குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, April 16, 2008

54.இந்தியாவில் தொடரும் மன்னராட்சி முறை ????

பழந் தமிழ் இந்தியாவில் மன்னராட்சி முறை இருந்தது என்று வரலாற்றில் படித்திருக்கிறோம்.

ஆளும் மன்னர்,பின்னர் அவர்தம் குடும்பத்து வழித்தோன்றல்களே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்வார்கள்;மந்திரி,பிரதாணிகளின் மகவுகள் தந்தைகளின் ஆயுளுக்குப் பிறகு புதிய மந்திரி பிரதாணிகளாக அவதாரம் எடுப்பார்கள்.

நெடுங்காலமாக இந்தியாவில் நிலவி வந்த இவ்வழக்கம்,சிற்சில மாறுதல்களோடு மீண்டும் புழக்கத்துக்கு வருகிறது.

சுதந்திரம் அடைந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நேரு,பின்னர் சாஸ்திரிக்கு சிறிதுகாலம் விட்டுக் கொடுத்து விட்டு இந்திரா,அவரின் காலத்துக்குப் பின் ராஜீவ்,அவர் அகாலத்தில் மரணமடைந்துவிட்டதால்,வயதில் சிறிய அவர் மகனுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்தது காலம்.

இப்போது ராகுல்,பிரதமர் வேட்பாளராக காங்கிரஸின் தலைமைக்கு அடிவருடும்,அர்ஜூன் சிங்,மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஒருவர் பின் ஒருவராக முன் மொழியப் படுகின்றனர்.

ராகுல் அவரின் தகுதிகளாலும்,அனுபவ அறிவாலும்,நிரூபிக்கப்பட்ட திறனாலும் பிரதமர் வேட்பாளராக அறியப் பட்டால்,அது ஒத்துக் கொள்ளப் பட வேண்டியதே;ஆனால்,திணிக்கப் பட்ட கட்சிப் பொறுப்பைத் தவிர எந்த ஒரு பொதுப் பொறுப்பிலும் திறனாளராக செயல்பாடு காட்டாத அவர்,பிரதமராக தகுதி படைத்தவர்’என கூச்சமில்லாமல் காங்கிரஸ் கட்சியில் பல குரல்கள் கேட்கின்றன.

பின்னணியில் அமைதியாகப் புன்னகையுடன் வேடிக்கை பார்க்கிறார்,அவரின் அன்னை சோனியா.

இந்த காங்கிரஸ் அரசு அமையும் போதே சோனியா அரசுக் கட்டிலில் அமர முயன்ற அவர்,கலாம் (குடியரசுத் தலைவராக இருந்ததால்) சில அனுசிதமான கேள்விகளை எழுப்பியதால்,கடைசி நேரத்தில் பின்வாங்கி,தியாகி உருவம் எடுத்தார்.

இப்போது மைந்தனை சத்தமில்லாமல் முன்னிறுத்துகிறார்.
120 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸில் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு திறனாளர்களே முன்னிறுத்தப்படாதது,மிகப் பெரிய அவலங்களில் ஒன்று.

மாதவராவ் சிந்தியா,ராஜேஷ் பைலட் போன்ற இருந்த ஒரு சில திறனாளர்களும் அகாலமாக மரணித்ததும் அடுத்த அவலம்.

மாநில அளவில் மன்னராட்சிக் கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கின்ற கட்சிகளும்,தலைவர்களும் கூட ராகுலின்’முன்னிருத்தலை வரவேற்றிருக்கிறார்கள்;ஏனெனில் மாநில அளவில் அவர்களுக்கு இது போன்ற ‘எஜெண்டா’ இருக்கின்றது.

கம்யூனிசக் கொள்கைகளை கைக்கொள்ளும் சீனாவில் கூட அடுத்தடுத்த நிலையில் தகுதியான தலைவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்;இன்னும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆளும் கட்சிகள்,ஆட்சியின் தலைவர் சரியான முறையில் செயல்படாத போது,சடுதியில் வேறு தலைவர்களை முன்னிறுத்துகின்றன.

இந்தகைய கால கட்டத்தில் உலக அளவில் மிகு வேக வளரும் பொருளாதாரமாக அறியப் பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் தலைமைத்துவத்துக்கான தகுதிகள், திறமைகளின் பாற்பட்டு செயல்படாத நிலை இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...