குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, January 11, 2010

113.தமிழில் பாடுவது கேவலமா?

தமிழின் தொன்மையில் இசைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு;இன்னும் சொல்லப் போனால் தமிழ் மொழியை இயல்,இசை,நாடகம் என்று அகன்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டு அந்தந்தப் பிரிவுகளில் மொழி வளம் வளர பல ஆக்கங்களை இயற்றி செழித்த மொழி தமிழ்.

உலகின் முதல் இசைக் கருவிகளில் ஒன்றாக முடியும் என்று எளிதாக வரலாற்றுச் சான்றுகளின் மூலம் நிலைநிறுத்தக் கூடிய சில இசைக் கருவிகள் தமிழ் நாட்டில் தமிழ் மொழியாளர்களால் உருவாக்கப்பட்டவை.(குழல்,யாழ்..)அது மட்டுமல்ல அவை தமிழுக்கே உரிய சிறப்பான இசைக்கருவிகள் என்று எத்தலைமுறைக்கும் புரியும் வண்ணம் அக்கருவிகளுக்கு மொழிக்கேயுரிய சிறப்பான ஓசையை நினைவுறுத்தும் பெயரை விளித்து மகிழ்ந்தவர்கள் தமிழின் இசை வாணர்கள்.

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு என்ன என்பதறியாமலோ அல்லது இன்று கர்நாடக இசை என்ற என்ற பெயரில் வழக்கப்படும் இசைக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற கருத்தாக்கதினாலோ பல இளைய தலைமுறையினர் இன்றைய சாஸ்திரீய சங்கீதமான 'கர்நாடக' சங்கீதம் தமிழர்களுக்குத் தொடர்பற்றது என்றும்,இன்று பெருமளவு அதைப் பாடுபவர்களின் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க இசையே எள்ளுவதுமாக தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகள் வியர்த்தமாகிப் போயின;இன்றைய இளைய தலைமுறையிலும் பண்பட்ட இசையை வளர்ப்பவர்கள் அல்லது அதைக் கற்றுத் தெளிந்து பாவனையில் வைத்திருப்பவர்கள் எப்போதும் அதைப் பாடிக்கொண்டு வந்திருப்பவர்களே!

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு பற்றிய இரண்டு பத்திகளை முன்னரே நான் எழுதியிருக்கிறேன்;அதன் பின்னூட்டங்களில் கூட என் நண்பர்கள் நான் துவேஷம் கொண்டு சில கருத்துகளை எழுதி இருப்பதாக கருத்து அறிவித்தார்கள்.அது அப்படி அல்ல என்று நான் விளக்கம் அளித்தேன்;நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்றும் விளக்கினேன்.அவற்றிற்கான காரணங்கள் இன்றும் இப்போதும் இருக்கின்றன என்பதை நிறுவுகிறது தினமணியின் தலையங்கம் ஒன்று.

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​


73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந ​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​

பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
-தினமணிக்கு நன்றியுடன்-

பொதுவான மக்கள் இன்னும் விழிப்படையவில்லை;சமூகத் துவேஷத்தை ஊக்குவிக்கும் அரசியலாளர்களோ இன்றும் வேறு ஏதும் காரணிகள் இல்லாத நேரத்தல் 'அரசியில் பிழைக்க' கையில் எடுக்கும் ஆயுதம் பழம் பஞ்சாங்கம்தான்!ஆனால் அவர்களின் குழந்தைகள் மணம் புரிவது அவர்கள் காலமுழுதும் நிந்திக்கும் வகுப்பினரையே என்பது சாதாரண மக்களுக்கு நினைவில் இருக்காது எனபதுதான் ஒரு முரண்.

இத்தகைய சூழலில் மேற்கண்ட தலையங்கத்தில் குறிக்கப்பட்ட தீர்வையே நான் என் முந்தைய பதிவுகளிலும் முன்வைத்தேன்;அதாவது பொது அரங்கங்களில் பாடும்போது தமிழிழ்தான் பாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் எந்தமொழிக் கீர்த்தனைகளை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்தாலொழிய பாடகர்களின் மனோபாவம் மாறுவது கடினம்.

இதற்கு நண்பர்கள் லக்ஷமி நரசிம்மன், கமகம் லலிதா ராம் ஆகியோர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

8 comments:

  1. அறிவன்,


    பத்திரிக்கைகளுக்கு தமிழ் இசை பற்றி தலையங்கம் எழுதுவது ஒரு வருடாந்திர சடங்காகிவிட்டது. (திவசம் போல).

