குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, August 3, 2012

152.ஆள்வினை - நாளொரு பாடல்-3



காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்

நூல்: நீதி நெறி விளக்கம்
ஆசிரியர்:குமரகுருபரர்
பாடல் எண்:52


பதம் பிரித்த பாடல்:
காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய் வினையின்
மூலம் அறிந்து விளைவு அறிந்து- மேலும் தாம்
சூழ்வன சூழாது துணைமை வலி தெரிந்து
ஆள்வினை ஆளப்படும்


முக்கிய சொற்கள்:
மூலம்- வேர்,காரணம்,நோக்கம்
வலி-வலிமை,திறமை
ஆள்வினை-முயற்சி
ஆளப்படும்-செய்யப்படும்


கருத்துரை:
நாம் ஒரு காரியத்தை முயற்சிக்கையில்,அக் காரியத்தின் நோக்கம் மற்றும் பயன் ஆகிய இரண்டையும் ஆராய்து,அக் காரியத்தை முடிக்க ஏதுவான நேரம் எது என்று ஆராய்ந்து, அதனை செய்து முடிக்க வல்ல இடம் எது என்பதையும் ஆய்ந்து தேர்ந்து, அவ்வினையைச் செய்வதற்கான துணையாக வருபவர்களின் திறமையும் வலிமையையும் ஆராய்ந்து, அக்காரியம் செய்ய முயற்சிக்கையில் நிகழக் கூடிய சுற்றுப் புற சூழலையும்,மக்களையும் ஆராய்ந்து, பிறகு முயற்சி  செய்தால்,அந்த முயற்சியானது தடைகளின்றி நிறைவேறும்.


டிட் பிட்ஸ்:
பொதுவாக விணை செய்யும் முறைக்கு இந்தப் பாடல் எடுத்துக் காட்டாகக் கொடுக்கப் பட்டாலும், போர் செய்யும் சூழலில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய விதயங்களைக் குறிப்பிடும் பாடல் இது.

காலம் அறிந்து என்ற பொருள்,தனக்கு உகந்த காலம் என்பதோடு,அவ்வினையை எவரிடம் அல்லது எவரை வைத்து முடிக்கப் போகிறோமோ அவருடைய சூழல் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.

இடம்-வினை முடிக்க வேண்டிய இடத்தை முடிவு செய்வது இரண்டாவதாக முக்கியமான செயல்.

சூழ்வன சூழாது- நமது வினைக்கு ஊறு விளைவுக்கும் காரணிகள் ஏதும் சூழ நேருமா என்பதை ஆராய வேண்டுவதும் இன்றியமையாதது.

துணைமை வலி- தமது துணைவர்கள் மற்றும் தனது எதிரில் நிற்பவர்களின் வலிமையும் எடை போட்டுப் பார்க்க வேண்டிய தேவையை வலியுறுத்துவது.

மூலம்- அவ்வினை செய்வதற்குரிய நோக்கம் சரியானதா என்பதை ஆராய வேண்டும் என்ற கருத்து

ஆகிய அனைத்தையும் ஒரு வினை செய்யப் புகுமுன் ஆராய வேண்டும் என்பது விளக்கம்.


3 | 365

2 comments:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...