குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, July 14, 2008

67.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும்-II


இந்த பதிவு இதே தலைப்பில் எழுதப்பட்டதன் தொடர்ச்சி.
சிவம் என்னும் தத்துவத் தோற்றுவாய்
பழந்தமிழர் வாழ்வில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு தனியான சான்றுகள் தேவையில்லை;இன்னும் சொல்லப்போனால் ஆப்பிரிக்கா,சீனம்,ஆஸ்திரேலியாவின் அகழ்வுகளின் போதும்,சிந்து,மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் போதும் லிங்க வடிவம் மற்றும் யோக வடிவங்களும் (அகழ்வுப்பொருள் எண் 420)கிடைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதும் காணக்கிடைப்பதே.இந்த யோகிகளின் வடிவம் யோகிகளின் தலைவனாக பழந்தமிழ் நாட்டில் அறியப்படும் சிவனின் வடிவமே என கற்கால இந்திய ஆய்வில் ஈடுபட்ட ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்ற பெண்மணியின் நூற்கருத்துக்கள் சொல்வதும் சிந்திக்க வேண்டுவது.

எனில் சிவத்துக்கான தோற்றுவாய்க் காலம் என்ன?
தொல்காப்பிய மொழி விதிகள் சகர மெய்யோடு இகரமும்(ச்+இ) சேர்ந்து சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடாது எனச் சொல்லவில்லை.
இரண்டாவதாக அகத்தியரின் மாணாக்கர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் கழாரம்பர்

தமிழ்,சிவம் இனிமை என்னும் தனிப் பொருளாம்

எனச் சொல்லும் கூற்று,தமிழ் என்ற சொல்லுக்கே,சிவம்,இனிமை என இரு பொருள் இருக்க வாய்ப்பிருப்பதைக் குறிக்கிறது.விளக்கத் தேவையின்றி இது தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட அல்லது தொல்காப்பிய காலமே.
இன்னோரு தொல்காப்பிய பாயிரக் குறிப்பு நாவலந்தேயத்தை
செந்தமிழ் இயற்கை சிவனிய நிலம்