    இவ்வளவு நீட்டி முழக்கும் தினமணி, ஏன் ஒரு தமிழிசைச் சங்க கச்சேரியைப் பற்றி கூட விமர்சனம் செய்யவில்லை?

    தெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்று ஆசிரியர் எண்ணுகிறாரா?

    இந்த டிசம்பரில், அநேக இடங்களில் நிறைய தமிழ்ப் பாடல்களும் ஒலித்தன.

    தமிழில் பாட வேண்டுகோள் வேண்டாம். தமிழில் பாடினால் ஒரு குறைந்த பட்ச புன்னகையாவது பூக்கலாமல்லவா?

    நான் செல்லும் கச்சேரிகளில் தமிழ்ல் பாடப்படும் பாடல்களைப் பாடியதற்காக பிரத்யேகமாக ஒரு வரி நிச்சயம் எழுதுவேன். இது ஒரு தமிழ் விமர்சகனின் கடைமை என்றே நான் நினைக்கிறேன்.

    பாடகர்களைக் குற்றம் சொல்ல எந்தத் தகுதியும் பத்திரிக்கைகளுக்கு இல்லை என்பதே என் எண்ணம்.

    இதைப் பற்றி விரிவாக முன்னமே இங்கு எழுதி இருக்கிறேன்: http://carnaticmusicreview.wordpress.com/2009/11/30/december-music-festival-a-curtain-raiser/

    ReplyDelete
  2. {இவ்வளவு நீட்டி முழக்கும் தினமணி, ஏன் ஒரு தமிழிசைச் சங்க கச்சேரியைப் பற்றி கூட விமர்சனம் செய்யவில்லை?

    தெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்று ஆசிரியர் எண்ணுகிறாரா?

    இந்த டிசம்பரில், அநேக இடங்களில் நிறைய தமிழ்ப் பாடல்களும் ஒலித்தன.
    }

    தினமணியைப் பெரும்பாலும் வாசிக்கும் ஒருவனாகச் சொல்கிறேன்,ஞாயிறு மலர்,கலைச் சோலை,கதிர் போன்ற பல தினமணி வெளியீடுகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டால் அதை சுட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,நான் படித்த வரை.

    தெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்பது தினமணி ஆசிரியரின் எண்ணம் இல்லை;ஆனால் சொல்லப்போனால் பாடகர்களின் எண்ணமாக இருக்கிறது.

    தினமணி ஆசிரியர் சுட்டுவது வைசி வெர்சா..தமிழ்ப்பாடல்களைப் பாடுவதன் மூலம் நல்ல சங்கீத்ததை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்கிறார் ! என் கருத்தும் அதுவே !

    இன்னொரு விதயமும் சுட்ட விரும்புகிறேன்,சிங்கையில் அருணா சாயிராம் கச்சேரி நடைபெற்றது.30 டாலர் கட்டணத்தில் போய் அமர்ந்தால்,இரண்டரை மணி நேரக் கச்சேரியில் மொத்தம் பாடிய 16 பாடல்களில் 2 பாடல்கள் தமிழில் பாடினார் ! நியாயமாக இந்த விகிதம் தலைகீழாக இருக்க வேண்டும் !(14 தமிழ்,2 தெலுங்கு)

    தமிழகத்தில் நடக்கும் கச்சேரிகளில்,சபாக்கள் தமிழில்தான் பெரும்பான்மையான பாடல்கள் பாட வேண்டும் என்ற கட்டாயம் விதிப்பதில் என்ன தவறு?

    நாதசுவர சக்ரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஒரு சமயம் ஒரு தமிழ்ப்பாடலை வாசித்து,வீதியில் ஒரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் ஆஹாகாரத்துக்கு பெரிதும் மகிழ்ந்து தன் அவரைப் பெரிதும் சிலாகித்துப் பாராட்டிய நிகழ்ச்சியை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

    நல்ல தமிழில் அமர்ந்த பாடல்களைப் பாடும் போது உயர்ந்த ரசனைகள் சாதாரண மக்களுக்கும் எளிதில் கடத்தப்படும் அல்லவா? அதைப் பாடகர்கள் செய்வதை எது அல்லது யார் தடுக்கிறார்கள்??????

    ReplyDelete
  3. மற்றபடி படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி..எனது பக்கத்திற்கும் நல்வரவு..

    ReplyDelete
  4. ராம்,உங்கள் கருத்தை தினமணி திரு.வைத்தியநாதனுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறேன்...அவரது கருத்தை வேண்டியிருக்கிறேன்.
    பதில் வருகிறதா என்று பார்க்கலாம்.

