குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, November 12, 2009

109.கடவுள் இருக்கிறாரா ???!!!!


கடவுள் இருக்கிறாரா?

இந்தக் கேள்விக்கு ஆத்திகர்கள் ஏழையின் சிரிப்பு,குழந்தையின் புன்னகை,காலை மலர்கள்,ஆட்டுக் குட்டி என்றெல்லாம் தேடச் சொல்கிறார்கள்;ஆயினும் இவையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்து அவரால் விளையும் விளைவுகள் என்றால் இந்த விளைவுகளை ஏற்படுத்தும் காரணகர்த்தாவையும் பார்க்க,ஸ்பரிசிக்க,உணர முடிய வேண்டும்.


அவர் இருக்கிறார் என்று நம்பும்படி வியக்த ரூபமாகத் தோன்றாத வரை அவரை எப்படி , எப்போது நம்புவது?


அறிவியலுக்கு-இயற்கையின்,பிரபஞ்சத்தின் செயல்பாட்டை விளக்குவதற்கு-ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு கடவுள் தேவைப்பட்டால் அந்தக் கடவுளை நம்பலாம்.


அறிவியலுக்கு கடவுள் தேவைதானா?


அறிவியல்,குறிப்பாக இயற்பியல் என்ன சொல்கிறது?இந்தப் பிரபஞ்சம் திடப்பொருள்,சக்தி என இருவகையானது.


திடப்பொருள் என்பது நீங்கள்,நான்,மூக்குக் கண்ணாடி,நாய்க்குட்டி,சூரியன்,சந்திரன்,லல்லு,அப்போலோ விண்கலம்,பான்பராக்,மரக்கட்டை,நாமக்கட்டி இதெல்லாம்தான்.இவைகளை ஆதாரமாகப் பார்த்தால் கார்பன்,பாஸ்பரஸ்,இரும்பு,துத்தநாகம் போன்ற தனிமங்கள்;இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள்;இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாகப் பார்த்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.


இது திடப்பொருள்.


சக்தி என்பது ஒளிக்கதிர்கள்,எக்ஸ்ரே,உஷ்ணம்,ரேடியோ அலைகள் போன்றவை.இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைகளால் வருவது எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை,அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை,மின்காந்த விளைவு,புவிஈர்ப்பு என மொத்த சமாச்சாரம் நான்குதான்.


இது சக்தி.


இவை இரண்டையும் ஒருமைப்படுத்தி விளக்கும் முயற்சிகள் ஐன்ஸ்டீனிலிருந்து அனைவராலும் முயற்சிக்கப்பட்டு அண்மையில் சிலர் வெற்றிபெற்று நோபல் பரிசு பெற்றனர்.திடப்பொருள்,சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்று அறிவியலால் நிரூபிக்க முடிகிறது.அறிவியல் சக்தி,திடப்பொருள் இரண்டையும் ஒருமையாகப் பார்க்கிறது.


இறுதியாக,அறுதியாக அறிவியல் 'பிரபஞ்சத்தின் உண்மை' என்று சொல்வது கீழ்வரும் இரண்டு விஷயங்களைத்தான்.


1.பௌதிக இயற்பியல் விதிகள்.ஆதாரமாக இந்த விதிகளின் படிதான் பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்தி வடிவங்களும் இயங்குகின்றன்.இந்த விதிகளை அவர்கள் சில கணித சமன்பாடுகளாக விவரிக்கிறாரகள்.


2.இந்த விதிகள் செயல்படத் துவங்கிய போது இருந்த நிலை ஆரம்ப நிலை-இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள்.அதை வர்ணித்து விட்டால் அதற்கு அடுத்த நிலை,அதறகு அடுத்த நிலை,இப்படி இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விடலாம்.


இந்த ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாகப் பார்க்கும் போது அவைகளில ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை குறிப்பிடுகிறார்கள்.எத்தனையோ விதத்தில் பிரபஞ்சம் ஆரம்பிக்கலாம்;எத்தனையோ விதமான உயிர்கள் தோன்றியிருக்கலாம்;ஆனால் குறிப்பட்ட விதத்தில் பிரபஞ்சம் தோன்றி குறிப்பிட்ட விதமான பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது வரை தீர்மானித்தது யார் அல்லது எது?


