குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, November 21, 2012

179.புழுதி அடங்கிய பொழுதில்...


சூப்பர் சிங்கர் இளையர் பருவம் 3

சூப்பர் சிங்கர் பற்றிய என்னுடைய கடந்த பதிவில் இறுதிக்கு யார் வருவார்கள் என்ற என்னுடைய கருத்தைக் கூறியிருந்தேன்.(நான் அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் அதிரடி நுழைவுச் சுற்று-வைல்ட் கார்ட் ரவுண்ட்- நடந்து கொண்டிருந்தது.).

இறுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் பிரகதி,சுகன்யா இருவரும் தேர்வாவார்கள் என்று அனுமானம் செய்தேன்; அடுத்த மூன்று இடங்களை ரக்ஷிதா, கௌதம், அனு, ஆஜித், யாழினி ஆகிய நான்கு பேர்களுள் மூவர் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றும்  எழுதியிருந்தேன். ஆஜித்'ம், யாழினி'யும் டார்க் ஹார்ஸ் வகையில் வருவார்கள் என்றும் எழுதியிருந்தேன்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அதிரடி சுற்றிலேயே ஆஜித் மற்றும் யாழினியின் கட்டுக்கடங்காத திறன் எல்லைகளை விரித்துப் பிறந்தது; அதிலும் ஆஜித் இரண்டு பாடல்களிலும் பின்னியெடுத்தான். அதைக் கேட்டவுடனேயே அவன் இறுதிச் சுற்றில் கட்டாயம் இருக்கிறான் என்ற நம்பிக்கை வந்தது.

எதிர்பார்த்த படி முதல் இருவரைத் தவிர கௌதம், யாழினி, ஆஜித் மூவரும் பங்கு பெற்ற இறுதிச் சுற்று அணி ஐவரணியாக மாறியது.


Wednesday, October 17, 2012

178.வர்ச்சுவல் காமம்-ஒரு நொண்டிச் சாக்கு!!!




தகவல் தொழில் நுட்பம் வளரந்த சூழலில் முறையற்ற காமம் எளிதாகியிருக்கிறது என்றும், இது நகர்ப் புறத்தில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எஸ்.எம்.எஸ் எனப்படும் செய்திச் சேவை வழி கூட முறையற்ற காமம் பரவ ஏதுவாகியிருக்கிறது என்ற ஒரு பார்வையை, அதன் நீதி அல்லது அநீதி பற்றிய எந்த நிலைப்பாட்டிலும் பட்டுக் கொள்ளாமலும் எந்தக் கருத்தாகத்தையும் முன்வைக்காமலும் 
எழுதப் பட்டிருக்கிறது.

எழுதியவர் தன்னைப் பத்திரிகைகளில் எழுதிப் பரிச்சயம் உள்ளவராகச் சொல்கிறார்; விவரிக்கத் தேவையன்றி இந்தப் பதிவிலும் 'அந்தப் பயிற்சி' தெரிகிறது.பதிவர் எந்தக் கனவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. கிராமத்தில் அறிமுகமற்ற பெண்ணுக்கு அறியாதவர் ஒருவர் கைத் தொலைபைசியில் அழைத்து, ராங் கால் என்று சொன்னால் கூட முதல் முறை மன்னிப்பார்கள்; இரண்டாம் முறை ஆள்வைத்து விசாரித்து, கம்புடன் வந்து கதவிடிப்பார்கள் !

Saturday, October 13, 2012

177.காலாவதியான சீர்திருத்தங்கள் !!!


பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் !

நமது மேன்மை தங்கிய நிதியமைச்சர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீர்திருத்தங்கள் (ரீஃபார்ம்ஸ்), காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நிதிச் செயலர் கெய்ட்னர் இந்தியா இப்போது சரியான பொருளாதார வளர்ச்சி திசையில் நடைபோடுகிறது என்று பகழாரம் சூட்டியிருக்கிறார்.(இதே அமெரிக்க அரசும், அமெரிக்கப் பத்திரிகைகளும் சிறிது காலம் முன்பு வரை, இந்தியப் பிரதமர் செயல்படாத பிரதமர், இந்தியா திவாலாகும் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமது பத்திரிகைகள், கருத்தாக்கங்கள் வாயிலாகப் பயமுறுத்தும் கட்டமைப்பைச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்த இடத்தில் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்; குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியாவின் காங்கிரஸ் அரசு சில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டைத் திறந்து விடுவதற்கு முன்னால் வரை!.

இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட உடன் காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும் என்ற வகையில் அமெரிக்காவின் அரசு நிர்வாகமும், ஊடகங்களும் இந்தியவைப் பற்றிய கருத்துக்களில், தலைகீழ்த் திருப்பத்தில்-யூ டர்ன்- அசத்துகின்றன ! இதன் பின்னாக இருக்கும் நுண்ணிய விவரங்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் புரிந்து விடாது என்பதுதான் முக்கியமான விதயம்.


Saturday, September 29, 2012

176.குறுந்தொகை'கள்-29.09.2012-சில்லரை- விற்பனை|அரசு|தலைமை|தேசியம் !!!

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).


எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!!

பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).


உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...