குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, September 7, 2010

122.இரு தேசங்களும்,அவற்றின் மொழிக் கொள்கையும்..

சில நாட்களுக்கு முன்னர் வந்த செய்திகளின் படி,தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்திருக்கிறது.
தமிழகத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே மிகவும் பாராட்டத் தக்க வகையில் செயல் பட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அடைய வேண்டிய விதயம்.
-அரசுப்பள்ளிகளை முறைப்படுத்தியது-அரசுப்பாடநூல்களை இணையத்தில் அமைத்தது-ஆசிரியர் நியமணங்களில் கூடிய அளவு நேர்மையாகச் செயல்பட்டது-பல நிர்வாக அளவு சீர்திருத்தங்கள்-சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் துவக்கம்-தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை முறைப்படுத்துவதற்கான சட்டம்
போன்ற பல விதயங்களில் அருமையாகச் செயல்படும் அவரை பேசாமல் உயர்கல்வித்துறைக்கும் அமைச்சராக அதிகப் பொறுப்புகள் கொடுத்துப் பதவி உயர்வு அளிக்கலாம் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி.ராசா,பாலு,பூங்கோதை,பிகேபி ராசா போன்ற பல திமுக வைச் சேர்ந்த மத்திய மாநில அமைச்சர்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபடும் போது சரியான காரணங்களுக்காகக் கூட தங்கம் தென்னரசு செய்திகளில் வர மாட்டேனென்கிறார்.திரு.கருணாநிதி அமைச்சரவையில் வெகு காலத்திற்குப் பிறகு ஒரு திறனாளர் தென்பட்டிருக்கிறார்,வாழ்த்தி மகிழ்வோம்.
()
சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்த்தும் சில தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றிருக்கின்றன.இந்த நேரத்தில் சிங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.சிங்கையில் இருக்கும் பள்ளிகளில் சீனமொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும்படி பாடத்திட்டங்கள் மாறும் என்ற பொருளில் கல்வித் துறை அமைச்சர் ஒரு பேட்டியில் சொல்லி வைத்தார்.(சிங்கையில் இருப்பவர்கள் பேசுவது இங்கிலீஷ் அல்ல சிங்கிளீஷ் என்று இந்தியர்கள் கிண்டலடிப்பார்கள்,காரணம் அந்த அளவிற்கு ஆங்கிலத்தை 'சீனப்படுத்தி'ப் பேசுபவர்கள் சிங்கப்பூரர்கள்,Speak Good English என்று ஒரு இயக்கத்தையும் அரசு நடத்துகிறது என்பது ஒரு கூடுதல் செய்தி!).
அமைச்சரின் பேச்சு பட்டாசுக்கடையில் வைத்த தீக்கங்கு மாதிரி ஆனது.
சிங்கப்பூர் பெற்றோர்கள் பொங்கி எழுந்து அமைச்சர் கருத்தை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடைசியில் பிரதமர் முன்வந்து அமைச்சரின் கருத்து சரியானதல்ல;சீன மொழிக்கு இருக்கும் முக்கியதுதவம் எந்த வகையிலும் குறைவு படாது என்பதை விளக்கி உறுதி மொழியாகக் கொடுத்த பின்தான் ஒய்ந்தார்கள்..
கவனியுங்கள்,இது சிங்கை போன்ற ஒரு நாட்டில்,மக்கள் பொதுவாக அதிகம் கட்டுப்படுத்தப்ட்ட ஒரு சூழலில் வாழ்கிறாரகள் என்ற எண்ணம் நிலவும் ஒரு நாட்டில் கூட பொதுமக்களின் ஒருமித்த ஆவேசத்திற்கு விடயத்தின் முக்கியத்துவம் கருதி சரியான முடிவு எடுத்தது மட்டுமல்லாமல்,சரியான நடவடிக்கையும் உறுதிமொழியும் அளிக்கும் பிரதமரும் வாய்த்திருக்கிறார்கள் சிங்கைக்கு..
இந்த விதமான சிங்கை அரசின் அணுகுமுறை சீன மொழி சார்ந்ததால் இவ்வாறு இருந்தது என்று சார்பு முடிவுக்கு வந்து விடக் கூடாது;சிங்கை அரசும் நூலகக் குழுமமும் தமிழ் மொழி மற்றும் மொழி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஆதரவும் ஊக்கமும் தந்து வருகின்றன என்பதை சிங்கைத் தமிழர்கள் அறியக் கூடும்.
பத்ரியின் சிங்கைப் பயணம் பற்றிய செய்திகளும் அவற்றில் சிங்கை அரசு மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாடு எந்த அளவு இருந்தது என்பதையும் இந்த இடத்தில் சுட்டி வைக்கிறேன்.
ஒப்பிடுகையில் தமிழகப் பள்ளிகளில் இருக்கும் தமிழின் நிலை,தமிழினி மெல்லச் சாகும் என்ற உறுதி மொழியைத் தருகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
()

1 comment:

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...