குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, September 12, 2008

***** 76.ஒரு நடிகரின் பேட்டி

ஒரு பேட்டி :

''னக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாம நான் நாடகத்திற்குப் போகமாட் டேன். எல்லோரும் என்னைப் 'பொல்லாதவன், ரௌடி, அநாகரிகப் பயல்'னு நினைச்சுக் கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது சௌகரியமாயிருக்கு. என்னைப் பார்க்கப் பயந்துகிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்றதில்லே. அதனால என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியா இருக்கேன்.''


''தோட்டமா?''


''ஆமா... இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவுது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே, எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன். அங்கே காய்கறியெல்லாம் போடப் போறேன். மாடுங்க வேற வளர்க் கிறேன். காலையிலே, நாலரைக் கெல்லாம் எழுந்து அங்கே போயிடு வேன். கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வேலி போடறது... இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ... சம் பாதிச்சாச்சு. வயசோ ஐம்பத்தாறு ஆவுது. இனிமே குடும்பம், கொழந் தைங்கன்னு நினைக்கத் தோணுது. விவசாயத்திலே புத்தி போவுது.


இதுக்கு நடுவுல யாராவது வந்து கூப்பிட்டா, போயி நடிக்கிறேன். அவ்வளவுதான்! நான் ஒருத்த ரையும் போய்ப் பார்க்கிறதில்லே; சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லே. மத்தவங்க மாதிரி இவ னைப் போடாதே, அவளோட நடிக்கமாட்டேன்னு கண்டிஷ னெல்லாம் போடறதும் கிடை யாது!''



''அந்தக் காலத்திலே என்னை, 'டக்ளஸ் பார்ப்பாங்ஸ்'னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங் களையெல்லாம் ஒண்ணு விடாம பார்ப்பேன். அவர் மாதிரி 'ஸ்டண்ட் வேலை' செய்யோ ணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிறபோது, பூந்தமல்லி குருடர் பள்ளிக்கூடத்தின் மாடி யிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு! இப்போ 'ட்யூப்' (Dupe) வெச்சு 'ஸ்டண்ட்' செய்ய றாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் 'குதிடா'ன் னாரு. குதிச்சுட்டேன்!''


''அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?''


'' அதெல்லாம் கெட்டிக்காரங்க, க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க. கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம், மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி.ஆர்.சுந்தரத்திற்கும் எனக்கும் சின்ன தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோடு வாழ முடியாதுன்னு தெரிஞ்சது. இந்தச் சினிமாத் தொழிலே வாணாம்னு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது 'இரத்தக் கண்ணீர்' சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிறபோது என்னை வந்து கூப்பிட்டாங்க. லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன் னேன். கொடுத்தாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.''


''அரசியல்லே உங்களுக்கு எப்படிச் சம்பந்தம் ஏற்பட்டது?''


''நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக் கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா, ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஓடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது! ஒரு சமயம், நான் கொட்டகை வாடகை கொடுக்கலேனு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. 'இவனும் நம்ம வேலையைத்தான் செய் யறான்'னு ஓப்பனா மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு.''


''தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?''


''தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா. 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்? ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப்-பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்-களா போட்டு நல்ல கதைங் களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?''


''சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடை யாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதுக்கு, 'இந்தத் தொழில்லே சம்பாதிச்சுக்கிட்டே அப்படிப் பேசு வது முறையா?'ன்னு சில பேர் ஆத்திரப்பட்டாங்களே..?''


''ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிற வனுக்குத்தான் அதிலுள்ள தீமை யெல்லாம் தெரியும். அவன்தான் 'அதாரிட்டி'யோட பேச முடியும் அதுலேயே இருந்துகிட்டு அதைத் திருத்தறவன்தான் தைரியசாலி!"

இப்போது மீண்டும் நான் :

மேற்கண்ட பேட்டி திரு.எம்.ஆர்.ராதா அவர்களிடமிருந்து 60 களில் எடுக்கப்பட்ட ஒன்று.

சென்னை, சிந்தாதிரிப்பேட் டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனி கம்பெனி ஏற்படுத்திக் கொன்டவர் எம்.ஆர். ராதா.


நடிகர்கள் தங்களை கடவுளர்களுக்கு அடுத்தபடியான மக்களை உய்விக்கும் அவதாரங்களாக எண்ணிக் கொள்ளாத காலத்தைச் சேர்ந்த நடிகர்ளில் ஒருவர் அவர்.


இத்தனைக்கும் satirism என்ற விமர்சன வகை நடிப்பு மூலமே நடித்து,திரையுலகில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சமமான புகழுடன் விளங்கியவர் ராதா.


திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைகின்றன என்ற எண்ணமெல்லாம் சிறிதுமின்றி நாடகங்களில் சக்கைப்போடு போட்டவர்.


