குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, July 27, 2012

148.மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்


தி சண்டே இந்தியன் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன் வந்த குஜராத் முதல்வர் மோடியின் பேட்டி இது.

எனக்குத் தெரிந்து கடந்த 10 வருடங்களில் இவ்வளவு தெளிவாக,வளர்ச்சி-அரசாண்மை-மக்கள் முன்னேற்றம் பற்றி இந்தியாவில் ஒரு முதல்வர் பேட்டி அளித்து நான் படித்ததாக நினைவில்லை.சொல்வது தவறென்றால் என்னைக் குட்டுங்கள்..

உ.பி.யின் அகிலேஷ் யாதவ் பதவியேற்றவுடன் ஒரு பரவலாக இளம் முதல்வர் என்று செய்திகளில் அடிபட்டார்;ஆனால் அவரது செயல்பாடுகளைப் பார்க்கையில்,(20 லட்சம் தொகுதி நிதியில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கார், மின்தடைப் பிரச்னையை சரிசெய்ய மந்திரம் இல்லை...)பொங்கிய பாலில் ஊற்றிய நீராக எழுச்சியும் நம்பிக்கையும் அழுந்தி விட்டன.

மோடியின் மீதான விமர்சனங்கள் இன்னமும் இருக்கின்றன;அவை நிழலாக அவரைத் தொடரக் கூடும்.

மோடியைப் பற்றிப் பேசினாலே பலர் அவர் ஒரு பயங்கரவாதி என்ற அளவில் அவரைப் பற்றிய தூற்றல்களை முன் வைக்கின்றனர்.இந்த நேரத்தில் எனக்கு
சிங்கப்பூரின் உருவாக்கத்திற்குக் காரணமானவர் என்று அறியப்படும் சீனீயர் லீ(லீ க்வான் யூ),அவரது மிக சமீபத்திய பேட்டிகளின் தொகுப்பாக வந்திருக்கும் புத்தகத்தில்(ஹார்ட் ட்ரூத்ஸ் ஃபர் சிங்கப்பூர் டு க்ரோ), ஒரு கேள்விக்கு அளித்த பதில் நினைவுக்கு வருகிறது.

ஒரு தலைவர் அன்பானவராக அறியப்படவேண்டுமா,மரியாதைக்குரியவராக அறியப் படவேண்டுமா, அல்லது பயப்படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்பது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.( அவரே மிகவும் மதிக்கப்பட்ட,அச்சத்துடன் பார்க்கப்பட்ட ஒரு தலைவரே!).

லீ அவர்களின் பதில்: அது ஒவ்வொருவரின் தலைமைத்துவத்தைப் பொறுத்தது;ஆனால் நான் மரியாதைக்குரியவராகப் பார்க்கப்பட வேண்டுமா அல்லது அஞ்சப் படத்தக்கவராக அறியப்படவேண்டுமா என்றால்,அஞ்சப்படத்தக்கவராக அறியப்படுவதே அரசாண்மைக்கு நல்லது;அந்தக் கருத்தை நான் ஒரு பொருட்டாக எண்ண மாட்டேன்.

இந்த கான்டெக்ஸ்டில் இதைச் சொல்லியிருப்பதால் என்னை ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் வாதி என்று முத்திரை குத்தலாம்;ஆனால் முழுக்க முழுக்க நான் பரந்து பட்ட அரசாண்மை,மக்கள் முன்னேற்றம்,சீரான நிர்வாகம் என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன்.

மோடியைப் பற்றியும் இதை வித கருத்தாக்கம் நிலவுகிறது.

ஆனால் சந்தேகமின்றி அவர் ஒரு ஊக்கமாக செயல்படும் தலைவர்; பாஜக பிரதமர் வேட்பாளர் அவரே என்று தயக்கமின்றி ஒரு முகமாக அறிவிக்க வேண்டிய நேரம் இது !

நன்றி-தி சண்டே இந்தியன் பத்திரிகைக்கு


‘மக்களின் பங்களிப்புதான் வெற்றியின் ரகசியம்’’


பிரியங்கா ராய் | பிப்ரவரி 3, 2012 15:32
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் வருகிறேன்.  மேலும் அது முன்னேறியுள்ளது. உங்களால் எப்படி சாத்தியமானது? ஏதாவது மந்திரக்கோல் வைத்திருக்கிறீர்களா?

