குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, August 9, 2012

158.இனிது வாழ-நாளொரு பாடல்-9


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.



நூல் : திரிகடுகம்
ஆசிரியர் : நல்லாதனார்
பாடல் எண் : 12

பதம் பிரித்த பாடல்:

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.


முக்கிய சொற்கள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் - நட்பு

கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்; ஒற்றாடலில் சிறந்தவன்,பிறரின் காரியங்களை,கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிது கூட மறதிக் குணம் இல்லாதவனாக இருப்பான்; ஆகிய இம்மூன்று இயல்புடையவர்களும் தனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்று வாழும் ஒருவன் இனிமையான வாழ்வைப் பெற்றிருப்பான்.


டிட் பிட்ஸ்:

  • திரிகடுகம் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • திரிகடுகம் என்பது தமிழ்நாட்டில் மக்கள் எளியமுறையில் தயாரித்து,பயன்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
  • சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது திரிகடுகம்.உடலுக்கு வல்லமையும்,முத்தோஷத்தையும் நீக்கும் வல்லமையும் உடைய மருந்து
  • அதுபோலவே மூன்று ஒத்த அல்லது ஒரே நியதியில் அமைந்த கருத்துக்களைக் கூறி, அதனுடம் தொடர்புடைய அறிவுரை அல்லது வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்துவதால்,இந்தூல் திரிகடுகம் என்று பெயர்பெற்றது.
  • ஆசிரியர் ஆதனார், தொல்காப்பியரின் பரிச்சயம் உடையவர் என்பது தொல்காப்பியத்தின் சில எழுத்ததிகாரச் செய்யுள்களில் ஆதனாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. 
  • வேளாளன் என்ற சொல்லுக்கு உதவி செய்பவன் என்ற பொருளும் அகராதியில் கிடைக்கிறது; உலகம் அனைத்திற்கும் தேவையான உணவுப்பொருளை விளைவித்து, அனைவருக்கும் உதவி செய்யும் தொழிலைக் கொண்டிருப்பதால், வேளாளருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது !
  • நல்ல முயற்சி என்பது கடன்படாது வாழ்வதும்,சிறந்த உதவி என்பது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் உபசரித்துப் பராமரிப்பதும்,ஒருவர் தனக்குச் சொன்ன செய்திகளை மறவாது சிந்தையில் வைத்திருப்பதே நல்ல சிந்தை என்பதும் கூற வந்த கருத்து.




9  | 365

5 comments:

  1. எப்போதோ படித்தே ஞாபகம்... மறந்து விட்டது...

    மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் தனபாலன்.

      பல பாடல்கள் நாம் படித்திருப்போம்..ஆனால் பெரும்பாலுன் சட்டென்று நினைவில் இருக்காது...ஒரு வரியைப் பார்த்தவுடன் சட்டென்று பாடல் நினைவுக்கு வரும்...

      :))

      Delete
  2. கோளாளன் (கோள்-செங்கோள் ஐ ஆள்பவன், அரசன்) என்பான் குடியிருக்க அஞ்சாதான்’ என்றுதான் படித்த நினைவு....

    ReplyDelete
    Replies
    1. செங்கோலுக்கு வரவேண்டியது கோல். கோள் அல்ல.
      கோள் என்பது முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வது; கோள் சொல்லாதே என்று சொல்லப் படும் கோள்.
      இன்னும் அதிகம் தமிழைப் படியுங்கள்.

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சாணக்கியன்

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...