    ReplyDelete
  5. Thanks for sharing. 2 days back Dinamani has written an article about Tevaaram, Tiruvaasagam to, and the need to support & encourage ODHUVAAR MOORTHIKAL.

    Makkal TV only telecasts few programmes about tamil music but we do not have time to watc because we are busy with Maan aada mayil aada, anu alavu bayam illai neelimaa raani.


    But one way we should salute to Dinamani, because Dinamani is the only tamil newspaper which devoted every day 1 page for chennai book exhibition.

    ReplyDelete
  6. நன்றி திரு குப்பன்.

    ராம்'க்கும் அதைத்தான் தெரிவித்திருந்தேன்;இயன்ற அளவு தமிழ் நிகழ்வுகளில் தினமணி கருத்து செலுத்துவதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. அறிவன்,

    மார்கழி இசை விழாவில், தமிழ் இசைக் கச்சேரிக்கு ஏண் தினமணி முக்கியம் தரவில்லை என்பதுதான் என் கேள்வி.

    நீங்கள் எழுப்பியிருக்கும் விஷயம் அரதப் பழவு. பல முறை பேசியாகிவிட்டது. மீண்டும் எழுத அலுப்பாக இருக்கிறது.

    >>>>>நாதசுவர சக்ரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை <<<<

    இப்படி இருத்தர் இருக்காறா?

    எனக்குத் தெரிந்த மட்டில் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின் வாசிப்பார். ராஜரத்தினம் பிள்ளைதான் நாதஸ்வர சக்ரவர்த்தி.

    >>>>>>ஒரு சமயம் ஒரு தமிழ்ப்பாடலை வாசித்து,வீதியில் ஒரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் ஆஹாகாரத்துக்கு பெரிதும் மகிழ்ந்து தன் அவரைப் பெரிதும் சிலாகித்துப் பாராட்டிய நிகழ்ச்சியை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
    <<<<<

    இந்தச் செய்தியை எங்கு படித்தீர்கள்? எனக்குத் தெரிந்த வரை, ஒரு அரிய பிரயோகத்தை வாசித்தவுடன், விளக்கு சுமந்து வந்த தொழிலாளி ஆஹா என்றாராம். அதைத்தான் ராஜரத்தினம் பிள்ளை சிலாகித்து உள்ளார்.

    அறிவன், தமிழ்ல்தான் பாட வேண்டும் என்று கட்டாயமாக ரூல் போட்டால் தமிழிசை வளராது.

    தமிழிசைக்காக மட்டும் நடக்கும் கச்சேரிகளில் அரங்கு நிரம்பி வழிய வேண்டும். வருடா வருடம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடக்கும் தமிழிசை விழாவில் சொர்ப்பமானவர்களே கேட்க வருகிறார்கள். இந்த வருடம் கலாரஸனா தமிழ் இசை கச்சேரிகள் நடத்தியது. எதை வேண்டுமானாலும் பாடலாம் என்ற கச்சேரிகளும் அதே அரங்கில் நடைபெற்ரன.

    இரண்டாவதாக சொன்ன கச்சேரிகளுக்கு ஏகக் கூட்டம். தமிழிசை கச்சேரிகளுக்கு பாடகரின் குடும்பத்தாரைத் தவிர ஆளேயில்லை. நான் அம்ருதா வெங்கடேஷ் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். மொத்தம் பத்து பேர் இருந்தால் அதிகம் என்ற நிலை.

    குற்றம் பாடகரிடமா? அவர் தம்ழில் பாடியது தவறா?

    இந்தத் தமிழ் இசை விழா பற்றி, ஒரு கட்டுரையையாவது எந்தப் பத்திரிக்கையாவது எழுதியதா?

    நிறைய எழுதலாம். எழுதி என்ன ஆகப் போகிறது?

    ReplyDelete
  8. {குற்றம் பாடகரிடமா? அவர் தம்ழில் பாடியது தவறா?}

    சரியான நிலவரம் ஒரு கச்சேரிக்கானதா அல்லது எல்லா தமிழிசை விழாக்களுக்கும் இதுதான் நிலவரமா என்பது தெரியவில்லை.

    ஆனால் இதுதான் உண்மையான நிலவரம் என்றால் சுமார்40 ஆண்டுகளாக தமிழிசை வளர வேண்டும் என்று கல்கி முதல் ராஜாசர் வரை இவ்வளவு முயற்சி ஏன் எடுக்க வேண்டும் என்பதற்குப் பதில் என்ன?

    தினமணியின் சார்பில் ஏதாவது சொல்கிறார்களா பார்ப்போம்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...