மக்களின் பங்கேற்புடன் அரசு நடப்பதுதான் நல்ல நிர்வாகத்தின் ரகசியமாகும். மாநிலத்து மேம்பாட்டுப் பணியை நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறோம். வளர்ச்சி என்பது அரசின் திட்டமோ, குறிக்கோளோ மட்டுமல்ல. அது மக்களின் இயக்கமாகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதை பரப்புவதற்காகவே சத்பவனா உண்ணாவிரதம் அனுசரிக்கப்பட்டது. வளர்ச்சியில் ஓர் உயரத்தை எட்டுவதற்கு நாம் விரும்புவோமெனில், நமது ஒற்றுமையைக் குலைத்து பிரிவினைக்குத் தூண்டும் வெறுப்பின் விஷத்தை அகற்றவேண்டும். எங்கள் சமூகத்தில் நிலவும் விஷத்தை அகற்ற முடிந்ததால்தான், தற்போது இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இன்று ஒவ்வொரு குஜராத்தியும் மாநில வளர்ச்சிப் பணி தொடர்பாக பெருமை கொண்டுள்ளார். இன்னும் கூடுதலாக வளர்ச்சிக்குப் பங்களிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதே சூழ்நிலையை முழு தேசத்திலும் கொண்டுவராவிட்டால் நாம் வளரமாட்டோம்.
இத்தனை வேகமான வளர்ச்சிக்கு வேறு காரணங்கள் உண்டா? 
நாட்டின் முழு வேளாண்மை வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், 2.4% மட்டுமே. ஆனால் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளில்  10 சதவிகிதத் துக்கும் மேல் வேளாண்மையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட குஜராத் வறட்சிக்கும், தண்ணீர் பிரச்னைகளுக்கும் உரிய இடமாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு முறையாவது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் டேங்கர் நீரை நம்பியிருந்தன. தொழில் வளத்தைப் பெருக்குவதற்காக விவசாயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லை. தீவிரமான தொழில் வளர்ச்சிக் கொள்கையோடு வேளாண்மை வளர்ச்சிக்காகவும் ஆற்றலையும் வளங்களையும் செலவிட்டோம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினோம். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்குபெற்றார்கள். மழைநீர் தடுப்பணைகள் கட்டுவதற்கு மக்களிடம் 60 சதவிகிதத்தை அரசு தருவதாகவும், மிச்சம் 40 சதவிகிதத்தை பங்களிக்கும்படியும் கேட்டோம். தொழில்நுட்பத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தோம். இதன்மூலம் 6 லட்சம் தடுப்பணைகள் மற்றும் மழைநீர் குளங்கள் கட்டப்பட்டன. இதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. புதிய குளங்களால் ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இன்று குஜராத்தில் கோதுமை, பருத்தி, வாழை, பப்பாளி, கரும்பு, தக்காளி என பலவிதமான பயிர்களைப் பார்க்கமுடியும். சௌராஷ்டிராவின் மிக மோசமான வறட்சி நிலவிய பகுதிகள்கூட வளம்பெற்றுள்ளன. தற்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் இருக்கும் தடுப்பணையை கவனித்துக்கொள்வதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதுதான் குஜராத் வளர்ச்சியின் ரகசியமாகும். ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறோம். உதாரணத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் குழந்தைகள் சேரும் விகிதம் 60 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 100 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. பள்ளியிலிருந்து இடையில் வெளியேறும் குழந்தைகளின் சதவிகிதம் 30 முதல் 40 % இருந்தது. தற்போது 2 சதவிகிதமாக காணப்படுகிறது. ஏனெனில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முடிவு செய்துவிட்டனர்.
நீங்கள் பல்வேறு வகையான உத்சவங்களை நடத்துகிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?
வெவ்வேறு திட்டங்களை ஆரம்பிக்கும்போது அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளாக மாற்றவே உத்சவங்களை நடத்துகிறேன். இவை வெறுமனே கொண்டாட்டம் மட்டும் கிடையாது. கடும்கோடையான ஜூன் மாதத்தில் நடத்தும் க்ருஷி உத்சவ நிகழ்வில் அரசு அதிகாரிகள் தங்களது குளிர்பதன அலுவலக அறைகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்திப்பார்கள். பருவ காலத்திற்கு முன்பு என்னென்ன செய்யவேண்டும் என்று மக்களுக்கு ஆலோசனைகள் கூறுவார்கள். இந்த க்ருஷி மகோத்சவம் முழு மாதமும் நடைபெறும். இதை உண்மையில் வியர்வைத் திருவிழா என்றே சொல்லவேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். நல்ல விதைகள், மண், உரங்கள் பற்றி விவசாயிகளிடமிருந்து அந்த மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஆய்வகங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை வயல்களுக்கு அழைத்துச் செல்கிறேன். இந்த நடைமுறை மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறது.

