குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, January 5, 2009

88.எது வீரம்,தண்டிப்பதா அல்லது மன்னிப்பதா ?

To End All Wars




டேவிட் கன்னிங்ஹாம் எடுத்த இந்தப் படம் இரண்டாம் உலகப் போர்கள் பற்றிய வரிசைகளில் வந்த ஒரு படம்.(2001)

போர்க் கைதிகளாக ஜப்பானியர்களிடம் நேசப் படையினரின் ஒர் குழு மாட்டுகிறது.அவர்கள் பல வகையான சித்ரவதைகளுக்கும் மனிதத் தன்மையற்ற வகையிலும் ஜப்பானியத் தளபதியினால் நடத்தப் படுகிறார்கள்;அவ்வப்போது கொல்லவும் படுகிறார்கள்.

ஜப்பானியப் படையில் இருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தகாசி நகாசே மற்றும் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் அணியின் கேப்டன் எர்ன்ஸ்ட் கார்டன் பார்வையிலும் பெருமளவு காட்சிகள் விரிகின்றன.
கார்டன் முதலில் எழுதிய புத்தகத்தைத் தழுவியதுதான் இந்தப் படம்.


இடையில் அவர்களை வைத்து தாய்லாந்துப் பகுதியின் ஒரு புகை வண்டி நிலையம் சீரமைக்கப் பட ஆணையிடப்படுகிறது;போர்க்கைதிகளை நடத்த வேண்டிய ஜெனீவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டும் நேசப்படையின் தளபதி நெற்றியில் துப்பாக்கி வைத்து சுடப்படுகிறார்;சரியான உணவற்று மிருகங்களைப் போல் நடத்தப் படும் அவர்கள் நேசப்படை போரை வெல்வதால் மீட்புக் குழுவால் மீட்கப் படுகிறார்கள்;மீட்கப் படும் நேரத்தில் மீட்க வந்த அணியின் வீரர் தன் நண்பர்கள் இருந்த நிலையைப் பார்த்து இறுகிப் போன முகத்துடன் ஜப்பானியப் படை அணியும் வீரர்களும் எங்கே எனக் சிறைப்பட்டிருந்த தன் நண்பர் குழுவின் துணைத்தளபதியிடம் கேட்கிறார்;ஒரு குரூரமான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்பார்க்கையில் இறுதிக் காட்சி வித்தியாசமான முறையில் விரிகிறது.

நகாசியும் கார்டனும் தோழமையோடு வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களுக்கு மரியாதை செய்யும் காட்சியுடன் முடிகிறது படம்.

ஜப்பானிய தளபதிகள் இரண்டாம் உலகப் போரில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஓரளவு விவரிக்கிறது இப்படம். ஜப்பானியத் தளபதி நோகுச்சியின் பாத்திரத்தை செய்த நடிகரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.


இப்படத்தின் அடிநாதம் எதிரிகளிடம்,குறிப்பாக் தம்மை மிக மோசமான முறையில் சித்ரவதைப்படுத்திய மனிதர்களை மன்னிப்பதில் இருக்கும் வீரம் தண்டிப்பதில் இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.

ஆனால் இப்படத்தின் இறுதிக்காட்சியைப் போல அமெரிக்க,பிரிட்டிஷ் படைகள் நடந்து கொண்டனவா என்பது கேள்விக்குரிய விதயமே....


மெல்லச் செல்லும் இந்தப் படம் பல ஹாலிவுட் படங்களைப் போன்ற விறுவிறுப்புடன் செல்கிறது எனச் சொல்லமுடியாது;ஆனால் மனத்தைத் தொடும் சில காட்சிகள் போரை நேரடியாக அனுபவிக்காத நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதைச் சொல்லும்.

இந்தப் படம் பெரும்பாலும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்ட படமே. மிகக் குறைந்த செலவிலேயே இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கலாம்;ஆனால் நெகிழ வைக்கிறது.

மற்ற போர்க்கைதிகளின் சித்ரவதைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் ஹை லைட் ஜப்பானியர்கள் போர்க்கைதிகளை ஒரு புகைவண்டி நிலையத்தை சீரமைப்பதில் ஈடுபடுத்தினார்கள் என்பதை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பார்வையாளனின் முன் வைக்கிறது.

போர்க் கைதிகளுக்கான ஜெனீவா பிரகடனத்தின் படி இவை தவறு என்றாலும் இதன் மூலம் விரிந்த என் எண்ணங்கள் கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் நடந்த சயாம் ரயில் பாதை அமைப்பு பற்றிய நிகழ்வுகளையும் அதன் ஊடான கண்ணீரும் ரத்தமுமான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கதைகளைப் பற்றியும் சென்றன.

ஒரு மலேசிய,சிங்கை எழுத்தாளர் ‘சயாம் மரண ரயில்’ என்ற தலைப்பிலேயே ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யை சிலாகிக்கும் அன்பர்கள் இதையும் படிக்க வேண்டும் !

ரம்பாக்களின் தொடைகளையும்,த்ரிஷா\ஷ்ரேயாக்களின் குட்டைப் பாவாடைகளையும் கச்சைகளையும் மீறி, தமிழர்களின் அந்த சோகங்கள் பற்றிய ஆவணப்படம் ஏதாவது தமிழில் எடுக்கப்பட்டிருக்கிறதா?
இந்திய விடுதலைப் போராட்டங்களைப் பற்றியே லகான் மற்றும் மங்கள் பாண்டே போன்ற படங்களைத் தவிர வேறு வித்தியாசமான நல்ல படங்கள் வந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.சிறைச்சாலை ஒரு விதிவிலக்கு !

இவை போன்ற முயற்சிகள் அறவே இல்லாத தமிழ் சினிமாக்கள நாயகர்கள் இல்லாத மதச்சண்டை பற்றிய குப்பைகளை மிகுந்த ஆரவாரப்படுத்தி எடுத்து விட்டு,ஆஸ்கார் பற்றிப் பேசுவதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை!

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...