எனக் குறிப்பிடுகிறது.
லிங்கம் என்ற சொல்லுக்கு குறியீடு என்று பொருள்;சிவலிங்கம் என்பது சிவம் என்னும் தத்துவத்தை குறிக்கும் குறியீடு (குறி அல்ல) எனப் பொருள்படும்.
பண்டைத்தமிழர் கடவுட்கொள்கை சிவம் என்னும் தத்துவத்திற்கு பால்வேறுபாடு கூட(gender) குறிப்பிடவில்லை.திருமந்திரம் சதாசிவம் என்றே குறிக்கிறது.சிவம் என்னும் தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய,அனைத்தினுக்கும் புறத்துமாயிருக்கிற ஒரு தத்துவமாகவே தமிழர் கடவுட் கொள்கை அறிவுறுத்துகிறது.
திருமந்திரத்தின் காலம்
இன்னும் வட்டெழுத்துக்காலத் தமிழ் மொழி 16 உயிரும் 35 மெய்யும் ஆக 51 எழுத்துக்களைக் கொண்டது என்பது மொழியியல் ஆய்வறிஞர்களின் துணிபு.
இந்த வட்டெழுத்துக் காலம் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்டது.
திருமந்திரத்தில் திருமூலர்
ஆறிருபத்து நாலஞ்செழுத் தஞ்சையும்
வேறுருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே
என்கிறார்.
இது 35 விளைந்து கிடக்கும் மெய்யெழுத்துகளுள்(ஆறு+இருபத்து நான்கு+ஐந்து) மலம்(அறியாமை) நீக்கும் சிவாயநம என்ற சொல்லைத் தேறிக் கூறுமின் கூறக்கூடிய குறைகள் ஏதும் இருக்காது எனச் சொல்வது திருமந்திரத்தின் காலம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கூறுவது.
எனவே தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட நூலாகவே திருமந்திரம் இருந்திருக்க வேண்டும் என்பதும்,அக்காலத்திலேயே சிவ வழிபாடு இருந்தது என்பதும் தெளிவு.
மேற்குறிப்பிட்ட இரு விளக்கங்கள் தொல்காப்பிய காலத்துக்கு முன்னரே சிவம் என்னும் தத்துவம் மற்றும் லிங்க வழிபாடு தமிழகத்தில்,தென்னாட்டில் இருந்தது என்பதற்கும்,ஏதோ காரணம் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னைய அருந்தமிழ் தத்துவ நூல்கள் கிடைக்கப்பெறவில்லை(இக்காரணம் பின்னர் ஆராயப்படும்) என்பதும் அறியப்படும்.
ஆரியர் வருகை:
1.ஆரியர்கள் என்று வரலாற்றால் குறிக்கப்படுபவர்கள் இன்றைய ஈரானிய நிலப்பகுதிகளில் இருந்து இந்தியப்பகுதிகளுக்குள் நுழைந்தவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
2.இவர்கள் நாவலந்தேயத்தில் வாழ்ந்த மக்களுடன் ஒப்பிடும்போது அதிக உயரமாகவும்,வெம்மை கலந்த சிவந்த நிறம் கொண்டவர்களாகவும்,ஆடல்,பாடல் திறன் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள்.