*********


We live in the most propable of all possible worlds என்பது வால்டேரின் வாசகம்.பிரபஞ்சம் ஏன் 'அப்படி' இல்லாமல் 'இப்படி' இருக்கிறது என்பதற்கு இந்த வாசகம் பதில் தருகிறது.இப்படி இல்லையென்றால் இந்தக் கேள்வியே வராது என்பதுதான் பதில்.இது வசீகரமான வாதமாக இருந்தாலும் தப்பானது.


கடவுள் யார் என்பதற்கு முன் நாம் யார் என்று பார்க்கலாம்.நாம் ஒரு சிக்கலான மாலிக்யுலார் கூட்டணி அமைப்பு.நம் இருப்பிடம?சூரியக் குடும்பத்தில் ஒரு அற்பமான கிரகம்.சூரியனே ஒரு சராசரி நட்சத்திரம்தான்.ஸ்பைரல் காலக்ஸியின ஓர ஓரத்தில இருக்கிறது.இவ்வளவு அற்பமான் மனிதனுக்காகத்தான பிரபஞ்சமே உண்டாயிற்று என்ற வாதம் சரியல்ல.நாம உருவாவதற்கு சூரியக் குடும்பமும அருகாமையில் சில நட்சந்திரங்களும் அவைகளின் ஈரப்பும் தேவையாக இருந்திருக்கலாம்.ஆனால் கோடானு கோடி காலக்ஸிகள்,கோடானுகோடி நடசந்திரங்கள நம்மைச் சுற்றிலும் சமச்சீராகப் பரவியிருப்பதை நம்மால் நுட்பமாக அறிவியல் கருவிகளைக் கொண்டு பாரக்க முடிகிறது.அவையெல்லாம் இந்த ஆறடி மனிதன் உண்டாவதற்குத்தான் என்று சொல்வது 'டூ மச்!'


**********


நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் பிரமிப்பூட்டும் ஒரு பாடல்...

ஒன்றும் தேவும உலகும
அன்று நானமுகன தன்னொடு
தேவருலகோடு உயிர் படைத்தான்.


பைபிள் In the beginning was the world என்கிறது.இவைகள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணத்தை அல்லது சிருஷ்டிக கணத்தைச் சொல்கின்றன.


காலம் என்பது சாசுவதமானதல்ல:பிரபஞ்சம் உண்டான் போதுதான் காலமும் ஜனித்திருக்கிறது என்பதுதான் அறிவியலின் முடிவும்.காலம பிரபஞ்சத்துடன் பதினைந்தாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னர் பிறந்தது என்று காஸ்மாலஜி என்னும பிரபஞ்சவியல் சொல்கிறது.அப்படி காலத்துக்கு ஒரு ஆரம்பம் இருந்தால் பிரபஞ்சத்திறகு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்,யாராவது படைக்க வேண்டும்.அப்படி இருப்பதற்கு அவர் நிலை கொள்வதற்கு காலம் தேவை!அதாவது 'காலம்' இல்லாமல் 'காலத்தைப்' படைக்க முடியாது.


இதுதான் அறிவியலாளர்கள் கடவுளை நம்புவதில் உணரும் சிக்கல் !


*************


பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது.ஒரு தீர்மானமில்லாத முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல தெளிவாக நிரூபித்து விட்டது.மனித இனத்தின பல புராதன நமபிக்கைகளில் முக்கியமானவை பிரபஞ்சம் அழிவில்லாத்து,சாசுவதமானது;அதற்குப் பிறப்பும இல்லை,இறப்பும் இல்லை என்பது.இரண்டுமே அறிவியலால் பொய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.


நம் கணக்கு சமன்பாடுகள்,விணவெளியில் இப்போது மிஞ்சியிருக்கும் அந்த லேசான உஷ்ணம் இவைகளையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதிர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள தெரிகின்றன.அந்தக் கணத்தை ஏறபடுத்தியவர் கடவுள் என்றால்,அவர் ஏன் பிரபஞ்சத்தை ஓர் வாணவேடிக்கை போல் பற்ற வைத்து விட்டு அது பாட்டுக்கு இயங்கட்டும் என்று மேட்டினி பார்க்கப் போய் விட்டாரா?


பிரிட்டிஷ் இயற்பியலாளர் ரஸ்ஸல் ஸ்டானார்டு கடவுளை ஒரு புத்தகத்தின் ஆசிரியருடன் ஒப்பிடுகிறார்;புத்தகம் எழுதப்பட்டு விட்டது.காலம் அதன் பக்கங்கள்.நாம் ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கிறோம்.படிக்கப் படிக்கத்தான் முழுப்புத்தகமும் தெளிவாகும்-இது ஒரு கருத்து.



