குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, August 5, 2012

154.கல்வியா,காமமா-நாளொரு பாடல்-5



தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது


நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல் எண்: 3

முக்கிய சொற்கள்:
தொடங்கும் கால- தொடங்கும் பொழுது
மடம்-அறியாமை
நெடுங்காமம்- நெடிது காமத்தில் திளைத்திருத்தல்
பீழை-துன்பம்
முற்றிழாய் - முடிந்த தொழில்களையுடைய நகைகளை அணிந்திருக்கும் பெண்(அழைப்பு விகுதி)

பாடல் பொருள் :
நகைகளை அணிந்த, வினைகளை முடித்திருக்கும் பெண்ணே, கல்வியானது கற்கத் தொடங்கும் போது துன்பமாக இருப்பது போல் தோன்றினும் பின்பு இன்பம் கொடுக்கும்;அதுவல்லாமலும் அறியாமையை அகற்றி அறிவைக் கொடுக்கும்; ஆனால் காமம் தொடக்கத்தில் தரக் கூடிய சிறிதளவே நிலவும் இன்பத்தைக் கொடுப்பினும்,இன்ப நுகர்ச்சிக்குப் பின்னால் தரக் கூடிய துன்பம் மிகப்  பெரிது.

டிட் பிட்ஸ்:

  • கல்வி கற்காது,காதல்,காமம் என்று பொழுதைப் போக்கும் வழக்கம் எக்காலத்திலும் இருந்திருப்பதை இப்பாடல் சொல்கிறது. :)
  • காமத்திலும் காதலிலும் இன்புற்று கல்வியை மறப்பவர்களுக்கு,காமத்தை எடுத்துக் காட்டி கல்வியை வலியுறுத்தும் விதமாக உள்ள பாடல்.
  • கல்வி கல்லாது,திருமணத்தை நாடும் பெண் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது இந்தப் பாடலின் விளிப்பு.
  • அறியாமை(மடம்) நீங்கவே அதுனுள்ளிருந்து அறிவு வெளிப்பட்டு ஒளிவீசும் என்ற குறிப்பையும் தருகிறது.




5  |  365

2 comments:

  1. அருமை... நன்றி சார்...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றியும் வாழ்த்துக்களும் தனபாலன் சார்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...