3.இவர்கள் வந்த காலம் தென்பகுதியைக் கடல் கொண்ட காலமாகவே இருக்க முடியும்;இந்த கடல் கோள் தென்பகுதி நிலத்தைப் நீரால் பிறித்தும் வடபகுதி நிலத்தை நிலத்தால் இணைத்ததுமான மாறுதல்களைச் செய்திருக்க வேண்டும்,எனவேதான் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைய மத்தியக் கீழ் நாட்டு நிலப்பகுதியிலிருந்து நிலப் பாதை இந்த இயற்கை மாறுபாடுகளால் நேர்ந்திருக்க வேண்டும்.
4.இவர்கள் வந்த காலத்தில் நாவலந்தேயம் பரவலாக தமிழ் பேசும் தமிழர்களால் நிறைந்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.
5.இவர்களது தோற்றப் பொலிவாலும்,ஆடல் பாடல் திறனாலும் கவரப்பட்ட நாவலந்தேய மன்னர்கள் இவர்களுக்கு பல சலுகைகளை செய்யத் தலைப்பட்டார்கள்.
6.இவர்களின் வழிபாடு முறை தீ வேள்வி வளர்த்து அதில் மிருகங்கள் பலி கொடுத்து அக்னியையும்,இந்திரனையும் வழிபடும் முறையே.ருத்ரன் என்னும் ஒரு உருவகத்தை அழிவின் தேவதையாக குறிப்பிட்ட இவர்கள் அந்த உருவகம் சிவந்த நிறமுடைய,கோபாவேசத்துடன் கூடிய அழிவின் நாயகன் என்ற குறிப்பை முன்வைத்தனர்.இது வழிவழியாக நாவலந்தேயத்திலேயே சிறப்புற வாழ்ந்த மக்களின் வழிபாட்டும் முறையை விட தங்கள் வேள்வி வழிபாடு உயர்ந்தது,சிறந்தது என்ற தன்னை மேற்படுத்திக்கொள்ளும் செயலால்,இந்த ருத்ரன் என்னும் அழிவு வடிவத்தை,அன்பால் குறிப்பிடப்படும்,அன்பின் வடிவாகவே அறியப்பட்ட சிவத்தின் மீது ஏற்றினர்.
இந்த வேறுபாடு கொலை வேள்வி வழிபாட்டு முறைகளை அன்பின் வழி வாழ்வு முறை கொண்ட தமிழர்கள் ஏற்காததாலேயே ஆரியர்கள் சிவம் என்னும் தத்துவத்தையும்,அத்தத்துவம் கொண்டிருக்கும் ஆழ்ந்த தத்துவப் புதையல்களையும் அழித்தொழிக்கும் முறைகளை,மன்னர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கின் மூலம் செயற்படுத்தத் தலைப்பட்டனர்.
இந்த செயல்கள் ரிக் வேதத்தின்(வடமொழியின் முதல் நூல் ரிக் என்பதை அறிக..ரிக் தொடர்ந்த எல்லா வடமொழி நூல்களும் ஆரியர்கள் நாவலந்தேயத்திற்குள் நுழைந்த பிறகே ஆக்கப்பட்டன;வாழ்வு தேடி இடம் பெயரும் ஒரு இனத்தவராக வந்த அவர்களுடன் எந்த தத்துவ சாரங்களும் அற நூல்களும் உடன்வர வில்லை;அவை(ரிக்,யஜுர்,சாம,அதர்வண) கூறும் செய்திகளை-contents- வைத்தே இந்தக் கூற்றுகளை அறியலாம்.) 2’ம் மண்டலம் 20ம் பண்ணில் சொல்லப்பட்டுள்ள 6 மற்றும் 7ம் பாடல்களில் உள்ளன.அவை சொல்வதாவது:
‘அரிய காரியங்களை முடிப்பவனும்,மிகப்புகழ் பெற்ற இந்திரன் ஆரியமகனை உயர்த்துகிறான்;வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அருவருக்கப்படும் தாசனை(தமிழர்கள்) தலை கவிழச் செய்கிறான்

