குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, June 12, 2008

63.நாம் என்ன குப்பைத் தொட்டியா?

உலகமயம், தாராளமயம் என்கிற கொள்கைகளை நரசிம்மராவ் அரசு அறிவித்தபோது, அன்றைய மக்களவையில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் எச்சரித்தது இப்போதும் காதில் ரீங்காரமிடுகிறது~""உலகமயம் என்கிற பெயரில் இந்தியாவில் அன்னிய சக்திகள் எந்தவித வரைமுறையோ, கட்டுப்பாடோ இல்லாமல் வளையவர அனுமதிக்கப் போகிறீர்கள். இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நமது கட்டுப்பாட்டில் நமது நாடும் சுதந்திரமும் இல்லாமல் போகும் அபாயம் எனக்குத் தெரிகிறது...''
உலகக் கோடீஸ்வரர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதும், இந்திய நிறுவனங்களான டாடா, பிர்லா, அம்பானி, எஸ்ஸôர் ஏன், நம்ம ஊர் டி .வி.எஸ். போன்றவை பன்னாட்டு நிறுவனங்களாகக் கடல் கடந்து செயல்படுகின்றன என்பதும் உண்மை. ஆனால், அதற்காக நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் விலை என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறோம்.


"ப்ளூ லேடி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல், இனிமேல் கடல் பயணத்துக்கு ஏற்றதல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. அதில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸ்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று அந்த சின்னஞ்சிறிய நாடு அதை உடைக்க மறுத்துவிட்டது. அங்கிருந்து அந்தக் கப்பல் மலேசியா சென்றது. அந்த நாடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்தக் கப்பல் நுழைய அனுமதி மறுத்துவிட்டது.


சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸýம், பாலிக்ளோரினேட்டட் பைபினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக் கொண்ட அந்தக் கப்பல், இந்தியாவைத் தஞ்சம் அடைந்து, நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையும் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் உடைத்துப் பிரிக்கப்பட்டது.

குறைந்தப்ட்சம் பங்களாதேஷ்க்கு இருக்கும் சுரணை,அக்கறை கூடவா நமக்கு நம் தேசத்தின் மேல் இல்லை?

இத்தனைக்கும், இந்தியா உள்பட சுமார் நாற்பது நாடுகள், புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கும் என்பதால் ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதியைத் தடை செய்திருக்கின்றன. மனிதாபிமான அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் அந்தக் கப்பலின் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டனர்.


தூத்துக்குடி துறைமுகத்திற்கு செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் வந்தடைகிறது. பன்னாட்டு புகையிலை நிறுவனமான ஐ.டி.சி.யின் காகிதத் தொழிற்சாலைப் பிரிவு இறக்குமதி செய்திருக்கும் 25,000 டன் பழைய பேப்பர் என்று சுங்க இலாகாவினரிடம் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 1,000 கன்டெய்னர்கள் எனப்படும் ராட்சதப் பெட்டிகளில் 960 கன்டெய்னர்கள் அவர்கள் கூறியதுபோல, பழைய பேப்பர்களும், காகிதக் குப்பைகளும் என்பதால் சுங்க இலாகாவினர் அவைகளை அனுமதித்தனர்.


மீதமுள்ள 40 கன்டெய்னர்களில் என்ன இருந்தது என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைக்கூளங்கள் இந்தக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு இந்தியாவில் கழிவுகளாகக் கொட்டுவதற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவைகளில், பிளாஸ்டிக் பைகள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், உபயோகித்துத் தூக்கி எறிந்த பேட்டரிகள், கக்கூஸ் குப்பைகள், மிதியடிகள் என்று குத்தி அடைக்கப்பட்டிருந்தன.


இது கண்டுபிடிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததுபோல, ஐ.டி .சி. நிறுவனம் இதை இறக்குமதி செய்யத் தாங்கள் நியமித்த இடைத்தரகரைக் கையைக் காட்டியது. தூத்துக்குடியிலிருந்து அந்த 40 கன்டெய்னர்களும் துபாய்க்குச் சென்றன. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் அனுமதிக்காகக் காத்திருக்கிறது அந்தக் கன்டெய்னர்களைத் தாங்கிய கப்பல்.


மத்திய மாசுக்கட்டுப்பாடு ஆணைய நிபுணர்கள் அந்த கன்டெய்னர்களை மீண்டும் நியூஜெர்சிக்கே அனுப்பிவிடும்படி அறிக்கை அளித்தபோது, அப்பன் குதிருக்குள் இல்லை என்று ஓடி வந்திருக்கிறது ஐ.டி .சி. நிறுவனம். எதற்குத் தெரியுமா? அதைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பதற்கு. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட 960 கன்டெய்னர்களில் எத்தனை கன்டெய்னர்களில் குப்பைக்கூளங்கள் இருந்தனவோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


இதுபோல, எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி என்கிற பெயரில் குப்பைக்கூளங்களை கன்டெய்னர்களில் அடைத்து இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?


நமது ஆட்சியாளர்களுக்கு தேசப்பற்று என்பதே கிடையாதா?


அவர்கள் யாருடைய நன்மைக்காக ஆட்சி செய்கிறார்கள்? ?


இந்தியா என்ன வல்லரசு நாடுகளின் குப்பைத் தொட்டியா???


நன்றி:எக்ஸ்ப்ரஸ் குழுமம்

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...