குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, May 30, 2012

142.என்ன நடக்கிறது பெட்ரோல் விலையில் ? - 1



இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.7.50 அதிகரித்ததும் நாடெங்கும் எழுந்த கூக்குரலும் பின்னர் ரூ 1.05 வரை இந்த அதிகரிப்பு குறைக்கப் படலாம் என்றும் அறிவிப்பும் வருகின்றன.

இந்த விலை விதிப்புக்கு பல்வேறு அரசியில் கட்சிகளும் போராட்டம் அறிவித்து அரசுக்கு எதிரான அறிக்கைகள் அளித்து ‘நான் ரொம்ப யோக்கியன்’ என்னும் விதமான கருத்தாக்கத்தைப் பரப்பி விட்டன;இனி அந்தந்த கட்சித் தலைவர்கள் ஆட்சியில் இருப்பதோ இல்லாததையோ பொறுத்து மலைவாச இடங்களைக்கோ அல்லது பெங்களூருக்கோ ஓய்வெடுக்கப் போய் விடுவார்கள்.

உங்களையும் என்னையும் போன்ற நாதியற்ற இந்தியர்கள் நான்கு நாட்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் திட்டிவிட்டு தண்ட இழவே என்று எவ்வளவு விலை கொடுத்தாவது பெட்ரோல் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனத்திலோ அல்லது காரிலோ போக ஆரம்பித்து விடுவோம்.

உண்மையில் பெட்ரோல் விலை நிர்ணயத்தில் என்ன நடக்கிறது? அடிக்கடி பெட்ரோல் விலை ஏற்றப்படும் போது நடைபெறும் கொந்தளிப்புகளைத் தடுக்க முடியாதா?

விவரங்கள் கொஞ்சம் சிக்கலானவையும்,நிறைய சுவாரசியமானவையும். எப்படி என்று பார்க்கலாம்.

எண்ணெய் தொகுப்பு நிதி(Oil Pool Account)

2002 ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன்னால் வரை இந்திய அரசு, பெட்ரோலியப் பொருள்களின் விலையை அரசே நிர்வகித்து வந்தது;அதோடு இந்த விலை நிர்ணயத்தில் நிகழும் சாதக பாதங்களைச் சமாளிக்க ஆயில் பூல் அக்கவுண்ட் என்ற ஒரு தனித் தொகுப்புத் நிதியை வைத்திருந்தது;இதனால் சர்வதேச சந்தையில் க்ரூட் விலையில் என்ன மாற்றங்கள் வந்தாலும் அரசு நிர்ணயிக்கும் விலையின் மூலம் அந்த தனித் தொகுப்பு அக்கவுண்டிற்கு பணம் சேர்ந்து கொண்டோ குறைந்து கொண்டோ வந்தது

2002 ஏப்ரலுக்குப் பிறகு (இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் போன்ற) ஒஎம்சி (Oil Marketing Companies) நிறுவனங்கள் தாங்களே பெட்ரோல் பொருள்களுக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கிய அரசு அதோடு ஆயில் பூல் அக்கவுண்ட்டை ஒழித்து விட்டு அதை பொது வரவு செலவு அறிக்கையோடு சேர்த்து விட்டது.

உங்களுக்கெல்லாம் பெட்ரோல் க்ரூட் ஆயில் எனப்படும் எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப் பட்டுத்தான் எடுக்கப்படுகிறது என்று தெரியும்.இந்த க்ரூட் ஆயில் பெருமளவு (76 %) இறக்குமதிதான் செய்யப்படுகிறது. எனவே ஆதாரமான பெட்ரோலின் விலை இறக்குமதியாகும் க்ரூட் ஆயிலின் சர்வதேச விலையைப் பொறுத்து மாறுபடும் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்வோம்.

இந்த க்ரூட் ஆயில் சுத்திகரிப்பைதான் இந்திய அரசு பங்குதாரராக இருக்கும் ஒஎம்சி எனப்படும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் செய்கின்றன.
இந்த எளிய தொடர்பைப் புரிந்து கொள்ளும் ஆதாரமான இந்தியர்கள் கேட்கும் கேள்வி, ‘சரி, க்ரூட் விலை உயரும் போது பெட்ரோல் விலையை உயர்த்தும் ஒஎம்சி நிறுவனங்கள் சர்வதேச விலை குறையும் போது ஏன் இந்திய பெட்ரோல் பொருள்களின் விலையைக் குறைப்பதில்லை? என்பது.

