குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, November 2, 2009

108.குறுந்'தொகைகள்-1109

ஆண்கள் வெளியே சென்று விட்டு வந்தால் சுகமாகச் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்;பெண்கள் அவர்களைக் கவனித்து,பருக ஏதாவது கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர்தான் சகஜமாகப் பேச ஆரம்பிப்பார்கள்.


வீட்டில் இருக்கும் பெண்களோ கணவர் வந்தவுடன் சொல்ல ஆயிரம் விதயம் வைத்திருப்பார்கள்;வந்து நுழைந்த மாத்திரத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாயிருப்பார்கள்.ஆனால் ஆண்கள் காது கொடுத்தால்தானே? மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது முட்டாள் பெட்டியைத் தட்டி விட்டு அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்;இன்னும் சில வீடுகளில் இவற்றைப் பொருட்படுத்தாமல் கணவனிடம் பேச\பகிர்ந்து கொள்ளது துவங்கும்போது செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.


இந்த ஆண்\பெண்களுக்கிடையான இடைவெளியை அதிகப் படுத்தும் முக்கியக் காரணமாகக் கூட பார்க்கப் படுகிறது.சில பெண்கள் என்ன மனுசன் இவன்? என்று சலித்துக் கொள்வதும் நடக்கும்.ஆண்களின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டி ஆண்களே பகிரத் தெரியாதவர்கள் என்ற பொதுமைப் படுத்திய நிந்தனையும் இதனால் எழுகிறது.

இதில் எது சரி? ஆண்களின் மேல் எழும் நிந்தனையா அல்லது ஆண்களின் குணமா?

குணாதிசயங்கள் சார்ந்த-behavioral science ஆய்வின் பின்னணி ஒரு சுவையான கோண்த்தை முன்வைக்கிறது.


ஆணின் இந்த குணம் மனித இனத்தின் ஜீன்களில் பொதிந்திருக்கும் செய்தித் தன்மையினால் வருகிறது என்கிறது அப்பார்வை.கற்காலத்தில் குடும்பத்திற்கான வேட்டை உணவைத் தேடி வெளியேறும் ஆண் உயிரி காடு மேடுகளில்,மழை வெயிலில் நனைந்து காய்ந்துதான் தன் உணவைப் பெற வேண்டியிருந்தது;போதுமான உணவு கிடைக்க வில்லையெனில் ஒவர்டைம் செய்தாவது வேட்டையை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.


அடுத்தது வேட்டையைச் சுமந்து தன் இருப்பிடத்திற்கு,பெரும்பாலும் குகைக்குத் திரும்பும் கடமை.இந்த குகைக்குத் திரும்பும் நேரம் பெரும்பாலும் அடர் குளிர் சூழலாயிருக்கும்-கற்காலத்தின் தட்ப வெப்ப நிலையைக் கருதும் போது!


திரும்பும் ஆண் இனம் முதலில் செய்வது நெருப்பை மூட்டி களைப்பும் குளிரும் போக சிறிது நேரம் நெருப்பின் அருகில் உட்கார்ந்து குளிர் காய்வதுதான்.அதற்குப் பிறகுதான் எல்லாமே.

மனிதனின் இந்தக் கற்கால குணம் ஜீன்களில் பதிந்து போயிருப்பதால் தான் இன்றளவிலும் ஏதாவதொன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்காரும் குணம் ஆண்களிடம் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வுப் பார்வை.


என்ன,நெருப்புக்குப் பதில் முட்டாள் பெட்டி,அவ்வளவுதான் வேறுபாடு.

பெண்களும் தானே வேலைக்குப் போகிறார்கள்?அவர்கள் ஏன் அப்படி வீட்டுக்குள் வந்தவுடன் உட்கார்வதில்லை என்ற கேள்வி எழுகிறதுதானே?

யாராவது பின்னூட்டுவார்கள்,பார்க்கலாம்!


()


பழனி,சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு நடந்து போகின்ற பக்தர்கள் பலர்.அதுவும் தை மாத காலத்தில் பழனியை நோக்கிச் செல்லும் எல்லாச் சாலைகளிலும் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு;அந்த அளவிற்குப் பலர் நடைப் பயணம் போவார்கள்.

எனக்குத் தெரிந்த மலேசிய நண்பர் ஒருவர் இந்த நடைப் பயணம் போவதற்காகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்வார்.