மேலும் ரிக் 5ம் மண்டலம் 10ம் பண், 7ம் மண்டலம் 21ம் பண்,96 ஆவது பண்,99ம் மண்டலம் 3ம் பண் ஆகிய பாடல்கள் தமக்கு வலிமை கூடும் பொருட்டு அளவற்ற விலங்குகளைக் கொன்று நிணம்,நெய்,சோமச்சாறு சொரிந்து செய்யப்பட்ட தீ வேள்விகளையும்,தாஸரஞ்சப் போரில்,சுதாஸை எதிர்த்த ஆரியரல்லாத விஷானிகள் சிவாக்கள் என்பவர்களை இந்திரன் துணை கொண்டு வென்றதாகவும் பொருள்படும் குறிப்புகள் கிடைக்கின்றன.
மேலும் சிவ வழிபாடு செய்தவர்கள் சிஸனதேவர்கள் எனவும்,சிவாக்கள் எனவும் இழிவாகக் கூறி கொலை,தீ வேள்வி செய்யாத,அதை ஏற்காத மக்களை,ருத்திரனைப் போற்றாதவர்களை தீயிட்டு அழித்த வரலாறுகளை இவை பேசுகின்றன.இவை ரிக் ‘சிவம் என்ற தத்துவத்தை இழிவாகவே பேசுகிறது என்பதற்கான சான்றுகள்.
ஆரிய/தமிழர்கள் உடன்படிக்கைகள்:
ஆளும் மன்னவர்களிடம் தங்களுக்கிருந்த செல்வாக்கினாலும்,பலத்தாலும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துரத்தப்பட்டனர்;அந்தப் பகுதி தெக்கணம் என அழைக்கப்பட்டது;ஆரியவர்த்தம் என்றழைக்கப்படும் ‘இந்துஸ்தானம் என்ற நாட்டுப் பகுதி வரையறுக்கப்பட்டு இதன் தெற்கெல்லையாக விந்திய மலைப்பகுதி வரையறுக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை பற்றிய செய்திகள் ‘போதாயன சூத்திரம் என்னும் வடமொழி நூலின் ஆமத்ஸ்தம்பத்தில் பேசப்படுகின்றன.
ஆயினும் இதன் பின்னரும் இந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டு பற்பல காலங்களில் தென்னாடு நோக்கி அவர்கள் கூட்டமாக (பிரகச்சரணர்(எல்லோருக்கும் முதலில் வந்தவர்),அஷ்ட சகஸ்ரம்(எண்ணாயிரம் பேர்) நகர்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது.
ருத்ரன்,ருத்ர சிவனான கதை:
ருத்ரன் என்னும் கொடும் தேவதையை ரிக்ல் குறிப்பிட்ட வடமொழி ஆரியர்கள் பின்னர் இயற்றப்பட்ட யஜுர்,சாமம்,அதர்வணத்தில் ருத்ரனுடன் சிவன் என்னும் சொல்லையும் சேர்த்து ருத்ரசிவன் என்றாக்கிக் கொண்டனர்;இது தென்னாட்டில் சிவம் என்னும் தத்துவத்துக்கிருந்த அழித்தொழிக்க முடியாத நன்மதிப்பை தான் வழிபடும் ருத்ரன் என்னும் பிரதிமைக்கு ஏற்றும் ஆரியரது முயற்சியே இந்த ருத்ரன் ருத்ரசிவனான கதை.
இதற்கான சில தரவுகள் பின்வருவன,மஹாதேவ் சக்ரவர்த்தி எழுதிய The Concept of Rudra-Siva through Ages என்ற புத்தகத்திலிருந்து.(ரிக்ன் மண்டல/பண்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
In Rgveda,Rudra is described as fierce^1 and
destructive like a terrible wild beast ^2,swift ^3,the red boar of the sky
^4,the cow-slayer ^5,the man-slayer ^6,the lord of animal sacrifices ^7,the
father of Rudras or Marats ^8 and who bears swift arrows and strong bow
^8.
He is also identified with Agni ^9.
No distinct
cosmical functions are ascribed to him ^10,
He is,
in the vague & uncertain anthropomorphic form, of the dreadful &
destructive powers of nature-of forests, lighting and forest fires
^11.
1- Rig II.33.9
2- Rig II.33.11
3- Rig I-114.4
4- Rig I-114.5
5/6- Rig I-114.10
7- Rig I-43.4
8- Rig I-114,II.33
9- Rig II-33.10
10- Rig VII-46.1
11- TAG Rao,in Elements of Hindu Iconography
இவ்விதமாக ரிக்ல் கீழ் நிலையான பயப்படுத்தும் தேவதையாக உருவகிக்கப்பட்ட ருத்ரன்,வரலாற்று நிலையில் மிகப்பின்னால் உள்ள உபநிடதங்களில்(ப்ரஹதாரண்யக,ஐத்ரேய,சாண்டோக்ய உபநிடதங்கள்) ருத்ர-சிவனாக மாற்றம் பெற்று அனைத்துக் கடவுளர்க்கும் மேலான கடவுளாக,உருவற்ற பிரம்மம் ஆக,வேதங்களை உருவாக்கித்தந்தவனாக ‘உருமாற்றம் அடைகிறான்.
இதற்கான காரணம் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியதே.ஒரு பகுதியின் உயர்ந்த சிறந்த ஒரு பொருளை,தத்துவத்தை தமது உடமையாக அறிவிப்பதன் மூலம் அப்பொருளை,தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர் யாமே என்ற மயக்கறிவைத் தோற்றுவிப்பதே நோக்கம் என்பதை யாரும் அறியலாம்.
தமிழர்களின் கடவுட் கொள்கையில் அன்பின் வழியாகி அனைத்தினுக்கும் உள்ளாகவும்-புறமாகவும் உள்ள, லிங்க வடிவில் வழிபடு காலமே அறியப்பட முடியாத அளவு தொண்மையுடைய,ஆரியர்கள் வருகைக்கு பன்னெடுங்காலம் முன்னரே தமிழர் தொழுதேத்திய சிவம் என்னும் தத்துவம்,வடமொழியர்களின் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேத மற்றும் அதற்குப் பின் வந்த உபநிடத காலத்தாலெயே ஏற்றம் பெற்றது என்பது,குருடர்கள் யானையைத் தடவி விளக்கம் சொல்வதற்கொப்பானது.
டிஸ்கி 1: இதை எழுதுவதற்கான காரணம் பண்டைத் தமிழரின் கடவுட் தத்துவம் எவ்வளவு உயர்ந்தது ,தமிழரின் உயர்ந்த சிந்தனை வளம் எத்தகையது என்பதை இப்போதைய தலைமுறை இளையர்களுக்கும்,இன்றைய பட்டப்படிப்பாளர்களும் அறிய வேண்டும் என்ற காரணம் பற்றியே.இன்றைய பிராமணர்கள் என்றறியப்படும் வகுப்பினரின் மேல் எனக்கு எந்தவித முன்கருத்தோ,துவேஷமோ இல்லை.