***********


இயற்கையின் எல்லா விதிகளையும் கணிதச் சமன்பாடுகளாக நாம் தெரிவிக்க முடிகிறது.e=mc^2 என்பது ஒரு சமன்பாடு.இது ஒரு இயற்பியல் உண்மையின் வடிவம்.கணிதம் துல்லியமான ஒரு இயல்.எந்தவிதமான படிமங்களையும் உண்மை வடிவங்களையும் சாராமல் கணித இயல் தனித்து இயங்க முடியும்.நடைமுறை வாழ்க்கையுடன் எந்தவித தொடரபுமற்ற நூற்றுக் கணக்கான தேற்றங்களும் நிரூபணங்களும் அதில் அமைக்க முடியும்.


கிரேக்கர்கள் மற்றும் புராதண இந்திய வானியலாளர்கள் காலத்திலிருந்து எண்கணிதம் மனிதனை வசீகரித்து வந்திருக்கிறது.எண்களுக்கும் கடவுள் தன்மைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக எல்லா மத நம்பிக்கைகளும் இருக்கின்றன்.பிதகோரஸ்,அரிஸ்டாட்டில் போன்றவர்கள எண்களில்தான் கடவுளே இருப்பதாக நம்பினார்கள்.


எண்களுக்கு சில விநோத குணங்கள் இருக்கின்றன.உதாரணமாக 28 என்கிற எண் அதை வகுக்கும் எண்களான 14,7,4,2,1 இவைகளின் கூட்டுத்தொகை.அது போல 6.இவ்வகை எண்கள் ஆதர்ச எண்கள்-Perfect numbers- என்றழைக்கப்படுகின்றன;இவ்வகை எண்களுக்குக் கடவுள்தன்மை இருப்பதாக எண்ணினார்கள்.கெப்ளர் கடவுளை ஒரு ஜியோமெட்ரி நிபுணர் என்று கூறினார்.புராதன நம்பிக்கைகள் பலவற்றில் 1 என்ற எண்ணுக்குத் தனியான முக்கியத்துவம் இருந்தது.புனித அகஸ்டைன் பைபிளில் எண்களின் பங்கை விரிவாக அலசியிருக்கிறார்.எண்களுக்கு மனித மனத்திற்கு அப்பாற்பட்ட குணங்கள் ஏற்கனவே இருக்கிறதா என்று யோசித்தார்கள்.


காட்டாக 1,8,27 என்பவை முறையே 1,2,3 ன் கணப் பெருக்ங்கள்.இவைகளைக் கூட்டினால்(1+8+27=36) வரும் 36 ன் வர்க்கமூலம் 6.அது 1+2+3 எண்களின் கூட்டுத்தொகை!


இந்த எண்களின் விநோத குணம் நாம் இதை கண்டுபிடிப்பதற்கு முன்னரும் இருந்ததா?இருந்தால் எங்கே,எந்த மனத்தில் இருந்தது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.மார்ட்டின் கார்ட்னரும் இதை ஆமோதிக்கிறார்."கணித உண்மைகள் முன்பே இருந்தன, எவரெஸ்ட் மலை போல.நாம் அவைகளை மெல்ல அறிந்து கொண்டு இருக்கிறோம்".


இவைகள் ஒருவேளை கடவுளின் செயல்களோ அல்லது இவைகள்தான் கடவுளோ என்று தோன்றுகிறது அவர்களுக்கு.ரூடி ரக்கர் என்பவர் "மனவெளி(Mindscape) என்று ஒன்று இருக்கிறது.அங்கே கணித உண்மைகள் வசிக்கின்றன.அவைகளை நாம் ஒவ்வொன்றாக கண்டறிகிறோம்"என்கிறார்.


சிலசமயம் இம்மாதிரியான உண்மைகளின் தரிசனங்கள் சற்றும் எதிர்பாராமல் நிகழ்கின்றன.இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.ஸ்ரீனிவாச ராமானுஜன் சில கணக்குகளுக்கு விடைகள் கனவில் கிடைத்ததாகச் சொல்கிறார்.ஒரு உன்னத உதாரணமான அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து கணிதவியலை சம்பிரதாயமாக கற்றுக் கொள்ளாமல் சுயமாகப் படித்துத் தெரிந்து கொண்டு மேற்கத்திய அணுகலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் கணிதத்தை அணுகி பல தேற்றங்களை நிரூபணம இல்லாமலேயே குறிப்பெழுதி வைத்தார்.அவைகளை தற்செயலாக அறியவந்த ஹார்டி "என் வாழ்நாளில் இது மாதிரியான தேற்றங்களை இதுவரை பார்த்ததில்லை.ஒருமுறை பார்த்தாலே அவை கணிதமேதையால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றார்.