எனக்கு இந்த வகையான கடின சித்த பக்தி வழிகளில் உடன்பாடு இல்லையாயினும் அவ்வாறு செல்பவர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்று தோன்றுவதுண்டு;தேர்ந்த வாசிப்பும் சிந்தனையும் கொண்ட சிலர் கூட இவ்வாறு நடைப் பயணம் போவார்கள்;அவர்களைக் கேட்டார் அதற்கு ஆரோக்கியப் பார்வையில் பதிலளிப்பார்கள்.


இதில் இன்னொரு விதயத்தையும் நான் அவதானித்து நான் வியந்திருக்கிறேன்.இந்துக்கள் மட்டுமின்றி முகமதியர்களும் கூட உடலை வருத்தி உபவாசம் இருக்கும் காலம் இந்த மார்கழி,தை மாத காலமே.ஆண்டின் இந்த காலகட்டத்தில் ஆன்மிகத்தில் கூட எல்லா மதத்தினரும் தேர்ந்து உடலை வருத்திப் பண்படுத்த விழைவதற்கும் ஏதாவது ஜெனிட்டிகல் காரணங்கள் இருக்கக் கூடும் !


யாராவது ஆய்வு நண்பர்கள் இதை விளக்கலாம்!


()


மேற்கண்ட நடையர்களில் பலர் சோர்வை உணராமல் இருக்க பாடிக் கொண்டே செல்வதுண்டு;இதற்காகவே பாதயாத்திரை சிறப்பு ஒலித்தட்டுகள் சென்ற பத்தாண்டுகளில் ஏராளமாக வந்திருக்கின்றன.


இதற்கான வித்து சமீப நூற்றாண்டில் காவடிச் சிந்து வடிவப் பாடல்களால் ஊன்றப்பட்டது.அதிலும் பாடல்களின் எளிமை,பொருண்மை,சந்த நயம் பொருந்திய ஏராளமான பாடல்களை தமிழுக்கு அளித்தவர்களில் சமீப காலத்திய அண்ணாமலை ரெட்டியார் குறிப்பிடத்தக்கவர்.


இவரது பாடல்களை சந்தத்தில் பாடக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்;அம்மாவின் குரலில் பல சிந்துப் பாடல்களை அனுபவித்துக் கேட்ட நினைவு இப்போதும் நிழ்லாடுகிறது;அப்போதெல்லாம் அதை மின்வடிவத்தில் சேகரிக்கும் எண்ணம் தோன்றியதில்லை,இப்போது மிகவும் தோன்றுகிறது...ஆனால் வருடத்தில் அம்மாவைச் சந்திக்கும் நாட்கள் அருகிக் கொண்டிருக்கும் காலம் இது..

எனக்குக் கிடைத்த ரெட்டியாரின் பாடல்களில் ஒன்றின் இசைவடிவம் பின்வரும் ஒலிக் கீற்றில்..கேட்டுப் பாருங்கள்..


நானே ஒரு ஒலிக்கீற்றை பதிவு செய்து வலையேற்றலாம் என்று நினைத்திருந்தேன்...பிழைத்தீர்கள் !



2 comments:

  1. அறிவன்!
    கிட்டத்தட்ட இதே போன்றதொரு வாதத்தை இந்த வார கல்கியில் ஆண்-பெண் வேற்றுமை பற்றிய ஒரு புதிய தொடரில் படித்தேன். இந்தக்கேள்விக்கு பதிலாக அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருந்தது - "பொறுங்கள். பெரும்பாலான பெண்கள் இந்தத் தலைமுறையில்தானே ஆண்களுக்கு நிகரான வேலைகளுக்குப் போகிறார்கள்?"

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  2. வெங்கட்,
    நன்றி பகிர்ந்ததற்கு.
    கிட்டத்தட்ட இந்த பதில்தான் கூறப்பட்டிருக்கிறது..

    பெண் இனம் இயல்பிலேயே வெளியே சென்று இரையோ,வேட்டையோ செய்யும் வழக்கம் இல்லாத நிலையில் ஜெனிட்டிக்கலாக இந்த விதயங்கள் பெண் உயிரியின் டி.என்.ஏயில் பதியப் படவில்லை...

    அது பதியப்பட சுமாராக பெண் இனம் சுமார் 5 லட்சம் ஆண்டுகள் வேட்டையாடிப் பழக வேண்டும்..

    நாம் இரண்டு பேரும் அப்போது சந்திக்க முயல்வோம் :)

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...