டிஸ்கி 2: இன்றைய தமிழகத்தின் 'திராவிட' அரசியலும்,பண்டைத்தமிழரின் அன்பு நெறியும் முற்றிலும் இருவேறு திசையில் இருப்பன.பண்டைய தமிழரிலும் அந்தணர் என்னும் வகுப்போர் இருந்தனர்;அவர்கள் தமிழரின் ஒரு பிரிவினரே;அவர்களுக்கும் வடதிசையிலிருந்து வந்த ஆரியருக்கும்-அவர்கள் வந்தேறிய அக்காலத்தில்-ஏதும் தொடர்பிருக்கமுடியும் எனக் கருதுவதும் முட்டாள்தனமானது.தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘அந்தணர் என்போர் அறவோர்' எனவே குறிக்கிறார்,அந்தணர் என்போர் ஆரியர் என்று அல்ல !
-இன்னும் வரும்

10 comments:

  1. டோண்டு அவர்கள் பதிவில் நீங்கள் கொடுத்த லிங்க் வழியே வந்த அனானி..

    பதிவு சிறப்பாக இருக்கிறது - நாம் விவாதிக்க சில விஷயங்கள் இருக்கிறது.. நான் மீண்டும் வருகிறேன்

    ஜெயந்த்

    ReplyDelete
  2. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ்க் குடி எனபது உண்மையென சரத்திர ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளபட்டாதாக ஒரு தகவல் அடிக்கடி அரசியல் மேடைகளிலும்,தமிழ் இலக்கிய மேடைகளிலும் பேசப்படும் செய்தி.

    இதனுடை விளக்கம் தங்கள் பதிவினை படிக்கும் போது புரிகிறது,

    "தமிழன் என்று சொல்லவோம்
    தலை நிமிந்து நிற்பொம்
    இத் தரணி முழுமையும் நம் அன்பால் அரவணைப்போம்"

    ReplyDelete
  3. அனானியாக வந்த ஜயந்த் அவர்களே..
    நன்றி.
    வாருங்கள் விவாதிப்போம்...

    ReplyDelete
  4. நன்றி எழில் அரசு....
    ஆம் தமிழர்களின் கடந்த காலம் ஆச்சர்யப்படவைக்கக் கூடியது.
    இவ்வளவு சிறந்த தமிழர்கள் இன்று ஒரு சிறு வட்டத்தில் முடங்கி ஆட்டுவிப்பார் படி ஆடுவோராக இருப்பது விசனிக்கவைப்பது...
    மேலும் இரு பதிவுகள் இந்த தொடரில் வரலாம்,படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்..
    உண்மையில் நான் இப்பதிவில் காரசாரமான எதிர்வினைகளை எதிர்பார்த்தேன்...இந்த மௌணம் நான் எதிர்பாராதது....

    ReplyDelete
  5. தமிழின் தொன்மையையும், தமிழுக்கும், சிவத்துக்கும் உண்டான ஆழ்ந்த தொடர்பையும் விளக்குவதற்கு, வடமொழி, ஆரியம், வேதங்களின் கீழ்த்தரம் என்று இத்தனை கட்டு அவசியம் இல்லாதது.

    யார் இந்த மஹாதேவ் சக்கரவர்த்தி? இவர் ஒரு நடு நிலை ஆய்வாளரா? இவர் எழுதுகிறார் - "பூதம்" என்றால் பேயாம், சிவன் பூதங்களின் தலைவன் என்றும், ஆகையால் சிவனுக்கு மற்றொரு பெயர் "பூதேஸ்வரன்" என்பதாம்! இவருடைய எழுத்தின் படி, பஞ்ச பூதங்கள் என்பது 5 பேய்கள்! இவருடைய எழுத்தை சிவத்தை ஆராயப் பயன்படுத்தலாமா? பெரியார் எழுதிய கீமாயனத்தை ராமாயண ஆய்வுக்குப் பயன்படுத்தலாமா?

    ஆரிய வாதம் ஆங்கிலேயருக்குத் தேவைப்பட்டது அடிமைத்தனத்தை மேம்படுத்துவதற்காக. ஆரிய வாதம் கம்யூனிச்ட்டுகளுக்குத் தேவைப்படுவது அவர்களுடைய சித்தாந்தத்தை பரப்புவதற்காக. ஆரிய வாதம் திராவிடக் கட்சிகளுக்குத் தேவைப் படுவது உணர்ச்சி தூண்டி அரசியல் செய்வதற்காக.

    ஆரிய வாதம் என்பது வரலாறல்ல, ஒரு கூற்று மாத்திரமே. ஆரியர் எங்கிருந்தோ இங்கு வந்தார்கள் என்பது போல, ஆரியர்கள் இங்கிருந்து தான் வேற்றிடத்துக்கு பெயர்ந்தார்கள் என்றொரு கூற்றும் உண்டு. ஆரிய வாதமே புரட்டு என்று மற்றொரு கூற்றும் உண்டு.