இதற்கான பதிலைப் புரிந்து கொள்ள மேலும் பல விதயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


விலைப் பகுப்பு விவரம்
 க்ரூட் எண்ணெயில் இருந்து பெறப்படும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கான விலை ஒரு ரூபாய் என்று வைத்துக் கொண்டால்,பெட்ரோல் சில்லரை விலையில் ரூ 2.20 க்கு விற்கப் படுகிறது. எப்படி? இப்படித்தான்..

இறக்குமதியாளருக்கான கமிஷன் - 1 %
இறக்குமதி வரி - 4%
கலால் அல்லது உற்பத்தி வரி - 32%
விற்பனை வரி - 17%

ஆக பெட்ரோல் விலையில் 54% வரிகளினால் ஏற்படுகிறது. இதில் 17% சத வரியை மாநிலங்களும் மத்திய அரசுகளும் பங்கிட்டுக் கொள்ளும் போது எஞ்சிய 37% மத்திய அரசின் பணத்தொகுப்புக்குப் போகிறது.





இதே இடத்தில் இன்னொரு விவரத்தையும் பார்த்து விடுவோம். இந்திய அரசுக்கான வரவு செலவுத் திட்ட விவரங்களின் படி அரசுக்கான வருவாயில் முக்கிய வருவாய் இனங்கள் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்புகளிலிருந்து வருகிறது. அதில் நேரடி வரிவிதிப்பிலிருந்து வரும் வருமானமும் எண்ணெய்ப் பொருள் உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மறைமுக வரிவிதிப்பிலிருந்து வரும் வருமானத்திற்குமான விவர விகிதங்களின் பகுப்பு விவரம் பின்வருமாறு…



ஆக விலைச் சுமையின் பெரும் பகதி எதனால் வருகிறது என்பது ஒரளவு இப்போது புரியும்.




சுத்திகரிப்பு விளைபொருட்கள்(Refinary By Products)
ஒஎம்சி நிறுவனங்கள் க்ரூட் ஆயிலைச் சுத்திகரிக்கும் போது பெட்ரோல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு,டீசல் ஆகிய பொருட்களோடு எத்தனால், போன்ற மற்ற துணைப் பொருள்களும் கிடைக்கின்றன.ஆக க்ரூட் எண்ணெயின் விலையில் சர்வதேச விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நான்கு பொருள்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடப்பது இல்லை

மானியக் கிணறு
பல நாடுகளில் பெட்ரோல் விலையின் ஒரு சிறிய ஒப்பீட்டைப் பார்க்கலாம்.

Country
$ per Ltr 2010
`/ ltr
$ per Ltr 2011
`/ ltr
$ per Ltr 2012
`/ ltr
% Deviation from India, 2012
Australia
1.20
53.80
1.42
65.00
1.54
78.60
8%
Bahrain
--
--
0.21
10.00
0.21
11.90
-84%
Doha, Qatar
--
--
0.22
10.20
0.27
14.20
-81%
Dubai, UAE
--
--
0.47
21.30
0.48
24.40
-67%
Germany
--
--
2.17
100.20
2.27
113.30
55%
Great Britain
--
--
--
--
2.18
118.90
63%
Hongkong
--
--
0.78
35.10
2.21
108.90
49%
Hungary
--
--
2.09
92.70
2.14
110.30
51%
India
1.22
56.00
1.48
72.90
1.48
72.90
--
Iran
0.37
17.40
0.39
17.40
--
--
--
Ireland
--
--
1.99
103.20
2.06
102.80
41%
Italy
1.83
83.00
2.07
102.30
2.36
118.60
63%
Japan
--
--
1.84
94.30
1.84
94.30
29%
Malaysia
--
--
0.62
28.10
1.90
33.39
-54%
Mexico
--
--
--
--
0.80
40.80
-44%
Netherland
--
--
2.40
110.80
2.42
121.30
66%
New Zealand
--
--
1.55
70.00
1.67
91.00
25%
Nigeria
--
--
--
--
0.56
31.30
-57%
Norway
--
--
2.47
109.10
2.62
130.90
80%
Pakistan
0.79
36.60
0.97
45.80
1.16
59.00
-19%
Poland
--
--
1.07
52.60
1.81
88.10
21%
Russia, Moscow
--
--
--
--
1.02
50.20
-31%
Scotland
--
--
--
--
2.29
124.90
71%
SriLanka
1.01
46.40
1.14
52.90
1.25
61.70
-15%
Sweden
--
--
2.34
103.40
2.25
112.40
54%
Tel Aviv, Israel
--
--
--
--
2.11
103.90
43%
Thailand
--
--
--
--
1.39
71.10
-2%
UK
1.94
86.70
2.21
99.10
2.20
119.80
64%
USA
0.64
30.00
0.96
48.40
1.07
53.70
-26%