மண்வள அட்டை திட்டம் பற்றி கூறுங்கள்?
இந்தியாவில் மனிதர்களுக்கு ஆரோக்கிய அட்டை இல்லை. ஆனால் குஜராத்தில் மண்ணின் ஆரோக்கியத்துக்கான அட்டை உள்ளது. தனது மண்ணில் எந்தப் பயிர் சிறப்பாக வளரும் என்று விவசாயிக்கு அறிவுறுத்த இத்திட்டம் பயன்படுகிறது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நான் 10&ஆம் வகுப்பு மற்றும் 11&ஆம் வகுப்பு மாணவர்களின் உதவியை நாடினேன். அவர்களுக்கு மண் ஆய்வு செய்யும் பயிற்சி அளித்தோம். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் கோடை காலத்தில் இந்த மாணவர்கள்  ஆய்வு செய்வதற்காக திறந்தே இருந்தன. இதன்மூலம் மாணவர்களுக்கும் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஆய்வகங்களின் தரமும் உயரும். ஒவ்வொரு ஆண்டும் தங்களது மண்ணின் வளம் எவ்வகையில் இருக்கிறது என்பதை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். இதில் அரசின் பங்களிப்பு எங்கே இருக்கிறது? நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்கினோமே தவிர, மற்றதெல்லாம் மக்களின் பணிகள்தான். பால் உற்பத்தியை எடுத்துக்கொள்ளுங்கள்.  இந்த ஆண்டு 60 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளோம். இது ஓர் அதிசயமாகும். குஜராத் முழுவதும் கால்நடைகளுக்காக 3000 முகாம்கள் நடத்தியுள்ளோம். ஒரு மாடு இந்த முகாமுக்கு வருவதற்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரமே நடக்கும்படி பார்த்துக்கொண்டோம். கால்நடைகளை தொடர்ந்து இப்படியாக கண்காணிப்பதன் மூலம் அவற்றை அடிக்கடி தாக்கிய 112 வியாதிகளை ஒழித்துள்ளோம். கால்நடைகளுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மற்றும் பல் சிகிச்சை கொடுக்கும் ஒரே மாநிலம் குஜராத். இதனால்தான் 60 சதவிகித உற்பத்தி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் தங்கள் கால்நடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்த விவசாயிகள் 1600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
உ.பி. மற்றும் பீகாரை ஒப்பிடும்போது குஜராத் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். இது சரியல்ல. நாட்டின் எந்தப் பகுதி குடிமகனையும் புண்படுத்தும் விஷயம் இது. ஒவ்வொரு குடிமகனும் திறமை வாய்ந்தவரே. எல்லோரும் நாட்டை நேசிப்பவரே. வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்த ஒப்பீட்டை செய்யக்கூடாது. லால்பகதூர் சாஸ்திரி உணவு தானியங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று கூறியபோது, பீகார் மற்றும் உ.பி. மக்கள்தான் கடுமையாக உழைத்து தானிய கிடங்குகளை நிரப்பினர். லால்பகதூர் சாஸ்திரியால் முடிந்த விஷயம் மற்றவர்களால் ஏன் முடியவில்லை? அதனால் குடிமக்களை குற்றம் சொல்லவேண்டாம்.
குஜராத்தில் வளர்ச்சிப் பணிகளை எளிதாகச் செய்யமுடியும் என்று கூறுகிறார்களே?
மற்ற தலைவர்கள் பற்றி விமர்சிக்கவோ, எதிர்மறையாகப் பேசவோ நான் விரும்பவில்லை. 10 ஆண்டு முதலமைச்சர் அனுபவத்தில் இந்த நாடு வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த ஆற்றலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த வளர்ச்சியைப் பெறமுடியும் என்று என்னால் கூறமுடியும்.
அப்படி என்றால் என்ன மாற்றம் தேவை?
தலைவர்களிடம்தான் மாற்றம் தேவை. அவர்கள் வாக்கு அரசியலிலிருந்து வெளியே வந்து வளர்ச்சி அரசியல் பற்றி சிந்திக்கவேண்டும்.
குஜராத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் அதே அதிசயங்களை நிகழ்த்தமுடியுமா?
ஒவ்வொரு மாநிலமும் தனி இயல்பைக் கொண்டது. அந்த தனித்துவத்திலிருந்துதான் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவேண்டும். குஜராத் முதல்வர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் 100 சதவிகிதம் எனது ஆற்றலைத் தந்தேன். இந்தப் பணிகளிலேயே நான் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவேன். அதனால் வேறு சிந்தனைகள் எனக்கு இல்லை.
ஏகப்பட்ட பணிகள் உங்களைச் சுற்றியுள்ளன. தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறதா?
மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். இது போதாது எனத் தெரியும். மருத்துவர்களும், நண்பர்களும் என்னை எச்சரிக்கிறார்கள். ஆனால் எனது பணிநேரத்தை அதற்குமேல் சுருக்கிக்கொள்ளமுடியாது. ஆரோக்கியமாக இருப்பதற்காக யோகா, பிரணாயாம பயிற்சியை ஒன்று முதல் இரண்டு மணிநேரம் செய்கிறேன்.
ஊழலைப் பொறுத்தவரை உங்களது புத்தாண்டு தீர்மானம் என்ன?
என்னால் முழுமையாக ஊழலை ஒழிக்கமுடியும் என்று தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால், நான் ஊழல் செய்யக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன். அதன் விளைவை முழு அரசு அமைப்பிலும் காணலாம். கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எங்கள் மேல் இல்லை.

சிறிய பரப்பளவில் நல்ல நிர்வாகத்தையும் ஒழுங்கையும் எளிதாக அமைத்து விடலாம்;சிங்கப்பூர் மாடலை இந்திய மாநிலங்களுக்குப் பொருத்திப் பேசாதே என்று எனது நண்பர்கள் என்னிடம் அடிக்கடி விவாதங்களிடேயை சொல்வதுண்டு.அதை மறுதளிப்பதற்காற சரியான ஆவணம் மேற்கண்ட பேட்டியும்,மோடியின் செயல்பாடும்...

வெல்டன் மோடி !

2 comments:

  1. நல்ல அலசல்...
    விளக்கமான பகிர்வு...
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி..திரு தனபாலன்..

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...