குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, March 19, 2009

99.குறுந்'தொகைகள்-19-03-2009

கோககோலா நிறுவனம் சீனாவின் புகழ்பெற்ற பழரச தயாரிப்பு நிறுவனமான ஹூயுவான்-Huiyuan-நிறுவனத்தை சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முயற்சித்தது.


இந்த முயற்சியை சீனாவின் வர்த்தக அமைச்சகம் மோனோபாலி தடைச்சட்டத்தை பிரயோகித்து தடை செய்து விட்டது நேற்றைய செய்திகளின் படி.இது மேற்குலகத்திற்கு முதுகுத்தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு.ஏனெனில் கோக் நிறுவனத்தின் தரப்பில் இந்த தடையை எவரும் எதிர்பார்க்க வில்லை போலிருக்கிறது.


இந்த ஒப்பந்தம் முடிவாகி இருந்தால் சீனாவின் பானங்கள் சந்தையின் 40 சதவீத்தை கோக் நிறுவனம் கட்டுப்படுத்தி இருக்கக்கூடும்.இந்த தடையின் மூலம் சீனா தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது.

கோக், ஹீயுவானை வாங்கி இருந்தால் சீனாவில் பழரச மார்க்கெட்டில் கோக் வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.அது மட்டுமின்றி கோக் அந்த ஒரு பழரச நிறுவனத்துடன் நின்றிருக்காது.அந்த முயற்சியை அனுமதிக்காததன் மூலம் தன் நாட்டின் குடிகளுக்கு பலவித தேர்வுகளுக்கு வாய்ப்பை நிலைநிறுத்தி இருக்கிறது சீனா.


இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான நோக்கில் மட்டுமன்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்;அந்த வகையில் சீனாவின் செயல் மெச்சப்பட்டாலும்,இதே வகையான சீனாவின் அயல்நாட்டு நிறுவன கையகப் படுத்தும் முயற்சிகளிலும் மற்ற நாடுகளும் இதே நிலையையே எடுக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.


இதனுடன் இந்தியாவில் 90 களில் கோக் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பு நோக்கினால் காணாமல் போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.


பிரான்ஸின் டாணோன்-Danone-நிறுவனத்தை கையகப்படுத்த கோக் செய்த முயற்சிகளும் இவ்வாறே நிறுத்தப்பட்டதும் நினைவு கொள்ளத் தக்கது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விதயங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மத்தியிலும் சீனா எச்சரிக்கையாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்காக அமெரிக்கா கோபப் படலாம்,ஆனால் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது.சென்ற மாதத்திலேயே அமெரிக்க பணப்பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டில் இனி கவனம் வைக்கப் படும் என்று சீனா அறிவித்தது.ஒருவேளை அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கான ஆப்பு பெரிதாக அடிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன;ஏனெனில் ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை-capital flow deficit-இருக்கும் நிலையில்,அமெரிக்கப் பணப் பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்யும் இரு நாடுகளில் ஒன்றான சீனாவைப் பொருளாதார ரீதியாக பகைத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா,இந்தக் காரணங்களால்தான் ஆசியாவில் ராணுவ ரீதியாக பலமான நாடாக இந்தியா இருப்பது அவசியம் என்று அணு ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு உதவுவது போல போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.....


0 0 0


இலங்கை ஜெயராஜ் அவர்களின் கம்ப இராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி பதிவர் கோவி கண்ணன் பதிவிட்டிருந்தார்.கடைசி நாளாயிருப்பினும் நேற்று செல்ல முயன்றும் முடியாது போனது.


கம்பன் கவிகளின் ரசவாதத்தை பலரும் ஆய்ந்து நம் போன்றவர்கள் அருந்தி(வாசித்து) மகிழ வழங்கியிருக்கிறார்கள்.தமிழகத்தில் ஒரு அழகான அறிஞர்கள் வரிசையே இந்த இணையற்ற செயலில் ஈடுபட்டு தாமும் தமிழாய்ந்து மகிழ்ந்து நம்மையும் மகிழ்வித்தார்கள்.


டி.கே.சி,ம.பொ.சி,போன்றவர்கள் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் பின்னாட்களில் அறிஞர் அ.ச.ஞா அவர்களால் புதிய நிலைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.அவரது பன்முக ஆய்வு நோக்கும்,கவிப் பார்வையும் நிரம்பிய நூல்கள்-சொற்பொழிவுகள்,இன்று நாம் ஒரு தகவல் தொழில் நுட்பத்தில் கடினமான ஒரு ரிப்போர்ட்டை வாடிக்கையாளர் கேட்ட விதம் போல திருப்தியுடன் வடிவமைத்துக் கொடுத்தால் கிடைக்கும் இன்பத்தை அளிக்க வல்லன.


இஸ்மாயில் போன்ற ஜனரஞ்சகமானவர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் அ.ச.ஞா போன்றவர்களின் முன்னர் சூரியனின் முன்னர் விடி விளக்குப் போலத்தான் தோன்றினார்கள்.


திரு.ஜெயராஜ் அவர்கள் கடல் தாண்டிய நாட்டில் அறிஞர் அ.ச.ஞா அவர்களின் மரபில்-school of thought-வந்தவர்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய ஒரு புத்தகம் அழியா அழகு என்று நினைக்கிறேன்,கம்பனின் அழகியல் விரிவுரைகளில் ஒரு நல்ல தேர்ந்த முயற்சி.


இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதை அறியும் நண்பர்கள் சிறிது முன்கூட்டியே அறிவித்தால் உபயோகமாயிருக்கும்.


ஒரு அழகிய தமிழ் மாலையைத் தொலைத்த வருத்தம் இன்னும் இருக்கிறது...


0 0 0


நடிகர் ராதாரவி திரும்பவும் திமுக வில் ஐக்கியமாகியிருக்கிறார்...

தூ!!!

3 comments:

  1. குறுந் தொகைகள் பெருந்தொகைக்கான கனம் தலைவரே..

    கடைசி வரி.. நச்

    ReplyDelete
  2. வாங்க நர்சிம் சார்..

    வாசிப்புக்கும் வார்த்தைகளுக்கும் நன்னி.

    ReplyDelete
  3. //இதனுடன் இந்தியாவில் 90 களில் கோக் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பு நோக்கினால் காணாமல் போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.//

    பிராண்டுகள் கானாமல் போவது ஒருபுறம். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தனியார் கம்பெனிகளில் கணிசமான அளவு ஷேர்களையும் வெளி நாட்டு முதலீட்டு கம்பெனிகள் வாங்கியுள்ளனர். தற்போதைய நிதி நெருக்கடியினால் அது சிறிது குறைந்துள்ளது. ஆனால் தற்போது அமெரிக்க அரசாங்கம் பல பில்லியன் டாலர் பணத்தை வட்டியில்லா கடனாக அமெரிக்க நிதி நிறுவனக்களுக்கு கொடுத்துள்ளது. அந்த பணத்தை கொண்டு அன்னிறுவனங்கள் மிக வேகமாக இந்திய நிறுவவங்களின் பங்குகளை வாங்க சாத்தியம் உள்ளது

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...