இந்த அட்டவணையில் கடைசி மேல்கீழ் வரிசையில் அந்தந்த நாடுகளின் விலை இந்தியாவின் விலையிலிருந்து எந்த அளவிற்கு அதிகம் அல்லது குறைவாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். அதாவது இங்கிலாந்தின் பெட்ரோல் விலை இந்தியாவில் விலையை விட 64 சதம் அதிகம்;அமெரிக்காவின் பெட்ரோல் விலை இந்திய விலையை விட 26 சதம் குறைவு.
எப்படி சில நாடுகள் பெட்ரோல் விலையை குறைந்த அளவில் வைக்க முடிகிறது??

காரணம் இந்தியாவில் நிலவும் மானியங்கள் !!

முன்பே க்ரூடிலிருந்து பெட்ரோல் தவிர டீசல், மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு போன்றவற்றோடு மேலும் சில துணைப் பொருட்களும் கிடைக்கின்றன என்று பார்த்தோம்; அப் பொருட்களின் உற்பத்தி விகிதாசாரம் என்னவென்றும் பார்த்து விடுவோம்.அதாவது ஒரு யூனிட் க்ரூட் ஆயிலைச் சுத்திகரிக்கும் போது கிடைக்கும் விளை பொருட்கள் 100 சதம் எனில், அதில் 7 சதம் மட்டுமே பெட்ரோல். 36 சதம் டீசல், மண்ணெண்ணெய் 8 சதமும் சமையல் எரிவாயு 9 சதமும் மற்ற பொருட்கள் 40 சதமும் கிடைக்கின்றன..



இதில் டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவிற்கான உற்பத்தி விலை இன்றைய அவற்றின் சந்தை விலையை ஒப்பிடும் போது பெருமளவு குறைவாக இருப்பதாக ஒஎம்சி நிறுவனங்களின் கணக்கீட்டின் படி அரசு பின்வருமாறு மானியத் தொகையைப் பட்டியிலிடுகிறது

பெட்ரோல் - ரூ. 9.5 ஒரு லிட்டருக்கு
மண்ணெண்ணெய் - ரூ. 21.0 ஒரு லிட்டருக்கு
டீசல் - ரூ 11.3 ஒரு லிட்டருக்கு
சமையல் வாயு - ரூ 380.0 ஒரு சிலிண்டருக்கு

இந்த வித்தியாசத்தால் ஏற்படும் இழப்பை அரசு மானியமாக ஆயில் பத்திரங்கள் (Oil Bonds) மூலமும் மற்ற இழப்பீட்டு வடிவிலும் வழங்குகிறது. எனினும் இப்பற்றாக் குறை 2010 அளவில் 80000 கோடிக்கும் அதிகம் என்று ஒஎம்சி நிறுவனங்கள் குறைப்பட்டுக் கொள்கின்றன.

சுமார் 74 ரூபாயான பெட்ரோல் விலையில் ஏறத்தாழ 55 சதம் வரிகளினால் ஆனது என்று சொன்னேன்;அதே நேரத்தில் அரசு மானியமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.5 வழங்க வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறேனே..குழப்பமாக இருக்கிறதா ?  

சிறிது அலசினால் குழப்பம் தெளிந்து விடும்....

-தொடரும்

2 comments:

  1. சிறப்பான விளக்கம்....மிக்க நன்றி... விரைவில் தொடரவும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்குக் பாராட்டுக்கும் நன்றி...

      விரைவில் தொடர்கிறேன்.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...