குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, March 23, 2015

188. ஆசியாவின் சிகரம் லீ க்வான் யூ மறைவு


ஆசியாவின் குறிப்பிடத் தக்க அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.லீ க்வான் யூ அவர்கள் இன்று அதிகாலை 3.18 ல் மறைவு.



Thursday, March 12, 2015

187.சிங்கையில் திருவாசகம் முற்றோதல்

நண்பர்களே,

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு.
திருமுறைகளையும் தமிழ் இலக்கியங்களையும் ஓதாமல் விட்டுவிட்டிருக்கும் தமிழ்ச் சமுதாயம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்திருக்கும் சமூக நோக்கிலான வீழ்ச்சி விளக்குதற்கரியது.

நமது தலைமுறையின் இளையர்கள் எவரும் நல்ல தமிழ் அல்ல, சகித்துக் கொள்ளக் கூடிய அளவில் கூடத் தமிழில் பேசும் வழக்கம் கொண்டிருக்க வில்லை என்பதும், இதில் பெரும்பான்மைச் தமிழ்ச் சமூகம் பெருமை கொண்டிருக்கிறது என்பதும் நினைந்து நோக வேண்டிய நிலையாகும்.


இந்த நிலையில் ஒரு சிறு அளவிலான தமிழர்களை தமிழ் மொழியின் வேரான பண்டாரத்தை(புதையல்) நோக்கித் திரும்பியிருப்பது மகிழ வேண்டிய செய்தியாகும்; இந்த குறைந்த விகித நண்பர்கள் தமிழிலக்கியங்கள் மற்றும் திருமுறைகளைப் படித்தறிய முற்படுவதோடு, அவற்றைத் தத்தமது வாரிசுகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தையும் சுற்றுப் புறத்தையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட மேற்கண்ட சிறிய விகிதத்திலான மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதே நம்மாலான சிறு கையளிப்பு என்ற எண்ணம் தோன்றியதால் இந்தப்  பணியில்   என்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வருகிறேன்.

திருவாசகத்தின் நூற்பயனும் ஓதற்பயனும் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிந்த விதயமே. ஆ்யினும் எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை என்பது எனது வாழ்வனுபவம் எனக்குக்  கற்றுத் தந்த பாடம். எனவே இந்த சேவை கட்டண சேவையாகவே அளிக்கப் படப் போகிறது.

ஆகா, சிங்கப்பூரில் பணம் சம்பாதிக்க என்ன நூதனமான வழி என்று வாதிடும் நண்பர்கள் தயவு செய்து விலகவும்;  இதன் மூலம் சேர்க்கும் பணம் இந்தப் பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் நோக்கதிற்காகச் செலவு செய்யப் படும் தொகையுடன் சேர்த்துக் கொள்ளப் படும் என்பது ஒரு சிறிய அறிவிப்பு.

Saturday, July 12, 2014

186.தாய்மொழிக் கல்வி மற்றும் மோடி அரசின் முதல் வரவுசெலவுத் திட்டம்

தமிழ் இந்து பத்திரிகையில் அண்மையில் வந்த இந்தக் கட்டுரை நிறையச் சிந்திக்க வைத்தது.

அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தன் மகளைப் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்க வைத்தவர். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்ற மகளை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்து தான் படித்த அரசுப் பள்ளியிலேயே சேர்த்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இன்றைய தமிழகத்தில் ஓரளவு படித்தவர்களாக இருப்பவர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்து அறியும் போது அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஆங்கில மொழி வழித் தனியார் பள்ளியில்தான் தத்தம் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.

எனது குழந்தையை தமிழ் வழிக் கல்வி வழியில்தான் படிக்கவைக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன். இன்றைய சூழலில் தமிழ் வழிக் கல்வி எனில் அரசுப் பள்ளிகளைத் தவிர வேறு கதி இருப்பதாகத் தெரியவில்லை.

அவை ஏன் தரமற்றவையாகத் இன்றைய பெரும்பான்மை சமூகத்திற்குத் தோற்றம் தருகின்றன என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன்.

(நான் அரசு உதவி பெற்ற தமிழ் வழிக் கல்வி வழிதான் பணிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்; கல்லூரியிலும் பின்னர் பட்டயக் கணக்காளருக்குப்(சிஏ) படிக்கையிலும் ஆங்கில வழியில் கற்ற எவரையும் விட எனது கல்விப் பயணம் சிறப்புடனும் பெருமையுடனும்தான் நடந்தேறியது. எனது தொழில் முறைக் கல்வியான பட்டயக் கணக்காளர் தேர்வில் மண்டல அளவில் தகுதி கூட என்னால் பெற முடிந்தது.

Wednesday, January 29, 2014

185.குறுந்'தொகைகள்-28.01.2014

இந்து பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பில் வந்த தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா என்ற இந்தக் கட்டுரை சொல்லும் விதயங்கள் அசத்தலான உண்மை.

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தை முடிந்த அளவுக்கு அனைவருக்கும் பரப்புவது நமது கடமை.


உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...