குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, October 13, 2007

25-கிரெய்க் வெண்டர்-உயிர்த்துளி

ஆ.வி. யில் வந்த ஒரு செய்தியை எவ்வளவு பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை;வலைப்பக்கங்களில் எந்த ஒரு குறிப்பிடலோ எதிர்வினையோ இல்லை.எனவேதான் இந்தப் பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த கி.வெ என்ற மேற்குறிப்பிட்ட ஒரு மருத்துவர் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்கிறது செய்தி.
அது முழுக்க,முழுக்க ஆய்வகத்திலேயே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை க்ரோமோசோம் பற்றிய செய்தி.
உயிரின் உருவாக்கத்தில் க்ரொமோசோம்களில் பங்கு நாம் அறிந்த செய்தி;ஆனால் கிரெய்க் செயற்கையாக க்ரோமோசோமை உருவாக்கி இருக்கிறார்.
இந்த க்ரோமோசோமை ஒரு செல்லில் செலுத்தி உயிர்ப் பெருக்க நடவடிக்கைகளைத் தூண்டி விட்டு எந்த உயிரையும் உருவாக்கலாம் என்பது அவர் அளிக்கும் சித்தாந்தம்.
க்ளோனிங் இதற்கு எந்த வகையில் மாறுபடுகிறது என்பது அறிவியல் ரீதியாக எனக்கு இன்னும் விளங்கவில்லை;என் புரிதலில் க்ளோனிங்'கிற்கு உருவாக்கப் பட வேண்டிய உயிரியின் ஒரு உடல் செல் தேவை என்றே படித்ததாக நினைவு.ஒரு உயிரியை உருவாக்க இந்த க்ரோமோசோமும் ஒரு செல்லில் செலுத்தப்பட வேண்டும் என்கிறார் க்ரெய்க்.
ஆயினும் க்ரோமோசோமை முற்றிலும் செயற்கையாக பரிசோதனைச் சாலையில் உருவாக்க முடிந்திருப்பது ஒரு புரட்சியான சாதனை என்றே தோன்றுகிறது.
க்ரெய்க் குளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியாக்களை உருவாக்குவதுதான் முதல் லட்சியம் என்கிறார்.
ஆயினும் அவர் சொல்லுகிற வகையில் இந்த கண்டுபிடிப்பு வேலை செய்தால் படைப்புத் தத்துவம் ஒரு மிகப் பெரிய ஆட்டம் காணும் வாய்ப்பிருக்கிறது.
உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பும் இக் கண்டுபிடிப்பிற்குத் தோன்றியிருக்கிறது.
க்ரெய்க்'கிடம் எதிர்ப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் ஒரு அழகிய முரண் நகை, "கடவுளையே எதிர்க்கும் ஆட்கள் இவ்வுலகில் இருக்கும் போது என் கண்டுபிடிப்பை எதிர்ப்பது எம்மாத்திரம்?"
இவ்வேளையில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்,அந்தக் கதையின் சுவாரசிய சுஜாதா ப்ராண்ட் முடிவும் எண்ணத்தில் மீள்வதை தவிர்க்க இயலவில்லை.

4 comments:

  1. thanks for news..
    குளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியா
    good
    but side effect?

    ReplyDelete
  2. >>>>
    சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்
    <<<<

    THE BLOB என்னும் ஆங்கிலப் படத்தில் அந்த உயிரியை பார்க்க முடியும்.

    ReplyDelete
  3. ரசிகன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    க்ரெய்க் அவ்விதம் சொல்கிறார்.விளைவுகள் பின்னே தெரியும்..

    ReplyDelete
  4. அனானி,நன்றி.
    சுஜாதாவின் கதை 1980 களில் எழுதப் பட்டது என நினைக்கிறேன்.
    The Blob எப்போது வந்தது?

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...