குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, February 22, 2023

203 - அரசாண்மை என்றால் என்ன (அல்லது) ஏன் லீ க்வான் யூ ஒரு மிகச்சிறந்த தலைவர் ?


அரசாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. 

சூழல் இதுதான் : 1990'ல் லீ பதவியிலிருந்து விலகி, இரண்டாம் தலைமுறைத் தலைவராக கோ சிங்கையின் பிரதமராகிறார்.

லீ எவ்வாறு செயல்படுபவர், எவ்வாறு செயல்பட்டார் என்பதை உலகம் 30 ஆண்டுகளாக அப்போது கண்டிருந்தது. ஒப்பு நோக்க கோ, எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், லீ பெயருக்குத்தான் பதவி விலகுகிறார், உண்மையில் ஆளப்போவது அவர்தான் என்ற ஊகங்களும் நிலவிய காலகட்டம். 

அந்த நேரத்தில் சிங்கை தேசியப் பல்கலையில் மாணவர்களிடைய நடைபெற்றது இந்த உரை. 

இந்த உரையில் மூன்று பொருண்மைகளை நான் மிக இரசித்தேன். 

1. ஒரு தலைவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை வட்டாரத்தின் பல நாடுகளின் தலைவர்களோடு ஒப்பு நோக்கி லீ கொடுக்கும் காட்டுகள். அதில் கோ எப்படிப்பட்டவர் என்பதை அவரறிந்த பார்வையில் ஒரு கோடு போட்டு அளிக்கும் சாமர்த்தியம்.

2. கடந்த சில சம்பவங்களில் உண்மையில் அரசில் முடிவெடுத்தது யார் என்று வெளிப்படப் பேசுகின்ற தேவையும் நுட்பமும்.

3. இந்த 55 நிமிட உரையில் அவரது உரை 14 நிமிடம்தான். 40 நிமிடங்கள் பல்கலை மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். 
இந்தியாவில், தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் உரையும், பொதுவாகக் கேள்விகளைச் சந்திக்கும் திறமும் இருக்கிறதா என்ற எண்ணமும், அந்த நிலை வந்தால் நாடு எப்படி மாறி விடும் என்ற ஏக்கமும் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 

ஏன் லீ ஒரு மிகச் சிறந்த தலைவர், நிர்வாகி என்பதற்கும்,  மிகப்பெரிய மாற்றம் ஒன்றை ஒரு தலைவன் எப்படி நிகழ்த்தி அதனோடு இயைந்து போக வேண்டும் என்பதையும் பாடம் போல அறிந்து கொள்ள இயலும் காணொளி. 

அடுத்தது லீ எப்போதும்  தன்னியல்பாகப் (எக்ஸ்டெம்போர்) பேசுவபவர்; எழுதிவைத்துப் படிப்பவர் அல்ல.  இந்த உரை வித்தியாசமாக, எழுதி வைத்து வாசித்த உரை. எனவே உரையின் முக்கியத்துவமும் கூடுகிறது !! 

No comments:

Post a Comment

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...