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்... சபாஷ்!

-Aknmnt to Dinamalar


தவறான காரணங்களுக்காக என்றாலும் சரியான கண்டிப்புடன் தேர்தல்களை நடத்திய குழு பாராட்டுக்குரியது.

சகாயம் போன்ற நேர்மையான திறனாளர்கள் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்.அவர் போன்ற அதிகாரிகள்தான் இன்றைய தமிழகம் மற்றும் இந்தியாவின் அவசிய,அவசரத் தேவைகள்.எங்காவது ரெக்கார்டுகள் கருவூலப் பிரிவுக்கு தூக்கியடிக்கப்பட்டு எலிகளை எண்ணாமல்,மக்களுக்குப் பயன் தரும் வகையில் இவர் போன்றவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் !
(பார்க்க எனது முந்தைய பதிவு-தேவை திறனாளர்களா அல்லது நேர்மையாளர்களா?)
அமைப்பும் அரசியலும் அதைச் செய்யுமா ?!

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...