குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, November 16, 2009

110.குறுந்' தொகைகள்-161109

இலங்கையில் இந்த வருட மத்தியில் நடந்த கோர மனித இன அழிப்பு இந்த நூற்றாண்டின் மிகப் கொடூரமான மனித அழிவுகளில் -human genocide-முக்கியமானது என்று சொல்லலாம்.இதன் கதாநாயகர்கள் இலங்கையில் மூவர் என்றால் அதற்கு கதை வசனம் எழுதிய தமிழக வசனகர்த்தாவும் தில்லி இயக்குனர்களும் மலையாள டெக்னீஷியன்களும் பேருதவி புரிந்தார்கள்.

திரை விழுந்து பலகாலம் ஆன இப்போது கதாநாயகர்களுக்குள் லாப நட்டக் கணக்கு பற்றிய சண்டை துவங்கியிருக்கிறது;தமிழர்களுக்கான போரு(அழிப்பு)க்குப் பின்னான நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று அப்பவே சொன்னேன்'வகையான கதைகள் வெளிவருகின்றன.ஆடு நனைகிறது என்று அழுத ஒநாய்க் கதைகள் நினைவுக்கு வருகிறது.

இன்னும் சிறிது காலத்தில் நடைபெற்ற அவலங்கள் பற்றிய மேலும் பல பகீர்த் தகவல்கள் வரலாம்.

எல்லாவற்றிற்கிடையிலும் நவம்பர் 27 ஏதாவது அற்புதம் கொண்டுவருமா என்று ஏக்கங்கள் பல திசைகளில் நிலவுகின்றன;பல விமர்சனங்கள் இருந்த போதிலும் ஒரு மனிதனின் இருப்பும்-காணப்படா தன்மையும் இலங்கைத் தமிழர்களில் தோற்றுவித்திருக்கும் பெரும் மாறுதல்கள் அவலத்திற்கும் வியப்பிற்கும் உரியன.

பாரா எழுதிய ஒரு கட்டுரையில் போல புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மனிதர் என்ற நிலையிலிருந்து ஒரு தத்துவம் என்ற நிலைக்கு மாறி வெகுகாலம் ஆகிவிட்டது'என்பது முற்றிலும் உண்மை.

**********

டெண்டுல்கரின் கிரிக்கெட் உலகின் 20 ஆண்டுகள் எங்கும் கொண்டாடப்படுகின்றன.டெண்டுல்கரின் சாதனைகளை வேறு எவரும் தொடமுடியாதவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் ஆஸ்த்ரேலியத் தொடர் அவர் நினைத்திருந்தால் வெல்லப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
5ஆவது ஆட்டத்தின் 175 ரன்கள் நிச்சயம் ஒரு ஜெம்'மான ஆட்டம்தான்;சொல்லப்போனால் சச்சினின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது எளிதில் வரும்.ஆனால் அவரால் அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.

ஒரு 19 ரன்கள்!!!


போட்டி ஆரம்பத்தில் 17000 ஐத் தொட 7 ரன்கள் எடுக்க அவர் செலுத்திய கவனத்தில் பாதியைப் கடைசி 19 ரன்கள் எடுக்கவும் செலுத்தி இருக்கலாம் !

இது உண்மை,பலர் என்னை விமர்சிக்கத் தயாராக இருந்தாலும் !(எங்கேப்பா புரூனோ?)

**********

ஒரு பயிற்சி சோதிடக் கலையின் பல புத்தகங்களுடன் உருட்டிக் கொண்டிருந்த 8 மாத காலம் முடிவுக்கு வந்திருக்கிறது;இனி அவற்றை விசாரத்துக்கு எடுத்துக் கொள்ள உத்தேசம்.

இதற்காகவே ஒரு வலைமனை எப்போதோ தயாராகி விட்டது;ஆனாலும் அதில் ஆரம்பத்தில் போட்ட ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர அதைத் தொடவேயில்லை.இனி அதிலும் பதிவுகள் வரும்.