    தமிழின் தொன்மையை இப்படித்தான் (ஆரிய வாததைக்கொண்டு) நிலை நாட்ட வேண்டும் என்பது தமிழை இழிவு படுத்துவதாகும்.

    சென்ற நூற்றாண்டின் அரசியல் - சமூகக் கட்டாயங்கள் வேறு. இந்த நூற்றாண்டின் நிலை வேறு. காழ்ப்பும், கசப்பும் இல்லாமல் தனித்தே சிறக்கும் பெருமையைத் தமிழன்னைக்கு மீண்டும் கொடுப்போம்.

    ReplyDelete
  6. ஃஃ
    தமிழின் தொன்மையையும், தமிழுக்கும், சிவத்துக்கும் உண்டான ஆழ்ந்த தொடர்பையும் விளக்குவதற்கு, வடமொழி, ஆரியம், வேதங்களின் கீழ்த்தரம் என்று இத்தனை கட்டு அவசியம் இல்லாதது.
    ஃஃ

    இந்த பதிவுக்கான தேவை நான் முதல் பதிவில் சொன்னபடி நண்பர் ரவியின் பதிவின் மூலம் ஏற்பட்டது.
    அதில் நான் இட்டிருந்த சில கருத்துக்களில் சிவம் என்னும் தெய்வ தத்துவத்துக்கும்,தமிழுக்குமான தொடர்புகள் கேள்வி எழுப்பப்பட்டன;அதோடு மெய்ஞான தத்துவம் வடமொழியில்தான் இருக்கிறது,தமிழில் இல்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது.

    இந்த பதிவுத் தொடரை எழுத நான் பரந்த வாசிப்பு செய்ய வேண்டியிருந்தது.அந்த வாசிப்புக்கு முன்னர் கூட நான் தமிழின் வரலாறு பற்றி இவ்வளவு விதயங்கள் அறிந்தவனாயில்லை.
    நான் படித்தறிந்த விதயங்கள் இன்றைய பொதுவான சமஸ்கிருதம் என்ற மொழி ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு முற்றிலும் மாறாயிருந்தது.

    எனவே நான் மேன்மேலும் இதுபற்றிய தகவல்கள் தேடினேன்.தேடிப் படித்தவற்றின் சாரம் வியப்பளிக்கக் கூடியதாக இருந்தது.

    எனவே இவற்றைப் பற்றி சிறிது விரிவாகக் கூறும் தேவை ஏற்பட்டது.

    >>>
    யார் இந்த மஹாதேவ் சக்கரவர்த்தி? இவர் ஒரு நடு நிலை ஆய்வாளரா? இவர் எழுதுகிறார் - "பூதம்" என்றால் பேயாம், சிவன் பூதங்களின் தலைவன் என்றும், ஆகையால் சிவனுக்கு மற்றொரு பெயர் "பூதேஸ்வரன்" என்பதாம்! இவருடைய எழுத்தின் படி, பஞ்ச பூதங்கள் என்பது 5 பேய்கள்! இவருடைய எழுத்தை சிவத்தை ஆராயப் பயன்படுத்தலாமா? பெரியார் எழுதிய கீமாயனத்தை ராமாயண ஆய்வுக்குப் பயன்படுத்தலாமா?
    >>>


    இவர் எழுதிய விதயம் ஒன்றே.
    வேதங்களில் என்ன எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பது.
    அதில் பூதங்கள் 5 என்ற் சொன்னால் அவர் அக்காலத்திய வடமொழிப் புராணங்கள் எதையாவது மேற்கோள் காட்டியிருப்பார்.
    இந்த வடமொழிப் புராணங்கள் பெரும்பாலானவை மனம் போன படி எழுதிவைக்கப் பட்டவை,முன்னுக்குப் பின் முரணானவை என்று நிறுவவே நானும் முயல்கிறேன்.

