குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, April 2, 2010

119.குறுந்தொகை'கள்-02042010

பதிவர்களுக்கான சென்னை குழுமம் அல்லது சங்கம் அமைப்பதைப் பற்றிய பலரது பதிவுகள்-நண்பர் பைத்தியக்காரனின் கோபமான,வருத்தமான பதிவு,அதற்கு உ.த வின் எதிர்ப்பதிவு உள்பட-படித்த போது சில எண்ணங்கள் தோன்றியது.

உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்தானே புலவர் தொழில்!
ஆனால் உம்பேச்சு கா..வரைக்கும் போயிருக்கும் போல இருக்கிறது....

முதலில் அப்ஜெக்டிவ் என்ன என்பது முக்கியம்;என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

அதைப்பற்றிய தெளிவு இல்லையென்றால் குழப்பம்தான் மிகும்;இரண்டாவதாக இது அதியமான் சுட்டியிருப்பது போல ஒரு சமூகக் குழுமம் மட்டுமே.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத போதே இந்த வித சந்திப்புகள் மகிழ்வைத் தரும்.

இந்தப் பின்னணி வெண்பூவின் பதிவு மிகவும் யோசிக்க வைத்தது.கேபிள் சங்கர் குழுமப் பதிவு தன்னுடைய ஐடியில் இருந்து உருவாக்கப் பட்டதால் அக்டோபர் 09 காட்டுகிறது என்று சொன்னாரே தவிர ஏன் இத்தனை காலம் ஒன்றும் முன்னெடுப்பு இல்லை;இப்போது என்ன அவசரம் என்பதற்கெல்லாம் பதில் இல்லை.

ஆக்டிவ் ஆன பதிவர்கள் சிலர் அமைப்பு வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்கள்;அவர்களுக்கான இருக்கும் இயல்பான exuberance காரணமாக இருந்தாலும்,தன் முனைப்பு|முன்னிறுத்தல் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமே.ஆனால் என்ன அப்ஜெக்டிவை மனதில் வைத்து நாம் முயற்சிகளைச் செய்கிறோம் என்பது நர்சிம் சொன்னதைப் போல முக்கியம்.

குறிக்கோள் இலாது கெட்டேன் என்பது வாசகர் வாக்கு!

இதற்கெல்லாம் மேல் ஒரு அமைப்புக்குள் பணப்புழக்கம் வரும் போது அது சார்ந்த பல பிரச்னைகளும் புழுக்கங்களும் கூடவே வரும்;இந்த புழுக்கங்கள் உண்மையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று முனைந்த தன்னுடைய நேரம் முயற்சிகளைத் தரும் சிலருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தரும்;இதை பல அமைப்புகளில் பார்த்து அனுபவித்ததால் சொல்கிறேன்.மேலும் அமைப்புகளின் சொத்துக்களை|பணத்தைக் கையாள்வதற்கு சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அளவுக்கு தன் நேர்மை கொண்டவர்கள் அவசியம்;அவர்கள் கண்டறியப் பட்டு விட்டார்களா என்று சராசரி வலைப் பதிவனுக்கு இருக்கும் கேள்விக்கு பதில் வேண்டும்.
எவராவது அரசியல் சார்புரியவர்கள் இப்பொறுப்புக்க வந்தால்,அமைப்பு ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் கூட்டங்கள் சட்டசபை போன்ற அடிபிடிக் கூட்டங்களாக மாறும் சாத்தியங்கள் மிக அதிகம்.

இப்போதைய நிலையில் ரைட்டர்ஸ் கில்ட் போன்ற தரமாக வைக்கப்படும் வலைப்பதிவுக் கருத்துக்களுக்கு கருத்துச் சுதந்திரம் தரும் அல்லது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அளவுக்கான ஒரு அமைப்பு என்ற அளவில் அக்கருத்து வரவேற்கப்படவேண்டியது;அந்த அமைப்புக்குள் வரும் பதிவர்கள் நாகரிக எழுத்துக்கான உறுதிமொழியைத் தரவேண்டுவதும் அவசியம்.

