குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, October 10, 2007

அக்கினிக் குஞ்சொன்று....

இந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது
என்று காந்தியடிகள் சொன்னதாகச் சொல்வார்கள்.இதனை மெய்ப்படுத்துவது போன்றது அந்த செய்தி.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுகோட்டை கிராம ஊராட்சியின் நிலை மெச்சத்தகுந்தது.
  • ஷவருடன் கூடிய பொதுக்குளியலறை ஆங்காங்கே,
  • தெருமுனைகளில் குடிநீர்க் குழாய்,
  • ஊராட்சி அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுக் காரிய உபயோகத்துக்கென கணிபொறி-வலை உலாவும் வசதியுடன்,
  • ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை-கழிப்பறை,
  • மழைநீர் சேகரிப்பு,
  • மனிதக் கழிவிலிருந்து பெறப்படும் மின்சாரம் ஒளியூட்டும் பொது விளக்குகள்,
  • மிச்சப்படும் அந்த மின்சாரக் கட்டணம் மூலமும் ஊராட்சிக்கு அரசு ஒதுக்கும் பணத்தை ஒழுங்காக செலவு,முதலீடு செய்ய ஊராட்சி நிலங்களில் பழத் தோட்டங்கள்,
  • ஊர்முழுவதும் சிமெண்ட் ரோடு,
  • மூலைக்கு மூலை குப்பைத் தொட்டி,
  • பெண்களின் மாதாந்திர உபயோக சாமக்கிரியைகளை எரிக்க நவீன கழிவெரிக்கும் அடுப்புகள்,
  • எல்லாக் குழந்தைகளும் எட்டாவது வகுப்பு வரை படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சட்டம்,
  • அதை மகிழ்வாக பின்பற்றும் ஊர்மக்கள்.....
அட,இது தமிழக கிராமம் தானா என்ற திகைப்பு ஏற்படலாம்.
இவையெல்லாம் எப்படி சாத்தியம்?
காரணங்கள் எளிதானவையும்,ஆத்ம சுத்தியுடன் நமது ஆட்சியாளர்களால் அலசப் பட வேண்டியவையும் !!!
1965 ல் இந்த ஊரின் ஊராட்சி பொறுப்பேற்றிக் கொண்டபோதெ,இப்பதவியில் இருந்து விலகும் போது ஊருக்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என நினைத்தேன் என்கிறார் ஊரின் ஊராட்சித்தலைவர் ராமநாதன்.இவரின் ஆதாரக் குறிக்கோள்கள் சிக்கலற்றவையும்,எளிதானவையும்.
-ஊருக்கு அரசு ஒதுக்கும் பணத்தை பய(ல)னளிக்கும் வகையில் செலவு செய்வது.
-எதற்கு எவ்விதம் திட்டங்கள் தீட்டுவது என்பதை ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்வது.
-பொதுப் பணத்தை,சொந்தப் பணத்தை சொந்தக் காரியங்களுக்கு செலவிடுவது போன்ற அக்கறையுடன் - கவனிக்கவும் அக்கறையுடன் மட்டும் - பொதுக் காரியங்களுக்கு செலவு செய்வது !
ஜூவி இதனை சாதனை என்று வர்ணித்திருக்கிறது;நல்ல ஊராட்சி முறை இருந்தால் எந்தக் கிராமமும் இருக்க வேண்டிய நிலைதான் இது.ஆயினும் நம்மை ஆள்பவர்கள் மற்ற ஊர்கள்,மாவட்டங்களில் செய்யும் அவலக் காரியங்கள் நாலுகோட்டையின் இந்த நிலையை சாதனை என்ற அளவில் பார்க்க வைப்பதை மறுக்கவியலாது.
எல்லாவற்றிலும் முக்கியமான ஒரு விதயம் இருக்கிறது,இந்த ஊரின் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் சுயேச்சைகள் !
Strictly No to கட்சி அரசியல்.
கழகக் குஞ்சுகள் 40 ஆண்டு காலத்தில் எங்கும் செய்யவியலாத ஒரு விதயம் தனி நபர்களால்-அரசியல்,திராவிட ஆரிய புண்ணாக்குகள்,வெங்காயங்கள் இல்லாமல்-சாதிக்கப் பட்டிருக்கிறது.
ஒரு வித்தியாசமான நாலுகோட்டையை என் வாழ்நாளில் காண்பேன் என்று 1965 களில் வரிந்து கட்டிய ராமநாதனும்,ஒரு வித்தியாசமான சிங்கப்பூரை நான் உருவாக்குவேன் என்று 1960 களில் வரிந்து கட்டிய லீ senior'ம் உண்மையில் ஒத்த படிமங்கள்.
The Singapore Story'ல் முந்தாய்ப்பு வரிகளாக லீ சீனியர் சொல்கிறார்.
They(Malaysia) thought afther they hived off us,we would not work out as an idea of separate singapore and would struggle for each and every resource starting from water and would beg on their feet again,to be associated with them again,on terms they fix.
Not really,till i have different idea(s).I didn't realise that I would spend my entire remaining life to not only make that idea work,but also to make singapore flourish and excel to became a first world country from third world....
இவர்களிலிருந்து பாடம் கற்கத்தான் நமது உளுத்த அரசியல் வாதிகள் தயாராக இல்லை.
அதுதான் நம்மை பீடித்திருக்கும் மிகக் கொடிய பிணியும்,சோகமும் !!!!!

4 comments:

  1. ஊராட்சித்தலைவர் ராமநாதன் அவர்களுக்கு
    மனமுவந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அனானி,
    நன்றி.வருகைக்கும்..
    பாராட்டுக்கெதற்கு முகமூடி? பெயரிலேயே வரலாமே....

    ReplyDelete
  3. நல்ல பதிவு...அந்த ஊராட்சி தலைவரை பாராட்டுகிறேன்...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...