    >>
    ஆரிய வாதம் ஆங்கிலேயருக்குத் தேவைப்பட்டது அடிமைத்தனத்தை மேம்படுத்துவதற்காக. ஆரிய வாதம் கம்யூனிச்ட்டுகளுக்குத் தேவைப்படுவது அவர்களுடைய சித்தாந்தத்தை பரப்புவதற்காக. ஆரிய வாதம் திராவிடக் கட்சிகளுக்குத் தேவைப் படுவது உணர்ச்சி தூண்டி அரசியல் செய்வதற்காக.
    >>

    நான் ஆரியவாதம் எதுவும் மேற்கொள்ளவில்லை;எப்படி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வந்து வியாபாரக் கொள்ளையடித்தார்களோ,எப்படி பாபர் காலத்திய முகம்மதியர்கள் வந்து ஆட்சியாளராக இந்தியாவைக் கைப்பற்றினார்களோ,அவ்வாறே ஆரியர்கள் என ஒரு இனம் இந்தியாவில் நுழைந்தது வரலாற்று உண்மை.
    இந்த ஆரியர்களுடன் தமிழினத்தில் இருந்த,வாழ்ந்த அறவாளர்கள்,அந்தணர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் எனக்கு விளங்காத புதிர்.

    இன்றைய பிராமணர்கள் என்றழைக்கப்படும் இனத்தவரை ஆரியக் கால ஆரியர்களுடன் தொடர்பு படுத்துவதை நானே எதிர்க்கிறேன் என்று டிஸ்கியில் சொல்லியிருக்கிறேன்.

    >>
    ஆரிய வாதம் என்பது வரலாறல்ல, ஒரு கூற்று மாத்திரமே.
    >>

    ஆரியர் வருகை வரலாற்று உண்மை என்றே நான் அறிகிறேன்;என்னுடைய வாசிப்பு அவ்விதமே அறிவுறுத்துகிறது.மேலும் அறிய விரும்பின் சீனிவாசய்யங்கார்,தேவநேயர் எழுதிய தமிழர் வரலாறு மற்றும் ந.சி.க எழுதிய சிந்துவெளி தமிழர் நூல்களைப் படிக்கலாம்.

    >>
    ஆரியர் எங்கிருந்தோ இங்கு வந்தார்கள் என்பது போல, ஆரியர்கள் இங்கிருந்து தான் வேற்றிடத்துக்கு பெயர்ந்தார்கள் என்றொரு கூற்றும் உண்டு. ஆரிய வாதமே புரட்டு என்று மற்றொரு கூற்றும் உண்டு.
    >>
    அப்படி எந்த வரலாற்றுக் கூறும் இல்லை;சுட்டினால் அறிய ஆவலாயிருக்கிறேன்.
    திராவிடர்கள்தான் இங்கிருந்து உலகம் முழுதும் பரவினார்கள் என்றும், ,இல்லை வெளியிலிருந்து வந்தார்கள் என்ற இரு வரலாற்றுக் கூறுகள் மட்டுமே இருக்கின்றன.( Dravidian Ascending Theory & Dravidian Descending Theory )ஆனால் 50 களின் ஆராய்ச்சியாளர்கள் Dravidian Descending theory முற்றாகத் தவறு எனப் பல தரவுகள் மூலம் நிறுவுகின்றனர்.விருப்பமிருப்பின் மேற்கண்ட நூல்களைப் படிக்கலாம்.

    >>
    தமிழின் தொன்மையை இப்படித்தான் (ஆரிய வாததைக்கொண்டு) நிலை நாட்ட வேண்டும் என்பது தமிழை இழிவு படுத்துவதாகும்.
    >>

    நிச்சயம் அல்ல;இவ்வளவு தொன்மையானது தமிழ் என்பதே அறியாமல் மெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற ஆதங்கமே இதை எழுதக் காரணம்.இன்னும் தமிழர்கள் பலர் வடமொழியில் பாடினால்தான் இறைவனுக்குக் கேட்கும் என்ற மாய உலகில் வாழ்கின்றனர்;இவற்றைத் தெளிவு செய்ய வேண்டிய அவசியம் தமிழர் மேன்மைக்கும்,தமிழின் மேன்மைக்கும் தேவையான ஒன்று.