புத்தகமெல்லாம் வெளியிட்ட ஒரு பிரபள(பிழை அல்ல) பதிவன் மாற்றுக் கருத்தை ஏற்க மனமின்றி,முக்காடு போட்டுக் கொண்டு முட்டுச் சந்தில் மூத்திரம் அடிப்பது போல என்னுடைய பதிவில் முகமற்றுக் கழிந்து விட்டுப் போயிருந்தான்.அவன் போன்ற நபர்கள் அமைப்புக்குள் அல்லது பொறுப்புக்குள் இருந்தால் கதை கந்தலாகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சூழலை கற்பனை செய்யுங்கள்-நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ கூகுள் குழுமம் பதிவு வைத்திருக்க விரும்புவோர் வருடத்திற்கு 100 அமெரிக்க வெள்ளி செலுத்த வேண்டும் என்று அறிவித்தால் 90 சதவிகிதப் பதிவர்கள்|பதிவுகள் காணாமல் போகும் நிலை வரலாம்!அப்போது இருக்கும் 10 பதிவர்கள் சங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதையும் கடைசி அஜண்டாவாக இப்போதே யோசித்து வைக்கலாம்!!

இப்போதைக்கு தோன்றுவது...போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கப்பா!

()


ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போதுதான் பார்த்தேன்.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல என்று ஒரு பதப் பிரயோகம் எங்கள் பக்கங்களில் சொல்வார்கள்,அதுதான் நினைவுக்கு வந்தது.காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது!

இதைப்பற்றிய கார்க்கியின் பதிவை 200 சதம் ஆதரிக்கிறேன்;வழி மொழிகிறேன்.

ரீமாவின் தொடையை மட்டும் நம்பி 32 கோடி வேஸ்ட்!
இதைப் பற்றி(மேல் வரியைப் பற்றி அல்ல,ஆ.ஒ.பற்றி !) விரிவான பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

()

ஐபிஎல் போட்டிகளைப் பற்றி எழுதாவிட்டால் சாமி கண்ணைக் குத்துமாமே..சச்சின் மற்றும் ஹர்பஜனின் சரவெடிகள் வாண வேடிக்கைகள்!தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளையும் பார்க்கவோ அல்லது செய்திகளைக் கவனிக்கவோ கூட முடியாத அளவுக்கு நேர மேலாண்மைக் குடைச்சல்கள் இருக்கின்றன!

()

சென்னை மயிலையில் ஒரு 1BHK முதல் தள வீடு நல்ல சூழலில் வாடகைக்கு இருக்கிறது-சித்திரக்குளம் அருகில்;கார் நிறுத்த வசதிகள் இல்லை;முற்றிலும் சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள்(மட்டும்) வரவேற்கப் படுகிறார்கள்.மின்மடலில் தொடர்பு கொண்டால் விவரங்கள் பெற்றுத் தருகிறேன்.


()

இப்போதைய புதிய வரிசை இண்டெல் ப்ராசசர்கள் ஐ வரிசையில் வருகின்றன.இத்தகைய மடிக்கணினிகள் 64 பைட் என்று வருவதாகச் சொல்கிறார்கள்(முந்தையவை 32 பைட் வகை).இந்த வகை கணினிகளில் மைக்ரோசாஃப்டின் 2003 நெட்வொர்க் இயக்கு மென்பொருள்(ஆபரேட்டிங் சிஸ்டம்) சரிவர வேலை செய்யாது என்று ஒரு கணிப்பு சொல்கிறார்கள்.நிபுணர்கள் எவராவது இருந்தால் சிறிது தெளிவித்தால் மகிழ்வேன்.

The requirement is to have MS 2003 network OS to be installed in machines with i-3/5/7 series Intel processors.

Any solution?


******

4 comments:

  1. பெருந்தாக்கமா இருக்கேண்ணா குறுந்தொகை.

    நல்ல கருத்துகள்.

    ReplyDelete
  2. திரும்பவும் ஆயிரத்தில் ஒருவனாஆஆ??

    :)

    ReplyDelete
  3. @ நர்சிம்-
    சிம்மம் சிங்கிளா முதல்ல வந்துருக்குப்பா..நன்னி..

    பெருந்தாக்கமெல்லாம் இல்லை நண்பரே,எல்லாப் பதிவுகளையும் படித்த பின்பு எனக்குத் தோன்றியதை எழுதினேன்..வெண்பூவின் பதிவின் பல கருத்துக்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய அளவிலே இருக்கின்றன..

    @ஷங்கர்
    கூல் நண்பா..ஆனால் படம் பார்த்து விட்டு படு காண்டாத்தான் இருக்கிறேன் !

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...