குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, January 1, 2010

112.குறுந்தொகை'கள்-01/01/2010

வலைப்பக்கங்களில் இப்போது அதிகம் எழுதித்

தள்ளப்படும் வஸ்துவாக மாறிக் கொண்டிருப்பது

கவிதை.கவிதைகள் என்று எழுதப்பட்டிருக்கும் பல

பத்திகளைப் படிக்கும் போது தொண்டை ஞமஞம

என்று ஒரு புதுவித அவஸ்தை உணர்ச்சி பீறிடும்

வகையான புதுக்கவிதைகள் அதிகம்

எழுதப்படுகின்றன.எந்தவிதமான கவிதை அனுபவமோ,நிகழ்வு

நெகிழ்ச்சியோ விவரிக்காத இவ்வகைப் பத்திகளை

மாய்ந்த மாய்ந்து எழுதும் அன்பர்கள் எல்லாம்

பேருந்து நிலையங்களில் விற்கப்படும் கவிதை

ஊக்கியான குஸ்கான் கவிதை லேகியம் மாதிரி

ஏதாவது வாங்கி மகிழ்ந்திருப்பார்களா என்று

தெரியவில்லை.இவ்வகைக் கவிதைப் பத்திகளை எழுதுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல;உங்களுக்குப் சிந்தையில் பீறிடும் எண்ணங்களை ஒரு பத்தியாக முதலில் எழுத வேண்டியது,பின்னர் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு அப்பால் எலிக்குட்டியை வைத்து ஒரு எண்டர்'தட்டு தட்ட வேண்டியது...இவ்வகை முயற்சியை சளைக்காமல் முழுப்பத்திக்கும் நீட்டினால் தீர்ந்தது விஷயம்,கவிதை ரெடி!சமீபத்தில் வலையுலகில் எண்டர் கவிதைகள் என்று ஒரு பதம் வழக்கில் இருக்கிறது;அது இவ்வகைக் கவிதைகளைத்தான் சுட்டுகிறதோ என்று ஒரு சம்சயம் எனக்கிருக்கிறது.

()


விஜய் தொலைக்காட்சியில் வரும் சூப்பர் சிங்கர்/ஜூனியர் நிகழ்ச்சி தவற விடக் கூடாத ஒரு நிகழ்ச்சியாக சமீப காலங்களில் மாறிவருகிறது என்று நான் ஏற்கனவே சில பத்திகளில் சொல்லியிருக்கிறேன்;இந்த நிகழ்ச்சி சமீப நாட்களில் சேர நாட்டுப் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப் படுகிறதோ என்று ஒரு நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை;நீதிபதிகளில் இருந்து தொகுப்பாளரிலிருந்து,பாடுபவர்கள் வரை பெரும்பான்மையினர்கள் மலையாள நண்பர்களாக இருப்பதன் ரகசியம் அல்லது அல்லது அது அல்லாத தன்மை என்ன என்பது விளங்கவில்லை.

ஆனாலும் சிறு குழந்தைகள் என்னமாய்ப் பாடுகிறார்கள் என்பதை பார்த்தால்தான் நம்ப இயலும் போலிருக்கிறது;ஒரு தொழில்முறை பாடகருக்கிருக்கும் பெர்பெஃக்ஷன் 12 வயது குழந்தைகளின் பாடல்களில் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமது தலைமுறைக்கும் அடுத்த இளைய தலைமுறைக்குமான திறன்/ஊக்கத்தில் இருக்கும் வேறுபாடு வியப்பான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதிலும் ஒரு லட்ச ரூபாய்க்காக சிறுவர் சிறுமியர் போட்டியிட்ட சமீபத்திய-இது உண்மையிலேயே ஒரு வாரத்துக்குள்ளான சமீபத்திய'-எபிசோடில் அல்கா மற்றும் ரோஷன் ஆகியோர் பாடிய -அதிலும் கடைசி சுற்றை-சுற்றை பார்க்க/கேட்க வாய்ப்பில்லாதவர்கள் அபாக்கியவான்கள்!

()


சென்ற 2009 மற்றும் ஒரு வருடம் என்ற அளவில் பலருக்கு இருந்தாலும்,இலங்கையில் நடந்த நிகழ்வுகள் மாறாத வடுவாக தமிழர்களின் துயர நினைவில் பதித்துவிட்டுச் சென்ற ஆண்டு.அதிலும் புலிகளின் தலைவர் இறந்திருக்கலாம் எனில் அது எவ்வாறு நடந்தது என்பதை காட்டும் ஒரு ஒளித்துண்டு இணையத்தில் வந்தது.ஒரு மனிதனின் மீதான வன்முறை எவ்வளவு கோரமாக வெளிப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற எண்ணத்தின் எல்லைகளை மீறிய அந்தச் செயல்கள் எந்த ஒரு நாட்டின் ராணுவமும் செய்யக்கூடிய செயல்களல்ல.

ஒட்டியும் வெட்டியும் பல விவாதங்களும்,பல தியரிகளுக்கான புத்தகங்களும் வெளிவரும் இந்த நேரத்தில் ஒரு உண்மை மட்டும் முகத்தில் அறைகிறது;புலிகள் மற்றும் பிரபாகரனின் இருப்பு மறைந்த சூழலில் இலங்கையில் தமிழர்கள் நீரிலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்கள் போல!கழுகுகளோ அல்லது காக்கைகளோ கொத்துவதற்கு எந்த தடையும் இல்லை;அதைத் தட்டிக் கேட்கவும் எந்த நாதியும் இல்லை.

இந்திய தமிழக அரசுகள் ?

தூ வென காறித் துப்பினாலும் சுரணையற்ற பதவி வெறியர்களின் இருப்பு எங்கும் இருப்பது பற்றிய பொருட்படுத்தலில்லாத மக்களும்,மக்களுக்காக அரசு என்பதைப் காற்றில் பறக்க விட்டு விட்டு ஒட்டுக்களை பணத்தை எறிந்து வாங்கி விட முடியும் என்று நம்பும்,நடத்திக் காட்டும் அரசும் வழமையாகி விடுமோ என்ற பயம் வருகிறது.

2009 க்கான இனிமையான மீள்நினைவு எவருக்கும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.


()


ஜெமோ,மனுஷ்யபுத்திரன்,சாரு தொடர்பான சில நிந்தனை/எதிர் நிந்தனைகள் இணையத்தில் இறைத்து விடப்பட்டிருக்கின்றன.பெரிய மனிதர்களாக வேடம் போடுபவர்களின் சின்னத் தனங்கள் வெளிவரும் போது பொறுக்க முடியாத நாற்றத்தைக் கிளப்பும் என்பதற்கான சான்றுகளே இவை என்று சொல்வதைத் தவிர ஒன்றும் இல்லை.

ஆனால் கவிதைக்கான பார்வை பற்றிய ஜெமோவின் பார்வை பற்றிய ஒரு விளக்கப் பத்தி என்னைக் கவர்ந்தது.கொஞ்சம் புண்-நவீனத்துவமாக இருந்தாலும்!

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...