    >>
    சென்ற நூற்றாண்டின் அரசியல் - சமூகக் கட்டாயங்கள் வேறு. இந்த நூற்றாண்டின் நிலை வேறு. காழ்ப்பும், கசப்பும் இல்லாமல் தனித்தே சிறக்கும் பெருமையைத் தமிழன்னைக்கு மீண்டும் கொடுப்போம்.
    >>
    உண்மை.காழ்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல;இன்றைய திராவிட அரசியல்வாதிகள் பிரச்சாரத்தை நான் ஏற்றுக் கொள்பவன் அல்ல என்பது என்னுடைய பல பதிவுகளைப் படிப்பவர்கள் அறிவார்கள்.
    என்னுடைய பல நண்பர்களில்,சிறந்த சில நண்பர்களில் பலர்,நான் பெரிதும் மதிக்கும் சில மனிதர்கள்,என்னுடைய ஆசான்களில் சிறந்த பலர் அனைவரும், இன்று பிராமணர்கள் என்று அறியப்படும் வகுப்பினர்களே;அவர்களை எந்தவிதத்திலும் இழிவு செய்ய நான் target செய்யவில்லை.
    ஆனால் இதற்காக சரியான வரலாற்றை நாம் இருட்டடிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை !

    ReplyDelete
  7. I landed to your blog from another comment of yours... Interesting views but very much biased. The Aryan invasion has been accepted by many that it's a false propaganda. Recently Edwin Bryant an american has done research and written a book "the Quest of vedic civilisation". Please read and think again in a neutral vein. When europeans landed into India, they were shocked to understand that Hinduism's concept of time rolls back to millions of years; but all along they have been preaching to their masses (back in europe) that world has been in existance only for around 2000 years. If people back in europe knew of such highly cultured civilisation, their fundamental religious belief would be shattered, so that was the foremost reason the theory was spread across. This is established by the letters written by Max Muller to his wife.

    Just for discussion, even if we accept the above view is false, a much simple practical point will prove that aryan invasion is a myth. If aryans had really suppressed tamils and ruled south India, then we should have found at the very minimum, a set of aryan artifacts in southern india that matches to Indus valley; also Historians couldn't find either the scripts matching to Indus valley or artifacts from that time period in south India.(but other invasions such as Pallava, Mughal have their impact on south indian life style - an invasion is different from mixture of races; the mixture could have happened very much at a latter point of time or races could have co-existed)

    These two reasons are sound and can help break the myth. In Dec 2005 BBC released an article quietly about the aryan theory myth and acknowledged it. check it out...

    Actually Sri Vaishnavism has done a lot better to Tamil and even now the Tamil Prabandhas are rendered first even before vedas in Vishnu tamils. I don't mean anything against saivaites, but truth is Tamil has been flourishing in the religious literatures than in any other form.

    ReplyDelete
  8. Dear Think Tank,
    Thanks for your comment.
    Always I tried not to be branded as biased WRT any of my writings.I am always open to discuss/explore if something contrary is brought in to my attention.
    Your point no 1:What do you try to say? You mean Europeans,because of the compelling reason to uplift their superior aging theory,spearheaded Aryan invasion theory? I am confused ! How that would have helped them?

    2.See,it is perceived by many,that Aryans didn't themselves became rulers,but became influential sect with the rulers,to the extent they can really ix what need to be preached,what need to be worshiped & things like that.And there seem to be bigger fight between the current south indians-then ancient tamils & aryan supporting north indian rulers.After prolonged fight,it was accepted that aryans won't invade into south india,but current south indians shouldn't go to north for livelihood.There had been some MOU arrived on this & one such news is found in one of the Sanskrit scriptures.(I will get that & tell later,i forgot it).When aryan doesn't have any of their own culture or knowledge,instead borrowed everything from tamils & took ownership of them in their own stride,how can you find artifacts of Aryans? And that too in south india?
    They might have been confined to north india based on post war agreement!

    3.Pl let me know more on the BBC article you are talking about,I am keen to know.

    And thanks for your coming & comment.

    ReplyDelete
  9. Very Good. Write more on this topic.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சிவமூர்த்தி.

      இந்த தலைப்பு தொடர்பாகப் படித்த பல விதயங்கள் குறிப்புகளிலேயே நீடிக்கிறது..தொகுத்து எழுத நேரப் பங்களிப்பு இல்லை..எனினும் இது முக்கியமானதும் தவிர்க்க இயலாததும்...நிச்சயம் எழுதுவேன்.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...