என்னுடைய இந்த 8 மாத காலத் தேடலில் எனக்கு சோதிடக் கலை புரிந்ததோ இல்லையோ,பளிச்சென்று புரிந்த இன்னொரு விதயம்-தமிழில் சோதிடம் பற்றி முழுதாக அறிய நல்ல,படிப்புச் சுவையுடன் கூடிய அதே சமயம் உள்ளுறையில் சொதப்பாத புத்தகம்,இல்லை என்பது.அல்லது அது என் கண்ணில் படவில்லை!

8 மாதம் சோதிடம் படித்து நீ என்ன கண்டாய் என்ற கேள்விக்குப் பதில்:மனிதர்களைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அது இன்னும் மேம்படுத்தியிருக்கிறது.தவிர்க்க இயலாத சில நிகழ்வுகளை முன்னுணரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.என்னுடைய முந்தைய பகுத்தறிவும் சில நுண்கலைகளும் பதிவின் சாரத்தில் நம்பிக்கை கூடியிருக்கிறது-thanks to jolly Jumber & Muthuswami.

:-)

*********

மரபணு மாற்றப்பட்ட தாவர விதைகள் பற்றிய ஒரு பதிவு யாரோ எழுதி இருந்தார்கள்.தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இதன் தாக்கம் பெரிதாக உணரப்படுகிறது.

காய்கறி பயிரிடும் கிராமப் பெரியவர்கள் பலருடன் அளவளாவும் போது அவர்கள் சொல்வதைக் கேட்டால் பகீரென்கிறது;சாதாரண வகை விதைகள் அதாவது நாட்டுக்காய்கறிகளின் விதைகள்,இப்போது கிடைப்பதில்லையாம்.விதை சேமிப்பாளர்களும் நாட்டுப் புறங்களில் இல்லை.காரணங்கள் பொருளியல் சார்ந்தவை.

கிராமப் புறங்களில் கிடைக்கும் புது வகை தக்காளி கல் குண்டு போல 20 நாட்களுக்குக் கெடாமல் கிடக்கிறது;அதை சமையலில் பயன்படுத்தும் போது 20 நிமிடம் வதக்கினாலும் தக்காளி வதங்குவதில்லை,தோல்தான் சுருங்குகிறது.உணவின் ருசியிலும் தக்காளியின் சுவை தெரிவதில்லை.ரப்பர் துண்டைக் கடித்தது போலத்தான் இருக்கிறது.

கத்திரியிலோ சமைத்த குழம்பில் உரவாடை மூக்கை அடைக்கிறது.பயிரிடும் பெரியவர்கள் சொல்வது:நாட்டுத் தக்காளி தை,மாசி,பங்குணி,சித்திரை போன்ற நான்கு மாதங்களில்தான் நல்ல மகசூல் தரும்;வருடத்தன் மற்ற நேரங்களில் பயிரிட்டால் 4 காய் காய்க்கும் செடியில் 1 காய்தான் காய்க்கும்.ஆனால் நன்றாக விளையும் அந்த 4 மாதங்களில் தக்காளியின்(கொள்முதல்) விலை கிலோ 2 ரூபாய்தான்;பயிரிட்டும் நஷ்டமடைவதை விட வருட முழுதும் நன்றாக விளைச்சல் தரக் கூடிய ரப்பர் தக்காளி-ஆம்,அப்படித்தான் அழைக்கிறார்கள்-மேல்,பயிரிடுவோர் கண்ணீர் வடிக்காமல் இருப்பார்கள்...

விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளும் அரசும் விதைகளை மேம்படுத்தும் ஆய்வு மற்றும் விவசாயப் பொருள் சேமிப்பு\பாதுகாப்பில் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாவிட்டால் தக்காளியின் சுவை நம் குழந்தைகளுக்கு மறந்து போகலாம் !

********

உன்னைப் போல் ஒருவன் பார்த்தேன்.முன்னரே வெட்னஸ்டே பார்த்திருக்கிறேன்.

தோன்றிய எண்ணம்:கமலின் அடுத்த சொதப்பல்.கூடவே அவரின் தொலைக்காட்சி நேரலையில் நஸ்ருதீனை எள்ளாமல் எள்ளிப் பேசிய பேச்சு வேறு நினைவில் வந்து எரிச்சல்படுத்தியது.

கமல்,do some thing viewable next time!

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...