குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, August 16, 2012

* * * * * 165.அடி சேருமே-நாளொரு பாடல்-13


மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே


நூல் : தனிப்பாடல் திரட்டு

ஆசிரியர் : இராமச்சந்திரக் கவிராயர்(இப்பாடலுக்கு)
காலம் : 19 | 20 ம் நூற்றாண்டு.

பதம் பிரித்த பாடல்:
மேரு சாபமும் மேவுமே
மேவுமே உணவு ஆலமே
மேலவாம் அவன் ஆயமே
மேய் அனான் அடி சேருமே

முன்னோட்டம்:
சித்திரக் கவி என்றது ஏதாவது ஒரு சித்திரத்தின் (உருவப் படம்) வடிவிலேயே அமையுமாறு பாடல் எழுதும் திறமை. இந்த சித்திரக் கவியை எழுதியது  இராமச் சந்திரக் கவிராயர்.

சித்திரக்கவி எந்த சித்திர வடிவத்தில் வேண்டுமானாலும் எழுதப் படலாம். இது நான்கு ஆரச் சக்கர வடிவில் எழுதப் பட்ட நான்காரச் சக்கரபந்தம் என்ற வடிவில் அமைந்தது.

நான்கு ஆரச் சக்கர வடிவ சித்திரக் கவி

இந்தப் பாடலில் 32 எழுத்துக்கள் இருந்தாலும், உண்மையில் சித்திரக் கவி வடிவத்தில் பார்த்தால் 16 எழுத்துக்கள் மட்டுமே வரும். நடுவில் உள்ள எழுத்து எட்டு முறை பாடலில் வந்து எட்டு எழுத்துக்களாகும்; ஆரங்களில் இருக்கும் எழுத்துக்கள் எட்டும் இருமுறை வாசிக்கப்பட்டு பதினாறு எழுத்துக்களாகும்(அதாவது ஆரத்தில் மையத்தில் இருந்து வட்டத்திற்கு ஒரு முறையிலும், வட்டத்திலிருந்து மையத்திற்கு ஒரு முறையிலுமாக,ஒவ்வொரு ஆரத்தின் எழுத்துக்களும் இரண்டு முறை பாடலில் வரும்); சுற்று வட்டத்தில் அமைந்த எட்டு எழுத்துக்களும் ஒரு முறைதான் வரும்.

இவ்வித சித்திரக் கவி'ப் பாடல்கள் எழுத,செழுமையான மொழிப் பயிற்சியும் திறனும் வேண்டும்.

வியப்பூட்டும் வகையிலான வடிவமும், கருத்துப் பொருளும் அமைந்த சித்திரக் கவிப் பாடல்கள் நிறைய உள்ளன.


பொருள்:
மேரு சாபமும் மேவுமே-மேரு மலையானது சிவபெருமானுக்கு வில்லாகப் பொருந்துகிறது; மேவுமே உணவு ஆலமே- ஆலகால விடமானது அவனுக்கு உணவாகிறது; மேலவாம் அவன் ஆயமே - அவனது பரிவாரங்கள் மேலானவை
மேய் அனான் அடி சேருமே-அந்த மேன்மையான பெருமானின் அடிகளை பற்றுக் கோடாகக் கொண்டு சேருங்கள் !


டிட் பிட்ஸ்:

  • சித்திர வடிவத்திற்கேற்ற விதிமுறைகளோடு, பாடல் சொற்களுக்குப் பொருளும் கருத்தும் இருக்க வேண்டுவதும் முக்கியம்
  • அதையும் எண்ணும் போதுதான் சித்திரக் கவிதை எழுதுவதன் கடினமும், அதற்கான திறமையும் புரியவரும்.

13 | 365



2 comments:

  1. அறியாத பல விசயங்கள் ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...