மக்களுக்கு திரைப்படங்களுக்கு இணையாக நாடகங்கள் மேலும் தீராத காதல் இருந்தது;நாடக உலகமும் பெரும் ஜாம்பவான்களால் நிறைந்திருந்தது.


ஆர்.எஸ்.மனோகர்,சோ.ராமசாமி,ராதா,பாலசந்தர் ஆகியோர்கள் நாடக உலகில் பின்னி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.


70 களின் துவக்கத்தில் நாடக உலகம் சிறிது சிறிதான சரியத்தொடங்கியது;நாடகம் நடத்த ஒவ்வொரு ஊராக நாடகக் குழுவினர் பயணம் செய்யும் பாடுகளை விட,திரைப்படப்பெட்டி ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டு காண்பிக்கப்படும் வசதி,திரைப்படங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவி செய்தது. இதற்கு திரைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களும் ஒரு காரணம் எனலாம்,இதனால் ஏகப்பட்ட படங்கள் 60 களின் இறுதியிலும்,70 களின் தொடக்கத்திலும் வெளிவர ஆரம்பித்தன.

இத்தகைய காலகட்டத்தில் நாடகம்,சினிமா ஆகிய இரண்டு துறைகளிலும் வெளுத்துக் கட்டியவர் எம்.ஆர்.ராதா.

இன்றைய நடிகர்கள் வீங்கிப்போன அவதார பிம்பங்களுடன் வலம் வந்து,அடுத்த முதல்வர் கனவுகளில் வலம்வரும் வேளையில்,ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்தும் எம்.ஆர்.ராதாவின் வெளிப்படையான் பேச்சும்,'என்னைப் போன்ற கிழடுகள் ஒதுங்க வேண்டும்' என்ற அவரின் கூற்று,மேலும் சினிமா தயாரிப்பு என்பது ஹீரோக்கள் கைக்குப் போகாமல் தயாரிப்பாளர்,இயக்குநர் கையில் இருக்க வேண்டும் என்பதிலும் அவருடைய தொழில் நேர்மை தெரிகிறது.

அவருடைய காரசாரமான இந்தவகை விமர்சனங்கள் இன்றைய சினிமா உலகுக்கும் பொருந்துவதுதான் வேடிக்கை !

6 comments:

  1. உண்மையான திறந்த மனத்துடன் உள்ள பேச்சி எம்.ஆர்.இராதா உடையது... :)
    இளைஞர்களுக்கு வழி வேண்டும், என்ற எண்ணம் அனைத்து துறையினருக்கும் வர வேண்டியது அவசியமே!

    ReplyDelete
  2. தமிழ்ப்பிரியன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    இளைஞர்கள் வழி ஏற்படுத்திக் கொள்ளும் அளவு வலுவானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

    பாலசந்தர் காலத்தில் வந்த கமல்,ரஜினி போன்ற இளம் திறமையாளர்கள் மிகக் குறைவாகவே வருகிறார்கள்.

    மற்றவர்கள் பிறரால்/பெற்றோரால் தூக்கப்பட்டு-promote-விஜய்,தனுஷ்,விஷால்,சிலம்பரசன் போன்ற அனைவரும் இந்த வகைக்குள் தான் வருகிறார்கள்.

    ReplyDelete
  3. சுவாராசியமான பேட்டி பகிர்ந்தமைக்கு நன்றி.

    எனக்கு இவருடைய கலக்கலான ரத்த கண்ணீர் படம் மறக்க முடியாது ஒன்று. அதன் வசனங்கள் இந்த காலத்திலும் பொருந்துவதே அந்த படத்தின் சிறப்பு. எனக்கு அந்த படம் பார்த்த போது எப்படி! இதை போல அசத்தலாக எடுத்தார்கள் என்று வியந்தேன். வசனங்கள் இன்றைய தலைமுறைக்கு கூட பொருந்தும் வண்ணம் இருக்கும் நக்கலாகவும் இருக்கும்.

    அதும் அவர் பிச்சைகாரனாக வரும் கடைசி 30 நிமிடங்கள் என்னால் எப்போதும் மறக்க முடியாது..அசத்தலோ அசத்தல் அதை மட்டும் பல முறை திரும்ப திரும்ப பார்த்தேன்.

    ReplyDelete
  4. ஆம் கிரி,உண்மை-ஒரு பன்முக நடிகராக அவரை எனக்கும் பிடிக்கும்..

    ReplyDelete
  5. ரெண்டு படம் ஹிட் ஆனதுமே தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று நினைத்துக்கொள்ளும் இன்றைய இளம் நடிகர்கள் படிக்க வேண்டிய பேட்டி இது.

    ReplyDelete
  6. மிகச் சரியாகச் சொன்னீர்கள் சின்ன அம்மிணி.

    அந்தக் காரணத்திற்காகத்தான் இந்தப் பதிவையே போட்டேன்.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...