ராமானுஜன் 33 வயதில் இறந்து விட்டார்.இதுவரை ராமானுஜனுக்கு எப்படி அந்த சக்தி வந்தது என்பதற்கு விளக்கமில்லை.அவருடைய மூளையிலிருந்து அவை ஒரு நதிப்பிரவாகம் போல வெளிப்பட்டிருக்கின்றன.ராமானுஜனுக்கு மனவெளியுடன் தொடர்பு இருந்ததா?இதுபோல பெங்களூர் சகுந்தலா தேவி.இவர்கள் எல்லாம் மனவெளியுடன் நேரடித் தொடர்பு கொள்கிறார்களா?இந்த மனவெளிதான் கடவுளா?


***********



ஒரு அற்புதமான தமிழ் எழுத்தாளர் இப்போது இல்லை என்பதே வருத்தத்துடன் நினைத்துப் பார்க்க வைத்தது அந்தப் புத்தகம்.அவரின் பெரும்பாலான-கிட்டத்திட்ட அனைத்து- கட்டுரைகள்,புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்தப் புத்தகம் ஒரு ஆச்சரியம்.


கடவுள் இருக்கிறாரா என்ற தலைப்பிலேயே அமைந்த இந்தப் புத்தகம் நல்ல வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு தவிர்க்க இயலாத பரிந்துரை.



புத்தகம் : கடவுள் இருக்கிறாரா ?
ஆசிரியர் : அமரர் சுஜாதா

7 comments:

  1. புத்தக விமர்சனம் என்றாலும் சிறப்பான இடுகை.

    கணக்கியல் முறைகள் எண்கள் தோன்றுவதற்கும் முன்பும் மதிப்பில் 6 = 6 தானே !

    :)

    நானும் இதே போன்று இதே கருத்துகளில் எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.

    எனக்கு கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? ன்னு தெரியும் !
    :)

    ReplyDelete
    Replies
    1. || எனக்கு கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? ன்னு தெரியும் !
      :) ||

      சொல்லவே இல்ல !!?!
      :))

      Delete
  2. உலகம் இருக்கும்வரையிலும், மனிதர்கள் இருக்கும்வரையிலும் இந்தக் குழப்பம் இருக்கத்தான் செய்யும்..!

    ReplyDelete
  3. நன்றி கண்ணன் முதல் கருத்துக்கு.

    உங்கள் பதிவைப் படித்தேன்.ஆறாவது அறிவில் பிரபஞ்சம் தோன்றிய அந்தப் பெருவெடிப்புக் கணத்தின்,நொடியின்-அந்த நொடியை கோடிக்கணக்கில் பகுக்கப்பட்ட துளிக்கணம் வரை அறிவியல் சென்றிருக்கிறது !

    ஆயினும் அந்தக் கணத்திற்கு முன்னால் என்ன இருந்தது ? எப்படி பெரு வெடிப்பு நிகழ்ந்தது என்பதை எப்படி நிறுவுவது?

    அதாவது அந்தக் கணத்திற்கு முன்னால் இருந்த காலம் என்ன?
    அப்படிக் காலம் இருந்தால் அதை யார் தோற்றுவித்தது?????

    Quite Interesting இல்லையா?

    மேலும் இந்தப் பதிவு புத்தகத்தில் இருந்தவற்றை அப்படியே எடுத்தவை அல்ல.உண்மையில் பதிவின் ஒரு பத்திக்கான வாக்கியங்கள் புத்தகத்தின் பல இடங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டவை..

    படிப்புச் சுவைக்காகச் செய்தது..
    -:)))

    ReplyDelete
  4. நண்பர் உ.த.

    வாங்க..பெரிசு பெரிசா அடிச்சுகிட்டு இருக்கிற பதிவுகளுக்கு இடையிலும் வந்ததற்கு நன்னி..

    :))

    சும்மா கலாய்ப்புதான்...)

    ReplyDelete
  5. நண்பர் டிவிஆர்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...